Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் இன்று ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் நாளை தொடங்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது. 2-வது கட்ட கூட்டத் தொடர் நாளை (மார்ச் 10) தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

மும்மொழி கொள்கைக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், மக்களவை தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக தென்மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக அல்லாத மற்ற கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தமிழகத்துக்கு நிதி தராதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் மத்திய அரசிடம் தமிழக அரசு போராடி வருகிறது.
இந்த பிரச்சினைகளை நாடாளுமன்ற அவைகளில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

‘எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை’ – இபிஎஸ்

சென்னை: எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மறைமுகமாக இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளில் இப்போதே உத்தேச வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மைக்கை பிடித்தாலே தேர்தல், கூட்டணி தொடர்பாகவே பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிரணி சார்பில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளரிடம் கேட்டபோது முதலில், “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என்றார். அதனைத் தொடர்ந்து, “அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது.” என்றார்.

‘கையெழுத்து இயக்கம் தொடக்கம்’ – சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அதிமுக மகளிர் அணியின் சார்பில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (சனிக் கிழமை), நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

பின்னர், தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பலூன்களைப் பறக்கவிட்டார். தொடர்ந்து, வெண்புறாக்களையும் பறக்கவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, 77 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக மகளிர் அணி நிர்வாகிகளுக்கும், வீராங்கனைகளுக்கும். பத்திரிகையாளர்களுக்கும் வழங்கினார். முன்னதாக, மகளிர் அணிச் செயலாளர் பா. வளர்மதி தலைமையில், எடப்பாடி பழனிசாமிக்கு, மகளிர் அணியினர் சாக்லேட் மாலை அணிவித்தனர். பின்னர், உலக மகளிர் தின சிறப்புப் பாடல் அடங்கிய குருந்தகடினை வெளியிட்டார் ஏழை, எளிய மகளிர் பயன்பெறும் வகையில், உதவிகளை வழங்கினார்.

நிறைவாக, ‘மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும்’ என கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்து தானும் கையெழுத்திட்டார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

கூட்டணி தொடர்பான பேட்டியின்போது அதிமுக என்ற பெயரையே எங்கும் கூறவில்லை: அண்ணாமலை விளக்கம்

தேர்தல் கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற வார்த்தையையே நான் எங்கும் கூறவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக கூட்டணி வேண்டாம் என்றவர்கள், தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் கிடைக்கிறார்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது, தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளரும் தெளிவாக விளக்கியுள்ளோம். கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் கூறவில்லை. நான் கூறியதையும், அதிமுக பொதுச் செயலாளர் கூறியதையும் திரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவின் நிலையைப் பற்றி நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். அதிமுகவைப் பற்றி அதன் பொதுச் செயலாளர் தெளிவாகப் பேசியுள்ளார். நான் டிபேட்டுகளை (தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்) பார்ப்பதில்லை.
அரசியல் கலந்துரையாடல்ளில் விமர்சகர்கள் என்ற பெயரில் கலந்துகொண்டு, பாஜகவை திட்டுவதையே சிலர் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாகப் பேசுவதில்லை. அவர்களுக்கு திமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் குறிக்கோள். எதுபோன்ற கூட்டணி அமைய வேண்டும் என்று அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கின்றனர். இந்நிலையில், கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் எப்படி அதைப்பற்றி தொடர்ந்து பேச முடியும்.
பத்திரிகையாளர்களுக்கு கள நிலவரம் தெரியும். ஆனால், டிபேட்டுகளில் விமர்சனம் என்ற பெயரில் அமர்பவர்களுக்கு கள நிலவரம் தெரியாது. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு பத்திரிகையில் எழுதுகிறார்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More
RASI PALANRASI PALANஆன்மீகம்

மேஷம் முதல் மீனம் வரை: மார்ச் மாத பலன்கள் – 2025

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பலன்கள்: புத்திசாதுரியத்தால் புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே! இந்தமாதம் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகளின் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். ராசிக்கு 12ல் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
கலைத்துறையினருக்கு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பணவரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

அரசியல்துறையினருக்கு மனகவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும் | முழுமையாக வாசிக்க > மேஷம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) பலன்கள்: சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசியினரே! இந்த மாதம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.
தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.

பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தன்னம்பிக்கை ஏற்படும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.

அரசியல்துறையினருக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும் | முழுமையாக வாசிக்க > ரிஷபம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) பலன்கள்: எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே! இந்தமாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.

தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்| முழுமையாக வாசிக்க > மிதுனம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பலன்கள்: கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் கடக ராசிக்காரர்களே! இந்த மாதம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலை பளு ஆகியவை இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஆனாலும் குடும்பாதிபதியின் பாதசார சஞ்சாரத்தால் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினர் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசியல்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள்.

வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும் | முழுமையாக வாசிக்க > கடகம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) பலன்கள்: துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறும் சிம்ம ராசியினரே! இந்த மாதம் வீண் அலைச்சல் காரிய தடை ஆகியவை அகலும். சுக்கிரனால் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல்சோர்வும், மனக் குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.

தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும் | முழுமையாக வாசிக்க > சிம்மம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) பலன்கள்: வாக்கு நாணயம் தவறாமலும் உண்மைக்காக பாடுபடும் குணமும் உடைய கன்னி ராசியினரே! இந்த மாதம் சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியன அகலும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும்.

வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு நிதானமாக உங்கள் கருத்தை சொல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு கடன் பிரச்சினைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும்.

அரசியல்துறையினருக்கு உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். மாணவர்கள் வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும் | முழுமையாக வாசிக்க > கன்னி ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) பலன்கள்: நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய துலா ராசியினரே! இந்த மாதம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். கிரகங்களின் சஞ்சாரத்தால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. ஆனால் ராசியைப் பார்க்கும் தனாதிபதி செவ்வாயால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேலதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.

பெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. கலைத்துறையினர் உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். மிகவும் நன்றாகவே இருக்கும்.

அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது | முழுமையாக வாசிக்க > துலாம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) பலன்கள்: மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய விருச்சிக ராசியினரே! இந்த மாதம் உங்களின் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பண வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும், சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

அரசியல்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கட்சியில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள் | முழுமையாக வாசிக்க > விருச்சிகம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) பலன்கள்: சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே! இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடவேண்டி இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.

வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.

அரசியல்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும் | முழுமையாக வாசிக்க > தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) பலன்கள்: பொதுகாரியங்களில் விருப்பம் உள்ள மகர ராசியினரே! நீங்கள் திறமைசாலிகளாகவும் இருப்பீர்கள் இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம்.

கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

அரசியல்துறையினருக்கு கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறுசிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும் | முழுமையாக வாசிக்க > மகரம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) பலன்கள்: எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய கும்ப ராசியினரே! இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சுக்கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை ஏற்படுத்தும். திறமை வெளிப்படும். பலவகையிலும் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் சஞ்சாரத்தால் சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.

கலைத்துறையினர் பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள்.

வீண் செலவு உண்டாக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும் | முழுமையாக வாசிக்க > கும்பம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) பலன்கள்: நீதி, நேர்மை, உண்மை என்று எப்போதும் பாடுபடும் மீன ராசியினரே! நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்லுவீர்கள். இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மனநிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

கலைத்துறையினர் வாக்குவன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பயணங்கள் செல்ல நேரலாம். புத்திசாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். அரசியல்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம் நீங்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் .

Read More
தமிழ்நாடு

ஆக்கிரமித்து வசிப்பவர்களில் யார் யாருக்கு பட்டா வழங்கலாம்?- தமிழக அரசு அறிவிப்பு….

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த மாதம் 10-ந் தேதி நடந்தது. அதில் தமிழகத்தில் ஆட்சேபனையற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்என்றும், அதற்கான தகுதி என்ன? என்பது குறித்தும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கலாம். மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5 ஆண்டுகள் வசித்தால் வழங்கலாம்.
அதில் ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களான மதிப்பிடப்பட்ட மற்றும் மதிப்பீடு செய்யாத நிலங்கள், கல்லாங்குழி-பாறை-கரடு நிலங்கள், கிராம நத்தம், அரசு நஞ்சை-புஞ்சநிலங்கள், எதிர்ப்புகள் இல்லாத சிறப்பு அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்நிலைகள், மேட்டு நிலங்கள், மேய்ச்சல்-மேய்க்கால், மந்தவெளி நிலங்கள், காடு நிலங்கள், ரெயில்வே உள்ளிட்ட
மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு பட்டா வழக்கப்படாது.

பட்டா பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ரூ.3 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால், அவர்களிடம் இருந்து நிலத்திற்காகான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இந்த பட்டா வழங்கும் பணிக்காக மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக 1 சென்ட் பட்டா வழங்க வேண்டும். பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அதிகபட்சமாக 2 செண்டும். கிராமப்புறங்களில் 3 செண்டும் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

டிஜிட்டல் மயமாகும் இந்திய பாஸ்போர்ட்: பார்கோட்ஸ், கலர் கோட்ஸ்.. இதெல்லாம் அவசியம்.. அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசு பார்ஸ்போர்ட் விதிகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி 2023 அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பிற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதியை நிரூபிக்க பல்வேறு ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இனிமேல் பிறப்பு சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பிறப்புச் சான்றிதழை நகராட்சி நிறுவனம், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் அல்லது பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 1969 இன் கீழ் நியமிக்கப்பட்ட மற்றொரு அதிகாரி வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் அக்டோபர் 1, 2023 க்கு முன் பிறந்தவர்களுக்கு பிறந்த தேதியை சரிபார்க்க மாற்று ஆவணங்களின் பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை வருமாறு,
பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அல்லது நகராட்சி நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969 இன் கீழ் இந்தியாவில் பிறந்த குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்ய அதிகாரம் பெற்றவர்.
கடைசியாகப் படித்த/அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட இடமாற்றம்/பள்ளி விடுப்பு/மெட்ரிகுலேஷன் சான்றிதழ்.
காப்பீட்டுக் கொள்கை வைத்திருப்பவரின் பிறந்த தேதியைக் கொண்ட பொது ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள்/நிறுவனங்களால் வழங்கப்படும் பாலிசி பத்திரம்.
விண்ணப்பதாரரின் சம்பந்தப்பட்ட அமைச்சகம்/துறையின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான அதிகாரியால் முறையாக சான்றளிக்கப்பட்ட/சான்றளிக்கப்பட்ட விண்ணப்பதாரரின் சேவைப் பதிவின் நகல் (அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை மட்டும்) அல்லது ஓய்வூதிய ஊதிய உத்தரவு.
ஆதார் அட்டை/இ-ஆதார். இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (EPIC).வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட PAN அட்டை.
சம்பந்தப்பட்ட மாநில அரசின் போக்குவரத்துத் துறையால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம். விண்ணப்பதாரரின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் அமைப்பின் அதிகாரப்பூர்வ லெட்டர்ஹெட்டில் அனாதை இல்லம்/குழந்தை பராமரிப்பு இல்லத்தின் தலைவரால் வழங்கப்படும் பிரகடனம்.
இருப்பினும், விண்ணப்பதாரரின் துல்லியமான பிறந்த தேதி இருந்தால் மட்டுமே, ஆதார் அட்டை/இ-ஆதார், EPIC, PAN அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓய்வூதிய ஆணை ஆகியவை பிறந்த தேதிக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். குடியிருப்பு முகவரி டிஜிட்டல் முறையில் பதிக்கப்பட வேண்டும்
திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்தும் முயற்சியாக, பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் குடியிருப்பு முகவரிகள் அச்சிடப்படாது. இப்போது, காகிதத்தில் ஒரு பார்கோடு செருகப்படும், இந்தத் தகவலை மீட்டெடுக்க குடிவரவு அதிகாரிகளால் ஸ்கேன் செய்யப்படும்.
வண்ண-குறியீட்டு முறை
பாஸ்போர்ட் அடையாளத்தை எளிதாக்க, அரசு புதிய பாஸ்போர்ட்டுகளுக்கு ஒரு புதிய வண்ண-குறியிடப்பட்ட முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பார் கோடுகள் மற்றும் கலர் கோடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் பல்வேறு வகை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அடையாள செயல்முறைகளை நெறிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதிகள், பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் பெற்றோரின் பெயர்களைச் சேர்க்க வேண்டும் என்ற தேவையை நீக்கியுள்ளது.
இந்த மாற்றம் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க உதவுவதோடு மட்டும் அல்லாமல், சிங்கிள் பேரன்ட் அல்லது பிரிந்த குடும்பங்களைச் சேர்ந்த நபர்களுக்கு நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. பாஸ்போர்ட்டின் வடிவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் அரசு பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி விண்ணப்பதாரரின் குடியிருப்பு முகவரி ஒரு பார்கோடில் பதிக்கப்படும், குடியேற்ற அதிகாரிகள் ஸ்கேன் செய்யும் வகையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்தை குறைக்கவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

குட் பேட் அக்லி ட்ரைலர் ரிலீஸ் பற்றி அப்டேட்..!

அஜித் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஆதிக் ரவிச்சந்திரனுடன் முதல் முறையாக அஜித் இப்படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார். மார்க் ஆண்டனி என்ற படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றார். அவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு குட் பேட் அக்லி படத்தின் மூலம் கிடைத்துள்ளது.
இந்த மிகப்பெரிய வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு ஆதிக் உருவாக்கியிருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இதையெல்லாம் தாண்டி ஆதிக் தீவிரமான அஜித் ரசிகர். எனவே இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அஜித்தை பார்த்து பார்த்து செத்துக்கியிருப்பார் என்பது இப்படத்தின் டீசரை பார்க்கும்போதே தெரிகின்றது.
சில தினங்களுக்கு முன்பு வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. டீசரில் அஜித் மாஸாகவும் அதே சமயம் பல கெட்டப்களிலும் தோன்றினார். குறிப்பாக அவரின் பல கெட்டப்கள் டீசரில் ஹைலைட்டான விஷயமாக இருந்தது.
இதன் மூலமே இப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் இஃப்தார் நோன்பு… – பிரியாணி பை முதல் திறந்த வேன் வரை!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதல்முறை இஃப்தார் நோன்பு நிகழ்வில் விஜய் இன்று கலந்து கொண்டார். இதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் கலந்து கொள்கிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் ஏராளமான இஸ்லாமியர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திணறிய ராயப்பேட்டை
அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நபர்கள் மட்டுமே நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் திணறினர். நோன்பு அரங்கில் கட்டுக்கடங்காமல் உள்ளே செல்ல முயற்சித்ததால் கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறின. இந்நிலையில் விஜய் வருகை புரிந்ததும் இஃப்தார் நோன்பு களைகட்டியது. வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி மற்றும் தலையில் குல்லா அணிந்து வந்திருந்தார்.
இஸ்லாமியர்கள் இஃப்தார் நோன்பு
இந்த வித்தியாசமான லுக்கை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இஸ்லாமியர்கள் உடன் அமர்ந்து தொழுகை செய்தார். இதையடுத்து நோன்பு திறந்தார். நோன்பு கஞ்சி குடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இஸ்லாமியர்கள் முன்னிலையில் மைக்கில் பேசினார். அதாவது, எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
விஜய் பங்கேற்பு
மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி வரும் இஸ்லாமிய சகோதரர்கள், எனது அன்பான கோரிக்கையை ஏற்று வருகை புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மிக்க மிக்க மகிழ்ச்சி என்று பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Read More
இந்தியாஉலகம்

கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு கூடுதல் வரி.. முடிவை மாற்றிய டிரம்ப்.. இதுதான் காரணமா?

அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்க எடுத்த அதிரடி முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பு திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும் கோப்பில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு புதிய வரி விதிப்பு கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார். அதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதேபோன்று சீனாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனா மற்றும் கனடா நாடுகள் அறிவித்தன. இதனால், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணலாம் என்று அச்சம் எழுந்தது. இந்நிலையில், கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விதிப்பை ஏப்ரல் இரண்டாம் தேதி வரை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா-கனடா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். புதிய வரி விதிப்பு கொள்கையை தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும் வரி விதிப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

Read More
இந்தியாதமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் எவ்வளவு நகை, பணம் கொண்டு வரலாம்? – சுங்க விதிகள் என்ன ….

வெளிநாட்டிலிருந்து 14 கிலோ தங்கம் கடத்தியதாக தமிழ் திரைப்பட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடமாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்துகொண்டு ஒவ்வொரு பயணத்திலும் கிலோ கணக்கில் தங்கத்தை ரன்யா ராவ் கொண்டு வந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக நடிகை கைதாகியுள்ள விவகாரம் இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்திய சுங்க விதிகளின்படி உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் எவ்வளவு தங்கம், ரொக்கப் பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
இந்திய சுங்கச் சட்டம்

1962ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சுங்கச் சட்டம், இந்தியாவில் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிர்வகிக்கும் ஒரு அடிப்படைச் சட்டமாகும். இது கடத்தலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் சட்டம் நிதி அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (CBIC) நடைமுறைப்படுத்தப்படுகிறது.இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான தடை, கிடங்கு மற்றும் அபராதங்கள் போன்ற சுங்க விதிமுறைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 1962ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் 17 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் நோக்கம், சட்டப்பூர்வ வர்த்தகத்தை எளிதாக்குவதும், கடத்தல் போன்ற அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளைத் தடுப்பதும் ஆகும்.
இந்தியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் சுங்க சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் வரி விதிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால் பயணிகள் சுங்க அறிவிப்புப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டி வரும். இதற்காக பிரத்யேகமாக “ATITHI” மொபைல் செயலி உள்ளது. இதன்மூலம் விமானத்தில் ஏறும் முன்பாகவே, வரி விதிக்கக்கூடிய பொருட்கள் பற்றிய விவரங்களையும் தாங்கள் கொண்டுவரும் வெளிநாட்டு பணத்தை பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வசதி உள்ளது. 5,000 டாலருக்கு அதிமாக வெளிநாட்டு பணம் எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதனைக் கட்டாயமாக அறிவிப்பது அவசியம்.
பயணிகளுக்கான சலுகைகள்

உள்நாட்டு விமானங்கள்: உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பொதுவாக சுங்கக் கட்டுப்பாடுகளோ, சலுகைகளோ எதுவும் இல்லை. பயணிகள் சர்வதேச எல்லைகளைக் கடக்காததால் இந்த விலக்கு உள்ளது. எனினும், பயணிகள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விமான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

சர்வதேச விமானங்கள்: சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் (மொபைல் போன்றவை) மற்றும் பயண நினைவுப் பொருட்கள் ஆகியவை வரி இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச பயணிகள் ரூ.50,000 வரை மதிப்புள்ள பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம். ஆனால், அவை தடைசெய்யப்பட்ட பொருட்களாக இருக்கக் கூடாது. இதுதவிர, 18 வயது மேற்பட்டோர் ஒரு லேப்டாப் எடுத்துவர அனுமதி உண்டு. 2 லிட்டர் வரை மதுபானம் எடுத்துவர முடியும். 100 சிகரெட்டுகள் அல்லது 25 சுருட்டுகள் அல்லது 125 கிராம் புகையிலை வரை வரி விலக்கு உடன் கொண்டுவர முடியும். இவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள். அதுவே, வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றால் பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பயண நினைவுப் பொருட்கள் மற்றும் ரூ.15,000 வரை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கொண்டுவர முடியும்.
பயணிகளுக்கான சலுகைகள்

உள்நாட்டு விமானங்கள்: உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பொதுவாக சுங்கக் கட்டுப்பாடுகளோ, சலுகைகளோ எதுவும் இல்லை. பயணிகள் சர்வதேச எல்லைகளைக் கடக்காததால் இந்த விலக்கு உள்ளது. எனினும், பயணிகள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விமான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

சர்வதேச விமானங்கள்: சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் (மொபைல் போன்றவை) மற்றும் பயண நினைவுப் பொருட்கள் ஆகியவை வரி இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச பயணிகள் ரூ.50,000 வரை மதிப்புள்ள பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம். ஆனால், அவை தடைசெய்யப்பட்ட பொருட்களாக இருக்கக் கூடாது. இதுதவிர, 18 வயது மேற்பட்டோர் ஒரு லேப்டாப் எடுத்துவர அனுமதி உண்டு. 2 லிட்டர் வரை மதுபானம் எடுத்துவர முடியும். 100 சிகரெட்டுகள் அல்லது 25 சுருட்டுகள் அல்லது 125 கிராம் புகையிலை வரை வரி விலக்கு உடன் கொண்டுவர முடியும். இவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள். அதுவே, வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றால் பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பயண நினைவுப் பொருட்கள் மற்றும் ரூ.15,000 வரை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கொண்டுவர முடியும்.
வெளிநாட்டு பணம் என்றால், 5,000 டாலர் வரை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடுத்துவரலாம். அதனைத் தாண்டிய மதிப்பு என்றால் கட்டாயம் அதனை அறிவிக்க வேண்டும். அதுவே இந்திய ரூபாய் என்றால் ரூ.25,000 வரை எடுத்து வரலாம்.
1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் கடத்தல் ஒரு கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடத்தல்காரர்கள் குற்றத்தின் கடுமையைப் பொறுத்து மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, கடத்தல்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். பெரும்பாலும் அபராதத் தொகை சம்பந்தப்பட்ட பொருட்களின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். மேலும், கடத்தப்பட்ட பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படலாம்.

Read More