Author: Namadhu Arasu

Election 2026அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு: வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது.

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் – திமுக கூட்​டணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 4 பிராந்​தி​யங்​களி​லும் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களுக்கு நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,099 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​தல் பணி​யில் 5,000 அதி​காரி​கள், பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

காலை முதலே மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்​குப்பதிவு நடந்​துள்ளது‌. தொடர்ந்து பெறப்​படும் தபால் வாக்​கு​கள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்​தல் அதி​காரி ஜவஹர் கூறி​யுள்​ளார். புதுச்​சேரி​யில் இதுவரை நடந்த தேர்​தல்​களில் இதுவே அதி​கபட்ச வாக்​குப்​ப​திவு ஆகும்.

கேரளா​வின் மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கும் ஒரே கட்​ட​மாக நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது. 883 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.69 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 30,471 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. 76,203 போலீ​ஸார், மத்​திய படைகளை சேர்ந்த 140 அணி​கள் மற்​றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணி​களை சேர்ந்த வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 1.46 லட்​சம் அரசு ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.கண்​ணூர் மாவட்​டம் பின​ராயி நகரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் வாக்​களித்​தார். கேரளாவில் ஒட்​டுமொத்​த​மாக 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

அசாமின் 126 தொகு​தி​களுக்​கும் நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆளும் பாஜக தலை​மையி​லான வடக்​கு-கிழக்கு ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 722 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.50 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 31,486 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டிருந்​தன. மாநில போலீஸார், மத்​திய பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்கும் மேற்பட்ட வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். 2 லட்​சம் ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

முதல்​வரும், பாஜக மூத்த தலைவரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்​டி​யின் அசா​ரா​வில் குடும்​பத்​துடன் வாக்​களித்​தார். திப்​ரு​கார் பகு​தி​யில் பாஜக – அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்​டர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலில் பலர் காயமடைந்​தனர். பெரும்​பாலான பகு​தி​யில் வாக்​குப்​ப​திவு அமை​தி​யாக நடை​பெற்​றது. 85.38 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

Read More
குற்றம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

சாத்தான்குளம் வழக்கில் 9 பேருக்கும் தூக்கு தண்டனை – நீதிபதி அறிவிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளிகளில் யார் அதிகம் அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட இயலாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முழு விசாரணையும் முடிந்து கடந்த மாதம் 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.
அவர்களுக்கான தண்டனை விவரம் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், தண்டனை குறித்து சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு தங்களது நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இந்த வழக்கு கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கோரின.
இதனால் இந்த வழக்கை ஏப்ரல் 2ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவலர்கள் ஒன்பது பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் இவர்களுக்கு எவ்வளவு தண்டனை வழங்கலாம் என்ற பரிந்துரையை மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 9 பேரிடமும் தனித்தனியாக அவர்களது கருத்தை நீதிபதி கேட்டறிந்தார். அப்போது குற்றவாளிகள் ஒன்பது பேரும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் தாக்கவில்லை. எதிர்பாராத விதமாக நடந்த உயிரிழப்பு. எங்கள் குடும்ப நலன், பெற்றோர் நலன் கருதி குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி ஒவ்வொருவரின் குடும்பச்சூழல், குடும்பச்சொத்து, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியம், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை தனித்தனியாக கேட்டு பதிவு செய்து கொண்டார்.குற்றவாளிகள் ஒன்பது பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் தனித்தனியாக வாதிட்டனர். இது அரிதினும் அரிதான வழக்கு இல்லை. தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது. அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்ற வகையில் தான் தண்டனை இருக்க வேண்டும். ஒருவன் திருந்தவே மாட்டான். இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியே இல்லாதவன் என்ற முடிவுக்கு வரும்போதுதான் தூக்கு தண்டனை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். எனவே தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நேரடி கண்ணுற்ற சாட்சிகள் உட்பட பல்வேறு அறிவியல் பூர்வமான சாட்சிகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பாவிகளை காவல் நிலையத்தில் வைத்து தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தியதால் ஒட்டுமொத்த சமுதாயமே அதிர்ச்சியடைந்துள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி நீதிபதி முன் ஆஜராகி கண்ணீர் மல்க முறையீடு செய்தார். எந்த தப்பும் செய்யாத தனது கணவரையும், மகனையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்து விட்டார்கள். தனது கணவர் மற்றும் மகன் மீது இதற்கு முன் எந்த ஒரு சிறு வழக்கு கூட கிடையாது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. எனவே உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க முறையீடு செய்தார்.இதை தொடர்ந்து இந்த வழக்கின் தண்டனை விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, தந்தை மற்றும் மகன் இருவர் மீது பொய் வழக்கு பதிந்துள்ளனர். இது தெரியாமல் நடந்த தவறு அல்ல. குற்றவாளிகள் அனைவரும் நன்கு படித்தவர்கள், அரசு பணியில் உள்ளவர்கள். வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது. தந்தை முன் மகனையும் மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம்போன போக்கில் தாக்கி உள்ளனர். ஆயுள் தண்டனை வழங்கினால் போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு…

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக உள்ளது.

மத்திய கிழக்கு போரால் விநியோகம் பாதிப்பு. விலை உயர்வால் அதிர்ச்சி.

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும்.மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாதத்தின் முதல்நாளான இன்று வணிக சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.இன்று (ஏப்ரல் 1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கச்சா எண்​ணெய், எல்​பிஜி எரிபொருள் கொண்டு செல்​லும் கப்​பல்​கள் செல்ல தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. ஒரு சில கப்​பல்​கள் மீது ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் நூற்​றுக்​கணக்​கான சரக்கு கப்​பல்​கள் அங்கு காத்​துக் கிடந்​தன.இந்​திய கப்​பல்​களுக்கு அனு​மதி வழங்​கும்​படி ஈரான் அரசுடன் இந்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இதே​போல, ஈரானின் நட்பு நாடு​களும் பேச்​சு​ நடத்தின. இதையடுத்து இந்​தி​யா, பாகிஸ்​தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடு​களின் கப்​பல்கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து ஈரான் வெளி​யுறவுத் ​துறை அமைச்சர் சையத் அப்​பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்​ளது. மேற்கு ஆசியா போர்க்​கள​மாக உள்​ளது. இதனால், இங்கு எதிரி நாடு​களின் கப்​பல்​கள் செல்ல அனு​ம​திக்க முடி​யாது. மற்​றவர்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி திறந்​தே உள்​ளது’’ என்​றார்​.

‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ – அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்​பில் நேற்று முன்​தினம் நடந்த நிகழ்ச்​சி​யில் அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: அமெரிக்​கா – ஈரான் இடையே அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறு​கிறது. ஈரானின் உச்ச தலை​வ​ராக என்னை நியமிக்க அவர்​கள் விரும்​பு​கின்​றனர். ஆனால் நான் மறுத்​து​விட்​டேன். அமெரிக்க பிர​தி​நி​தி​களு​டன் ஈரான் பிர​தி​நி​தி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.அமெரிக்கா​வுடன் வெகு​விரை​வாக அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த ஈரான் விரும்​பு​கிறது. ஆனால், ஈரான் பிர​தி​நி​தி​களால் இதை வெளிப்​படை​யாக கூற முடிய​வில்​லை. ஈரான் ஆட்​சி​யாளர்​கள், ராணுவதளப​தி​கள் அடுத்​தடுத்து கொல்லப்​பட்டு வரு​கின்​றனர். உயிர்பயம் காரண​மாக ஒப்​பந்​தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிர​தி​நி​திகள் ஆர்​வம் காட்​டு​கின்​றனர். ஆனால் இதை பகிரங்​க​மாக அறி​வித்தால் சொந்த நாட்டு மக்​கள் அடித்துக் கொன்​று​விடு​வார்​கள் என்று அஞ்​சுகின்​றனர். ஒரு​வேளை, ஒப்பந்​தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரக​மாக மாறும். இவ்​வாறு ட்ரம்ப் கூறினார்.

போரை நீண்ட காலம் நீட்​டிக்க ட்ரம்ப் விரும்​ப​வில்​லை. அடுத்த சில வாரங்​களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதற்கிடையே, 5 நாட்​கள் போர் நிறுத்​தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்​தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

 பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு..!

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தலா ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதாவது பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.13-ல் இருந்து ரூ.3 ஆக குறைத்தும், 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரியை முழுமையாக நீக்கியுள்ளது மத்திய அரசு.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பின் பலன் எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்வதால் பெட்ரோல், டீசல் விலை குறையவோ, உயரவோ செய்யாது. எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையே நீடிக்கும்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அனைவருக்கும் ‘Fridge’ இலவசம்…” 2026க்கான தேர்தல் வாக்குறுதி – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலுக்காக 297 வாக்குறுதி அறிவிப்பு. இலவச Fridge, பேருந்து பயணம், மாதம் ரூ 2000, ரூ 10000 உதவி, கல்விக் கடன் தள்ளுபடி.சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவித்தார்.அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவசப் பயணம்-அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்.விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒரு முறை மட்டும் ரூ. 10,000 உதவித் தொகை வழங்கப்படும்.மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.அம்மா இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்: வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

இழுபறிக்கு பின் முடிவான தொகுதி பங்கீடு… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள்..

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 2026 ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் பெ.சண்முகம் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இன்று திமுகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலந்து பேசினார். இதனடிப்படையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலக்குழுச் செயலாளர், ” கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக இருந்தது. எனினும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. இந்த எண்ணிக்கை எங்களுக்கு முழுத் திருப்தியை அளிக்கவில்லை என்றாலும், கூட்டணியின் ஒற்றுமை சிதைந்துவிடக்கூடாது என்பதிலும், அதற்கு நாங்கள் காரணமாகிவிடக் கூடாது என்ற அக்கறையிலுமே இந்த முடிவிற்கு உடன்பட்டதாக தெரிவித்தார்.கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் அடுத்த சில நாட்களில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுமாவட்டம்

கரூர் நெரிசல் வழக்கு: டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை…

கரூர் நெரிசலில் உயி​ரிழப்​பு​கள் தொடர்​பான வழக்​கில், டெல்​லி​யில் செந்​தில் பாலாஜி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசா​ரணை நடத்​தினர்.

கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி கரூரில் நடை​பெற்ற தமிழக வெற்​றிக் கழகத்​தின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். தமிழகத்​தையே உலுக்​கிய இந்​தச் சம்​பவம் குறித்து சிபிஐ விசா​ரணை மேற்​கொண்டு வரு​கிறது.இந்த வழக்​கில் ஏற்​கெனவே தவெக தலை​வர் விஜய் 3 முறை டெல்​லி​யில் சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் ஆஜராகி விளக்​கம் அளித்​தார். இந்த துயர சம்​பவத்​துக்கு திமுக மற்​றும் செந்​தில் பாலாஜி​யின் ஆதர​வாளர்​களே காரணம் என தவெக தரப்​பில் குற்​றம் சாட்​டப்​பட்டு வரு​கிறது.

மேலும், சம்பவம் நடந்த அன்று இரவே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததால், அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இந்​நிலை​யில், மார்ச் 17-ம் தேதி டெல்லி அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு செந்​தில் பாலாஜிக்கு சிபிஐ சம்​மன் அனுப்பியது.அதன்படி செந்​தில் பாலாஜி நேற்று முன்​தினம் சென்​னை​யில் இருந்து டெல்லி சென்​றார். நேற்று காலை 11 மணிக்​குத் தொடங்​கிய விசா​ரணை​யில், சிபிஐ அதி​காரி​கள் கரூர் சம்​பவம் குறித்து அவரிடம் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர். அப்​போது, விஜய் மற்​றும் தவெக நிர்​வாகி​கள் மீதே குற்​றச்​சாட்டை முன்​வைத்து செந்​தில் பாலாஜி பதில்​களை அளித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசா​ரணை​யின் போது, செந்​தில் பாலாஜி அளித்த விளக்​கங்​கள் அனைத்​தை​யும் சிபிஐ அதி​காரி​கள் வீடியோ​வாக​வும், எழுத்​துப்​பூர்​வ​மாக​வும் பதிவு செய்தனர். மாலை 5 மணி அளவில்​ வி​சா​ரணை நிறைவடைந்​தது.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

த.வெ.க சீனியர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை… 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, மார்ச் 15 டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் விஜய்யிடம் 3-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு, நேற்று இரவே விஜய் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு, பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை தேனாம்பேட்டையில் உள்ள ‘ப்ரெஸ்டிஜ் பாலிகன்’ வார் ரூமில் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, மாநிலம் தழுவிய தேர்தல் சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. த.வெ.க.-வை என்.டி.ஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படும் சூழலில், இன்றைய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்னதாக இன்று காலை பட்டினம்பாக்கத்தில் ஆலோசனையைத் தொடங்கிய விஜய், பின்னர் தேனாம்பேட்டை வார் ரூமிற்குச் சென்றார். ஆலோசனை முடிந்து வெளியே வந்த விஜய், அங்கு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து புன்னகையுடன் ‘தம்ப்ஸ் அப்’ (Thumbs up) காட்டி உற்சாகப்படுத்தினார்.

Read More
Election 2026இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ல் தேர்தல்: மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங் களிலும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, ராஜீவ் குமார் ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் அண்மையில் ஆய்வு செய்தோம். அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்.அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. தகுதியுள்ள ஒரு வாக்காளர்கூட விடுபடாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. எஸ்ஐஆர் பணிக்காக கடினமாக உழைத்த அனைத்து பிஎல்ஓக்களுக்கும் வாழ்த்துகள்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இளம் தலைமுறையினர், புதிய வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை கண்டிப்பாக செலுத்த வேண்டுகிறேன். உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க நீங்கள் தேர்தலில் வாக்களிப்பது அவசியமாகும். இந்தியாவின் ஒவ்வொரு தேர்தலும் ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தற்போது மீண்டும் ஒரு திருவிழாவை கொண்டாட உள்ளோம்.சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்தில் 6.44 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 5.67 கோடி, கேரளாவில் 2.7 கோடி, அசாமில் 2.5 கோடி, புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகம்.

ஒட்டுமொத்தமாக 824 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 20 நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தலை மேற்பார்வையிட உள்ளனர். பொதுத்தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய கடந்த 12 மாதங்களாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் எஸ்ஐஆர் பணி மிகவும் முக்கியமானது. மேலும் வாக்குப்பதிவின்போது பொதுமக்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்திருக்க சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களும் செயலி வாயிலாக உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகிறது.இத்தேர்தலில் 750 முதல் 900 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படும். தமிழகத்தில் 75,032, புதுச்சேரியில் 1,099, கேரளாவில் 30,471, அசாமில் 31,486, மேற்கு வங்கத்தில் 80,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக 2.19 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் பணியில் 25 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பல்வேறு படைப் பிரிவுகளை சேர்ந்த 8.5 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வாக்கு எண்ணும் பணியில் 40,000 அலுவலர்கள் பங்கேற்பார்கள்.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 7-ம் தேதி நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 10, அசாம் பேரவையின் பதவிக்காலம் மே 20, கேரள பேரவையின் பதவிக் காலம் மே 23, புதுச்சேரி பேரவையின் பதவிக் காலம் ஜூன் 15-ம் தேதிகளில் நிறைவடைகிறது.இந்த சூழலில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா, அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற 72 மணி நேரத்துக்குள் அனைத்து புள்ளி விவரங்களும் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Read More