Author: Namadhu Arasu

அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

அணு ஆயுதத்தைக் கைவிட ஈரான் சம்மதம்: அமெரிக்காவுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம்

ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம்தேதி போர் தொடங்​கியது. அதன்​பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு நீட்​டிக்​கப்​பட்டு வரு​கிறது.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

தமிழக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு இனி ஆன்லைனில் முன்பதிவு.. அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்ய இனி ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் சிறப்பு தரிசனத்திற்கு

Read More
சினிமாதமிழ்நாடு

மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின்

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தவெக அரசு அமைந்த பின்… முதன்முதலாக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் 

தவெக அரசு பொறுப்பேற்ற பின், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதன்முதலாக இன்று நடைபெறவுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த மாதம் 10ஆம்

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் அண்ணாமலை

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்​ன​தாக அண்​ணா​மலை திடீரென தலை​வர் பதவி​யில் இருந்து மாற்​றப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக நயி​னார் நாகேந்​திரன் நியமிக்​கப்​பட்​டார். இந்த மாற்​றம் அண்​ணா​மலை ஆதர​வாளர்​களிடையே கடும்

Read More
தமிழ்நாடு

ஜல் ஜீவன் திட்டம் 2.0- மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழ்நாடு முதலமைச்சர்  விஜய் இன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் புதுதில்லியிலிருந்தும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து

Read More
RASI PALANRASI PALANஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெயரும் குரு.. 2026

12 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெயரும் குரு..

12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இது குறிப்பிட்ட ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அளவில்லா மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கப்போகிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். திருக் கணிதப்படி 2.6.2026 அன்று பெயர்ச்சி ஆகிறார். அவரது விசேஷ பார்வைகளான 5,7,9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம்,மகரம், மீனம் ராசிகளில் பதிகின்றன.

மேஷம்: எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். எதிர்பாரா பயணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடி மகிழ்வு தரும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. வரவுக்கு ஏற்ப செலவும் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம். ராகவேந்திரர் வழிபாடு, வாழ்வை ரம்யமாக்கும்.

மிதுனம்: உழைப்பினால் உயர்வுகள் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் தளராத உழைப்பினால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடனிருக்கும் யாருடனும் வீண் உரசல் வேண்டாம். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடவே கூடாது. இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். கடினமான வார்த்தைகளால் அதை விரட்டிவிட வேண்டாம். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வீடு, மனை சார்ந்த பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்காள். பழைய கடன்களை நேரடியாகச் சென்று பைசல் செய்யுங்கள். செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கண்கள், முதுகு, அலர்ஜி உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.

கடகம்: உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம்.. அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். புதிய பணி தேடுவோர்க்கு வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்ப சூழல் மறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். இரவில் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம்.கழுத்து, மூட்டு, பல் உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

விருச்சிகம்: ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் பாராட்டு கிட்டும். உடனிருப்போருடன் உரசல் தவிருங்கள். சிலருக்கு எதிர்பாரா இடமாற்றம் வரலாம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். உங்கள் வாக்கில் இனிமை இருந்தால், அது நிலைக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளில் முன் நின்று நடத்துவீர்கள். அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் சேதாரம் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் நேரடி கவனம் முக்கியம். அரசுத்துறையில் இருப்போர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். வயிறு, பல், சளித்தொந்தரவு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு வாழ்வை பிரகாசிக்கச் செய்யும்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து… அதிகாரிகள் சஸ்பெண்ட்… தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழ்நாடு அரசு மே 13 முதல் 22 வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை நிர்வாக காரணங்களால் ரத்து செய்தது, சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
அவசர மற்றும் அவசியமான தேவைகளுக்காக வழக்கமான கால அவகாசத்தைக் குறைத்து குறுகிய கால டெண்டர்கள் வழங்கப்படும். ஆனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பல்வேறு குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்நிலையில், மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

Read More
educationதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.31% பேர் தேர்ச்சி

தமிழக பள்​ளிக் ​கல்வி பாடத் திட்​டத்​தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு (மார்ச் 2026) கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்​கி கடந்த ஏப்​.6-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தொடர்ந்து விடைத்தாள் திருத்த பணிகள் தொடங்கி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று சென்னை – அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

மொத்தம் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
வழக்கம்போலவே இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 92.15 சதவீதம், மாணவிகளின் எண்ணிக்கை 96.47 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களை விட 4.32 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரையில் புதுக்கோட்டை (97.57%), சிவகங்கை (97.54%), தஞ்சாவூர் (97.41%), திருச்சி (97.31%), கன்னியாகுமரி (97.30%) மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதவீதம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

தமிழ் – 98.43%, ஆங்கிலம் 99.44%, கணிதம் 97.36%, அறிவியல் 98%, சமூக அறிவியல் 97.93%.

நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:

தமிழ் – 34 , ஆங்கிலம் – 93, கணிதம் 3194, அறிவியல் – 10476, சமூக அறிவியல் – 3336 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.66%

Read More