Author: Namadhu Arasu

இந்தியாஉலகம்தமிழ்நாடுமாவட்டம்வணிகம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் நடவடிக்கை என எச்சரிக்கை

தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு இல்​லை; பொது​மக்​களிடம் வதந்தி பரப்​பி​னால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்தி வரும் தீவிர போர் தாக்​குதலால், இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் தடைபட்​டுள்​ளது. இதனால் சமையல் எரி​வாயு பற்​றாக்​குறை ஏற்​பட்​டு, வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. வீட்டு உபயோக சிலிண்​டர் மட்​டும் கட்​டுப்​பாடு​களு​டன் பொது​மக்​களுக்கு விநி​யோகிக்​கப்​படு​கின்​றன.கொள்​கிறேன் என்று கூறியுள்ளார்.இதற்​கிடையே பெட்​ரோல், டீசலுக்​குத் தட்​டுப்​பாடு ஏற்​படப் போவ​தாக​வும், அதன் விலை உயரப் போவ​தாக​வும் சமூக வலை​தளங்​களில் பரவியது. இதனால் அதிர்ச்​சி​யடைந்த மக்​கள், சென்னை உள்பட தமிழகத்​தின் பல்​வேறு நகரங்​களில் உள்ள

பெட்​ரோல் பங்க்​கு​களில் நேற்று முன்​தினம் இரவு முதலே குவி​யத் தொடங்​கினர். குறிப்​பாக, சென்​னை​யில் பல இடங்​களில் உள்ள பெட்​ரோல் பங்க்​கு​களில் பைக்​கு​கள், கார்​களில் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​து, எரிபொருளை நிரப்​பினர்.

எழும்​பூர், சேத்​துப்​பட்​டு, நுங்​கம்​பாக்​கம், அண்​ணா​சாலை, கோடம்​பாக்​கம், சைதாப்​பேட்​டை, கிண்​டி, ராயப்​பேட்​டை, அம்​பத்​தூர், முகப்​பேர், அண்​ணா நகர் உள்பட பல்​வேறு இடங்​களில் உள்ள பெட்​ரோல் பங்க்​கு​களில் கூட்​டம் அலைமோ​தி​யது. சிலர் கேன்​களில் பெட்​ரோல் வாங்க வந்​தனர். அவர்​களுக்கு பெட்​ரோல் வழங்க மறுத்​த​தால், ஊழியர்​களிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர்.இதே​போல், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திருச்சி உள்பட பல்​வேறு நகரங்​களில் உள்ள பங்க்​கு​களில் பெரு​மள​வில் மக்​கள் குவிந்​த​தால், போக்​கு​வரத்து நெரிசலும் ஏற்​பட்​டது.

இதற்​கிடையே, எரிபொருள் தட்​டுப்​பாடு அச்​சத்​தில், சென்​னை​யில் பல இடங்​களில் பொது​மக்​கள் தங்​கள் பைக்​கு​கள், கார்​களை அருகே உள்ள மெட்ரோ நிலைய பார்க்​கிங்​கில் நிறுத்​தி​ விட்​டு, மெட்ரோ ரயி​லில் பயணித்தனர். இதனால், ஆலந்​தூர், பரங்​கிமலை, சென்ட்​ரல், கோயம்​பேடு உள்பட பல மெட்ரோ ரயில் நிலைய பார்க்​கிங்​கில் வாக​னங்​களை நிறுத்த முடி​யாமல் வழக்​க​மாக வரும் பயணி​கள் சிரமப்​பட்​டனர்.

எரிபொருள் இருப்பு குறித்​து, தமிழக பெட்​ரோலிய விற்​பனை​யாளர் சங்க மாநிலத் தலை​வர் முரளி கூறிய​தாவது:90 நாட்களுக்கு இருப்பு: நாடு முழு​வதும் அடுத்த 90நாட்​களுக்​குத் தேவை​யான பெட்​ரோல் மற்​றும் டீசல் கையிருப்பு உள்​ளது. சென்னை முதல் கன்​னி​யாகுமரி வரை உள்ள 7 ஆயிரம் பெட்​ரோல் பங்க்​கு​களி​லும் விநி​யோகம் சீராக நடை​பெறுகிறது. மக்​கள் தேவைக்கு அதி​க​மாக வாங்​கு​வ​தால் செயற்கை தட்​டுப்​பாடு உரு​வாகும் நிலை ஏற்​படக்கூடும். மேலும், கேன் மற்​றும் பாட்​டில்​களில் பெட்​ரோல் வாங்​கு​வது மிக​வும் ஆபத்​தானது. தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் இப்​போதைக்கு தட்​டுப்​பாடு இல்​லை. தமிழகத்​தில் உள்ள 14 முனை​யங்​களில் 21 நாட்​களுக்​குத் தேவை​யான அளவு எரிபொருள் இருப்பு உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பெட்​ரோல், டீசல் மற்​றும் பிற பெட்​ரோலியப் பொருட்​கள் போது​மான அளவு இருப்​பில் உள்​ளன. மேலும், நாடு முழு​வதும் விநி​யோக நடவடிக்​கைகள் சீராக உள்​ளன. வாடிக்​கை​யாளர்​கள் வதந்​தி​களைப் புறக்​கணித்​து, எரிபொருள் நிலை​யங்​களில் தேவையற்ற கூட்​டத்தை தவிர்க்க வேண்​டும்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்மாவட்டம்

துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணி​ 2027-ல் நிறைவடையும்: தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்

சென்னை துறைமுகம் – மதுர​வாயல் 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் 2027-ம் ஆண்​டில் நிறைவடை​யும் என்று தேசிய நெடுஞ்​சாலை ஆணைய மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் தெரி​வித்​தார்.

சென்னை துறைமுகம் – மதுர​வாயல் இடையே 21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன.தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் கூறிய​தாவது: தொடக்​கத்​தில் ஒற்றை அடுக்​காக திட்​ட​மிடப்​பட்ட இப்​பாலம், மாநில அரசின் கோரிக்​கையை ஏற்​று, 2 அடுக்​காக மாற்​றப்​பட்​டுள்​ளது.

உள்​ளூர் நகரப் போக்​கு​வரத்​துக்​காக முதல் அடுக்​கு, சென்னை துறை​முகத்​துக்கு செல்​லும் கனரக சரக்கு வாக​னங்​களுக்​காக பிரத்​யேக​மாக 2-வது அடுக்கு அமைக்​கப்​படு​கிறது.நகரின் முக்​கிய பகு​தி​களில் வாக​னங்​கள் பாலத்​தில் ஏறவும், இறங்​க​வும் வசதி​யாக 13 சாய்​தளங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. நேப்​பியர் பாலம் பகு​தி​யில் அதிநவீன கேபிள் பாலம் அமைக்​கப்​படு​கிறது.

போக்​கு​வரத்து போலீ​ஸார் அனு​ம​தி​யுடன் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என தின​மும் 11 மணி நேரம் கட்​டு​மானப் பணி​கள் நடந்து வரு​கின்​றன. இதை 16 மணி நேர​மாக அதி​கரிக்க மாநில அரசிடம் அனு​மதி கேட்​டுள்​ளோம். 2027 டிசம்​பருக்​குள் திட்​டம் நிறைவடை​யும்.சென்னை – பெங்​களூரு விரைவுச் சாலை (262 கி.மீ.) திட்​டத்​தில் கர்​நாடகப் பகுதி பணி​கள் முடிந்​து​விட்​டன. தமிழகத்​தில் உள்ள 106 கி.மீ. தொலை​வில் 3 தொகுப்​பு​களின் பணி​கள் முடி​யும் நிலை​யில் உள்​ளன. தமிழகத்​தில் நெடுஞ்​சாலை உள்​கட்​டமைப்பை மேம்​படுத்த, கடந்த 10 ஆண்​டு​களில் தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்​துள்​ளது.

தற்​போது ரூ.40 ஆயிரம் கோடி மதிப்​பிலான பணி​கள் நடை​பெறுகின்​றன. தமிழகத்​தில் 77 இடங்​களில் உள்ள தேசிய நெடுஞ்​சாலை ஆணைய சுங்​கச் சாவடிகள் மூலம் கடந்த நிதி ஆண்​டில் ரூ.4,300 கோடி வசூலானது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஆணை​யத்​தின் சென்னை திட்ட இயக்​குநர் சிவம் சர்மா கூறும்​போது, ‘‘பிரம்​மாண்​ட​மான வார்ப்​புத் தளங்​களில் பாலத்​தின் கான்​கிரீட் பாகங்​கள் முன்​கூட்​டியே முழு​வீச்​சில் தயாரிக்​கப்​படு​கின்​றன. இதனால், மழைக்​காலத்​தி​லும் இடையூறின்றி மேம்​பால கட்​டு​மானப் பணி நடை​பெறும்’’ என்​றார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

சிலிண்டர் தட்டுப்பாடு – அரசு ஆலோசனை

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல், இந்திய எரிசக்தித் துறையில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் கடும் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளது. இந்த விநியோகத் தடையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் ஸ்தம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் நிலவும் கடும் தட்டுப்பாடு காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இதே போன்ற அச்சம் நிலவி வரும் சூழலில், பல முன்னணி உணவகங்களில் ஒரு நாளைக்குத் தேவையான எரிவாயு மட்டுமே கையிருப்பில் உள்ளதாகத் தெரிகிறது. நிலைமை சீரடையாவிட்டால் வணிகத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனினும், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதாக மாநில அரசு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

இந்த நெருக்கடியான நிலையைச் சமாளிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் எரிபொருட்களின் விநியோகம் மற்றும் விற்பனையை முறைப்படுத்தவும், சமமான விநியோகத்தை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதுக்கல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுத்து, பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் எரிபொருள் கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும், பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சிலிண்டர் தட்டுப்பாட்டால் முடங்கியுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருமாறும், தடையற்ற சேவையை வழங்கத் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுமாவட்டம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராவதிலிருந்து சிபிஐ விலக்கு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு விஜய் இன்று ஆஜராவதில் இருந்து சிபிஐ விலக்கு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் விஜயின் பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய் தரப்பில் அனுமதி கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு இன்று விஜய் ஆஜராக சிபிஐ விலக்கு அளித்திருப்பதாகவும், ஆனால், விசாரணையை சென்னைக்கு மாற்ற சிபிஐ மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.5,000 : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 63,000 குடும்பத் தலைவிகளுக்கு 5,000 ரூபாய் நிதியுதவியை முன்கூட்டியே வழங்க துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைபோலவே புதுச்சேரியிலும் மகளிருக்கான நிதியுதவித் தொகையை முன்கூட்டியே வழங்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்தது.
21 வயது முதல் 55 வயதுக்குள் உள்ள, சிவப்பு நிற குடும்ப அட்டையை வைத்துள்ள பெண்கள் இத்திட்டத்திற்கான பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.இதனிடையே இந்த தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ரங்கசாமி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.
இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கான 5,000 ரூபாயை முன்கூட்டியே சேர்த்து வழங்கப்படும் என துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார்.

Read More
அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா – இஸ்ரேல் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து 

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்ட துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்புக்கும் இடையே விரைவில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இருநாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரவு விருந்து அளித்தும் உபசரித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று, ஜெருசலேமில் உள்ள யூதர்களின் யாத் வஷேம் நினைவிடத்திற்கு சென்றார். 2ஆம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அந்நாட்டு அதிபர் இசாக் ஹோர்சோக்கையும் சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரம், விண்வெளி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கடல்சார் பாரம்பரியம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் பேசிய நெதன்யாகு, இந்தியாவிற்கும் தனக்குமான பிணைப்பு குறித்து நினைவு கூர்ந்தார். இஸ்ரேலும், இந்தியாவும் புதுமைகளை நோக்கிய பயணத்தில் குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார். தனக்கு அளிக்கப்பட்ட இஸ்ரேலின் உயரிய விருதை இந்திய நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இஸ்ரேலில் யுபிஐ பயன்படுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு விரைவில் முழு வடிவம் கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதிகூறினார்.இதனைத் தொடர்ந்து, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, தனது மனைவியுடன் விமான நிலையத்துக்கே வந்து பெஞ்சமின் நெதன்யாகு வழியனுப்பிவைத்தார்.

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

கொளத்தூரில் 2007 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

கொளத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: சென்னை பெரம்​பூர் டான்​பாஸ்கோ பள்ளி வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கொளத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சார்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை வழங்​கி​னார்.

மேலும், வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ், சிஎம்​டிஏ சார்​பில் ரூ.1.61 கோடி நவீன வசதி​களு​டன் கட்​டப்​பட்​டுள்ள குளிரூட்​டப்​பட்ட கொளத்​தூர் பேருந்து நிறுத்​தம் மற்​றும் சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.40.59 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள சாலை​யோரப் பூங்​கா, ரூ.70 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள 2 அமுதம் நியாய விலைக் கடைகள், ரூ.40 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள ஒருங்​கிணைந்த குழந்​தைகள் வளர்ச்சி மையம், ரூ.25 லட்​சம் செல​வில் அமைக்​கப்​பட்​டுள்ள நவீன பயணி​யர் நிழற்​குடை ஆகிய​வற்றை திறந்து வைத்​தார்.இதையடுத்​து, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், கொளத்​தூர் கபாலீஸ்​வரர் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரிக்கு ரூ.31.45 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடங்​களைத் திறந்து வைத்​தார். அப்​போது, முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: அறநிலை​யத் துறை சார்​பாக, கல்வி எனும் அறப்​பணிக்கு இந்​தக் கல்​லூரி ஒரு சாட்​சி​யாக இருக்​கிறது.

மாணவர்​களுக்கு நான் சொல்​லிக் கொள்​வது, கல்வி தான் கடவுள், கல்வி எனும் கடவுள் உங்​களுக்கு எல்​லா​வற்​றை​யும் வழங்​கும். படிப்​பு​தான் உங்​களை உயர்த்​தும். இன்று இந்​தியா முழு​வதும் பின்​பற்​றும் மாடலாக திரா​விட மாடல் இருக்​கிறது என்​றால், அந்த திரா​விட மாடல் அரசின் மாடல் தொகு​தி​யாக இருப்​பது கொளத்​தூர்.ஏதோ தேர்​தல் வரும்​போது மட்​டும் ஒன்​றிரண்டு திட்​டங்​களை திறந்து வைக்​க​வில்​லை. கடந்த 5 ஆண்​டு​களாக, ஒவ்​வொரு மாத​மும் வந்​து, உங்​களுக்​குத் தேவை​யான எல்​லா​வற்​றை​யும் செய்து கொண்​டிருக்​கிறோம். இந்​தக் கல்​லூரியை திறந்து சில ஆண்​டு​களி​லேயே 516 மாணவர்​கள் வளாக நேர்​காணலில் தேர்​வாகி பல்​வேறு வேலை​வாய்ப்​பு​கள் பெற்​றிருக்​கின்​றனர்.

இந்த எண்​ணிக்கை அதி​க​மாக வேண்​டும். இது கொளத்​தூருக்கு மட்​டுமல்ல. இதே​போல தமிழகம் முழு​வதும் ஒவ்​வொரு தொகு​தி​யிலும், ஒவ்​வொரு ஊரிலும், இது​வரை நடக்​காத அளவுக்கு முன்​னேற்​றப் பணி​களைச் செய்​திருக்​கிறோம். இந்​தி​யா​விலேயே எந்த மாநிலத்​தி​லும், எங்​கும் இல்​லாத வகை​யில் பல்​வேறு திட்​டங்​களை நிறைவேற்றி இருக்​கிறோம்.மக்​களை மையப்​படுத்​தி, மக்​களைத் தேடி வந்து சேவை​களை வழங்​கு​கின்ற மக்​களாட்​சி​யாக திரா​விட மாடல் பெயரெடுத்​திருக்​கிறது. இந்த நல்​லாட்சி தொடர, நம்​முடைய கொளத்​தூர் மேலும், மேலும் உயர, உங்​களு​டைய ஆதரவு என்​றும் எங்​களுக்கு இருக்​கும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன், சு.​முத்​து​சாமி, அர.சக்​கர​பாணி, பி.கே.சேகர்​பாபு, கோவி.செழியன், அன்​பில் மகேஸ், மேயர் ஆர்​.பிரி​யா, வரு​வாய்த் துறை செயலர் பெ.அ​மு​தா, வீட்​டு​வச​தித் துறை செயலர் காகர்லா உஷா, அறநிலை​யத் துறை செயலர் மணி​வாசன், பள்​ளிக்​கல்வி செயலர் சந்​திரமோகன், சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர் கோ.பிர​காஷ், உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்கர், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், அறநிலையத் துறை ஆணையர் தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் துரிதப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்-புஜ் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் அடுத்தக்கட்டமாக, டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 82 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் நாட்டின் முதல் மண்டல அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்தில் மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 55 நிமிடங்களில் சென்றடைலாம். அதாவது நமோ பாரத் விரைவு ரயிலால் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தற்போது, முதற்கட்டமாக நமோ பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது
3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.
இதன் மற்றொரு சிறப்பம்சம் மீரட் மெட்ரோ நிறுவனம், தனது தண்டவாளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை நமோ பாரத் ரயிலுடன் பகிர்ந்துக் கொள்கிறது. இதன் மூலம் மெட்ரோவில் பயணிப்பவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறாமல் அதே ரயில் நிலையத்தில் நமோ பாரத் ரயிலில் ஏற முடியும். இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 210 ரூபாய் வரை தூரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. மேலும், பெரும்பாலானோர் பணிக்கு செல்லக்கூடிய பீக் ஹவர்ஸில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளன.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட அதிவேக நமோ பாரத் ரயில் நாடு முழுவதும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான மீரட் மெட்ரோவையும் பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் தான் மெட்ரோ கட்டமைப்பில் அதிவேக கொண்ட ரயிலாகும்.
நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சாலை வழியாக வேலூர் வரும் விஜய்…

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப். 23) எழுச்சியுடன் நடைபெறுகிறது. இதற்காக முள்ளிகொண்டா அருகே 33 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில், பாதுகாப்பை உறுதி செய்ய அனைவருக்கும் க்யூஆர் (QR) கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளாக 50 கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் கேலரி வாரியாக செய்யப்பட்டுள்ளன. மேலும், 25 மருத்துவர்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 100 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் அவசர சிகிச்சை மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மைதானத்தில் தயார் நிலையில் உள்ளனர். நடிகர் விஜய்யின் இந்த வருகை வேலூர் மாவட்ட தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அவசர கால தேவைகளுக்காக 25 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு மற்றும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கூட்டத்தை முறைப்படுத்தவும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த சந்திப்பில் பங்கேற்க மொத்தம் 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைவருக்கும் பிரத்யேக ‘க்யூஆர் கோடு’ (QR Code) கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஸ்கேன் செய்த பிறகே நிர்வாகிகள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.கடந்த முறை சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு வேலூர் கூட்டத்தில் நிர்வாகிகள் அமரும் பகுதி முழுவதும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானத்தில் 50 தனித்தனி கழிப்பறை வசதிகள் மற்றும் ஒவ்வொரு கேலரியிலும் தடையின்றி குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் இந்த சந்திப்பிற்கான பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று (பிப். 23) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்காக மேடை மற்றும் தடுப்புகள் தயார் நிலையில் உள்ளன.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்!

தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளால் முற்றிலும் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிர்மப், சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வரி விதிப்புகளை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் அதில் 6 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராகவும், 3 நீதிபதிகள் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.இறுதியில் 6-க்கு 3 என்ற வாக்குகளின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாடாளுமன்றத்தை மீறி தனிச்சையாக வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரமில்லை எனவும், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை டிரம்ப் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் அந்நாட்டு பங்குச் சந்தைகள் மீண்டும் எழுச்சியடையத் தொடங்கின. எஃகு, அலுமினியம், தினசரி நுகர்வு உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read More