Author: Namadhu Arasu

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

தமிழ்நாடு பட்ஜெட்-முக்கிய அறிவிப்புகள்….

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​தார். வரும் 20ஆம் தேதி 2026-27ஆம் நிதிஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல்* மதிப்பு கூட்டு பொருட்களுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு. * 496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
* விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.175 கோடி செலவில் 3.4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இலவச தென்னங்கன்று வழங்க ரூ.78.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிட விவசாயிகளுக்கு ரூ.62 கோடியில் திட்டங்கள். அரசின் திட்டங்களால் 17,035 ஆதி திராவிட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

* 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.27 கோடியில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் * அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடையும் விதமாக, கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட இருக்கிறது.ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் * பயிர் சேதங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. பயிர் சேத நிவாரணத்தால் 25 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் பன்னீர்செல்வம்

ரூ.500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும்- தங்கம் தென்னரசு தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது-
8 லட்சம் வீடுகள் இலக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். தற்போது வரை 1.71 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 2030 ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள்,கனவரால் கைவிடப்பட்டோர், முதியோர் உதவித் தொகைக்காக ரூ.5,463 கோடி ஒதுக்கீடு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 5,40,511 மாணவர்கள் ரூ.1000 பெறுகிறார்கள் புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளது.

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

1. பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 01.01.2020 முதல் 31.12.2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்கப்பட்டது.

2. அதே போன்று ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

3. அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும், அவர்கள் குடும்பத்தினர் பெறும் வகையில் வங்கிகள் மூலம் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

4. பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ஐந்து முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. உயர்கல்வி உதவியாக பத்து இலட்சம் ரூபாயும், 5. அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பயில முன்பணம் ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்வி பயில முன்பணம் ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

6. அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண முன்பணம் ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

7. அரசுப் பணியாளர்களுக்கான பண்டிகை முன்பணத்தை இருபதாயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை முன்பணத்தை ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

8. ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

9. பெண் அரசு அலுவலர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

10. இவை அனைத்திற்கும் மகுடமாய் அமையும் வகையில், அரசுப் பணியாளர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை’ இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள்.

11. அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன.

12. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 ஒதுக்கீடு! மாணவர்களுக்கு ஜாக்பாட்..மற்றும் பல முக்கிய திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

இன்று இடைக்கால பட்ஜெட்டில்-மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆகுமா…

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​கிறார். வரும் 20-ஆம் தேதி 2026-27ஆம் நிதி ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்​யப்​படு​கின்​றன.தற்போது குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்தத் தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கான அறிவிப்பும், பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்த அறிவிப்பும் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நேரமென்பதால் அரசு ஊழியர்களைக் கவரும் வகையில், தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த குழுவின் அறிக்கை பற்றிய தகவல்கள் வெளியிடப்படலாம். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்த நிலையில், மாநில அரசே செயல்படுத்துவது குறித்தும், மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்துதல், புதிய மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலை மற்றும் மேம்பாலப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. ‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து புதிய சலுகைகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக விரிவாக்கம் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.தற்போது குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்தத் தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கான அறிவிப்பும், பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்த அறிவிப்பும் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

சர்வதேச தரத்தில் மெரினா கடற்கரை…

மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட ‘ப்ளூ பிளாக்’ (Blue Flag) திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பிப்.22-ம் தேதி இத்திட்டம் திறக்கப்பட உள்ளது. பிப்.17-ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில சிறிய பணிகள் நிலுவையில் உள்ளதால் திறப்பு விழா சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.”குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி அமைக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. ஆரம்பத்தில் 2 விளையாட்டுப் பகுதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், தற்போது அது 4 விளையாட்டுப் பகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே உள்ள கடற்கரைப் பகுதியில், சர்வதேச ‘ப்ளூ பிளாக்’ தரநிலைகளை எட்டும் நோக்கில், சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்த 2-ம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டம்-1ஐ விட, இந்த பகுதியில் மணற்பரப்பு அகலமாகத் தக்கவைக்கப்பட்டு, கடற்கரை காட்சியை ரசிக்கும் வகையிலும், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ள வசதிகளானவை; 60 மூங்கில் இருக்கைகள் மற்றும் 30 மூங்கில் குடைகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 4 குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள், 2 படிப்பகங்கள் (Study zones) மற்றும் 2 செல்பி புள்ளிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக மூங்கில் குப்பைக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான, உள்ளடக்கிய கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிலை அமைப்பதற்கான அடித்தளப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Read More
IPL - 2020இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி; 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கவில்லை. ஆசியக் கோப்பையிலும் இந்திய – பாகிஸ்தான் கேப்டன்கள் கைகுலுக்கவில்லை. இது டி20 உலகக்கோப்பையில் தொடர்கிறது.

டி20 உலகக் கோப்பையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி கொழும்பு பிரேமதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தை பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். 9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. 11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

19-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இவர் 29 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் தாரீக் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்கருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது ஷிவம் துபே ரன்அவுட் ஆனார். கடைசி பந்தை அக்சர் படேல் சந்தித்தார். அதில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சகிப்சதா ஃபர்ஹான், சயீம் ஆயுப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஃபர்ஹான் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து சல்மான் ஆகா களம் இறங்கினார். 2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்.பி.பி.டபிள்யூ ஆனார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். அதன்பின் பாகிஸ்தான விக்கெட்டுகள மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களில் ஆல்அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. தொடக்கம் முதலே துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பால் இந்தியா இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது.61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
டி20 உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் இறுதிவரை ஆதிக்கம் செலுத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள், பாகிஸ்தான் அணியை 114 ரன்களுக்குச் சுருட்டினர்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.5,000 …

ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுவதாகவும், அடுத்த 3 மாத உரிமைத் தொகையாக மூவாயிரம் ரூபாயும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு திமுக கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர். இந்நிலையில் ரூ.5,000 முன்பே வரவு வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. அதன்படி மே மாதம் வரை மட்டுமே இந்த ஆட்சிக்கான அதிகாரம் என்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருவதால் முன்கூட்டியே வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த திடீர் நடவடிக்கை துணை முதலமைச்சர் உதயநிதி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேரை தவிர்த்து மற்ற யாரும் அறிந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் உள்பட இரண்டாம் கட்ட அமைச்சர்கள், அரசின் முக்கியத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அறிந்திருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
வங்கிகளின் அலுவல் நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே மகளிரின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், அதற்காக 8 தேசிய வங்கிகளுக்கு முதல் நாளே அலர்ட் கொடுக்கப்பட்டு 750 பேட்ஜ்களாக பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. காலை 6 மணி முதல் 11 மணிக்குள் மகளிரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என மற்றொரு இன்ப அதிர்ச்சியை மகளிருக்கு வாக்குறுதியாக அளித்தார்.
முதலமைச்சரின் அந்த வீடியோவும் யாரும் அறிந்திராத வண்ணம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. பிகாரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொழில்முனைவோருக்கான திட்டங்களை அறிவித்து, மகளிரின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஆனால், மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரத்து 500 ரூபாயை முன்கூட்டியே வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது.வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நிலையில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவும் அதற்கு முதல் நாளான இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதையும் கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பே பணத்தை வரவு வைத்து தனது அரசியல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், நண்பகல் 12 மணியளவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதில் சேர்க்க வேண்டிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதித்து, அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என தெரிகிறது
அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், புதிய திட்டங்கள், மக்கள் நல அறிவிப்புகள் மற்றும் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்பதால் அமைச்சரவைக் கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை…

இன்று பிப்ரவரி 2ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.800 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.6,400 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை..இந்த நிலையில் பட்ஜெட்டிற்கு பிறகும், பிப்ரவரி மாத தொடக்கத்திலும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More
அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

அமெரிக்க டாலருக்குச் சவால் விடும் சீனா..

சீனாவின் நாணயமான யுவான் உலகளாவிய கையிருப்பு நாணயமாக மாற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய அமைப்பில் சீனா மேலும் முக்கிய பங்கு வகிக்க விரும்பும் நிலையில், தனது நாணயம் குறித்த இலக்குகளை அவர் இதுவரை இல்லாத அளவில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சீனா ஒரு வலிமையான நாணயத்தை உருவாக்க வேண்டும் என்றும், அது சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் வெளிநாட்டு நாணய சந்தைகளில் பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் கையிருப்பு நாணய அந்தஸ்தை அடைய வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜி ஜின்பிங்கின் கருத்துகள் வெளியான இந்த நேரம், உலக நிதி சந்தைகளில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் காலம் என்று கூறப்படுகிறது. உலக ஒழுங்குகளில் ஏற்படும் மாற்றத்தை சீனா முன்பை விட இப்போது மிகத் தெளிவாக உணர்கிறது என்று Pantheon Macroeconomics நிறுவனத்தின் மூத்த சீனா பொருளாதார நிபுணர் கெல்வின் லாம் தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் யுவானுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உலக ஒழுங்கில் சமீப காலங்களில் ஏற்பட்ட பிளவுகளை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, சீனாவின் மத்திய வங்கியின் ஆளுநர் பான் கோங்ஷெங், ஒரு புதிய உலக நாணய ஒழுங்கு உருவாகும் என தெரிவித்தார். ஷாங்காயில் முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், பல மையங்களைக் கொண்ட சர்வதேச நாணய அமைப்பில் யுவான் மற்ற நாணயங்களுடன் போட்டியிடும் என கூறினார்.

“யுவான் ஒரு உண்மையான உலகளாவிய நாணயமாக மாற வேண்டும் என்பதே பெய்ஜிங்கின் நோக்கம். அது ஒரே இரவில் டாலரை மாற்ற வேண்டிய அவசியமில்லை; ஆனால் பிளவுபட்டுவரும் உலக நிதி ஒழுங்கில், அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மூலோபாயமாக செயல்பட வேண்டும்,” என்று The Asia Group நிறுவனத்தின் சீனா நாட்டுத் தலைவர் ஹான் ஷென் லின் தெரிவித்துள்ளார்.

2022 -ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, யுவான் உலகில் வர்த்தக நிதியளிப்பு நாணயங்களில் இரண்டாவது பெரிய நாணயமாக மாறியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ கையிருப்பு நாணயங்களில் அதன் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது.

IMF தரவுகளின்படி, 2025 -ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, உலக கையிருப்புகளில் அமெரிக்க டாலர் சுமார் 57 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இது 2000 -ஆம் ஆண்டில் 71 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், யூரோ சுமார் 20 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. யுவான் ஆறாவது இடத்தில், வெறும் 1.93 சதவிகித பங்குடன் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் பொருளாதாரத்தில் உள்ள சமநிலையற்ற நிலைகளை சரி செய்ய வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

“உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது”

2025-26-ல் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக, 2025-26 நிதி ஆண்டின் பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையை அவர் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை, வர்த்தகம் சார்ந்த இடர்பாடுகள் என அனைத்தையும் கடந்து உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
உள்நாட்டில் பொருள்கள், சேவையின் நுகர்வு, முதலீடு ஆகியவை சிறப்பாக உள்ளதாகவும், 2026-27 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய ரூபாயின் மதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ள போதிலும், இது நாட்டின் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தரவு மையங்கள் பெருகி வருவது மற்றும் மின்சார தேவை அதிகரிப்பு காரணமாக உலகம் முழுவதும் காப்பர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

2016 – 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர்களாக தனுஷ், கார்த்தி, ஆர்யா தேர்வு!

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் திரைப்பட விருதுகள், 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 32 பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2016 – மாநகரம், 2017 – அறம், 2018 – பரியேறும் பெருமாள், 2019 – அசுரன், 2020 – கூழாங்கல், 2021 – ஜெய்பீம், 2022 – கார்கி ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான முதலிடத்தைப் பிடித்துள்ளன.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

அதனடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.இராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசும் வழங்கப்படுகின்றன.

சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

Read More