Author: Namadhu Arasu

Election 2026அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

2026 தேர்தலில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவு நடந்துள்ளது…

வரலாற்றில் முதல்முறை.. தமிழ்நாடு, மேற்குவங்கம் வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் இந்த மாதம் திட்டமிடப்பட்டு, நான்கு மாநிலங்களில் முழுமையாக தேர்தல் முடிவுபெற்றுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று நடந்த ஒரே கட்ட வாக்குப் பதிவில் இதுவரை 85.03 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் 92.25 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருக்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா சுதந்திரம் பெற்று இதுவரை தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல்களில், 2026 தேர்தலில்தான் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கிறது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் முழுமையான வாக்கு சதவிகிதம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை இல்லாத வகையில் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட். சுதந்திரத்திற்குப் பின் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Read More
Election 2026தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பூத் ஸ்லிப் எப்படி டவுன்லோட் செய்வது…..

மிக எளிதாக இணையவழியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் பதிவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்-வாக்குப்பதிவு (ஏப்ரல் 23ம் தேதி) நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு 23ம் தேதி காலை 7 மணிமுதல், மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் எவ்விதக் குழப்பமுமின்றி வாக்களிக்க உதவும் வாக்காளர் தகவல் சீட்டு-ன் (VIS) முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பெறும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது.வாக்காளர் தகவல் சீட்டு என்றால் என்ன? தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டு ஆகும். வாக்குச்சாவடியில் நமது விவரங்களை எளிதாகக் கண்டறிய இது உதவுகிறது.இதில் வாக்காளரின் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC Number) போன்ற தனிப்பட்ட விவரங்களுடன், நாம் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியின் பெயர், எண், முகவரி மற்றும் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ள வரிசை எண் (Serial Number) ஆகிய முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.இதிலுள்ள வரிசை எண்ணை வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் காண்பிப்பதன் மூலம், நமது விவரங்களை அவர்கள் நொடிப்பொழுதில் சரிபார்த்து, வாக்குப்பதிவு அறைக்குள் அனுமதிக்க ஏதுவாக இருக்கும். உதாரணமாக, வாக்குச்சாவடி மையத்தில் பல அறைகள் இருந்தால், நாம் எந்த அறைக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது.வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) என்பது அடையாளச் சான்று அல்ல. எனவே, வாக்களிக்கச் செல்லும்போது இதனுடன் சேர்த்து வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள அரசியல் கட்சி முகவர்களிடம் கேட்டு பெறலாம். மிக எளிதாக இணையவழியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘Search in Electoral Roll’ என்பதைத் தேர்வு செய்யவும். உங்கள் EPIC எண்ணைப் பயன்படுத்தித் தேடினால், உங்கள் விவரங்கள் தோன்றும். அதன் இறுதியில் உள்ள ‘Print Voter Information’ என்பதை அழுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொபைல் செயலி மூலமாகவும் உங்கள் டிஜிட்டல் பூத் ஸ்லிப்பைத் தரவிறக்கம் செய்து, வாக்குச்சாவடியில் அதிகாரிகளிடம் காண்பிக்கலாம்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி 

பெண்களின் சிறகுகளை பறித்த எதிர்க் கட்சிகள்’: மசோதாவை வீழ்த்தியது பெண் சிசுக்கொலைக்கு சமம்: மோடி ஆவேசம்
மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மசோதா தோல்வியடைந்த பிறகு எதிர்க்கட்சிகள் கொண்டாடியது மிகுந்த வேதனை அளித்தது என்று மோடி குறிப்பிட்டார்.
131-வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு லோக்சபாவில் 3-ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காததால் அது தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 எம்பிக்களும், எதிராக 230 எம்பிக்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற பெரும்பான்மைக்கு 352 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், போதிய ஆதரவு இல்லாததால் இது தோல்வியைத் தழுவியது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவும் மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது. மொத்தம் 489 பேர் வாக்களித்த நிலையில், ஆதரவாக 278 வாக்குகளும் எதிராக 211 வாக்குகளும் கிடைத்தன. எனினும், இது அரசியல் அமைப்பு திருத்த மசோதா என்பதால் நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதாவும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.
நாட்டின் பெண்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மோடி, எங்களால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை; அதற்காக நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மகளிர் மசோதா தோல்வியடைந்தபோது காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் மேசைகளைத் தட்டி மகிழ்ச்சியுடன் கைதட்டிக் கொண்டாடினர். இது நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பிற்குப் பின்னால் உள்ள அரசியலை விளக்கிய அவர், பெண்கள் வலிமை பெற்றால், அது வாரிசு அரசியல் நடத்தும் குடும்பக் கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால்தான் பெண்களின் அதிகாரத்தைத் தடுக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உண்மையான முகம் இப்போது தேசத்தின் முன்னால் வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் எப்போதுமே மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்தான் என்றார்.

இந்தியாவின் பின்தங்கிய நிலைக்குக் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டினார். இந்தியா அடைய வேண்டிய வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பை எட்ட முடியாமல் போனதற்குப் பின்னால் இருப்பது காங்கிரஸ் கட்சிதான். நம்முடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள், இன்று நம்மை விட வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டன. எல்லைப் பிரச்னைகள், ராணுவத்தினருக்கான OROP திட்டம் மற்றும் ஓ.பி.சி விவகாரங்கள் என அனைத்தையும் தீர்க்காமல் பல ஆண்டுகளாகத் தொங்கவிட்டதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்றார்.

தொகுதி மறுவரையறை குறித்து காங்கிரஸ் மற்றும் அதன் நண்பர்கள் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறார்கள். ஆங்கிலேயர்களிடம் இருந்து ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் விகிதாச்சார அடிப்படையில் அதிகரிக்கும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இந்த மசோதா நிறைவேறியிருந்தால் அனைத்து மாநிலங்களும் பயனடைந்திருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த மக்களுக்கே துரோகம் இழைத்துவிட்டனர். காங்கிரஸ் ஒரு சீர்திருத்தங்களுக்கு எதிரான கட்சி (Anti-reform party). நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் அனைத்து நல்முயற்சிகளையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். பிராந்தியக் கட்சிகள் வளர்வதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்புவதில்லை. காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், பெண்களுக்குமே எதிரானவர்கள் தான் என்றார்.

21-ம் நூற்றாண்டின் பெண்களுக்குச் சிறகுகளை வழங்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இது எதையும் பறிப்பதற்காக அல்ல, அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதற்காகவே. பெண் சக்தியை எதிர்க்கட்சிகள் மிகச் சாதாரணமாக எடைபோட்டுவிட்டனர். மகளிர் மசோதாவைத் தோற்கடித்ததற்காக மக்கள் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவார்கள் என்று பிரதமர் மோடி எச்சரித்தார். எதிர்க்கட்சிகள் தங்க தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் அவர்கள் ஏமாற்றிவிட்டனர் என்று பிரதமர் தனது உரையில் வேதனையுடன் குறிப்பிட்டார்.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

MR X விமர்சனம்.. ஆர்யா & கெளதம் கார்த்திக் நடிப்பில்…

ஆர்யா நடிப்பில் மனு ஆனந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் மிஸ்டர் எக்ஸ். இதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக உடல்ரீதியாக கடுமையான உழைப்பை கொடுத்திருந்தார் ஆர்யா. இன்று இப்படமானது தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.

ஆங்கில திரைப்படத்திற்கு இணையான முயற்சி hatsoff..

மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் ஓரளவுக்கு ஹைப்பை கூட்டியது. அதுமட்டுமின்றி தண்ணீருக்குள் இருந்தபடி ஆர்யா செய்த சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி ஆச்சரியத்தை உண்டு பண்ணியது .
மஞ்சு வாரியருக்கு இது பெஸ்ட். ஆக்ஷன் சீன்கள் எல்லாம் சூப்பர். சரத்குமார் படத்தில் முக்கியமான கேரக்டர். சிறப்பாக அதனை டெலிவர் செய்திருக்கிறார். அனகா, ரைசா வில்சன், அதுல்யா ஆகியோரும் தங்கள் ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். திபு படத்தை எலிவேட் செய்கிறார். குறிப்பாக அந்த 40 நிமிடங்கள். இயக்குநர் மனு ஆனந்த் ட்விஸ்ட் ஸ்க்ரீன்ப்ளேவில் சர்ப்ரைஸ் செய்கிறார். இது பெரிய வெற்றி”
கெளதம் கார்த்திக்கிற்கு நல்ல வில்லத்தனமான ஆக்க்ஷன் ஹீரோ ஆக நன்றாக பண்ணியுள்ளார்.
சண்டை காட்சிகள், எடிட்டிங், வேகமான திரைக்கதை, எல்லா கேரக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், திப்புவின் இசை இவை எல்லாம் படத்தின் கூடுதல் சிறப்பு அம்சங்கள்
கோடை விடுமுறைக்கு ஜாலியாக குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் – kk

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம்.
தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. இது ஏன் எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எனும் ஆர்வத்தை தூண்டுகிறது டிரெய்லர். நம் மண்ணின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் இந்தக் கதை, ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பன்முக திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் திரைக்க்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி
தயாரிப்பு – T.G.தியாகராஜன்
இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
எழுத்து இயக்கம் – D.D.பாலச்சந்திரன்
ஒளிப்பதிவு – A. M எட்வின் சகாய்
எடிட்டிங்க் – நாகூரான் இராமச்சந்திரன்
ஸ்டண்ட் – தளபதி தினேஷ்
கலை இயக்கம் – அதூரி ஜெய்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கை….

மக்களவை இடங்களின் எண்ணிக்கையைத் தற்போதைய 543-லிருந்து 850 வரை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம். அதனுடன் இணைந்து, புதிய நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவதற்கான ‘தொகுதி மறுவரையறை ஆணையத்தை’ அமைப்பதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்படும்.

அரசாங்கம் இந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை இரண்டாவது முக்கிய மாற்றமான ‘மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை’ செயல்படுத்துவதோடு இணைத்துள்ளது. இந்தச் சட்டம் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க முயல்கிறது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடங்களை அதிகரிப்பது மற்றும் இந்த சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது ஆகிய இந்த இரட்டை நடவடிக்கை, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ஜனநாயகத்தில் ஏற்படும் மிக அடிப்படையான மாற்றங்களில் ஒன்றாகும்.

இந்த மாற்றங்கள் இந்திய ஜனநாயக முறையை அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாகவும், உள்ளடக்கியதாகவும், சமமானதாகவும் மாற்ற முயல்கின்றன.

தொகுதி மறுவரையறையே மையப்புள்ளி

மகளிர் இட ஒதுக்கீடு 2023-லேயே அரசியலமைப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பாக்கியிருந்தது அதன் உண்மையான அமலாக்கம் மட்டுமே. இந்த அமலாக்கம் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் 2027-ல் வெளியான பின்னரே இது சாத்தியமாகும் என்று கருதப்பட்டது.

ஆனால், 2026-க்குப் பிறகு வெளியாகும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறைக்கு முடக்கம் விதித்திருந்த அரசியலமைப்பு விதிகளில் திருத்தம் செய்து, இந்த நடவடிக்கையை விரைவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே, தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்தை எளிதாக்குவதே இந்த மூன்று நாள் நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட்டதற்கான காரணமாகும்.

தற்போதைய விதிமுறை

அரசியலமைப்பின் பிரிவு 82, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளை ‘மறுசீரமைப்பு’ செய்ய வழிவகை செய்கிறது. இந்த மறுசீரமைப்பு இடங்களின் எண்ணிக்கையிலோ அல்லது தொகுதிகளின் எல்லைகளிலோ மாற்றத்தை ஏற்படுத்தலாம். மக்கள் தொகை மாற்றத்திற்கு ஏற்ப, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் வாக்கிற்கும் சமமான மதிப்பு அல்லது எடை இருப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம்.

உதாரணமாக, ஒரு மக்களவை உறுப்பினர் பீகாரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, அவர் தோராயமாகச் சமமான எண்ணிக்கையிலான மக்களையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இதன் பொருள், ஒவ்வொரு தொகுதியின் மக்கள் தொகையும் முடிந்தவரை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதற்காகவே, பிரிவு 81 ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கைக்கும் அந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதம் அனைத்து மாநிலங்களுக்கும் முடிந்தவரை சமமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

இந்தக் கொள்கை மாநில சட்டப்பேரவைகளுக்கும் பொருந்தும்.

எனவே, தொகுதி மறுவரையறை என்பது ‘ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’ என்ற கொள்கையைப் பாதுகாப்பதாகும்.

சில மாநிலங்களின் எதிர்ப்பின் காரணமாக, 1976 முதல் தொகுதி மறுவரையறை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் தொகை மெதுவான விகிதத்தில் வளர்ந்த மாநிலங்கள், வேகமாக வளர்ந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மக்களவையில் தங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்று அஞ்சின.

இந்த எதிர்ப்புகளின் விளைவாக, 1976-ல் ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தொகுதி மறுவரையறை 25 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டது. இந்த காலம் முடிவடைந்த 2001-ம் ஆண்டில், மற்றொரு அரசியலமைப்புத் திருத்தம் மூலம் இந்த முடக்கம் 2026 வரை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

மக்கள் தொகை வளர்ச்சி குறைவாக உள்ள மாநிலங்கள், இடையில் உள்ள ஆண்டுகளில் மக்கள் தொகை வேறுபாடு இன்னும் தீவிரமடைந்துள்ளதைப் பற்றி கவலை தெரிவித்திருந்தாலும், இந்த முடக்கத்தை இனி நீட்டிக்கப் போவதில்லை என்பதில் இந்த அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

அரசு முன்மொழிவது என்ன?

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மக்கள் தொகை வளர்ச்சியை ஈடுகட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே வேளையில், வெவ்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் விகிதாச்சாரத்தை அப்படியே பராமரிக்க முன்வந்து அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க அரசு முயன்றது. மீண்டும் மீண்டும் பொதுவில் விடுத்த அறிக்கைகளில், மாநிலங்களுக்கு இடையிலான ஒட்டுமொத்த விகிதாச்சாரம் மாறாமல் இருக்க, இருக்கும் இடங்களை ஒரு நிலையான சதவீதத்தில் (50%) உயர்த்துவதாக அரசு கூறியது.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தங்கள் இடங்கள் மற்றும் அதன் மூலம் மக்களவையில் தங்கள் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்று அஞ்சிய மாநிலங்களின் முக்கிய கவலையை இது தீர்க்க முயன்றது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதாவில் இந்த 50% சீரான உயர்வைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இது முன்மொழிவது எல்லாம், மக்களவை இடங்களின் எண்ணிக்கையைத் தற்போதைய 543-லிருந்து 850 வரை (மாநிலங்களிலிருந்து 815, யூனியன் பிரதேசங்களிலிருந்து 35) உயர்த்துவது மட்டுமே.

இது வேறு சில முக்கியமான விஷயங்களையும் செய்ய முயல்கிறது. தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் (Census) இணைப்பதிலிருந்து இது விடுவிக்கிறது. மேலும் ஒவ்வொரு கணக்கெடுப்பிற்குப் பிறகும் ஒரு தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பு அவசியத்தை நீக்குகிறது. இனிமேல், நாடாளுமன்றம் எப்போதெல்லாம் அத்தகைய நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படலாம். இது கடைசியாக வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் அமையாமல், நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில் அமையும்.

மக்கள் தொகை என்பதன் வரையறையை “கடைசியாக முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு” என்பதிலிருந்து “நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் தீர்மானிக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட மக்கள் தொகை” என மாற்ற இந்தத் திருத்தம் முன்மொழிகிறது.

இது தற்போதைய அரசாங்கத்திற்கு 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளுக்காகக் காத்திருக்காமல், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில் ஒரு தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கும். இடங்களை ஒதுக்கும்போது இது நாடாளுமன்றத்திற்கு விரிவான விருப்பத்தேர்வையும் வழங்குகிறது.

வாக்கின் மதிப்பு

தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவில் அனைத்து மாநிலங்களிலும் இடங்களைச் சீராக 50% உயர்த்துவது குறித்துக் குறிப்பிடப்படாதது, இடங்களை அதிகரிக்கப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையில் மீண்டும் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இது மற்றொரு அரசியல் மோதலுக்கு வழிவகுக்கும் வாய்ப்புள்ளது.

மறுபுறம், அரசாங்கம் உண்மையில் அனைத்து மாநிலங்களிலும் மக்களவை இடங்களை 50% அதிகரிப்பதன் மூலம் தொடர்ந்தால், ‘ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’ கொள்கை சமரசம் செய்யப்படும்.

உதாரணமாக, தற்போதைய நிலவரப்படி, இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு மக்களவை எம்.பி சராசரியாக சுமார் 17.16 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதே நேரத்தில் அண்டை மாநிலமான ஹரியானாவில் ஒரு எம்.பி சராசரியாக 25.35 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே, ஹரியானாவில் ஒரு சராசரி நபர் அளிக்கும் வாக்கின் மதிப்பு இமாச்சலப் பிரதேசத்தை விடக் குறைவாக உள்ளது.

வாக்கின் மதிப்பை முழுமையாகச் சமமாக வைத்திருக்க முடியாது, ஆனால் தொகுதி மறுவரையறையின் நோக்கம் அதை முடிந்தவரை நெருக்கமாக வைத்திருப்பதே ஆகும். மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே இடங்கள் மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் அது மாநிலங்களுக்கு இடையிலான இடங்களின் விகிதாச்சாரத்தில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, ஒரு கணிப்பின்படி, உத்தரப் பிரதேசத்தின் மக்களவை இடங்கள் 80-லிருந்து 140 ஆக உயரக்கூடும், ஆனால் தமிழ்நாட்டின் இடங்கள் தற்போதுள்ள 39-லிருந்து 51 ஆக மட்டுமே உயரும்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் என்ன?

அரசு வட்டாரங்கள் கூறியதற்கு மாறாக, மசோதாக்கள் முரண்பாடுகள் நிறைந்தவை என்றும், அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படும் இடங்களின் விகிதாச்சாரம் மாறாமல் இருக்கும் என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

எனவே, குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக இடங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் “பரிசு” அளிக்கப்படுவதாக அவர்கள் வாதிடுகின்றனர். அனைத்து மாநிலங்களின் மக்களவை இடங்களையும் 50% அதிகரிக்கும் யோசனையையும் அவர்கள் எதிர்த்துள்ளனர். மக்கள் தொகை நிலைபெற்ற மாநிலங்களுக்கும் நிலைபெறாத மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி முழுமையான எண்ணிக்கையில் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மக்கள் தொகையை மட்டும் பார்க்காமல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் (ஜி.எஸ்.டி.பி) கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு கலப்பு மாதிரியை இட ஒதுக்கீட்டிற்கு பரிந்துரைத்துள்ளார். எதிர்க்கட்சிகள் கோரியிருந்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை என்று அரசாங்கத்தின் மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசாங்கம் இப்போது என்ன கூறுகிறது

கீழ் சபையில் தங்களின் இடங்களின் விகிதாச்சாரம் குறைந்துவிடும் என்ற தென்னிந்திய மாநிலங்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் விகிதாசாரப்படி உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் ஒரு அட்டவணையை (Schedule) தனது மசோதாக்களுடன் இணைக்கப்போவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்டவணை என்பது ஒரு மசோதாவின் உரைக்கு ஆதரவான விரிவான தகவல்களை வழங்கும் கூடுதல் பகுதியாகும். இந்த அட்டவணையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டிய துல்லியமான இடங்களின் எண்ணிக்கை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
Election 2026அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு: வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது.

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் – திமுக கூட்​டணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 4 பிராந்​தி​யங்​களி​லும் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களுக்கு நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,099 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​தல் பணி​யில் 5,000 அதி​காரி​கள், பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

காலை முதலே மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்​குப்பதிவு நடந்​துள்ளது‌. தொடர்ந்து பெறப்​படும் தபால் வாக்​கு​கள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்​தல் அதி​காரி ஜவஹர் கூறி​யுள்​ளார். புதுச்​சேரி​யில் இதுவரை நடந்த தேர்​தல்​களில் இதுவே அதி​கபட்ச வாக்​குப்​ப​திவு ஆகும்.

கேரளா​வின் மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கும் ஒரே கட்​ட​மாக நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது. 883 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.69 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 30,471 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. 76,203 போலீ​ஸார், மத்​திய படைகளை சேர்ந்த 140 அணி​கள் மற்​றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணி​களை சேர்ந்த வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 1.46 லட்​சம் அரசு ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.கண்​ணூர் மாவட்​டம் பின​ராயி நகரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் வாக்​களித்​தார். கேரளாவில் ஒட்​டுமொத்​த​மாக 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

அசாமின் 126 தொகு​தி​களுக்​கும் நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆளும் பாஜக தலை​மையி​லான வடக்​கு-கிழக்கு ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 722 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.50 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 31,486 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டிருந்​தன. மாநில போலீஸார், மத்​திய பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்கும் மேற்பட்ட வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். 2 லட்​சம் ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

முதல்​வரும், பாஜக மூத்த தலைவரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்​டி​யின் அசா​ரா​வில் குடும்​பத்​துடன் வாக்​களித்​தார். திப்​ரு​கார் பகு​தி​யில் பாஜக – அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்​டர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலில் பலர் காயமடைந்​தனர். பெரும்​பாலான பகு​தி​யில் வாக்​குப்​ப​திவு அமை​தி​யாக நடை​பெற்​றது. 85.38 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

Read More
குற்றம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

சாத்தான்குளம் வழக்கில் 9 பேருக்கும் தூக்கு தண்டனை – நீதிபதி அறிவிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளிகளில் யார் அதிகம் அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட இயலாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முழு விசாரணையும் முடிந்து கடந்த மாதம் 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.
அவர்களுக்கான தண்டனை விவரம் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், தண்டனை குறித்து சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு தங்களது நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இந்த வழக்கு கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கோரின.
இதனால் இந்த வழக்கை ஏப்ரல் 2ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவலர்கள் ஒன்பது பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் இவர்களுக்கு எவ்வளவு தண்டனை வழங்கலாம் என்ற பரிந்துரையை மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 9 பேரிடமும் தனித்தனியாக அவர்களது கருத்தை நீதிபதி கேட்டறிந்தார். அப்போது குற்றவாளிகள் ஒன்பது பேரும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் தாக்கவில்லை. எதிர்பாராத விதமாக நடந்த உயிரிழப்பு. எங்கள் குடும்ப நலன், பெற்றோர் நலன் கருதி குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி ஒவ்வொருவரின் குடும்பச்சூழல், குடும்பச்சொத்து, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியம், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை தனித்தனியாக கேட்டு பதிவு செய்து கொண்டார்.குற்றவாளிகள் ஒன்பது பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் தனித்தனியாக வாதிட்டனர். இது அரிதினும் அரிதான வழக்கு இல்லை. தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது. அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்ற வகையில் தான் தண்டனை இருக்க வேண்டும். ஒருவன் திருந்தவே மாட்டான். இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியே இல்லாதவன் என்ற முடிவுக்கு வரும்போதுதான் தூக்கு தண்டனை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். எனவே தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நேரடி கண்ணுற்ற சாட்சிகள் உட்பட பல்வேறு அறிவியல் பூர்வமான சாட்சிகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பாவிகளை காவல் நிலையத்தில் வைத்து தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தியதால் ஒட்டுமொத்த சமுதாயமே அதிர்ச்சியடைந்துள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி நீதிபதி முன் ஆஜராகி கண்ணீர் மல்க முறையீடு செய்தார். எந்த தப்பும் செய்யாத தனது கணவரையும், மகனையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்து விட்டார்கள். தனது கணவர் மற்றும் மகன் மீது இதற்கு முன் எந்த ஒரு சிறு வழக்கு கூட கிடையாது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. எனவே உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க முறையீடு செய்தார்.இதை தொடர்ந்து இந்த வழக்கின் தண்டனை விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, தந்தை மற்றும் மகன் இருவர் மீது பொய் வழக்கு பதிந்துள்ளனர். இது தெரியாமல் நடந்த தவறு அல்ல. குற்றவாளிகள் அனைவரும் நன்கு படித்தவர்கள், அரசு பணியில் உள்ளவர்கள். வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது. தந்தை முன் மகனையும் மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம்போன போக்கில் தாக்கி உள்ளனர். ஆயுள் தண்டனை வழங்கினால் போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு…

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக உள்ளது.

மத்திய கிழக்கு போரால் விநியோகம் பாதிப்பு. விலை உயர்வால் அதிர்ச்சி.

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும்.மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாதத்தின் முதல்நாளான இன்று வணிக சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.இன்று (ஏப்ரல் 1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கச்சா எண்​ணெய், எல்​பிஜி எரிபொருள் கொண்டு செல்​லும் கப்​பல்​கள் செல்ல தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. ஒரு சில கப்​பல்​கள் மீது ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் நூற்​றுக்​கணக்​கான சரக்கு கப்​பல்​கள் அங்கு காத்​துக் கிடந்​தன.இந்​திய கப்​பல்​களுக்கு அனு​மதி வழங்​கும்​படி ஈரான் அரசுடன் இந்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இதே​போல, ஈரானின் நட்பு நாடு​களும் பேச்​சு​ நடத்தின. இதையடுத்து இந்​தி​யா, பாகிஸ்​தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடு​களின் கப்​பல்கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து ஈரான் வெளி​யுறவுத் ​துறை அமைச்சர் சையத் அப்​பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்​ளது. மேற்கு ஆசியா போர்க்​கள​மாக உள்​ளது. இதனால், இங்கு எதிரி நாடு​களின் கப்​பல்​கள் செல்ல அனு​ம​திக்க முடி​யாது. மற்​றவர்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி திறந்​தே உள்​ளது’’ என்​றார்​.

‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ – அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்​பில் நேற்று முன்​தினம் நடந்த நிகழ்ச்​சி​யில் அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: அமெரிக்​கா – ஈரான் இடையே அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறு​கிறது. ஈரானின் உச்ச தலை​வ​ராக என்னை நியமிக்க அவர்​கள் விரும்​பு​கின்​றனர். ஆனால் நான் மறுத்​து​விட்​டேன். அமெரிக்க பிர​தி​நி​தி​களு​டன் ஈரான் பிர​தி​நி​தி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.அமெரிக்கா​வுடன் வெகு​விரை​வாக அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த ஈரான் விரும்​பு​கிறது. ஆனால், ஈரான் பிர​தி​நி​தி​களால் இதை வெளிப்​படை​யாக கூற முடிய​வில்​லை. ஈரான் ஆட்​சி​யாளர்​கள், ராணுவதளப​தி​கள் அடுத்​தடுத்து கொல்லப்​பட்டு வரு​கின்​றனர். உயிர்பயம் காரண​மாக ஒப்​பந்​தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிர​தி​நி​திகள் ஆர்​வம் காட்​டு​கின்​றனர். ஆனால் இதை பகிரங்​க​மாக அறி​வித்தால் சொந்த நாட்டு மக்​கள் அடித்துக் கொன்​று​விடு​வார்​கள் என்று அஞ்​சுகின்​றனர். ஒரு​வேளை, ஒப்பந்​தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரக​மாக மாறும். இவ்​வாறு ட்ரம்ப் கூறினார்.

போரை நீண்ட காலம் நீட்​டிக்க ட்ரம்ப் விரும்​ப​வில்​லை. அடுத்த சில வாரங்​களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதற்கிடையே, 5 நாட்​கள் போர் நிறுத்​தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்​தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.

Read More