தமிழ்நாடு

      

அணு ஆயுதத்தைக் கைவிட ஈரான் சம்மதம்: அமெரிக்காவுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம்

ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம்தேதி போர் தொடங்​கியது. அதன்​பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு நீட்​டிக்​கப்​பட்டு வரு​கிறது.

Covid-19

சினிமா

மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின்

அரங்கம் அதிர… விசில் பறக்க… விஜய் பதவியேற்பு விழா …

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

திரைகளில் ஒளிபரப்பு

ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்டரல் ரயில் நிலையம் உள்ளிட்ட 23 இடங்களில் அகன்ற எல்இடி டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்பப்பட்டன.

தொண்டர்களுக்கு சல்யூட்!

ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டு அரங்கை சுற்றியுள்ள வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலை உள்ளிட்ட பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள், பொதுமக்கள் `சி.எம். சார்’ என கோஷமிட்டு, விசில் அடிக்க, அவர்களுக்கு சல்யூட் அளித்தவாறு ஜோசப் விஜய் சென்றார்.பதவிப்பிரமாண நிகழ்வின் போது, `சி. ஜோசப் விஜய் எனும் நான்’ எனத் தொடங்கி பொறுப்பேற்றார். அப்போது பதவிப்பிரமாண உறுதிமொழி வாசகங்களை அவர் ஆக்ரோஷமாக வாசித்ததைக் கண்டு, ஆளுநர் அர்லேகர் குறுக்கிட்டு ஆசுவாசப்படுத்தினார்.உறுதிமொழி வாசிப்பின்போது, ஆதவ் அர்ஜுனா தவிர மற்ற அனைவரும் `ஆண்டவன் மீது ஆணையிட்டு’ எனக்கூறியும், ஆதவ் அர்ஜுனா `உளமார’ என்று கூறியும் பதவியேற்றுக் கொண்டனர். ராஜ்மோகன் அமைச்சராக பதவியேற்கும் போது, ஜோசப் விஜய் நோக்கி கையை நீட்டி, `ஆண்டவன் மீது ஆணையிட்டு’ எனக்கூறி பதவியேற்றுக் கொண்டார்.

உறுதிமொழி வாசகங்களை வாசித்தபின், ஆதவ் அர்ஜுனா, கீர்த்தனா ஆகியோர் `தமிழ் வாழ்க’ எனக்கூறினார். உறுதிமொழி வாசிப்பு முடிந்ததும் ஆனந்த், ஆவணத்தில் கையெழுத்திடும்போது, முதல்வரைப் பார்த்து, கையெழுத்திடட்டுமா எனக் கேட்க, முதல்வர் தலையசைப்புடன் கூடிய புன்னகையால் ஒப்புதல் அளித்த பிறகு கையெழுத்திட்டார்.முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் மேடை ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுனா கவனித்து வந்தார். ஜோசப் விஜய்யுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் என்.ஆனந்த், பதவியேற்பு விழா அரங்குக்கு வந்தவுடன், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா தம்பதியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.முதல்வர், அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு முடிந்ததும், ஆளுநருடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது. அப்போது முதல்வர், ஆளுநர் முன்பிருந்த டீப்பாய்களை அகற்ற வேண்டியிருந்தது.

இதற்காக அலுவலர்கள் வந்த நிலையில், முதல்வராகிவிட்டோம் என்றும் பாராமல், அலுவலர்களுடன் முதல்வர் ஜோசப் விஜய்யும் சேர்ந்து தூக்கிச்சென்றார். இதைப் பார்த்த கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

அதன்பின், ஆளுநர் அர்லேகருடன், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்தனர். இதில், முதல்வர் அருகில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் இருந்தார். நிகழ்ச்சி முடிவில் மேடையில் இருந்தவர்கள், அரங்கில் இருந்தவர்கள் என அனைவருடனும் முதல்வர் செல்ஃபி வீடியோ எடுத்தார்.செங்கோட்டையன் பதவியேற்கும்போது, முதல்வர் ஜோசப் விஜய், ராகுல்காந்தி உள்ளிட்ட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் `டிவிகே’ என கோஷம் எழுப்பியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். பதவியேற்ற பின் செங்கோட்டையன், விஜய்யை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார்.பதவியேற்பு விழாவுக்கு வந்த நடிகை த்ரிஷா, முதலில் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்ததுடன், அரங்கத்தினுள் சுற்றிலும் காலரியில் அமர்ந்திருந்த தவெக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது விசில் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது.பதவியேற்ற பின் முதல்வர் விஜய் ஆற்றிய முதல் உரை: மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக் கூட தொடமாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தவறு செய்ய மாட்டான், தவறு செய்ய விடவும் மாட்டான். எனது ஆட்சியில் தவறு செய்யும் எண்ணம் இருந்தால் இப்போதே அழித்துவிடுங்கள் என்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜோசப் விஜய் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் பேசியதாவது: சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்று இருந்த ஒரு சாதாரண உதவி இயக்குநருக்குப் பிள்ளையாகப் பிறந்தவன் நான். எனவே, வறுமை, பசி என்றால் என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.

உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே உங்கள் முன்பு நிற்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கொரு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்தீர்கள். பின்னர், அதையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்தேன்.

இப்போதும் ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று சொல்லி அன்பாக, உறவாக ஏற்றுக் கொண்டீர்கள். இந்த பயணத்தில் நான் சந்தித்த கஷ்டங்கள், அவமானங்களை எனக்காக நீங்களும் அனுபவித்தீர்கள். அவற்றைப் பொருட்படுத்தாமல், என் வலிகளை உங்கள் வலியாகக் கருதி என்னுடன் நின்றீர்கள்.உங்கள் ஆதரவுதான் இன்று.. ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்…’ என்று கூறி முதல்வராகப் பதவியேற்கும் நிலையை நிஜமாக்கியுள்ளது. என் உறவுகளே, நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. உங்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன்தான். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன்.

எது சாத்தியமோ, அதை மட்டுமே சொல்வேன். அப்படியானால் சாத்தியம் இல்லாததை செய்யமாட்டாரா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது, எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது. முக்கியமாக, தமிழக அரசின் தற்போதைய கடன் சுமையைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்துவிட்டு, கஜானாவை சுத்தமாக துடைத்துக் காலி செய்துவிட்டு, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு போயிருக்கின்றனர். அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் இந்த பொறுப்பை நாம் கையில் எடுத்திருக்கிறோம்.

நான் ஏதோ பொடிவைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அப்படி எதுவும் கிடையாது. உள்ளே சென்று பார்த்தால்தான், அரசு இயந்திரத்தின் உண்மை நிலை நமக்கு முழுமையாகத் தெரியும்.

அதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட விரும்புகிறேன். ஒரு வெளிப்படையான அரசாக, அதாவது தமிழக அரசின் தற்போதைய நிலையை வெளிப்படையாக உங்களிடம் விளக்கிவிட்டு, அங்கிருந்து நமது பயணத்தை தொடங்கவே விரும்புகிறேன்
யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால், முகத்தை மறைத்துக்கொண்டோ, உங்களுக்கு தெரியாமல் ரகசியமாகவோ நான் செய்ய மாட்டேன். எனது செயல்பாடுகள் அனைத்தும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே இருக்கும். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கும் நீங்கள், எனக்கு கொஞ்சம் அவகாசமும் கொடுக்க வேண்டும்.

நான் அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால், எனக்கு உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்கும். இது உங்களுடைய ஆட்சி.

இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிக கடுமையாகப் பின்பற்றப்படும். போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இன்றே தொடங்குவேன்.

நம் பிள்ளைகளை அதில் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது அரசின் பொறுப்பு. அதேபோல, சட்டம் – ஒழுங்கு, எல்லோருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்கள், கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களும் என் மக்கள்தானே. நண்பர்கள், எதிரிகள் என்ற பாகுபாடின்றி எட்டு கோடி தமிழ் மக்களையும் என் சொந்தங்களாகவே கருதுகிறேன்.

கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை சீரமைப்பதில்தான் எனது முதன்மையான கவனம் இருக்கும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக்கூட தொடமாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தவறு செய்ய மாட்டான், தவறு செய்ய விடவும் மாட்டான்.

அது யாராக இருந்தாலும் சரி. என்னுடைய அரசில் என் கூடவே இருப்பவர்களாக இருந்தாலும் சரி, யாரையும் விடமாட்டேன். ஒருவேளை, யாருக்காவது அப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்தால், இப்போதே, இந்த நிமிடமே அந்த எண்ணத்தை அழித்துவிடுங்கள். இங்கு ஒரே ஒரு அதிகார மையம்தான். அதுவும் என் தலைமையில் உண்டான அதிகார மையம் மட்டும்தான்.பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கின்ற மக்கள், மீனவர்கள் எல்லோருமே தவெக ஆட்சியில் நன்றாக இருப்போம். சிறுபான்மையினருக்கு தவெக அரசு கூடவே நிற்கும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான முகம்தான் இந்த விஜய்யின் முகம்.

இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்த ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விஜய் மாமாவுடைய குட்டி நண்பா, நண்பீஸ்.. அவர்களால்தான் இது நடந்திருக்கிறது. உங்களுக்காக உங்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டு, அனைத்து நல்ல விஷயங்களையும் இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான்.

நம்பிக்கையோடு இருங்கள். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புத்தம் புதிய நிர்வாக முறையை அமைப்போம். இது ஒரு புதிய தொடக்கம். உண்மையான மதச்சார்பற்ற, சமூக நீதிக்கான ஒரு புதிய சகாப்தம் இப்போது பிறக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நாளை பதவியேற்கும் விஜய்? – அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி… 

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று சந்திக்க நேரம் கேட்டு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 11 இடங்கள் தேவைப்படும் நிலையில் அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று சந்திக்க நேரம் கேட்டு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் ஆட்சி அமைக்க அழைத்தால் அடுத்த 2 வாரங்களில் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதை தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்க்கு விசில் அடித்து, கை தட்டியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்ற விஜய், கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏறத்தாழ 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்க ஆதரவு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்தவும், விஜயுடன் சேர்த்து 21 அமைச்சர்களும் பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் தேர்வு தொடர்பாக பட்டினப்பாக்கம் இல்லத்திலும் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.அதன்படி, தவெக உத்தேச அமைச்சர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியான நிலையில், என்.ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், தமிழன் பார்த்திபன், சரவணன், முகமது பர்வேஸ், விஜய் சரவணன் ஆகியோரும் கல்லாணை, விஜயலட்சுமி, டி.கே. பிரபு, பாலாஜி, சத்யபாமா, ராஜ்மோகன், ஜே.சி.டி.பிரபாகர், வி.எஸ்.பாபு, சம்பத்குமார், மரிய வில்சன், சபரிநாதன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் அமைச்சராவார்கள் எனக் கூறப்படுகிறது.

MR X விமர்சனம்.. ஆர்யா & கெளதம் கார்த்திக் நடிப்பில்…

ஆர்யா நடிப்பில் மனு ஆனந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் மிஸ்டர் எக்ஸ். இதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக உடல்ரீதியாக கடுமையான உழைப்பை கொடுத்திருந்தார் ஆர்யா. இன்று இப்படமானது தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.

ஆங்கில திரைப்படத்திற்கு இணையான முயற்சி hatsoff..

மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் ஓரளவுக்கு ஹைப்பை கூட்டியது. அதுமட்டுமின்றி தண்ணீருக்குள் இருந்தபடி ஆர்யா செய்த சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி ஆச்சரியத்தை உண்டு பண்ணியது .
மஞ்சு வாரியருக்கு இது பெஸ்ட். ஆக்ஷன் சீன்கள் எல்லாம் சூப்பர். சரத்குமார் படத்தில் முக்கியமான கேரக்டர். சிறப்பாக அதனை டெலிவர் செய்திருக்கிறார். அனகா, ரைசா வில்சன், அதுல்யா ஆகியோரும் தங்கள் ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். திபு படத்தை எலிவேட் செய்கிறார். குறிப்பாக அந்த 40 நிமிடங்கள். இயக்குநர் மனு ஆனந்த் ட்விஸ்ட் ஸ்க்ரீன்ப்ளேவில் சர்ப்ரைஸ் செய்கிறார். இது பெரிய வெற்றி”
கெளதம் கார்த்திக்கிற்கு நல்ல வில்லத்தனமான ஆக்க்ஷன் ஹீரோ ஆக நன்றாக பண்ணியுள்ளார்.
சண்டை காட்சிகள், எடிட்டிங், வேகமான திரைக்கதை, எல்லா கேரக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், திப்புவின் இசை இவை எல்லாம் படத்தின் கூடுதல் சிறப்பு அம்சங்கள்
கோடை விடுமுறைக்கு ஜாலியாக குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் – kk

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம்.
தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. இது ஏன் எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எனும் ஆர்வத்தை தூண்டுகிறது டிரெய்லர். நம் மண்ணின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் இந்தக் கதை, ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பன்முக திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் திரைக்க்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி
தயாரிப்பு – T.G.தியாகராஜன்
இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
எழுத்து இயக்கம் – D.D.பாலச்சந்திரன்
ஒளிப்பதிவு – A. M எட்வின் சகாய்
எடிட்டிங்க் – நாகூரான் இராமச்சந்திரன்
ஸ்டண்ட் – தளபதி தினேஷ்
கலை இயக்கம் – அதூரி ஜெய்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM

த.வெ.க சீனியர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை… 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, மார்ச் 15 டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் விஜய்யிடம் 3-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு, நேற்று இரவே விஜய் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு, பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை தேனாம்பேட்டையில் உள்ள ‘ப்ரெஸ்டிஜ் பாலிகன்’ வார் ரூமில் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, மாநிலம் தழுவிய தேர்தல் சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. த.வெ.க.-வை என்.டி.ஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படும் சூழலில், இன்றைய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்னதாக இன்று காலை பட்டினம்பாக்கத்தில் ஆலோசனையைத் தொடங்கிய விஜய், பின்னர் தேனாம்பேட்டை வார் ரூமிற்குச் சென்றார். ஆலோசனை முடிந்து வெளியே வந்த விஜய், அங்கு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து புன்னகையுடன் ‘தம்ப்ஸ் அப்’ (Thumbs up) காட்டி உற்சாகப்படுத்தினார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராவதிலிருந்து சிபிஐ விலக்கு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு விஜய் இன்று ஆஜராவதில் இருந்து சிபிஐ விலக்கு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் விஜயின் பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய் தரப்பில் அனுமதி கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு இன்று விஜய் ஆஜராக சிபிஐ விலக்கு அளித்திருப்பதாகவும், ஆனால், விசாரணையை சென்னைக்கு மாற்ற சிபிஐ மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

2016 – 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர்களாக தனுஷ், கார்த்தி, ஆர்யா தேர்வு!

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் திரைப்பட விருதுகள், 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 32 பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2016 – மாநகரம், 2017 – அறம், 2018 – பரியேறும் பெருமாள், 2019 – அசுரன், 2020 – கூழாங்கல், 2021 – ஜெய்பீம், 2022 – கார்கி ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான முதலிடத்தைப் பிடித்துள்ளன.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

அதனடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.இராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசும் வழங்கப்படுகின்றன.

சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

விளையாட்டு