தமிழ்நாடு

     

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு: வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது.

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் – திமுக கூட்​டணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 4 பிராந்​தி​யங்​களி​லும் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களுக்கு நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,099 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​தல் பணி​யில் 5,000 அதி​காரி​கள், பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

காலை முதலே மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்​குப்பதிவு நடந்​துள்ளது‌. தொடர்ந்து பெறப்​படும் தபால் வாக்​கு​கள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்​தல் அதி​காரி ஜவஹர் கூறி​யுள்​ளார். புதுச்​சேரி​யில் இதுவரை நடந்த தேர்​தல்​களில் இதுவே அதி​கபட்ச வாக்​குப்​ப​திவு ஆகும்.

கேரளா​வின் மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கும் ஒரே கட்​ட​மாக நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது. 883 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.69 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 30,471 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. 76,203 போலீ​ஸார், மத்​திய படைகளை சேர்ந்த 140 அணி​கள் மற்​றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணி​களை சேர்ந்த வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 1.46 லட்​சம் அரசு ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.கண்​ணூர் மாவட்​டம் பின​ராயி நகரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் வாக்​களித்​தார். கேரளாவில் ஒட்​டுமொத்​த​மாக 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

அசாமின் 126 தொகு​தி​களுக்​கும் நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆளும் பாஜக தலை​மையி​லான வடக்​கு-கிழக்கு ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 722 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.50 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 31,486 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டிருந்​தன. மாநில போலீஸார், மத்​திய பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்கும் மேற்பட்ட வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். 2 லட்​சம் ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

முதல்​வரும், பாஜக மூத்த தலைவரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்​டி​யின் அசா​ரா​வில் குடும்​பத்​துடன் வாக்​களித்​தார். திப்​ரு​கார் பகு​தி​யில் பாஜக – அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்​டர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலில் பலர் காயமடைந்​தனர். பெரும்​பாலான பகு​தி​யில் வாக்​குப்​ப​திவு அமை​தி​யாக நடை​பெற்​றது. 85.38 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

சினிமா

த.வெ.க சீனியர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை… 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, மார்ச் 15 டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் விஜய்யிடம் 3-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு, நேற்று இரவே விஜய் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு, பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை தேனாம்பேட்டையில் உள்ள ‘ப்ரெஸ்டிஜ் பாலிகன்’ வார் ரூமில் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, மாநிலம் தழுவிய தேர்தல் சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. த.வெ.க.-வை என்.டி.ஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படும் சூழலில், இன்றைய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்னதாக இன்று காலை பட்டினம்பாக்கத்தில் ஆலோசனையைத் தொடங்கிய விஜய், பின்னர் தேனாம்பேட்டை வார் ரூமிற்குச் சென்றார். ஆலோசனை முடிந்து வெளியே வந்த விஜய், அங்கு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து புன்னகையுடன் ‘தம்ப்ஸ் அப்’ (Thumbs up) காட்டி உற்சாகப்படுத்தினார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராவதிலிருந்து சிபிஐ விலக்கு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு விஜய் இன்று ஆஜராவதில் இருந்து சிபிஐ விலக்கு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் விஜயின் பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய் தரப்பில் அனுமதி கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு இன்று விஜய் ஆஜராக சிபிஐ விலக்கு அளித்திருப்பதாகவும், ஆனால், விசாரணையை சென்னைக்கு மாற்ற சிபிஐ மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

2016 – 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர்களாக தனுஷ், கார்த்தி, ஆர்யா தேர்வு!

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் திரைப்பட விருதுகள், 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 32 பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2016 – மாநகரம், 2017 – அறம், 2018 – பரியேறும் பெருமாள், 2019 – அசுரன், 2020 – கூழாங்கல், 2021 – ஜெய்பீம், 2022 – கார்கி ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான முதலிடத்தைப் பிடித்துள்ளன.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

அதனடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.இராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசும் வழங்கப்படுகின்றன.

சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” – சர்ச்சைகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முற்றுப்புள்ளி!

வந்தே மாதரம் மற்றும் மா துஜே சலாம் பாடலை பாட மறுத்ததாக எழுந்த சர்ச்சைக்கு தனது பாணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது விளக்கத்தைத் தந்துள்ளார்.
தனது சமீபத்திய பேட்டியில் இதுபற்றி பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை எப்போதும் ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், கௌரவிப்பதற்கான வழியாகத்தான் இருந்துள்ளதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்
பிரதமரின் முன்னிலையில் வேவ் உச்சி மாநாட்டில் பங்கேற்றது முதல், இளம் நாகா இசைக்கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் குழுவை உருவாக்கியது வரை பன்முகத்தன்மையுடன் பணியாற்றியதை எடுத்துக்கூறியுள்ளார். படைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல் – தணிக்கையில் என்ன….பிரச்சினை…

விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்​கக் கோரிய வழக்​கில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், என்னதான் பிரச்சினை என்பதை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

தவெக தலை​வர் நடிகர் விஜய்​-​யின் கடைசிப் படமான ‘ஜன​நாயகன்’ ஜனவரி 9-ல் உலகம் முழு​வதும் திரை​யிட திட்​ட​மிடப்​பட்​டிருந்​து.

இந்த நிலையில்தான், படத்​துக்கு சான்​றிதழ் வழங்க தணிக்கை வாரி​யம் தாமதம் செய்து வரு​வ​தாகக் கூறி, படத் தயாரிப்பு நிறு​வன​மான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்பட்​டது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​னிலை​யில் விசாரணைக்கு வந்​தது. அப்போது, தணிக்கை வாரி​யம் தரப்​பில் மத்​திய அரசின் கூடுதல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன் ஆஜராகி, படத்​துக்கு எதி​ராக தணிக்கை குழு உறுப்​பினர் ஒரு​வர் அளித்த புகாரை தாக்கல் செய்​தார்.
படத் தயாரிப்பு குழு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சதீஷ் பராசரன், வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன் ஆகியோர், “படத்​தைப் பார்த்து தணிக்கை சான்​றிதழ் அளிக்​கும் தணிக்கை குழு உறுப்​பினரே, எப்​படி படத்துக்கு எதி​ராக புகார் அளிக்க முடி​யும்? இதில் உள்நோக்​கம் உள்​ளது” என்​றனர்.

அப்​போது தணிக்கை வாரி​யம் தரப்​பில், “படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பும்​படி மத்​திய அரசு கூற​வில்​லை. தணிக்கைக்குழு தான் பரிந்துரைத்​துள்​ளது. அவ்​வாறு அனுப்ப தணிக்கை வாரியத் தலை​வருக்கு முழு அதி​காரம் உள்​ளது. படத்​தில் பாது​காப்பு படைகளின் சின்​னங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. சான்​றிதழ் வழங்​கு​வ​தில் தணிக்கை வாரி​யத்​துக்கு எந்த உள்​நோக்​க​மும் இல்​லை” என்று வாதிடப்​பட்​டது.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி, “யு/ஏ சான்​றிதழ் வழங்க தணிக்கை குழு பரிந்​துரை செய்த பிறகு, அந்​தப் படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்ப முடிவு செய்​தது ஏன்? தணிக்கை வாரி​யத்​தின் நடவடிக்​கைகள் ஏற்​புடையதல்ல” என்​றார்.
படத் தயாரிப்பு நிறு​வனம் தரப்​பில், “பெரும்​பான்மை உறுப்​பினர்​கள் யு/ஏ சான்​றிதழ் வழங்க பரிந்​துரைத்​துள்ள நிலை​யில், ஒரு​வர் மட்டும் புகார் அளித்​துள்​ளார் அவர்களின் நோக்​கம் திட்​ட​மிட்​டபடி படத்தை வெளி​யிடக்​கூ​டாது என்​பது​தான்” என்று தெரிவிக்​கப்​பட்​டது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, “இந்த வழக்​கில் ஜனவரி 9-ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்​கப்​படும்” என்று தெரி​வித்​தார்.

இந்த நிலையில், கேவிஎன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்களது மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது அசைக்க முடியாத ஆதரவே எங்களது மிகப்பெரிய பலம் மற்றும் ஒட்டுமொத்த ‘ஜனநாயகன்’ குழுவினருக்கும் அதுவே எல்லாமும் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் vs பராசக்தி… திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போகும் பொங்கல்!

பொங்கல் பண்டிகைக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி நேரடியாக மோதுகிறது. ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், பொங்கலுக்கு களம் காண்கிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி இருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கல் விடுமுறையை குறிவைத்தது. 1950-60 காலகட்டத்திற்கான கதை களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா, இதில் மொழி பிரச்சனையை பேசியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இதனை தயாரித்திருக்க, படம் பொங்கலன்று ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
பராசக்திக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், படம் குறித்தான கண்காட்சி அமைக்கப்பட, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், ஏற்கெனவே திரையுலகில் பரவி வந்த தகவலின்படி, பராசக்தியின் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ஜனவரி 14க்கு பதில், 4 நாட்களுக்கு முன்னதாக, அதாவது 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் ரிலீஸாகும் நிலையில், அதற்கு அடுத்த நாளே திரைக்கு வர இருக்கிறது பராசக்தி. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்திருப்பதாக பராசக்தி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு மார்க்கெட் இருக்கும் சூழலில், இருவரின் படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாவதால், இரு படங்களுக்கும் சரியான அளவு திரைகள் ஒதுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் வசூல் தாறுமாறாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தியும் சேர்ந்தே வருவதால், ஜனநாயகன் வசூலில் தாக்கம் இருக்கவே செய்யும் என திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது… எப்படியோ… இந்த பொங்கல்… சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையப் போகிறது.

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிப்பதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு-கரூர் சம்பவம்

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், பாஜக வழக்கறிஞரும் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது.
கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை யார் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
அப்போது, கூட்ட நெரிசல் வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத விஜயை, சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருப்பதாக தவெக தரப்பு சுட்டிக்காட்டியது. கரூரில் உயிரிழப்பு நடந்தவுடன் காவல்துறை தான் விஜயை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக நிர்வாகிகள் சிலரை காவல்துறை அனுமதிக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.
மேலும், உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் தவெக தரப்பு வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது மற்ற மனுக்களில் உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? என்று நீதிபதிகள் வினவினர். ஒரே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பு, வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டது.
இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, உயர் நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருப்பதால், சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறினார். தொடர்ந்து பிற மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ரவுடிகள் கூட்டத்தில் நுழைந்ததாலும், காவல்துறை தடியடி நடத்தியதாலும்தான் இந்த விபத்து ஏற்பட்டது என வாதிட்டனர்.
இரவில் உடற்கூராய்வு செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கேள்வி எழுப்பினர். இதற்கு சிறப்பு அனுமதியுடன் உடற்கூராய்வை இரவில் நடத்தலாம் என்றும், அதில் எந்த தவறும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வாதிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன், அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை தொடர்ச்சியாக தெரிவிப்பவர்கள், என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்றார்.
நண்பகல் 12 மணிக்கு வரவேண்டிய விஜய், இரவு 7 மணிக்கு தாமதாக வந்ததாகவும் வில்சன் சுட்டிக்காட்டினார். காலை முதலே அங்கு கூடியிருந்த மக்கள் தண்ணீர் மற்றும் உணவின்றி சோர்வடைந்து மயக்க நிலையை அடைந்ததாகவும், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டபோது அவர்கள் முண்டியடித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கூட்டத்தில் ரவுடிகளோ, ஆளும் கட்சியின்ரோ புகுந்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் வாதிட்டார். தொடர்ந்து, வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி வழங்கியிருந்தனர். இந்நிலையில்,கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக யார் விசாரிப்பது என்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்.

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது… பெருந்துயரம்…எப்படி – நடந்தது..

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 15 நிமிடத்தில் முடிந்த விஜய் பரப்புரைச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில், விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை 10 மணி முதலே தொண்டர்கள் அப்பகுதியில் திரளத் தொடங்கினர். ஆனால் நாமக்கல்லிலேயே விஜய் மூன்று மணிக்குதான் பேசினார் என்பதால் கரூர் பரப்புரை தாமதமாகிக் கொண்டிருந்தது. அதனால் தொண்டர்கள் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.
ஒரு கட்டத்தில் கட்டக்கடங்காத கூட்டம் கூடி நிற்கக் கூட இடமில்லாத நிலையில் கட்டடங்கள், மரங்கள் என ஆபத்தான வகையில் தொண்டர்கள் ஏறி நின்றனர். அதனால் பாதுகாப்பு கருதி 6 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டத்தால் ஊர்ந்தபடி சென்ற விஜயின் பரப்புரை வாகனம் ஒரு வழியாக இரவு 7 மணிக்கு வேலுச்சாமி புரத்திற்கு வந்தது. விஜய்யின் வாகனத்திற்கு முன்னால் 6 வாகனங்களும், விஜய் வாகனத்தைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் உள்ளே நுழைந்தபோதே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலுக்கான அறிகுறி தென்பட்டது.
வாகனங்களுக்கு வழிவிட தொண்டர்கள் ஒதுங்க முடியாத நிலையில் அலைமோதிய கூட்டத்தால் இரு ஜெனரேட்டர்கள் வைத்திருந்த தடுப்புகள் உடைந்து விழுந்து விஜய் வரும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு பகுதி இருளில் மூழ்கியது. அப்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாக கூட்ட நெரிசலில் சிலர் விழத் தொடங்க அவர்கள் உடனுக்குடன் அவசர ஊர்திகளில் அனுப்பப்பட்டனர்.
இரவு 7.12 மணி. விஜய் பேசத் தொடங்குகிறார். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் திணறுகிறது. பல மணி நேரம் காத்திருந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என கூக்குரலிடுகின்றனர்.
விஜயின் கவனத்தை ஈர்க்க பாட்டில்கள், காலணிகள் உள்ளிட்டவற்றை விஜய்யின் வாகனத்தை நோக்கி எறிந்தனர். அதனால் விஜயே சில தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசுகிறார். அதன்பின் விஜய் பேச்சில் கவனம் செலுத்த, அடுத்தடுத்து பலர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து மிதிபட்டனர்.
விஜய் ஒருபுறம் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் மூச்சுத் திணறி விழுந்தவர்களை ஏற்றிக் கொண்டு அவசர ஊர்திகள் ஓயாத ஒலியுடன் பறந்து கொண்டிருந்தன.
ஒரு பெருந் துயரம் நிகழ்ந்து கொண்டிருப்பது தெரியாமல், தொண்டர்கள் செல்போன்களில் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இரவு 7.31 மணி. விஜய் பரப்புரையை முடிக்கிறார். கூட்டம் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜயின் வாகனத்திற்கு பவுன்சர்கள் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.
இதனிடையே நோயாளிகள் யாருமின்றி வந்ததாக கூறி தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்திய தவெகவினர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதனை அடுத்து, காவலர்கள் தவெகவினர் மீது லேசாக தடியடி நடத்தி ஓட்டுநர்களை தாக்கிய 10க்கும் மேற்பட்டோரை விரட்டியடித்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து உயிரிழக்க குடும்பத்தினர் கதறல் கரூரையை கண்ணீர் விட வைத்தது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் 39 பேர் உயிரிழந்த நிலையில், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மயங்கியவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி உதவி அறிவித்து, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை காண கரூர் புறப்பட்டுச் சென்றார்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூர் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரே ஒரு உடல் மட்டும் அடையாளம் காணப்பட வேண்டியிருக்கிறது. இதில் 14 உடல்களுக்கு போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கான உடற்கூராய்வை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 51 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கவலைக்கிடம். மொத்தமாக எல்லாம் சேர்த்து 111 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

விளையாட்டு