Author: Namadhu Arasu

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மத்திய கைலாஷ் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: பிப்ரவரி முதல் வாரத்தில் புதிய மேம்பாலம் திறப்பு!

சென்னை மாநகரின் மிக முக்கியமான சந்திப்புகளில் ஒன்றான அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அங்கு கட்டப்பட்டு வரும் புதிய ‘L’ வடிவ மேம்பாலம் பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டம், பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
சர்தார் படேல் சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை (OMR) ஆகியவற்றை இணைக்கும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணியில், மத்திய கிர்டர் (Central Girder) அமைப்பதிலும், அணுகுசாலை அமைப்பதிலும் நீடித்த சிக்கல்கள் இருந்தன. இதன் காரணமாக பல மாதங்களாக பணிகள் தாமதமடைந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை தற்போது அந்தத் தடைகளை வெற்றிகரமாகச் சரிசெய்துள்ளது. தற்போது பாலத்தின் தளத்தில் தார் பூசுவதற்கு முந்தைய பணிகளான ‘வெட்-மிக்ஸ்’ (Wet-mix) அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது காய்ந்தவுடன், வலுவான சாலைக்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிக்கப்படும்.

மத்திய கைலாஷ் சந்திப்பானது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11,000 வாகனங்கள் கடந்து செல்லும் மிகப்பரபரப்பான இடமாகும். இதில் குறிப்பாக கிண்டியிலிருந்து ஓ.எம்.ஆர் நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், அவற்றின் பயண நேரத்தைக் குறைக்கும் விதமாகவே இந்த ‘L’ வடிவ பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மின் விளக்குகள் பொருத்துதல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து ஓரளவிற்குச் சீராகும் என்றாலும், கஸ்தூரிபா நகர் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாய் பாலத்தின் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்தார் படேல் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பும் வாகனங்கள், கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்களுடன் இணைந்து சிக்னலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மாற்றுப் பாதை வழங்கப்பட்டால், கிண்டி நோக்கிச் செல்பவர்கள் எவ்விதத் தடையுமின்றி பயணிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தப் பாலம் திறக்கப்படும் பட்சத்தில், அடையாறு, கிண்டி மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகளில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு இது மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது” – பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி …

என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சென்னை அடுத்த மதுராந்தகத்தில் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தற்போது பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது. தமிழ்நாட்டை பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுகவின் முடிவுக்காலத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.
திமுகவுக்கு இரண்டு முறை மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டனர். அவர்கள் இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. ஊழல், குண்டாஸ், குற்றம் ஆகியவற்றின் அரசு இங்கு இருக்கிறது. அதனை வேரடி மண்ணோடு கிள்ளி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் பாஜக, என்.டி.ஏ.வின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் ஜனநாயகம், நம்பகத்தன்மை உள்ளிட்டவை இல்லாத அரசுதான் இருக்கிறது. அரசு இங்கு ஒரே குடும்பத்திற்காக இயங்கிவருகிறது.
வம்சாவழி, ஊழல், பெண்களை வசைபாடுவது, கலாச்சாரத்தை வசைபாடுவது உள்ளிட்ட நான்கு வழிகள்தான் திமுகவில் இருப்பவர்கள் வளர்ச்சி பெற இருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் சுமக்க வேண்டியதாக இருக்கிறது.
நாட்டின் பண்பாட்டை வளம் நிறைத்ததாக மாற்றியது தமிழ்நாடு. வளர்ச்சி அடைந்த பாரதம் என நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு வளரும் வேகத்தில் பாரதம் வளரும்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாடு வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை செய்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக திமுக – காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாடுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப்பகிர்வு வாரியாக மட்டும் 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாடுக்கு வழங்கியிருக்கிறது.
திமுக – காங்கிரஸ் அரசு இரயில்வே பட்ஜெட்டில் அளித்த தொகையைவிட என்.டி.ஏ. அரசு 7 மடங்கு அதிக நிதியை வழங்கிவருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் போன்ற ரயில்களை என்.டி.ஏ. அரசுதான் செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இருந்து வருகிறது.
தமிழ், கலாச்சாரம், வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை எல்லாம் எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு உலக தலைவர்களுக்கு திருக்குறள் நூலை பரிசாக வழங்கியிருக்கிறேன். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். காசியிலே பல பிள்ளைகள் தமிழில் பேசுவது மகிழ்ச்சியை தருகிறது.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதியோடு பணியாற்றிவருகிறோம். சில நாட்களுக்கு முன்பு நமது முருகருக்கு விளக்கு போடுவதில் விவாதம் ஏற்படும்போது, நமது தலைவர்கள் எல்லாம், பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு பாராட்டு. திமுக – காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது. உங்களை அவமானப்படுத்தினர். என்.டி.ஏ. அரசு ஜல்லிக்கட்டுக்கு சட்ட ரீதியாக ஆய்வு செய்து அங்கீகாரம் கொடுத்தது. தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அரசு இருக்க வேண்டும். அந்த அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் அரசாக இருக்க வேண்டும்” என பேசினார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக பேரவையில் இன்று தீர்மானம்…

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கையை 99 சதவீதம் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிவித்தார். போராடும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோமே தவிர, அதிமுகவைப் போன்று எஸ்மா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்றும் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவைப் போல பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களை தாங்கள் ஏமாற்றவில்லை என்றார். இதில் பதில் அளித்த முதலமைச்சர், அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், திமுகவுக்கு ஆதரவான சங்கங்கள்தான் இனிப்பு ஊட்டியதாக ஈபிஎஸ் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும், மிகுந்த அக்கறையோடு கவனிப்பதாகவும் கூறிய முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் முதல்வராக இருந்தபோது, அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து கொச்சைப்படுத்தி பேசியதை நாடு மறந்துவிடவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சத்துணவு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார். முன்னதாக, நேரமில்லா நேரத்தில், கறிக்கோழி விவசாயிகளின் பிரச்னை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி விவாதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தினார். அதற்கு, அதிமுகவின் தீர்மானத்திற்கு பதில் தயாரித்து விட்டு ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், இதனை ஏற்காத அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக பேரவையில், 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 100 நாட்கள் பணிக்காலம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்த திமுக, தற்போதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறிய ஈபிஎஸ், மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளதை தாங்கள் வரவேற்றதாகவும், ஆனால் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தேர்தல் NDA பிரச்சாரம்-மோடி தமிழகம் வருகை…

தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஈபிஎஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
பிரதமரின் வருகையை ஒட்டி செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்து ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஆட்சியர் சினேகா அறிவுறுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இன்று மோடி தலைமையில் பா.ஜ.க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதில் மோடியுடன் எந்தெந்த கட்சிகள் மேடையை பகிர்ந்து கொள்ள உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் கட்சியான தி.மு.க முதல் தற்போது தொடங்கப்பட்டுள்ள த.வெ.க வரை தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இன்று பிரச்சாரம் செய்கிறார். முதலில் திருவனந்தபுரத்திற்கு செல்லும் மோடி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூன்று புதிய ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
தொடர்ந்து, அங்கு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் சென்னை செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான அ.தி.மு.க உட்பட ஆறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்த அணியான டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தலைமையில் டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பியூஷ் கோயல் மற்ற கூட்டணி கட்சிகளான 4 கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.

அதன்படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜகன் மூர்த்தி மற்றும் வாசன் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு ஆலோசனை வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ். குருமூர்த்தியையும், பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசையும் கோயல் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் வாசன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த அவர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது, “இரட்டை இயந்திர வளர்ச்சி” என்ற பா.ஜ.க-வின் பரந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பா.ம.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

திருப்போரூர் கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான இடங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென, அறநிலை​யத்​துறை மற்​றும் வரு​வாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூரில் உள்ள கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்​புள்ள 2 ஆயிரம் ஏக்​கர் சொத்​துக்​களில், 550 ஏக்​கருக்​கும் மேற்​பட்ட சொத்​துக்​களை தனி நபர்​கள் ஆக்​கிரமித்​துள்​ளனர்.
எனவே, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை வரு​வாய்​துறை அதி​காரி​கள் மூல​மாக அளவீடு செய்​து, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற அறநிலை​யத் துறை மற்​றும் தமிழக அரசின் வரு​வாய்த் துறை செயலருக்கு உத்​தர​விட வேண்​டும்’ என, கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​க​னவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், 2022 மே மாதத்​துக்​குள் ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென உத்​தர​விட்​டிருந்​தது. ஆனால், உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில், ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற​வில்லை எனக் கூறி, வழக்​கறிஞர் ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.
இந்த வழக்​கு, தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், இ்ந்த அவம​திப்பு வழக்கு கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக நிலு​வை​யில் இருந்து வரு​கிறது. இன்​னும் அறிக்கை தாக்​கல் செய்​யாமல் இருப்​பது ஏன் என கேள்வி எழுப்​பினர்.

நீதிபதிகள் அதிருப்தி: அதற்​கு, அறநிலை​யத் துறை தரப்​பி்ல் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​. அருண் நடராஜன், கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான 125 ஏக்​கர் நிலத்தை 233 பேர் ஆக்​கிரமித்து இருப்​பது ஆய்​வில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவர்​களை அந்த நிலத்​தில் இருந்து சட்ட ரீதி​யாக அப்​புறப்​படுத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.
சிலர் வாடகை செலுத்த முன் வந்​துள்​ளனர். எனவே, ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய 3 வாரம் அவகாசம் வழங்க வேண்​டும் என, கோரி​னார்.

இதையடுத்து நீதிப​தி​கள், அவம​திப்பு வழக்கு நிலு​வை​யில் இருக்​கும் போது, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை அபகரித்து ஆண்​டுக்​கணக்​கில் அனுப​வித்து வரும் ஆக்​கிரமிப்​பாளர்​களை எப்​படி வரன்​முறைப்​படுத்த முடி​யும் என அதிருப்தி தெரி​வித்​தனர்.

பின்​னர், இந்த வழக்​கில் ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறநிலை​யத் துறைக்​கும், வரு​வாய் துறை​யினருக்​கும் கெடு வி​தித்​து வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​தனர்​.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஜன.23 மோடி தமிழகம் வருகை

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையை ஒதுக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், மோடி சாலை பயணத்தை தவிர்த்து முற்றிலும் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே பயணிக்க உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 1:15 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்படும் மோடி மதியம் 2:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பழைய முனையத்தை வந்தடைவார்.
பின்னர் மதியம் 2.25 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டரில் ஏறி பிற்பகல் 3 மணிக்கு நேரடியாக மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார். இந்த பொதுக் கூட்டம் மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டு உரையற்றுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி மாலை 4:30 மணிக்கு மதுராந்தகத்தில் இருந்து அதே ஹலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் திரும்புவார். அங்கிருந்து மாலை 5:05 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்வார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (SPG) குழு ஒன்று சென்னை வந்தது. நேற்று (ஜன.20) காலை, பழைய சென்னை விமான நிலைய முனையத்தில் சிறப்பு குழு பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை நடத்தியது.
பிரதமரின் சிறப்பு விமானங்களுக்கான பார்க்கிங் பகுதி, நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் மண்டலம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான பணியமர்த்தல் திட்டம் ஆகியவற்றை சிறப்பு பாதுகாப்பு குழு விரிவாக ஆய்வு செய்தது. 20-ஆம் தேதி முதல் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் வருகை வரை நான்கு நாட்களுக்கு பழைய சென்னை விமான நிலையத்தை விரிவான பாதுகாப்பின் கீழ் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஆய்வைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் விமான நிலையம் தரையிறங்கும் பகுதியை பாதுகாப்பு குழு ஆய்வு செய்வதற்காக மதுராந்தகத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மத்திய பட்ஜெட் 2026: பிப்ரவரி 1-ல் தாக்கல்; நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ 3.0 அரசாங்கத்தின் 3-வது முழுமையான பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது, இது சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வாகும்.
ஜனவரி 28 முதல் ஏப்ரல் 2 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் 2026 பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கலின் மூலம், மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா மற்றும் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முன்னாள் நிதியமைச்சர்களை விட அதிக எண்ணிக்கையிலான மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் முறியடிப்பார். இந்த அறிவிப்புகள் வரும் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதாரப் பாதையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் உரை மத்திய பட்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (indiabudget.gov.in), சன்சாத் டிவி மற்றும் தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பல தேசிய செய்தி சேனல்களும் நேரலை ஒளிபரப்பை வழங்கும், அதே நேரத்தில் சன்சாத் டிவி, தூர்தர்ஷன் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஆகியவை தங்களது யூடியூப் தளங்களில் நேரலை செய்வதோடு சமூக வலைதளங்களிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்கும்.

இவை தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் (indianexpress.com) இணையதளத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் பகுப்பாய்வு குறித்த நேரடித் தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
புதிய வரி முறையின்கீழ் ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட 2025-26 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து, வரி செலுத்துவோரிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ஆண்டு, வரி செலுத்துவோர் மேலும் வருமான வரி சலுகைகள், எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான இலக்கு பலன்களை எதிர்பார்க்கின்றனர்.

பட்ஜெட்டிற்கு முன்னதாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2024-25-ல் இருந்த 6.5 சதவீதத்தை விட அதிகமாகும். இருப்பினும், பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றப்படாத பெயரளவு ஜி.டி.பி வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2026-27 பட்ஜெட்டில் வரி வருவாயை மதிப்பிடுவதற்கான முக்கிய காரணியாகும்.
கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) மூலம் பெறப்படும் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடன் வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துதல், பருத்தி உற்பத்தித்திறனுக்கான ஒரு மிஷன் மற்றும் அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய மிஷனை அமைத்தல் ஆகியவை அடங்கும். மேம்படுத்தப்பட்ட கே.சி.சி கடனை அறிவிக்கும் போது, இந்தத் திட்டம் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு குறுகிய காலக் கடன்களை எளிதாக்குகிறது என்றும், அதிக கடன் வரம்பு நிறுவனக் கடன்களைப் பெறுவதை மேம்படுத்தும் என்றும் சீதாராமன் கூறியிருந்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை – ஆளுனர் உரையுடன் இன்று தொடக்கம்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், வழக்கம்போல் ஆளுநரின் உரையுடன் ஆரம்பமாகிறது.
மரபுப்படி, ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, அதன் தமிழ உரையை சபாநாயகர் வாசிப்பார். இந்தத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆலோசனைக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த வகையில், தற்போது ராஜ்பவன் (லோக் பவன்) மற்றும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், இந்த ஆண்டு ஆளுநரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமான சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கே.பொன்னுசாமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரு நாள் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தொடர் சில முக்கிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறுவதால் மிகுந்த கவனம் பெறுகிறது:

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் 4-வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் கடந்த 16-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நமது மண்ணின் சிந்தனைகளும், எழுத்துகளும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இலக்கியத்துக்கு எல்லைகள் கிடையாது. திருவள்ளுவரின் அறமும், இளங்கோ அடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும், பாரதிதாசனின் கருத்துகளும் உலகமெல்லாம் ஒலிக்க வேண்டும்.
அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு மிகச் சிறந்த மாநிலம் தமிழகம். கீழடி முதல்பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகள் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது புரியும். உலக நாடுகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வாருங்கள்.மனிதநேயம், சமூகநீதி பேசும் திராவிடக் கருத்தியல் இலக்கியங்களை உங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய கலாச்சாரத் துறையின் தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. கலை இலக்கிய விருதுகளில்கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்று பல்வேறு எழுத்தாளர்கள், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இது காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.
அதன்படி, குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசா, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கப்படும். விருதுடன், தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

படைப்புகளின் இலக்கியத் தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், சென்னை மேயர் பிரியா,தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி, கவிஞர்கள் வைரமுத்து, மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் இமயம், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி, எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் மொழிபெயர்ப்பு மானியம் மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 44 நூல்கள், பொது நூலகத் துறையின் 40 நூல்கள் என மொத்தம் 84 நூல்களை புத்தகத் திருவிழாவில் முதல்வர் ஸ்டாலின்வெளியிட்டார். உலகத்தரம் வாய்ந்த படைப்புகள் எளியதமிழில் கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என தமிழ்நாடு மொழிபெயர்ப்பு முகமை மூலம் பல கோடி ரூபாயை ஒதுக்கி, கடந்த 3 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” – சர்ச்சைகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முற்றுப்புள்ளி!

வந்தே மாதரம் மற்றும் மா துஜே சலாம் பாடலை பாட மறுத்ததாக எழுந்த சர்ச்சைக்கு தனது பாணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது விளக்கத்தைத் தந்துள்ளார்.
தனது சமீபத்திய பேட்டியில் இதுபற்றி பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை எப்போதும் ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், கௌரவிப்பதற்கான வழியாகத்தான் இருந்துள்ளதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்
பிரதமரின் முன்னிலையில் வேவ் உச்சி மாநாட்டில் பங்கேற்றது முதல், இளம் நாகா இசைக்கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் குழுவை உருவாக்கியது வரை பன்முகத்தன்மையுடன் பணியாற்றியதை எடுத்துக்கூறியுள்ளார். படைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

Read More