Author: Namadhu Arasu

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்விளையாட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்…

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை முதல் நாளான நேற்று (ஜன.15), அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் பாலமேடு ஜல்லிக்கட்டு ஆரம்பமானது. போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை தொடர்ந்து முதல் சுற்று தொடங்கியது. முதல் சுற்றில் 100 காளைகளும், 50 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்களின் விவரத்தை அறிய களத்தில் டிஜிட்டல் பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சுற்றுகளாக பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வெவ்வேறு வண்ணத்திலான சீருடை (ஜெர்சி) அணிந்து பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே போட்டியில் பங்கேற்க காளைகளும், வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் விதிமுறைகளை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் பலர் பாலமேட்டில் முகாமிட்டுள்ளனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. களத்தில் காயமடையும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார்.. என்.டி.ஏ. கூட்டணியில் புதிய கட்சிகள்!”

மதுரையில், என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சார மாநாடு நடக்க இருப்பதாகவும், அதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுவார் என்றும் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம. ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சார மாநாடுக்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து ராம. ஸ்ரீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராம. ஸ்ரீநிவாசன் பிரதமர் மதுரை வருவதை உறுதி செய்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “மதுரையில் என்.டி.ஏ. கூட்டணியின் பரப்புரை தொடங்க இருக்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால், பொதுவாக பரப்புரைக் கூட்டங்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், மதுரையும், தமிழ்நாடும் அவர்கள் இருவருக்கும் தனித்துவமான இடம் என்பதால் இருவரும் ஒன்றாக வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பரப்புரையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும், அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. இதுபோக, புதிதாக என்.டி.ஏ. கூட்டணியில் இணைவோரும் பங்கேற்பார்கள்.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி புறப்பட்ட விஜய்-கரூர் சம்பவம் 

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக த.வெ.க தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை சுமார் 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இவருடன் த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் செல்வதாக கூறப்படுகிறது.

விஜய் டெல்லி வருவதையொட்டி அவருடைய ரசிகர்களும், த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டனர். இதனால் சிபிஐ அலுவலகம் முன் மற்றும் விஜய் வரு பாதையில் பெரும் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லி போலீசாரால் செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களிடம் டெல்லியில் சி.பி.ஐ. 3 நாள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோல விஜய்யிடமும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல் – தணிக்கையில் என்ன….பிரச்சினை…

விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்​கக் கோரிய வழக்​கில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், என்னதான் பிரச்சினை என்பதை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

தவெக தலை​வர் நடிகர் விஜய்​-​யின் கடைசிப் படமான ‘ஜன​நாயகன்’ ஜனவரி 9-ல் உலகம் முழு​வதும் திரை​யிட திட்​ட​மிடப்​பட்​டிருந்​து.

இந்த நிலையில்தான், படத்​துக்கு சான்​றிதழ் வழங்க தணிக்கை வாரி​யம் தாமதம் செய்து வரு​வ​தாகக் கூறி, படத் தயாரிப்பு நிறு​வன​மான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்பட்​டது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​னிலை​யில் விசாரணைக்கு வந்​தது. அப்போது, தணிக்கை வாரி​யம் தரப்​பில் மத்​திய அரசின் கூடுதல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன் ஆஜராகி, படத்​துக்கு எதி​ராக தணிக்கை குழு உறுப்​பினர் ஒரு​வர் அளித்த புகாரை தாக்கல் செய்​தார்.
படத் தயாரிப்பு குழு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சதீஷ் பராசரன், வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன் ஆகியோர், “படத்​தைப் பார்த்து தணிக்கை சான்​றிதழ் அளிக்​கும் தணிக்கை குழு உறுப்​பினரே, எப்​படி படத்துக்கு எதி​ராக புகார் அளிக்க முடி​யும்? இதில் உள்நோக்​கம் உள்​ளது” என்​றனர்.

அப்​போது தணிக்கை வாரி​யம் தரப்​பில், “படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பும்​படி மத்​திய அரசு கூற​வில்​லை. தணிக்கைக்குழு தான் பரிந்துரைத்​துள்​ளது. அவ்​வாறு அனுப்ப தணிக்கை வாரியத் தலை​வருக்கு முழு அதி​காரம் உள்​ளது. படத்​தில் பாது​காப்பு படைகளின் சின்​னங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. சான்​றிதழ் வழங்​கு​வ​தில் தணிக்கை வாரி​யத்​துக்கு எந்த உள்​நோக்​க​மும் இல்​லை” என்று வாதிடப்​பட்​டது.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி, “யு/ஏ சான்​றிதழ் வழங்க தணிக்கை குழு பரிந்​துரை செய்த பிறகு, அந்​தப் படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்ப முடிவு செய்​தது ஏன்? தணிக்கை வாரி​யத்​தின் நடவடிக்​கைகள் ஏற்​புடையதல்ல” என்​றார்.
படத் தயாரிப்பு நிறு​வனம் தரப்​பில், “பெரும்​பான்மை உறுப்​பினர்​கள் யு/ஏ சான்​றிதழ் வழங்க பரிந்​துரைத்​துள்ள நிலை​யில், ஒரு​வர் மட்டும் புகார் அளித்​துள்​ளார் அவர்களின் நோக்​கம் திட்​ட​மிட்​டபடி படத்தை வெளி​யிடக்​கூ​டாது என்​பது​தான்” என்று தெரிவிக்​கப்​பட்​டது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, “இந்த வழக்​கில் ஜனவரி 9-ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்​கப்​படும்” என்று தெரி​வித்​தார்.

இந்த நிலையில், கேவிஎன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்களது மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது அசைக்க முடியாத ஆதரவே எங்களது மிகப்பெரிய பலம் மற்றும் ஒட்டுமொத்த ‘ஜனநாயகன்’ குழுவினருக்கும் அதுவே எல்லாமும் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மக்களின் எதிர்கால கனவுகள், தேவைகளை அறிய ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் நலத் திட்​டங்​கள் குறித்த மக்​களின் கருத்​துகள், அவர்​களது எதிர்​கால கனவு​கள், தேவை​கள் குறித்து அறிந்​து​ கொள்​ளும் ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

தமிழக அரசால் கடந்த 5 ஆண்​டு​களில் அமல்​படுத்​தப்​பட்ட பல்​வேறு நலத் திட்​டங்​களில் பயனடைந்​தவர்​களின் தரவு​கள் மற்​றும் விவரங்​களை உறு​திப்​படுத்​த​வும், அந்த திட்​டங்​களின் தற்​போதைய செயல்​பாட்டு நிலை குறித்து மக்​களின் கருத்தை அறிய​வும், மக்​களின் எதிர்​கால கனவு​கள், தேவை​களைக் கண்​டறிய​வும் அவர்​களது வசிப்​பிடங்களுக்கே சென்று அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்​லுங்க’ என்ற புதிய திட்​டத்​துக்கு முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது.
ஏற்​கெனவே அறி​வித்​த​படி, திரு​வள்​ளூர் மாவட்​டம் செங்​குன்​றம் அடுத்த பாடியநல்​லூரில் நேற்று காலை நடை​பெற்ற விழா​வில், ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் உள்​ளிட்ட மாவட்​டங்​களை சேர்ந்த பெண்​கள் சிலர் நேரிலும், காணொலி வாயி​லாக​வும் பங்​கேற்​று, தங்​களுக்கு பலனளித்த அரசுத் திட்​டங்​கள் குறித்து பேசி னர். அப்போது, வீட்​டுமனை பட்டா, மினி பேருந்து வசதி, உயர்மட்ட பாலம் அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். பட்டியலின, பழங்குடி​யின மக்​களைப் போல, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட, பிற்​படுத்​தப்​பட்ட மக்​களுக்​கும் மானி​யத்​துடன் வங்​கிக் கடன் வழங்க வேண்​டும் என்​றும் கோரினர்.

இந்த கனவு​கள் நிறைவேற நடவடிக்கை எடுப்​ப​தாக முதல்​வர் உறு​தி​யளித்​தார். தொடர்ந்​து, அ​வர் பேசி​ய​தாவது: 2021 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு முன்​பு, திருச்​சி​யில் நடந்த திமுக மாநாட்​டில், வளரும் வாய்ப்பு​கள் – வளமான தமிழகம் என்​பது உள்​ளிட்ட 7 வாக்​குறு​தி​களை அளித்​தேன். அதையெல்​லாம், தற்​போது நிறைவேற்றி வருகிறோம். பொருளா​தா​ரத்தை உயர்த்​து​வ​தாக கூறினேன். இன்று தமிழகம் 11.19 சதவீத வளர்ச்​சி​யுடன் நாட்​டிலேயே சிறந்த மாநில​மாக உள்​ளது.

பட்​டியலினத்​தவர், பிற்​படுத்​தப்​பட்​டோர், சிறு​பான்​மை​யினர் என அனை​வருக்​கும் பார்த்​துப் பார்த்து பல திட்​டங்​களை திமுக​வின் இந்த சமூகநீதி அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

தமிழகத்​துக்கு எதி​ராக மட்​டுமே செயல்​படும் பாஜக தொடர்ந்து மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்து வரு​கிறது. தமிழகத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் பால​மாக இருக்க வேண்​டிய ஆளுநர், சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றும் சட்​டங்​களுக்கு முட்​டுக்​கட்டை போடு​வதையே முதல் வேலை​யாக வைத்​துள்​ளார்.

இதையெல்​லாம் மீறி, மக்​கள் எங்​களு​டன் இருப்​ப​தால், 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் அளித்த 505 வாக்​குறு​தி​களில் 404 வாக்​குறு​தி​களை நிறைவேற்றி உள்​ளோம்.

மக்​களின் தேவையை உணர்ந்து திட்​டங்​களை செயல்​படுத்தி வரும் அரசிடம் மக்​கள் தங்​களது கனவு​கள், தேவை​களை சொல்ல வேண்​டும் என்​ப​தற்​காக உரு​வாக்​கப்​பட்டது தான், ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டம். இன்று முதல் 30 நாட்​களுக்​குள் தமிழகத்​தில் உள்ள அனைத்து குடும்​பங்​களை​யும் அரசின் சார்​பில் தன்​னார்​வலர்​கள் சந்​திப்​பார்​கள். அவர்​களிடம் உங்​களின் கனவு​களை சொல்​லுங்​கள். அதை அவர்​கள் டிஜிட்​டல் முறை​யில் பதிவு செய்​து​கொள்​வார்​கள். அதை ஆய்வு செய்​து, தமிழகத்​துக்​கான ஒரு மாபெரும் கனவுத் திட்​டத்தை அறிவிக்​கப் போகிறேன். 2030-ம் ஆண்​டுக்​கான தொலைநோக்​குப் பார்வை கொண்​ட​தாக அந்த திட்​டம் இருக்​கும்.

இந்த கனவு​களை எல்​லாம் நான் நிறைவேற்​றிக் காட்​டும்​போது, கிராமப்​புற, நகர்ப்​புற உள்​ கட்​டமைப்​பு​கள், மொழி, பண்​பாட்டு வெற்​றிகள், கல்​வி, திறன் மேம்​பாடு, சமூக வளர்ச்​சி, விவசா​யம், மீன்​பிடித் தொழில், வேலை​வாய்ப்​பு, தொழிற்​சாலைகள் ஆகிய 7 துறை​களில் தன்​னிறைவு பெற்ற மாநில​மாக தமிழகம் வளர்ந்​திருக்​கும்.

‘‘மக்​களிடம் செல். அவர்​களோடு வாழ். அவர்​களை நேசி. அவர்​களிடம் இருந்து கற்​றுக்​கொள். அவர்​களுக்​குத் தெரிந்​த​தில் இருந்து தொடங்​கு. அவர்​களிடம் இருப்​ப​தில் இருந்து கட்​டு​மானம் செய். பணி முடிந்த பிறகு அவர்​களுக்கு திருப்​தியை ஏற்​படுத்​தி​விட்​டுத் திரும்பி வா’’ என்றார் முன்​னாள் முதல்​வர் அண்​ணா. அவர் சொன்​னதை எல்​லாம், என் இதயத்​தில் வைத்து செயல்​படக் கூடிய​வன் நான்.

அதனால்​தான், தமிழகத்​தில் ஒரு கட்​சி​யின் ஆட்​சி​யாக இல்​லாமல், ஒரு இனத்​தின் ஆட்​சி​யாக, திரா​விட மாடல் ஆட்​சியை நடத்​திக் கொண்​டிருக்​கிறோம்.

ஆட்சி என்​பது முதல்​வ​ரான எனது கனவு​களை மட்​டுமல்ல, மக்​கள் எல்​லோருடைய கனவு​களை​யும் நிறைவேற்​று​வதற்​கான கரு​வி. மக்​களின் கனவு​கள் நிறைவேறி​னால், தமிழகம் முன்​னேறும். வளர்ச்சி அடை​யும்.

‘சுயமரி​யாதை, சமத்​து​வம், பகுத்​தறிவு மிக்​க​தாக தமிழ்ச் சமூகம் தலைநிமிர வேண்​டும். சமூகநீதி நிலைபெற வேண்​டும். ஒடுக்​கப்​பட்​டோரின் குரல்​கள் கேட்​கப்பட வேண்​டும். எல்​லோருக்​கு​மான ஆட்சி அமைய வேண்டும்’ என்று தந்தை பெரி​யார், முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி ஆகியோர் கனவு கண்டனர். அதனால்​தான் இன்று தமிழகம் எந்த ஆதிக்​கத்​துக்​கும் தலைகுனி​யாமல், வெல்​வோம் ஒன்​றாக என்​று, மண், மொழி, மானம் காக்க நிமிர்ந்து நிற்​கிறது.

இப்​போது நாம் அடுத்​தகட்ட கனவை காண வேண்​டிய நேரம். மக்​களின் கனவு​களை, கோரிக்​கைகளை திட்​டங்​களாக உரு​வாக்​கி, மக்​கள் எண்​ணங்​களுக்கு உரு​வம் கொடுப்​பேன். தமிழகத்தை தலைசிறந்த மாநில​மாக உயர்த்​து​வேன். இது​தான் முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தரக்​கூடிய வாக்​குறு​தி. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இந்த நிகழ்​வில், அமைச்​சர் நாசர், எம்​.பி.க்​கள், மாதவரம் எஸ்​.சுதர்​சனம் உள்ளிட்ட எம்​எல்​ஏக்​கள்​, தலை​மைச்​ செயலர்​ முரு​கானந்​தம்​, வரு​வாய்த்​ துறை செயலர்​ அமு​தா, திரு​வள்​ளூர்​ மாவட்​ட ஆட்​சி​யர்​ பிர​தாப்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

மக்களின் எதிர்கால கனவுகள், தேவைகளை அறிய ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்த கனவு​கள் நிறைவேற நடவடிக்கை எடுப்​ப​தாக முதல்​வர் உறு​தி​யளித்​தார். தொடர்ந்​து, அ​வர் பேசி​ய​தாவது: 2021 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு முன்​பு, திருச்​சி​யில் நடந்த திமுக மாநாட்​டில், வளரும் வாய்ப்பு​கள் – வளமான தமிழகம் என்​பது உள்​ளிட்ட 7 வாக்​குறு​தி​களை அளித்​தேன். அதையெல்​லாம், தற்​போது நிறைவேற்றி வருகிறோம். பொருளா​தா​ரத்தை உயர்த்​து​வ​தாக கூறினேன். இன்று தமிழகம் 11.19 சதவீத வளர்ச்​சி​யுடன் நாட்​டிலேயே சிறந்த மாநில​மாக உள்​ளது.

பட்​டியலினத்​தவர், பிற்​படுத்​தப்​பட்​டோர், சிறு​பான்​மை​யினர் என அனை​வருக்​கும் பார்த்​துப் பார்த்து பல திட்​டங்​களை திமுக​வின் இந்த சமூகநீதி அரசு செயல்​படுத்தி வரு​கிறது.
தமிழகத்​துக்கு எதி​ராக மட்​டுமே செயல்​படும் பாஜக தொடர்ந்து மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்து வரு​கிறது. தமிழகத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் பால​மாக இருக்க வேண்​டிய ஆளுநர், சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றும் சட்​டங்​களுக்கு முட்​டுக்​கட்டை போடு​வதையே முதல் வேலை​யாக வைத்​துள்​ளார்.

இதையெல்​லாம் மீறி, மக்​கள் எங்​களு​டன் இருப்​ப​தால், 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் அளித்த 505 வாக்​குறு​தி​களில் 404 வாக்​குறு​தி​களை நிறைவேற்றி உள்​ளோம்.
மக்​களின் தேவையை உணர்ந்து திட்​டங்​களை செயல்​படுத்தி வரும் அரசிடம் மக்​கள் தங்​களது கனவு​கள், தேவை​களை சொல்ல வேண்​டும் என்​ப​தற்​காக உரு​வாக்​கப்​பட்டது தான், ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டம். இன்று முதல் 30 நாட்​களுக்​குள் தமிழகத்​தில் உள்ள அனைத்து குடும்​பங்​களை​யும் அரசின் சார்​பில் தன்​னார்​வலர்​கள் சந்​திப்​பார்​கள். அவர்​களிடம் உங்​களின் கனவு​களை சொல்​லுங்​கள். அதை அவர்​கள் டிஜிட்​டல் முறை​யில் பதிவு செய்​து​கொள்​வார்​கள். அதை ஆய்வு செய்​து, தமிழகத்​துக்​கான ஒரு மாபெரும் கனவுத் திட்​டத்தை அறிவிக்​கப் போகிறேன். 2030-ம் ஆண்​டுக்​கான தொலைநோக்​குப் பார்வை கொண்​ட​தாக அந்த திட்​டம் இருக்​கும்.

இந்த கனவு​களை எல்​லாம் நான் நிறைவேற்​றிக் காட்​டும்​போது, கிராமப்​புற, நகர்ப்​புற உள்​ கட்​டமைப்​பு​கள், மொழி, பண்​பாட்டு வெற்​றிகள், கல்​வி, திறன் மேம்​பாடு, சமூக வளர்ச்​சி, விவசா​யம், மீன்​பிடித் தொழில், வேலை​வாய்ப்​பு, தொழிற்​சாலைகள் ஆகிய 7 துறை​களில் தன்​னிறைவு பெற்ற மாநில​மாக தமிழகம் வளர்ந்​திருக்​கும்.
‘‘மக்​களிடம் செல். அவர்​களோடு வாழ். அவர்​களை நேசி. அவர்​களிடம் இருந்து கற்​றுக்​கொள். அவர்​களுக்​குத் தெரிந்​த​தில் இருந்து தொடங்​கு. அவர்​களிடம் இருப்​ப​தில் இருந்து கட்​டு​மானம் செய். பணி முடிந்த பிறகு அவர்​களுக்கு திருப்​தியை ஏற்​படுத்​தி​விட்​டுத் திரும்பி வா’’ என்றார் முன்​னாள் முதல்​வர் அண்​ணா. அவர் சொன்​னதை எல்​லாம், என் இதயத்​தில் வைத்து செயல்​படக் கூடிய​வன் நான்.

அதனால்​தான், தமிழகத்​தில் ஒரு கட்​சி​யின் ஆட்​சி​யாக இல்​லாமல், ஒரு இனத்​தின் ஆட்​சி​யாக, திரா​விட மாடல் ஆட்​சியை நடத்​திக் கொண்​டிருக்​கிறோம்.

ஆட்சி என்​பது முதல்​வ​ரான எனது கனவு​களை மட்​டுமல்ல, மக்​கள் எல்​லோருடைய கனவு​களை​யும் நிறைவேற்​று​வதற்​கான கரு​வி. மக்​களின் கனவு​கள் நிறைவேறி​னால், தமிழகம் முன்​னேறும். வளர்ச்சி அடை​யும்.

‘சுயமரி​யாதை, சமத்​து​வம், பகுத்​தறிவு மிக்​க​தாக தமிழ்ச் சமூகம் தலைநிமிர வேண்​டும். சமூகநீதி நிலைபெற வேண்​டும். ஒடுக்​கப்​பட்​டோரின் குரல்​கள் கேட்​கப்பட வேண்​டும். எல்​லோருக்​கு​மான ஆட்சி அமைய வேண்டும்’ என்று தந்தை பெரி​யார், முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி ஆகியோர் கனவு கண்டனர். அதனால்​தான் இன்று தமிழகம் எந்த ஆதிக்​கத்​துக்​கும் தலைகுனி​யாமல், வெல்​வோம் ஒன்​றாக என்​று, மண், மொழி, மானம் காக்க நிமிர்ந்து நிற்​கிறது.

இப்​போது நாம் அடுத்​தகட்ட கனவை காண வேண்​டிய நேரம். மக்​களின் கனவு​களை, கோரிக்​கைகளை திட்​டங்​களாக உரு​வாக்​கி, மக்​கள் எண்​ணங்​களுக்கு உரு​வம் கொடுப்​பேன். தமிழகத்தை தலைசிறந்த மாநில​மாக உயர்த்​து​வேன். இது​தான் முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தரக்​கூடிய வாக்​குறு​தி. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இந்த நிகழ்​வில், அமைச்​சர் நாசர், எம்​.பி.க்​கள், மாதவரம் எஸ்​.சுதர்​சனம் உள்ளிட்ட எம்​எல்​ஏக்​கள்​, தலை​மைச்​ செயலர்​ முரு​கானந்​தம்​, வரு​வாய்த்​ துறை செயலர்​ அமு​தா, திரு​வள்​ளூர்​ மாவட்​ட ஆட்​சி​யர்​ பிர​தாப்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணிலும் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு …

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்தது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் கோயில் செயல் அலுவலர், மதுரை ஆட்சியர், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றும் வசதியுடன் கூடிய கல் தூண், தமிழில் ‘தீபத்தூண்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த தூண் அமைந்துள்ள இடம், உரிமையியல் நீதிமன்றத்தால் கோயிலின் சொத்து என அறிவிக்கப்பட்ட மலையின் ஒரு பகுதியில் உள்ளது. தற்போது வரை அந்த இடத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோரவில்லை.
இந்த வழக்கு விசாரணையின் போதுதான் முதல்முறையாக வக்பு வாரியம் சார்பில், விளக்குத் தூண் தர்காவுக்குச் சொந்தமானது என்று தீய உள்நோக்கத்துடன் கூடிய வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டு ரிட் மனுவில் நீதிமன்றம் தர்கா சொத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவுக்கு அப்பால் என்ற கட்டுப்பாடுடன், கோயிலுக்குச் சொந்தமான மலையில் வேறு எந்தப் பகுதியிலும் தீபம் ஏற்றுவதற்கான இடத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியது. அந்த வழிகாட்டுதலின் நோக்கம், பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். தீபம் ஏற்றுவதற்கான மாற்று அல்லது கூடுதல் இடத்தை தேர்வு செய்யும் போது, தர்கா சொத்தின் பாதுகாப்பு மட்டுமே கட்டாய நிபந்தனையாகும்.

உகந்த இடம்: இங்கு ‘தீபத்தூண்’ என்று அழைக்கப்படும் கல் தூண், தர்கா அமைந்துள்ள உச்சியை விடத் தாழ்வான ஒரு பாறை உச்சியில் இருப்பதால், அது தீபம் ஏற்றுவதற்கு உகந்த இடமாகும். கார்த்திகை தீபம் மற்றும் பிறபண்டிகைகளின் போது உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். மலை அடிவாரத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் அதைப் பார்த்து வழிபடுவர். ஒளி என்பது சிவபெருமானின் உருவகம் என திருமூலர் கூறியுள்ளார். உயரமான இடத்தில் விளக்கேற்றும் வழக்கம் இருக்கும் போது, கோயில் சொத்தின் எல்லைக்குள் ஒரு இடம் கிடைக்கும் போது, அது ஒழுக்கம் மற்றும் பொதுக் கொள்கைக்கு விரோதமாக இல்லாத போது, பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோயில் நிர்வாகம் மறுக்க எந்தக் காரணமும் இல்லை.
விளக்கேற்றுவதற்காக கோயிலைச் சேர்ந்த சிலரை மட்டும் தூண் பகுதிக்கு அனுமதித்து, பக்தர்களை மலையடிவாரத்தில் நின்று வழிபட செய்வது ஒன்றும் சமாளிக்க முடியாத செயல் அல்ல. இந்தக் கூட்டத்தால் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும், கூட்ட நெரிசல் ஏற்படும், சமூகங்களிடையே நல்லிணக்கமின்மை ஏற்படும் என்பது போல சித்தரிப்பது, சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதா கவோ அல்லது சமூகங் களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள தயக்கத்தையோ காட்டுகிறது.

2 சமூகங்கள்: இதை 2 சமூகங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் களைவதற்கு, மாநில அரசு வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அமைதியான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் இரு சமூகங்கள் இடையிலான இடைவெளியைக் குறைத்திருக்க முடியும். துரதிருஷ்டவசமாக இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளன. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை, அந்தந்த சமூகங்களின் விழாக்களின் போது தேவைக்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி, செயல்படுத்துவதன் மூலம் மோதல் இல்லாமல் அமைதி மட்டுமே நிலவும் என நம்புகிறோம். எனவே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். மலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க பொருத்தமான, அவசியமான நிபந்தனைகளை மத்திய தொல்லியல் துறை வகுக்க வேண்டும்.
தமிழ் மாதமான கார்த்திகையில், வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றச் செல்லும் கோயில் தரப்பு குழுவுடன் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தீபம் ஏற்றும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அமைதி கெடும் என்பது அபத்தமானது: நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது நடைமுறையில் இல்லாத வழக்கம் என்று அரசும், கோயில் நிர்வாகமும் கூறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் விளக்கேற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அரசு அச்சப்படுவது அபத்தமானது. அரசு தூண்டிவிட்டால் மட்டுமே குழப்பம் நிகழக் கூடும். எந்த அரசும், தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவுக்கு தரம் தாழக் கூடாது.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றினால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக் கூடும் என்று மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்திய அச்சம், அவர்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனையே தவிர வேறில்லை. ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்துக்கு எதிராக சந்தேகம் கொள்ள வைக்கவே இது செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் : உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், துாணிலும் தீபத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்களை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் இருந்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் 1961 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகத்தில், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறி அதற்கான ஆவணத்தை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

தமிழக அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு..

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி, ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை, இறுதி சம்பளத்தில் 50 சதவீதம் வரை ஓய்வூதியம் வழங் கப்படும்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது முதல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழகம் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சியை எட்டியிருப்பினும், மத்திய அரசின் வரிப்பகிர்வு தொடர்ந்து குறைப்பது, திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி குறைக்கப்படுவது அல்லது முறையாக விடுவிக்கப்படாமல் இருப்பது, ஜிஎஸ்டி மாற்றங்களால் குறைந்து வரும் மாநில வரி வருவாய், உயர்ந்து வரும் நலத்திட்டச் செலவுகள் போன்றவற்றால் அரசுக்கு நிதிச்சுமை உள்ளது.
அவற்றை எல்லாம் தாண்டி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து காத்து வருகிறார். அந்த வகையில், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நடைமுறை, அரசு ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடி, இயற்கை மரணத்துக்கு ரூ.10 லட்சம், கல்வி முன்பணம், திருமண முன்பணம், வீடு கட்டுவதற்கான முன்பணம் உயர்வு, ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் சூழல் நீக்கம், பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு, ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு, பொங்கல் பரிசுத் தொகை உயர்வு, மகப்பேறு உயர்வு போன்றவை அமல்படுத் தப்பட்டுள்ளன.

எனினும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் கடந்த 20 ஆண்டுகளாக இருப்பதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. அதை உணர்ந்து இந்த விவகாரத்தில் தகுந்த பரிந்துரைகளை வழங்க ககன்தீப் சிங்பேடி தலைமையில் குழு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையையும் அரசு பெற்றுள்ளது.

அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழக அரசு தற்போது சந்தித்து வரும் நிதி சுமை சூழலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதியமைச்சர், தலைமைச் செயலர், நிதித் துறை செயலரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுப்பணி, நிதி, பள்ளிக்கல்வி அமைச்சர்களிடம் சங்கங்கள் வைத்த முக்கிய கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’’ (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ்…

மாநில அரசு ஊழியர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த ஓய்வூதியம் வழங்க ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்துக்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் அரசே ஏற்கும்.

ஐம்பது சதவீதம் உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவோருக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை அரசு அலுவலர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியர் இறந்தால், அவர் பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக் காலத்தில் இறக்க நேரிட்டாலும் அவரவர் பணிக் காலத்துக்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தை அறிமுகப் படுத்துவதால் ஓய்வூதிய நிதியத்துக்கு கூடுதலாக ரூ.13 ஆயிரம் கோடியை அரசு அளிக்க வேண்டும். இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அரசு பங்களிப்பாக வழங்க வேண்டும். இத்தொகை ஊழியர்களின் ஊதியத்துக்கேற்ப ஆண்டு தோறும் மேலும் உயரும். தற்போது தமிழக அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச் சூழலிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு, இந்த செலவினங்களை தமிழக அரசே முழுமையாக ஏற்கும்.

எனவே இந்த திட்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்கும்படி முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் வெளி யிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவித்துள்ளோம். திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும். தலைநிமிர்ந்து வரும் தமிழகத்தின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்’’ என தெரிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கம்.. இன்று அறிவிப்பு…

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியாக கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை தொகுப்பாக வழங்க, தமிழ்நாடு அரசு 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகுப்புகளை வழங்குவதற்கான டோக்கன்கள் பயனாளிகளுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வரும் 8 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில், பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் எவ்வளவு பணம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து முறையான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக நியமனம்…!

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபி ஆக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் இருக்கும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ள நிலையில் தமிழக அரசுப் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏடிஜிபியாக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டலும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு சைபர் கிரைம் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், ஏடிஜிபி பால நாகதேவியும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சிபிசிஐடி ஐஜியான அன்பு உள்ளிட்டோர் ஏடிஜிபிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சிபிசிஐடி ஐஜி அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்டல ஐஜியான பிரேம் ஆனந்த் சின்கா, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மகேஷ்வர் தயாள், சிறைத் துறையிலிருந்து மாற்றப்பட்டு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக உள்ள சங்கர், சிறைத் துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியான அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான அனிஷா உசேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையராக உள்ள என்.கண்ணன், கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக உள்ள பி.சரவணன், திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன.

Read More