Author: Namadhu Arasu

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

தமிழகத்தில் புதிய சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த TTDC முடிவு!

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) இப்போது புதிய சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசு தரப்பில் கூறுகையில், ஏற்கெனவே பிரபலமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் கூட்டம் அதிகமாகி, வளர்ச்சி கட்டுப்பாடு இல்லாமல் போவதால், இந்த புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக ஜவ்வாது மலை, வத்தல் மலை, கொல்லி மலை, ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில், இனிமேல் புதிதாக ஒழுங்கான முறையில் கேம்பிங் (camping) மற்றும் க்ளம்பிங் (glamping) வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ஜவ்வாதுமலை
ஜவ்வாது மலை, இப்போது மலையேற்றம் செய்பவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு இடம். ஆனால், இனிமேல் இங்கு முதல் முறையாக, சுமார் 7.65 ஏக்கர் பரப்பளவில், ஒரு பெரிய க்ளம்பிங் வசதி வரப்போகிறது. இங்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.
10 ஆயிரம் பேர்
தனியார் நிறுவனங்கள் சார்பில், ஆடம்பரமான கூடாரங்கள், டோம்ஸ் (domes) மற்றும் ரெடிமேட் வீடுகள் அமைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட அதிகாரியின் தகவலின்படி, வனத்துறையிடம் ஏற்கெனவே கேம்பிங் இடங்கள் உள்ளன. ஏரிக்கு அருகில் தங்கும் வசதிகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். தனியார் நிறுவனம் 10 தங்கும் அறைகள், ஒரு உணவகம், வரவேற்புப் பகுதி ஆகியவற்றை அமைக்க வேண்டும். மாதத்திற்கு சுமார் 1,000 பேர் ஜவ்வாது மலைக்கு வருகிறார்கள்.
வத்தல் மலை
அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலைக்கும் இதே போன்ற திட்டங்கள் யோசிக்கப்பட்டு வருகின்றன. இந்த அழகான மலைப் பகுதி, சுற்றுலாப் பயணிகளிடையே அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. இங்கு சுமார் 6.1 ஏக்கர் பரப்பளவில் ஒரு கேம்பிங் தளம் அமைக்கப்படும். இங்கு கூடாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறிய வீடுகள் (eco-cottages) அடிப்படை வசதிகளுடன் இருக்கும். தருமபுரி மாவட்ட அதிகாரி கூறுகையில், “நாங்கள் ஏற்கெனவே உணவகத்தைக் கட்டிவிட்டோம். இது ஒரு மலைப் பிரதேசம். இங்கு அருவிகள், பழங்குடியினர் வாழும் இடங்கள் உள்ளன. மலையேற்றத்திற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வனத்துறையிடம் ஒரு வழித்தடத்தைக் கேட்டுள்ளோம்” என்றார்.
பாதியிலேயே நின்றுவிடக் கூடாது
சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள், இந்தத் திட்டங்களின் நோக்கம் ஊட்டி, கொடைக்கானல் போல பெரிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவது அல்ல. மாறாக, அமைதியான, இயற்கையோடு இணைந்த மாற்று இடங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான். சுற்றுலாத் துறையின் முன்னாள் அதிகாரி என். ரவி கூறுகையில், “இதுவரை நாம் பழைய சுற்றுலாத் தலங்களையே நம்பி இருந்தோம். திட்டமிட்டபடி இவை நடந்தால், புதிய மலைப் பிரதேசங்களை மேம்படுத்துவதில் இது ஒரு நல்ல படியாக இருக்கும். ஆனால், இந்தத் திட்டங்கள் பாதியிலேயே நின்றுவிடக் கூடாது” என்றார்.

Read More
குற்றம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிய வழக்கு: தமிழக அரசு குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கதுறை…

மணல் கொள்ளை ஆய்வின் போது ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதில் விதி மீறல்கள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கத் துறை இதுவரை அந்த விதிமீறல்கள் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை குறித்த நிபுணர்களின் அறிக்கை சட்டவிரோதமானது என்ற மாநில அரசின் குற்றச்சாட்டுகளை அமலாக்கதுறை மறுத்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து அமலாக்கத் துறை மறுமொழி (rejoinder) ஒன்றை தாக்கல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2023-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் காலகட்டத்தில் 28 குவாரிகளில் எடுக்கப்பட்ட மணலின் அளவை மதிப்பீடு செய்ய ஐஐடி-கான்பூரை அமலாக்கத் துறை நியமித்தது.

இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மணல் அள்ளப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளில் ரூ4,730 கோடி மதிப்புள்ள மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. ஆனால், தமிழக அரசின் கணக்கின்படி மணல் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட வருவாய் வெறும் ரூ36.45 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழக நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், ஐஐடி-கான்பூர் இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ராஜீவ் சின்ஹாவுக்கு இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

சட்டசபை கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு

2026-ஆம் ஆண்டின் முதல் சட்ட சபை கூட்டத் தொடர் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்” என்றார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது.

இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. இந்த சட்டசபை கூட்டத் தொடரிலாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தனது முழு உரையை வாசிப்பாரா என்ற கேள்வி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டசபையின் போது தொடர்ந்து உரையை வாசிக்காமல் சென்றுள்ளார்.
2024-ஆம் ஆண்டு சட்டசபையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் இருந்து ஒரு சில பகுதிகளை நீக்கிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். இதையடுத்து, 2025-ஆம் ஆண்டு தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி சட்டசபைக்கு வந்த வேகத்தில் வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு சட்ட சபை கூட்டத் தொடரின் போது ஆளுநர் தன் உரையை முழுமையாக வாசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஜனநாயகன் vs பராசக்தி… திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போகும் பொங்கல்!

பொங்கல் பண்டிகைக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி நேரடியாக மோதுகிறது. ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், பொங்கலுக்கு களம் காண்கிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி இருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கல் விடுமுறையை குறிவைத்தது. 1950-60 காலகட்டத்திற்கான கதை களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா, இதில் மொழி பிரச்சனையை பேசியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இதனை தயாரித்திருக்க, படம் பொங்கலன்று ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
பராசக்திக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், படம் குறித்தான கண்காட்சி அமைக்கப்பட, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், ஏற்கெனவே திரையுலகில் பரவி வந்த தகவலின்படி, பராசக்தியின் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ஜனவரி 14க்கு பதில், 4 நாட்களுக்கு முன்னதாக, அதாவது 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் ரிலீஸாகும் நிலையில், அதற்கு அடுத்த நாளே திரைக்கு வர இருக்கிறது பராசக்தி. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்திருப்பதாக பராசக்தி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு மார்க்கெட் இருக்கும் சூழலில், இருவரின் படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாவதால், இரு படங்களுக்கும் சரியான அளவு திரைகள் ஒதுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் வசூல் தாறுமாறாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தியும் சேர்ந்தே வருவதால், ஜனநாயகன் வசூலில் தாக்கம் இருக்கவே செய்யும் என திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது… எப்படியோ… இந்த பொங்கல்… சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையப் போகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

டிசம்பர் 27,28, ஜனவரி 3,4இல் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்

டிசம்பர் 27,28, ஜனவரி 3,4இல் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. டிசம்பர் 27,28 மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம்: நாளை அரசு பேச்சுவார்த்தை – அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாளை அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை’ (OPS) மீண்டும் அமல்படுத்துவது குறித்து நாளை (டிசம்பர் 22, 2025) தமிழக அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு விரிவான ஆலோசனையை நடத்த உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் காலை 10:00 மணியளவில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
நாளை நடைபெறும் கூட்டத்தில, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது, 2004-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதில் உள்ள சாத்தியக்கூறுகள்.
பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது மற்றும் பிற ஊதிய முரண்பாடுகளைக் களைவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த தேர்தல்களில் தபால் வாக்குகள் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சென்றதாகக் கருதப்படுவதால், அரசு ஊழியர்களின் அதிருப்தியைப் போக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடி கவனம் செலுத்தி வருகிறார்.
அமைச்சர் ஐ. பெரியசாமி இதுகுறித்து அண்மையில் பேசும்போது, “முதலமைச்சர் அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) என்பது ஊழியரின் கடைசி மாதச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக உறுதியாகக் கிடைக்கும். இதில் பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படி (DA) உயரும். புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது இது சந்தை சார்ந்த முதலீடு என்பதால், ஓய்வூதியத் தொகைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை
நாளை நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமுகமான தீர்வு எட்டப்பட்டால், அது தமிழகத்தின் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய புத்தாண்டுப் பரிசாக அமையும். அமைச்சர்களின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது குறித்த இறுதி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அறிவியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

SIR-நீக்கப்பட்டவர்கள் எப்படி விண்ணப்பிப்பது? – அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

“வரைவு வாக்காளர்களின் எண்ணிக்கை, 5 கோடியே 43 லட்சத்து 76,755 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமாக 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன” என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியது.
அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதலில் மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“வரைவு வாக்காளர்களின் எண்ணிக்கை, 5 கோடியே 43 லட்சத்து 76,755 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமாக 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன” என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியது.
அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதலில் மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
எஸ்.ஐ.ஆரில், இறந்தவர்களின் எண்ணிக்கை 26,94,672, இடம் பெயர்ந்தவர்கள் 66,44,881, இரட்டைப் பதிவு 3,39,278 எனத் தெரியவந்துள்ளது. பட்டியலில் இடம் பெறாதவர்கள் பி.எல்.ஓ, இ.ஆர்.ஓ, சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி இரண்டு வார இறுதி நாளில் அனைத்து பூத்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த இருக்கிறோம். அந்த முகாமில் அவர்கள் விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

SIR பட்டியல் இன்று வெளியாகிறது… உங்கள் பெயரை பார்ப்பது எப்படி?

தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்வது எப்படி, பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
பிகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை வெளியிடப்படுகிறது.
வாக்காளர்கள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்தவர்கள் முதலில் தங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் நீக்கப்பட்டவர்களின் விவரம் மற்றும் அதற்கான காரணங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரைச் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். புதிதாக சேர விரும்புவோரும் இதே படிவத்தை வழங்க வேண்டும். இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்ப்பு படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தலா 50, படிவம்-6 இருக்கும். அவர்களிடமிருந்து படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே திருப்பி வழங்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஐனவரி 18 ஆம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல் மட்டும் இல்லாது, ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்த மறுப்புகளையும் தெரிவிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் முகவரி மாற்றம் செய்ய மற்றும் தொகுதி மாறுவதற்கு படிவம் 8ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஒரு மாதத்தில் வரும் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை..

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், வாகன நெரிசலைத் தவிர்க்கும் விதமாகவும், பயணங்களை எளிதாக்கும் விதமாகவும் போக்குவரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் செயல்பாட்டுக்கு வந்தது மெட்ரோ ரயில் திட்டம். சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இதில், முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான 9 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்த வழித்தடத்துக்கான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள போரூர், ஐயப்பன்தாங்கல், குமணன்சாவடி, கரையான்சாவடி உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வருவதால் தங்கள் பயணம் இனி எளிமையாகும் என தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவையில் 13 ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் சேவையும் இதில் கொண்டுவரப்படவுள்ளது. எனினும் முதல் 6 மாதங்கள் லோகோ பைலட் ரயில் பெட்டியில் இருந்து கண்காணிக்க உள்ளனர். அதேபோல இந்த வழித்தட நிலையங்களில் அரை உயர மேடை திரை கதவுகள் (Half-height Platform Screen Doors) அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், உயர்த்தப்பட்ட (Elevated) வழித்தடங்களில் இத்தகைய பாதுகாப்பு தடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், உயர்த்தப்பட்ட (Elevated) வழித்தடங்களில் இத்தகைய பாதுகாப்பு தடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

கனமழை தொடரும்..அடுத்த 3 மணி நேரத்திற்கு…

டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘டிட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்கான இழப்பீடுகளை விரைந்து வழங்கிட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கான இழப்பீடுகள் விரைந்து வழங்கிட வேண்டும் எனவும், பல்வேறு மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவும் அறிவுறுத்தினார்.
அடுத்த 18 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்!
சென்னையில் அடுத்த 12 முதல் 18 மணி நேரத்திற்கு மழை தொடரும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை வாய்ப்பு.

ஸ்ரீஹரிகோட்டா – மகாபலிபுரம் கடற்கரை பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

Read More