tvk

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சாலை வழியாக வேலூர் வரும் விஜய்…

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப். 23) எழுச்சியுடன் நடைபெறுகிறது. இதற்காக முள்ளிகொண்டா அருகே 33 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில், பாதுகாப்பை உறுதி செய்ய அனைவருக்கும் க்யூஆர் (QR) கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளாக 50 கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் கேலரி வாரியாக செய்யப்பட்டுள்ளன. மேலும், 25 மருத்துவர்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 100 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் அவசர சிகிச்சை மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மைதானத்தில் தயார் நிலையில் உள்ளனர். நடிகர் விஜய்யின் இந்த வருகை வேலூர் மாவட்ட தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அவசர கால தேவைகளுக்காக 25 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு மற்றும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கூட்டத்தை முறைப்படுத்தவும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த சந்திப்பில் பங்கேற்க மொத்தம் 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைவருக்கும் பிரத்யேக ‘க்யூஆர் கோடு’ (QR Code) கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஸ்கேன் செய்த பிறகே நிர்வாகிகள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.கடந்த முறை சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு வேலூர் கூட்டத்தில் நிர்வாகிகள் அமரும் பகுதி முழுவதும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானத்தில் 50 தனித்தனி கழிப்பறை வசதிகள் மற்றும் ஒவ்வொரு கேலரியிலும் தடையின்றி குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் இந்த சந்திப்பிற்கான பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று (பிப். 23) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்காக மேடை மற்றும் தடுப்புகள் தயார் நிலையில் உள்ளன.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது… பெருந்துயரம்…எப்படி – நடந்தது..

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 15 நிமிடத்தில் முடிந்த விஜய் பரப்புரைச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில், விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை 10 மணி முதலே தொண்டர்கள் அப்பகுதியில் திரளத் தொடங்கினர். ஆனால் நாமக்கல்லிலேயே விஜய் மூன்று மணிக்குதான் பேசினார் என்பதால் கரூர் பரப்புரை தாமதமாகிக் கொண்டிருந்தது. அதனால் தொண்டர்கள் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.
ஒரு கட்டத்தில் கட்டக்கடங்காத கூட்டம் கூடி நிற்கக் கூட இடமில்லாத நிலையில் கட்டடங்கள், மரங்கள் என ஆபத்தான வகையில் தொண்டர்கள் ஏறி நின்றனர். அதனால் பாதுகாப்பு கருதி 6 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டத்தால் ஊர்ந்தபடி சென்ற விஜயின் பரப்புரை வாகனம் ஒரு வழியாக இரவு 7 மணிக்கு வேலுச்சாமி புரத்திற்கு வந்தது. விஜய்யின் வாகனத்திற்கு முன்னால் 6 வாகனங்களும், விஜய் வாகனத்தைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் உள்ளே நுழைந்தபோதே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலுக்கான அறிகுறி தென்பட்டது.
வாகனங்களுக்கு வழிவிட தொண்டர்கள் ஒதுங்க முடியாத நிலையில் அலைமோதிய கூட்டத்தால் இரு ஜெனரேட்டர்கள் வைத்திருந்த தடுப்புகள் உடைந்து விழுந்து விஜய் வரும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு பகுதி இருளில் மூழ்கியது. அப்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாக கூட்ட நெரிசலில் சிலர் விழத் தொடங்க அவர்கள் உடனுக்குடன் அவசர ஊர்திகளில் அனுப்பப்பட்டனர்.
இரவு 7.12 மணி. விஜய் பேசத் தொடங்குகிறார். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் திணறுகிறது. பல மணி நேரம் காத்திருந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என கூக்குரலிடுகின்றனர்.
விஜயின் கவனத்தை ஈர்க்க பாட்டில்கள், காலணிகள் உள்ளிட்டவற்றை விஜய்யின் வாகனத்தை நோக்கி எறிந்தனர். அதனால் விஜயே சில தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசுகிறார். அதன்பின் விஜய் பேச்சில் கவனம் செலுத்த, அடுத்தடுத்து பலர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து மிதிபட்டனர்.
விஜய் ஒருபுறம் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் மூச்சுத் திணறி விழுந்தவர்களை ஏற்றிக் கொண்டு அவசர ஊர்திகள் ஓயாத ஒலியுடன் பறந்து கொண்டிருந்தன.
ஒரு பெருந் துயரம் நிகழ்ந்து கொண்டிருப்பது தெரியாமல், தொண்டர்கள் செல்போன்களில் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இரவு 7.31 மணி. விஜய் பரப்புரையை முடிக்கிறார். கூட்டம் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜயின் வாகனத்திற்கு பவுன்சர்கள் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.
இதனிடையே நோயாளிகள் யாருமின்றி வந்ததாக கூறி தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்திய தவெகவினர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதனை அடுத்து, காவலர்கள் தவெகவினர் மீது லேசாக தடியடி நடத்தி ஓட்டுநர்களை தாக்கிய 10க்கும் மேற்பட்டோரை விரட்டியடித்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து உயிரிழக்க குடும்பத்தினர் கதறல் கரூரையை கண்ணீர் விட வைத்தது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் 39 பேர் உயிரிழந்த நிலையில், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மயங்கியவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி உதவி அறிவித்து, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை காண கரூர் புறப்பட்டுச் சென்றார்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூர் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரே ஒரு உடல் மட்டும் அடையாளம் காணப்பட வேண்டியிருக்கிறது. இதில் 14 உடல்களுக்கு போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கான உடற்கூராய்வை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 51 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கவலைக்கிடம். மொத்தமாக எல்லாம் சேர்த்து 111 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

விஜய் பரப்புரை பயணத்தில் விதிமீறல்.. தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார். இதற்கு 23 நிபந்தனைகளுடன் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், விஜயால் திட்டமிட்ட நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள இயலவில்லை.
விஜய் பரப்புரை பயணத்தில் நடைபெற்ற விதிமீறல் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
காவல்துறையின் நிபந்தனைகளை தவெக தொண்டர்கள் மீறியதுடன், தனியார் மற்றும் அரசு சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விதிமீறல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக திருச்சி மாவட்டத் தலைவர் கரிகாலன், மகளிர் அணி மாவட்டத் தலைவி துளசி மணி ஆகியோர் மீதும்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்ய சோழன், இமயத் தமிழன், விக்னேஷ் குமார் ஆகியோர் மீதும் இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன். வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் கடந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதி வரை விஜய் பிரசார பேருந்தில் வந்தார். சில நிமிடங்களில் சென்று விடும் தூரத்தை, அதாவது 7 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் கடந்து விஜய் வந்தார். வழி நெடுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாக இருந்ததால் விஜய்யின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது.

தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்ததால், மதியம் 2.30 மணிக்குத்தான் பிரசார இடமான காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தது. அங்கு பேசிய விஜய், பின்னர் அடுத்த பாயிண்ட் அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் பேச்சு குறித்து அண்ணாமலை-”யாருக்கு யார் எதிரி …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. தேர்தலில் முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்து என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின் பேசிய தவெக தலைவர் விஜய், “மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பா சொன்னா பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே.

அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையே தான்” எனத் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் மூன்று முறை வெளியே வருவது ஒருவித அரசியல். இந்த அரசியலை மக்கள் பார்ப்பார்கள்.

விஜய் உட்பட யாராக இருந்தாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், களத்தில் யாருக்கு யார் எதிரி என வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். திமுக தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், மக்கள் மன்றத்தில் சொல்வதிலும், திருத்துவதிலும், போராடுவதிலும், தீர்வு வழங்குவதிலும் பாஜக தான் முதன்மையான கட்சி.இன்று அரசியலில் இன்று சக்திவாய்ந்தவராக இருப்பவரை பற்றி பேசினால் மைலேஜ் கிடைக்கும் அதனால் பிரதமரை விமர்சித்து பேசுகிறார்” எனத் தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜயின் பொதுக்குழு பேச்சு..! அரசியல் தலைவர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்த விஜய், அடுத்த தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், திமுகவுக்கு போட்டியும் இல்லை, முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக களத்தில் எந்த தலைவரும் இல்லை என்றும் திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக, திமுக கட்சித் தலைவர்களை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்ததும், அதற்கு அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது.
அரசியலில் யார் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி பேசினால் தான் மைலேஜ் கிடைக்கும் என்றும், அதனால் தான் பிரதமர் மோடியின் பெயரை விஜய் உச்சரித்து இருப்பதாகவும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.
திமுகவுக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் திருப்ப முயற்சிக்கும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், அதிமுக – தவெக இணைய வேண்டும் என்பது மக்களிடம் பேசுபொருளாக இருப்பதாகவும் கூறினார். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வாக்குகளை சிதறடிக்க பாஜக-வுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறாரோ என அச்சம் நிலவுவதாக விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கருத்து கூறினார்.
பாஜக, திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக, அக்கட்சி தலைவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைக்க விஜய் தொடங்கிவிட்டதாக தெரிகிறது

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் இஃப்தார் நோன்பு… – பிரியாணி பை முதல் திறந்த வேன் வரை!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதல்முறை இஃப்தார் நோன்பு நிகழ்வில் விஜய் இன்று கலந்து கொண்டார். இதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் கலந்து கொள்கிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் ஏராளமான இஸ்லாமியர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திணறிய ராயப்பேட்டை
அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நபர்கள் மட்டுமே நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் திணறினர். நோன்பு அரங்கில் கட்டுக்கடங்காமல் உள்ளே செல்ல முயற்சித்ததால் கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறின. இந்நிலையில் விஜய் வருகை புரிந்ததும் இஃப்தார் நோன்பு களைகட்டியது. வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி மற்றும் தலையில் குல்லா அணிந்து வந்திருந்தார்.
இஸ்லாமியர்கள் இஃப்தார் நோன்பு
இந்த வித்தியாசமான லுக்கை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இஸ்லாமியர்கள் உடன் அமர்ந்து தொழுகை செய்தார். இதையடுத்து நோன்பு திறந்தார். நோன்பு கஞ்சி குடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இஸ்லாமியர்கள் முன்னிலையில் மைக்கில் பேசினார். அதாவது, எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
விஜய் பங்கேற்பு
மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி வரும் இஸ்லாமிய சகோதரர்கள், எனது அன்பான கோரிக்கையை ஏற்று வருகை புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மிக்க மிக்க மகிழ்ச்சி என்று பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Read More
அரசியல்சினிமா

 ஜப்பானில் இருந்து பனையூர் வந்த ரசிகர்கள்… விஜய் 

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னை பார்க்க வந்த ஜப்பான் ரசிகர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.
விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு மறுபுறம் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

TVK Vijay | “பரந்தூரில் எங்களுக்கு நிலம் இல்லை” – விஜய் குற்றச்சாட்டை அடுத்து விளக்கமளித்த நிறுவனம்!

சிலருக்கு ஆதாயம் இருப்பதால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றஞ்சாட்டிய நிலையில், பரந்தூரில் தங்களுக்கு நிலம் எதுவும் இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்த நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் அவர்கள் முன் பேசுகையில், “டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படி தானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை.
ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அது மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்.” என்று விஜய் குற்றம்சாட்டினார்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு சிலருக்கு ஆதாயம் இருப்பதாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், சமூக வலைதளங்களில், பரந்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு நிலம் இருப்பதாகவும், இந்நிறுவனம் அரசியல் தொடர்புகளுடன் இருப்பதாகவும் தகவல் பரப்பப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய் – காவல்துறையினர் அனுமதி….

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து வரும் நிலையில், போராட்டக்குழுவினரை சந்திக்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அண்மையில் அறிவித்தார். ஜனவரி 19 அல்லது 20இல் பரந்தூர் செல்ல அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை மறுநாள் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

ஓராண்டு நிறைவில் தவெக… முக்கிய அறிவிப்பை வெளியிட விஜய் திட்டம்

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கியப் முடிவுகளை எடுக்க அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்த நடிகர் விஜய், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒராண்டு நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சித் தொடங்கி ஓராண்டாகியும் இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. கட்சியின் நிறுவன நாளுக்கு முன்பாக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More