DMK

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

இழுபறிக்கு பின் முடிவான தொகுதி பங்கீடு… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள்..

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 2026 ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் பெ.சண்முகம் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இன்று திமுகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலந்து பேசினார். இதனடிப்படையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலக்குழுச் செயலாளர், ” கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக இருந்தது. எனினும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. இந்த எண்ணிக்கை எங்களுக்கு முழுத் திருப்தியை அளிக்கவில்லை என்றாலும், கூட்டணியின் ஒற்றுமை சிதைந்துவிடக்கூடாது என்பதிலும், அதற்கு நாங்கள் காரணமாகிவிடக் கூடாது என்ற அக்கறையிலுமே இந்த முடிவிற்கு உடன்பட்டதாக தெரிவித்தார்.கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் அடுத்த சில நாட்களில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்… புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
2021 செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் – 2021’ என்ற மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து, 2022 பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் இந்த மசோதா ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டதாக, கடந்த 4ஆம் தேதி பேரவையில் முதலமைச்சவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், இதில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் இன்று ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் நாளை தொடங்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது. 2-வது கட்ட கூட்டத் தொடர் நாளை (மார்ச் 10) தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

மும்மொழி கொள்கைக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், மக்களவை தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக தென்மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக அல்லாத மற்ற கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தமிழகத்துக்கு நிதி தராதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் மத்திய அரசிடம் தமிழக அரசு போராடி வருகிறது.
இந்த பிரச்சினைகளை நாடாளுமன்ற அவைகளில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்; எம்.பி. கதிர் ஆனந்திடம் 10 மணிநேரம் விசாரணை

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
கடந்த 3-ஆம் தேதி வேலூரில் உள்ள திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தின் வீடு, கல்லூரி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரொக்கம் மற்றும் 13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி, கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றதை அடுத்து, அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.

Read More
தமிழ்நாடு

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் 5 மணி நேரம் காத்திருந்து ED அதிகாரிகள் ரெய்டு

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவரது வீட்டில் சோதனை செய்த வருமானவரித் துறை அதிகாரிகள், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில். இன்று திடீரென கதிர் ஆனந்த் எம்பிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்த காலை 9 மணிக்கு அதிகாரிகள் சென்ற நிலையில், கதிர் ஆனந்த் வெளிநாடு சென்றிருப்பதால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டின் முன் காத்திருந்தனர். இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு அமலாக்கத்தூறை அதிகாரிகள் பேசியதை அடுத்து 5 மணி நேர காத்திருப்புக்கு பின் வீடு திறக்கப்பட்டு அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். தனது உறவினரை உடன் வைத்துக் கொண்டு சோதனை நடத்தும்படி கதிர் ஆனந்த் கேட்டுக் கொண்டதால், வேலூர் மாநகர துணை மேயர் சுனில் குமார் முன்னிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காட்பாடி அடுத்த சித்தூர் சாலையில் உள்ள கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. திமுக பிரமுகரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளருமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை நிறைவடைந்தது.

Read More
அரசியல்தமிழ்நாடு

உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் உன்னத நிலை பெற வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்

உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Read More
அரசியல்தமிழ்நாடு

பாஜக சொல்வது அப்பட்டமான பொய்க்கணக்கு – முதல்வர் மு.க. ஸ்டாலின்

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ. 10.76 லட்சம் கோடி நிதி ஒதுக்கியதாக மத்திய நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்

Read More
அரசியல்தமிழ்நாடு

தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? – முதல்வர் ஸ்டாலின் விளாசல்

பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

பாசிச பாஜகவுக்கு சரியான பாடத்தை கற்றுத் தர வேண்டும் – கனிமொழி எம்.பி. ஆவேசம்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம்

Read More
அரசியல்தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்..!!

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல்

Read More