Tamilnadu

ஆன்மீகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

தமிழக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு இனி ஆன்லைனில் முன்பதிவு.. அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்ய இனி ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் சிறப்பு தரிசனத்திற்கு

Read More
சினிமாதமிழ்நாடு

மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின்

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தவெக அரசு அமைந்த பின்… முதன்முதலாக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் 

தவெக அரசு பொறுப்பேற்ற பின், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதன்முதலாக இன்று நடைபெறவுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த மாதம் 10ஆம்

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் அண்ணாமலை

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்​ன​தாக அண்​ணா​மலை திடீரென தலை​வர் பதவி​யில் இருந்து மாற்​றப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக நயி​னார் நாகேந்​திரன் நியமிக்​கப்​பட்​டார். இந்த மாற்​றம் அண்​ணா​மலை ஆதர​வாளர்​களிடையே கடும்

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து… அதிகாரிகள் சஸ்பெண்ட்… தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழ்நாடு அரசு மே 13 முதல் 22 வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை நிர்வாக காரணங்களால் ரத்து செய்தது, சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
அவசர மற்றும் அவசியமான தேவைகளுக்காக வழக்கமான கால அவகாசத்தைக் குறைத்து குறுகிய கால டெண்டர்கள் வழங்கப்படும். ஆனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பல்வேறு குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்நிலையில், மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

Read More
educationதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.31% பேர் தேர்ச்சி

தமிழக பள்​ளிக் ​கல்வி பாடத் திட்​டத்​தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு (மார்ச் 2026) கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்​கி கடந்த ஏப்​.6-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தொடர்ந்து விடைத்தாள் திருத்த பணிகள் தொடங்கி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று சென்னை – அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

மொத்தம் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
வழக்கம்போலவே இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 92.15 சதவீதம், மாணவிகளின் எண்ணிக்கை 96.47 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களை விட 4.32 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரையில் புதுக்கோட்டை (97.57%), சிவகங்கை (97.54%), தஞ்சாவூர் (97.41%), திருச்சி (97.31%), கன்னியாகுமரி (97.30%) மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதவீதம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

தமிழ் – 98.43%, ஆங்கிலம் 99.44%, கணிதம் 97.36%, அறிவியல் 98%, சமூக அறிவியல் 97.93%.

நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:

தமிழ் – 34 , ஆங்கிலம் – 93, கணிதம் 3194, அறிவியல் – 10476, சமூக அறிவியல் – 3336 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.66%

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் என்று தெரிவித்தார்.

தலைமைச் செயலத்தில் அமைச்சர் ராஜ்மோகனிடம் ‘தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதே எங்கள் கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கை​யில் பிஎம்​ஸ்ரீ பள்​ளித் திட்​டம் இடம்​பெற்​றுள்​ளது. இதன்​மூலம் பள்​ளி​களின் கட்​டமைப்பு வசதி​கள் மேம்​படுத்தப்பட்டு வரு​கின்​றன. ஆனால், இந்த திட்​டத்​தில் மும்​மொழிக் கொள்கை இருப்​ப​தால் தமிழகம் இணைய மறுத்​து​விட்​டது. இதன் காரண​மாக, ஒருங்​கிணைந்த பள்​ளிக் ​கல்​வித் திட்​டம் மூல​மாக தமிழகத்​துக்கு தரவேண்​டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்​காமல் மத்​திய அரசு நிறுத்தி வைத்​தது.

இந்த விவ​காரம் கடந்த திமுக ஆட்​சி​யில் பெரும் சர்ச்​சை​யானது. இதன் தொடர்ச்சியாக, மத்​திய கல்வி அமைச்​சகம் சமீபத்தில் தமிழக அரசுக்கு மீண்​டும் ஒரு கடிதம் எழு​தி​யுள்​ளது. பிஎம்ஸ்ரீ பள்​ளித் திட்​டத்​தின்​கீழ் பள்​ளி​களை மேம்​படுத்த உடனடி​யாக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவெக தலை​மை​யில் புதிய அரசு பதவியேற்ற சூழலில் மத்​திய அரசு இந்தக் கடிதத்தை அனுப்​பியது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்த விவ​காரத்​தில் தவெக என்ன முடி​வெடுக்​கும், முந்​தைய திமுக அரசு ​போல எதிர்ப்பு தெரிவிக்​குமா அல்​லது ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடு​மா, நிறுத்தி வைக்​கப்​பட்ட கல்விக்​கான நிதியை மத்​திய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரி​யான நடவடிக்கை எடுக்​கும் என பல கேள்வி​கள் எழுந்​துள்​ளன. இந்தப் பின்னணியில்தான் “இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அரசு பணிகள், பாதுகாப்பு காரணங்கள்: கேரள புதிய அரசு பதவியேற்பு விழாவில் விஜய் பங்கேற்கவில்லை….

கேரளாவில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் அவரது பிஸியான அதிகாரப்பூர்வ பணி முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் திருவனந்தபுரத்திற்கு வருகை தந்திருந்தபோது, அவரைக் காணத் திரண்ட மக்கள் கூட்டம் பெரும் பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்றதொரு பிரம்மாண்டமான விழாவில் அவர் மீண்டும் கலந்து கொண்டால், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் உருவாகக்கூடும் என்றும், அது பதவியேற்பு விழாவின் முக்கிய கவனத்தை திசை திருப்பிவிடும் என்றும் அதிகாரிகள் தெர்விக்கின்றனர்.

பொதுவாக இது போன்ற மாநில அரசின் பதவியேற்பு விழாக்களுக்கு அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கமான ஒன்றாகும். மேலும், விஜய்யின் அரசாங்கத்திற்கு காங்கிரஸின் ஆதரவும் இருப்பதால், அவரை முறைப்படி அழைப்பதில் கேரள மாநில அரசுக்கு எந்தவித விருப்பக்குறையும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர் இந்த விழாவிற்கு வராததற்குப் பின்னால் இருக்கும் முதன்மைக் காரணம் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி…144 எம்எல்ஏக்கள் ஆதரவு..

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் 108 தொகு​தி​களை கைப்​பற்​றி, தனிப்​பெரும் கட்சியாக தவெக உரு​வெடுத்​துள்​ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்​தம் 118 இடங்​கள் தேவைப்​பட்ட நிலை​யி்ல், காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய கட்​சிகளைச் சேர்ந்த 13 உறுப்​பினர்​களின் ஆதர​வைத் தவெக பெற்​றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்​லேகர் தெரிவித்தார்.

கடந்த 10-ம் தேதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்து, ஆளுநர் அறி​வுறுத்​தலின்​படி, சட்​டப்​பேர​வை​யில் விஜய்​யின் தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான நம்​பிக்கை வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகர் கேட்​டுக்​கொண்​டபடி. நம்​பிக்கை வாக்​கெடுப்​புக்​கான தீர்​மானத்தை முதல்​வர் விஜய் முன்​மொழிந்​தார்.தொடர்ந்​து, எஸ்​.​ராஜேஷ் கு​மார் (காங்​கிரஸ்), ஆர்​.செல்​லசு​வாமி (மார்க்​சிஸ்ட்), வன்​னியரசு (விசிக), அ.மு.ஷாஜ​கான் (ஐயூஎம்​எல்), அமமுக​வில் இருந்து நீக்​கப்​பட்ட எஸ்​.​காம​ராஜ் (சுயேச்​சை), டி.​ராமச்​சந்​திரன் (இந்​திய கம்​யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதர​வாக பேசினர்.

பிரேமலதா விஜய​காந்த் (தே​மு​தி​க), தமி​முன் அன்​சாரி (மஜக), நித்​தி​யானந்​தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். போஜ​ராஜன் (பாஜக), சவுமியா அன்​புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்​ப​தாக தெரி​வித்​தனர்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி, அதி​முக எம்​எல்​ஏக்​கள் 2 அணி​களாக செயல்​பட்டு வரு​வதை குறிப்​பிட்​டு, அரசுக்கு எதி​ராக வாக்​களிக்க உள்​ள​தாக தெரி​வித்​தார். இதையடுத்​து, அதி​முக​வின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்​.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்​பட்​டது. அதற்கு பழனி​சாமி உள்​ளிட்​டோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பேர​வைத் தலை​வர் அனு​மதி அளித்​ததை அடுத்​து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்​ப​தாக தெரி​வித்​தார்.தொடர்ந்து பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், ‘பெரும்​பான்மை மக்​கள் தவெக​வுக்கு வாக்​களிக்​க​வில்​லை’ என்று பேசி​யதுடன், வாக்கெடுப்​பில் பங்​கேற்​காமல் வெளிநடப்பு செய்​வ​தாக அறி​வித்​தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து முதல்​வர் விஜய் பேசும்​போது, ‘‘இந்த அரசு நிச்​ச​யம் மதச்​சார்​பற்ற அரசாகத்​தான் செயல்​படும். குதிரை பேரத்​தில் இந்த அரசு ஈடு​பட​வில்​லை. குதிரை வேகத்​தில் செயல்​படு​கிறது. தமிழகத்​தின் முன்​னேற்​றத்​துக்கு உழைத்த தலை​வர்​கள் வழி​காட்​டிய கொள்​கை​களில் இருந்து இம்​மியள​வும் வில​காமல் இந்த ஆட்சி நடை​பெறும். எனவே, நான் முன்​மொழிந்த தீர்​மானத்தை உறுப்​பினர்​கள் ஏகமன​தாக நிறைவேற்​றித் தரவேண்​டும்’’ என்​றார்.பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கச்​செய்​து, ஆதரிப்​பவர்​கள், எதிர்ப்​பவர்​கள், நடுநிலை வகிப்​பவர்​கள் என எண்​ணிக் கணிக்​கு​மாறு பேர​வைச் செயலர் கி.சீனி​வாசனுக்குப் பேரவைத் தலைவர் அறி​வுறுத்​தி​னார்.

அதன்​படி, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​கள் எண்​ணிக் கணிக்​கப்​பட்​டனர். உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கக்​கூறி, பெயர் வாசிக்​கப்​பட்டு அவர்​கள் நிலைப்​பாடு கணக்​கில் கொள்​ளப்​பட்​டது.

இதையடுத்​து, வாக்​கெடுப்பு விவரத்தை பேர​வைத் தலை​வர் அறி​வித்​தார். அதன்​படி, 144 உறுப்​பினர்​கள் அரசுக்கு ஆதர​வளிப்​ப​தாக​வும், 22 உறுப்​பினர்​கள் எதி​ராக வாக்​களித்​த​தாக​வும், 5 உறுப்​பினர்​கள் நடுநிலை வகித்​த​தாக​வும் அறி​வித்​தார். இதன்​மூலம் வாக்​கெடுப்​பில் தவெக அரசு பெரும்​பான்மை பெற்​றுள்​ள​தாக​வும் அறி​வித்​தார்​. இதையடுத்​து, அனைத்​து உறுப்​பினர்​களுக்​கும்​ முதல்​வர்​ விஜய்​ நன்​றி தெரிவித்​தார்​.

Read More