Tamilnadu

இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு…

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக உள்ளது.

மத்திய கிழக்கு போரால் விநியோகம் பாதிப்பு. விலை உயர்வால் அதிர்ச்சி.

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும்.மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாதத்தின் முதல்நாளான இன்று வணிக சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.இன்று (ஏப்ரல் 1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கச்சா எண்​ணெய், எல்​பிஜி எரிபொருள் கொண்டு செல்​லும் கப்​பல்​கள் செல்ல தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. ஒரு சில கப்​பல்​கள் மீது ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் நூற்​றுக்​கணக்​கான சரக்கு கப்​பல்​கள் அங்கு காத்​துக் கிடந்​தன.இந்​திய கப்​பல்​களுக்கு அனு​மதி வழங்​கும்​படி ஈரான் அரசுடன் இந்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இதே​போல, ஈரானின் நட்பு நாடு​களும் பேச்​சு​ நடத்தின. இதையடுத்து இந்​தி​யா, பாகிஸ்​தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடு​களின் கப்​பல்கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து ஈரான் வெளி​யுறவுத் ​துறை அமைச்சர் சையத் அப்​பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்​ளது. மேற்கு ஆசியா போர்க்​கள​மாக உள்​ளது. இதனால், இங்கு எதிரி நாடு​களின் கப்​பல்​கள் செல்ல அனு​ம​திக்க முடி​யாது. மற்​றவர்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி திறந்​தே உள்​ளது’’ என்​றார்​.

‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ – அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்​பில் நேற்று முன்​தினம் நடந்த நிகழ்ச்​சி​யில் அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: அமெரிக்​கா – ஈரான் இடையே அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறு​கிறது. ஈரானின் உச்ச தலை​வ​ராக என்னை நியமிக்க அவர்​கள் விரும்​பு​கின்​றனர். ஆனால் நான் மறுத்​து​விட்​டேன். அமெரிக்க பிர​தி​நி​தி​களு​டன் ஈரான் பிர​தி​நி​தி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.அமெரிக்கா​வுடன் வெகு​விரை​வாக அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த ஈரான் விரும்​பு​கிறது. ஆனால், ஈரான் பிர​தி​நி​தி​களால் இதை வெளிப்​படை​யாக கூற முடிய​வில்​லை. ஈரான் ஆட்​சி​யாளர்​கள், ராணுவதளப​தி​கள் அடுத்​தடுத்து கொல்லப்​பட்டு வரு​கின்​றனர். உயிர்பயம் காரண​மாக ஒப்​பந்​தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிர​தி​நி​திகள் ஆர்​வம் காட்​டு​கின்​றனர். ஆனால் இதை பகிரங்​க​மாக அறி​வித்தால் சொந்த நாட்டு மக்​கள் அடித்துக் கொன்​று​விடு​வார்​கள் என்று அஞ்​சுகின்​றனர். ஒரு​வேளை, ஒப்பந்​தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரக​மாக மாறும். இவ்​வாறு ட்ரம்ப் கூறினார்.

போரை நீண்ட காலம் நீட்​டிக்க ட்ரம்ப் விரும்​ப​வில்​லை. அடுத்த சில வாரங்​களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதற்கிடையே, 5 நாட்​கள் போர் நிறுத்​தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்​தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

இழுபறிக்கு பின் முடிவான தொகுதி பங்கீடு… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள்..

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 2026 ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் பெ.சண்முகம் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இன்று திமுகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலந்து பேசினார். இதனடிப்படையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலக்குழுச் செயலாளர், ” கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக இருந்தது. எனினும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. இந்த எண்ணிக்கை எங்களுக்கு முழுத் திருப்தியை அளிக்கவில்லை என்றாலும், கூட்டணியின் ஒற்றுமை சிதைந்துவிடக்கூடாது என்பதிலும், அதற்கு நாங்கள் காரணமாகிவிடக் கூடாது என்ற அக்கறையிலுமே இந்த முடிவிற்கு உடன்பட்டதாக தெரிவித்தார்.கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் அடுத்த சில நாட்களில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுமாவட்டம்

கரூர் நெரிசல் வழக்கு: டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை…

கரூர் நெரிசலில் உயி​ரிழப்​பு​கள் தொடர்​பான வழக்​கில், டெல்​லி​யில் செந்​தில் பாலாஜி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசா​ரணை நடத்​தினர்.

கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி கரூரில் நடை​பெற்ற தமிழக வெற்​றிக் கழகத்​தின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். தமிழகத்​தையே உலுக்​கிய இந்​தச் சம்​பவம் குறித்து சிபிஐ விசா​ரணை மேற்​கொண்டு வரு​கிறது.இந்த வழக்​கில் ஏற்​கெனவே தவெக தலை​வர் விஜய் 3 முறை டெல்​லி​யில் சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் ஆஜராகி விளக்​கம் அளித்​தார். இந்த துயர சம்​பவத்​துக்கு திமுக மற்​றும் செந்​தில் பாலாஜி​யின் ஆதர​வாளர்​களே காரணம் என தவெக தரப்​பில் குற்​றம் சாட்​டப்​பட்டு வரு​கிறது.

மேலும், சம்பவம் நடந்த அன்று இரவே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததால், அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இந்​நிலை​யில், மார்ச் 17-ம் தேதி டெல்லி அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு செந்​தில் பாலாஜிக்கு சிபிஐ சம்​மன் அனுப்பியது.அதன்படி செந்​தில் பாலாஜி நேற்று முன்​தினம் சென்​னை​யில் இருந்து டெல்லி சென்​றார். நேற்று காலை 11 மணிக்​குத் தொடங்​கிய விசா​ரணை​யில், சிபிஐ அதி​காரி​கள் கரூர் சம்​பவம் குறித்து அவரிடம் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர். அப்​போது, விஜய் மற்​றும் தவெக நிர்​வாகி​கள் மீதே குற்​றச்​சாட்டை முன்​வைத்து செந்​தில் பாலாஜி பதில்​களை அளித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசா​ரணை​யின் போது, செந்​தில் பாலாஜி அளித்த விளக்​கங்​கள் அனைத்​தை​யும் சிபிஐ அதி​காரி​கள் வீடியோ​வாக​வும், எழுத்​துப்​பூர்​வ​மாக​வும் பதிவு செய்தனர். மாலை 5 மணி அளவில்​ வி​சா​ரணை நிறைவடைந்​தது.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

த.வெ.க சீனியர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை… 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, மார்ச் 15 டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் விஜய்யிடம் 3-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு, நேற்று இரவே விஜய் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு, பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை தேனாம்பேட்டையில் உள்ள ‘ப்ரெஸ்டிஜ் பாலிகன்’ வார் ரூமில் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, மாநிலம் தழுவிய தேர்தல் சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. த.வெ.க.-வை என்.டி.ஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படும் சூழலில், இன்றைய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்னதாக இன்று காலை பட்டினம்பாக்கத்தில் ஆலோசனையைத் தொடங்கிய விஜய், பின்னர் தேனாம்பேட்டை வார் ரூமிற்குச் சென்றார். ஆலோசனை முடிந்து வெளியே வந்த விஜய், அங்கு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து புன்னகையுடன் ‘தம்ப்ஸ் அப்’ (Thumbs up) காட்டி உற்சாகப்படுத்தினார்.

Read More
Election 2026இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ல் தேர்தல்: மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங் களிலும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, ராஜீவ் குமார் ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் அண்மையில் ஆய்வு செய்தோம். அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்.அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. தகுதியுள்ள ஒரு வாக்காளர்கூட விடுபடாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. எஸ்ஐஆர் பணிக்காக கடினமாக உழைத்த அனைத்து பிஎல்ஓக்களுக்கும் வாழ்த்துகள்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இளம் தலைமுறையினர், புதிய வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை கண்டிப்பாக செலுத்த வேண்டுகிறேன். உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க நீங்கள் தேர்தலில் வாக்களிப்பது அவசியமாகும். இந்தியாவின் ஒவ்வொரு தேர்தலும் ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தற்போது மீண்டும் ஒரு திருவிழாவை கொண்டாட உள்ளோம்.சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்தில் 6.44 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 5.67 கோடி, கேரளாவில் 2.7 கோடி, அசாமில் 2.5 கோடி, புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகம்.

ஒட்டுமொத்தமாக 824 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 20 நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தலை மேற்பார்வையிட உள்ளனர். பொதுத்தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய கடந்த 12 மாதங்களாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் எஸ்ஐஆர் பணி மிகவும் முக்கியமானது. மேலும் வாக்குப்பதிவின்போது பொதுமக்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்திருக்க சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களும் செயலி வாயிலாக உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகிறது.இத்தேர்தலில் 750 முதல் 900 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படும். தமிழகத்தில் 75,032, புதுச்சேரியில் 1,099, கேரளாவில் 30,471, அசாமில் 31,486, மேற்கு வங்கத்தில் 80,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக 2.19 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் பணியில் 25 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பல்வேறு படைப் பிரிவுகளை சேர்ந்த 8.5 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வாக்கு எண்ணும் பணியில் 40,000 அலுவலர்கள் பங்கேற்பார்கள்.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 7-ம் தேதி நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 10, அசாம் பேரவையின் பதவிக்காலம் மே 20, கேரள பேரவையின் பதவிக் காலம் மே 23, புதுச்சேரி பேரவையின் பதவிக் காலம் ஜூன் 15-ம் தேதிகளில் நிறைவடைகிறது.இந்த சூழலில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா, அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற 72 மணி நேரத்துக்குள் அனைத்து புள்ளி விவரங்களும் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுமாவட்டம்வணிகம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் நடவடிக்கை என எச்சரிக்கை

தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு இல்​லை; பொது​மக்​களிடம் வதந்தி பரப்​பி​னால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்தி வரும் தீவிர போர் தாக்​குதலால், இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் தடைபட்​டுள்​ளது. இதனால் சமையல் எரி​வாயு பற்​றாக்​குறை ஏற்​பட்​டு, வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. வீட்டு உபயோக சிலிண்​டர் மட்​டும் கட்​டுப்​பாடு​களு​டன் பொது​மக்​களுக்கு விநி​யோகிக்​கப்​படு​கின்​றன.கொள்​கிறேன் என்று கூறியுள்ளார்.இதற்​கிடையே பெட்​ரோல், டீசலுக்​குத் தட்​டுப்​பாடு ஏற்​படப் போவ​தாக​வும், அதன் விலை உயரப் போவ​தாக​வும் சமூக வலை​தளங்​களில் பரவியது. இதனால் அதிர்ச்​சி​யடைந்த மக்​கள், சென்னை உள்பட தமிழகத்​தின் பல்​வேறு நகரங்​களில் உள்ள

பெட்​ரோல் பங்க்​கு​களில் நேற்று முன்​தினம் இரவு முதலே குவி​யத் தொடங்​கினர். குறிப்​பாக, சென்​னை​யில் பல இடங்​களில் உள்ள பெட்​ரோல் பங்க்​கு​களில் பைக்​கு​கள், கார்​களில் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​து, எரிபொருளை நிரப்​பினர்.

எழும்​பூர், சேத்​துப்​பட்​டு, நுங்​கம்​பாக்​கம், அண்​ணா​சாலை, கோடம்​பாக்​கம், சைதாப்​பேட்​டை, கிண்​டி, ராயப்​பேட்​டை, அம்​பத்​தூர், முகப்​பேர், அண்​ணா நகர் உள்பட பல்​வேறு இடங்​களில் உள்ள பெட்​ரோல் பங்க்​கு​களில் கூட்​டம் அலைமோ​தி​யது. சிலர் கேன்​களில் பெட்​ரோல் வாங்க வந்​தனர். அவர்​களுக்கு பெட்​ரோல் வழங்க மறுத்​த​தால், ஊழியர்​களிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர்.இதே​போல், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திருச்சி உள்பட பல்​வேறு நகரங்​களில் உள்ள பங்க்​கு​களில் பெரு​மள​வில் மக்​கள் குவிந்​த​தால், போக்​கு​வரத்து நெரிசலும் ஏற்​பட்​டது.

இதற்​கிடையே, எரிபொருள் தட்​டுப்​பாடு அச்​சத்​தில், சென்​னை​யில் பல இடங்​களில் பொது​மக்​கள் தங்​கள் பைக்​கு​கள், கார்​களை அருகே உள்ள மெட்ரோ நிலைய பார்க்​கிங்​கில் நிறுத்​தி​ விட்​டு, மெட்ரோ ரயி​லில் பயணித்தனர். இதனால், ஆலந்​தூர், பரங்​கிமலை, சென்ட்​ரல், கோயம்​பேடு உள்பட பல மெட்ரோ ரயில் நிலைய பார்க்​கிங்​கில் வாக​னங்​களை நிறுத்த முடி​யாமல் வழக்​க​மாக வரும் பயணி​கள் சிரமப்​பட்​டனர்.

எரிபொருள் இருப்பு குறித்​து, தமிழக பெட்​ரோலிய விற்​பனை​யாளர் சங்க மாநிலத் தலை​வர் முரளி கூறிய​தாவது:90 நாட்களுக்கு இருப்பு: நாடு முழு​வதும் அடுத்த 90நாட்​களுக்​குத் தேவை​யான பெட்​ரோல் மற்​றும் டீசல் கையிருப்பு உள்​ளது. சென்னை முதல் கன்​னி​யாகுமரி வரை உள்ள 7 ஆயிரம் பெட்​ரோல் பங்க்​கு​களி​லும் விநி​யோகம் சீராக நடை​பெறுகிறது. மக்​கள் தேவைக்கு அதி​க​மாக வாங்​கு​வ​தால் செயற்கை தட்​டுப்​பாடு உரு​வாகும் நிலை ஏற்​படக்கூடும். மேலும், கேன் மற்​றும் பாட்​டில்​களில் பெட்​ரோல் வாங்​கு​வது மிக​வும் ஆபத்​தானது. தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் இப்​போதைக்கு தட்​டுப்​பாடு இல்​லை. தமிழகத்​தில் உள்ள 14 முனை​யங்​களில் 21 நாட்​களுக்​குத் தேவை​யான அளவு எரிபொருள் இருப்பு உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பெட்​ரோல், டீசல் மற்​றும் பிற பெட்​ரோலியப் பொருட்​கள் போது​மான அளவு இருப்​பில் உள்​ளன. மேலும், நாடு முழு​வதும் விநி​யோக நடவடிக்​கைகள் சீராக உள்​ளன. வாடிக்​கை​யாளர்​கள் வதந்​தி​களைப் புறக்​கணித்​து, எரிபொருள் நிலை​யங்​களில் தேவையற்ற கூட்​டத்தை தவிர்க்க வேண்​டும்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்மாவட்டம்

துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணி​ 2027-ல் நிறைவடையும்: தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்

சென்னை துறைமுகம் – மதுர​வாயல் 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் 2027-ம் ஆண்​டில் நிறைவடை​யும் என்று தேசிய நெடுஞ்​சாலை ஆணைய மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் தெரி​வித்​தார்.

சென்னை துறைமுகம் – மதுர​வாயல் இடையே 21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன.தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் கூறிய​தாவது: தொடக்​கத்​தில் ஒற்றை அடுக்​காக திட்​ட​மிடப்​பட்ட இப்​பாலம், மாநில அரசின் கோரிக்​கையை ஏற்​று, 2 அடுக்​காக மாற்​றப்​பட்​டுள்​ளது.

உள்​ளூர் நகரப் போக்​கு​வரத்​துக்​காக முதல் அடுக்​கு, சென்னை துறை​முகத்​துக்கு செல்​லும் கனரக சரக்கு வாக​னங்​களுக்​காக பிரத்​யேக​மாக 2-வது அடுக்கு அமைக்​கப்​படு​கிறது.நகரின் முக்​கிய பகு​தி​களில் வாக​னங்​கள் பாலத்​தில் ஏறவும், இறங்​க​வும் வசதி​யாக 13 சாய்​தளங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. நேப்​பியர் பாலம் பகு​தி​யில் அதிநவீன கேபிள் பாலம் அமைக்​கப்​படு​கிறது.

போக்​கு​வரத்து போலீ​ஸார் அனு​ம​தி​யுடன் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என தின​மும் 11 மணி நேரம் கட்​டு​மானப் பணி​கள் நடந்து வரு​கின்​றன. இதை 16 மணி நேர​மாக அதி​கரிக்க மாநில அரசிடம் அனு​மதி கேட்​டுள்​ளோம். 2027 டிசம்​பருக்​குள் திட்​டம் நிறைவடை​யும்.சென்னை – பெங்​களூரு விரைவுச் சாலை (262 கி.மீ.) திட்​டத்​தில் கர்​நாடகப் பகுதி பணி​கள் முடிந்​து​விட்​டன. தமிழகத்​தில் உள்ள 106 கி.மீ. தொலை​வில் 3 தொகுப்​பு​களின் பணி​கள் முடி​யும் நிலை​யில் உள்​ளன. தமிழகத்​தில் நெடுஞ்​சாலை உள்​கட்​டமைப்பை மேம்​படுத்த, கடந்த 10 ஆண்​டு​களில் தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்​துள்​ளது.

தற்​போது ரூ.40 ஆயிரம் கோடி மதிப்​பிலான பணி​கள் நடை​பெறுகின்​றன. தமிழகத்​தில் 77 இடங்​களில் உள்ள தேசிய நெடுஞ்​சாலை ஆணைய சுங்​கச் சாவடிகள் மூலம் கடந்த நிதி ஆண்​டில் ரூ.4,300 கோடி வசூலானது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஆணை​யத்​தின் சென்னை திட்ட இயக்​குநர் சிவம் சர்மா கூறும்​போது, ‘‘பிரம்​மாண்​ட​மான வார்ப்​புத் தளங்​களில் பாலத்​தின் கான்​கிரீட் பாகங்​கள் முன்​கூட்​டியே முழு​வீச்​சில் தயாரிக்​கப்​படு​கின்​றன. இதனால், மழைக்​காலத்​தி​லும் இடையூறின்றி மேம்​பால கட்​டு​மானப் பணி நடை​பெறும்’’ என்​றார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

சிலிண்டர் தட்டுப்பாடு – அரசு ஆலோசனை

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல், இந்திய எரிசக்தித் துறையில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் கடும் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளது. இந்த விநியோகத் தடையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் ஸ்தம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் நிலவும் கடும் தட்டுப்பாடு காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இதே போன்ற அச்சம் நிலவி வரும் சூழலில், பல முன்னணி உணவகங்களில் ஒரு நாளைக்குத் தேவையான எரிவாயு மட்டுமே கையிருப்பில் உள்ளதாகத் தெரிகிறது. நிலைமை சீரடையாவிட்டால் வணிகத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனினும், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதாக மாநில அரசு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

இந்த நெருக்கடியான நிலையைச் சமாளிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் எரிபொருட்களின் விநியோகம் மற்றும் விற்பனையை முறைப்படுத்தவும், சமமான விநியோகத்தை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதுக்கல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுத்து, பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் எரிபொருள் கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும், பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சிலிண்டர் தட்டுப்பாட்டால் முடங்கியுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருமாறும், தடையற்ற சேவையை வழங்கத் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுமாவட்டம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராவதிலிருந்து சிபிஐ விலக்கு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு விஜய் இன்று ஆஜராவதில் இருந்து சிபிஐ விலக்கு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் விஜயின் பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய் தரப்பில் அனுமதி கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு இன்று விஜய் ஆஜராக சிபிஐ விலக்கு அளித்திருப்பதாகவும், ஆனால், விசாரணையை சென்னைக்கு மாற்ற சிபிஐ மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Read More