Tamilnadu

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

தமிழ்நாடு பட்ஜெட்-முக்கிய அறிவிப்புகள்….

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​தார். வரும் 20ஆம் தேதி 2026-27ஆம் நிதிஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல்* மதிப்பு கூட்டு பொருட்களுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு. * 496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
* விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.175 கோடி செலவில் 3.4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இலவச தென்னங்கன்று வழங்க ரூ.78.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிட விவசாயிகளுக்கு ரூ.62 கோடியில் திட்டங்கள். அரசின் திட்டங்களால் 17,035 ஆதி திராவிட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

* 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.27 கோடியில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் * அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடையும் விதமாக, கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட இருக்கிறது.ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் * பயிர் சேதங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. பயிர் சேத நிவாரணத்தால் 25 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் பன்னீர்செல்வம்

ரூ.500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும்- தங்கம் தென்னரசு தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது-
8 லட்சம் வீடுகள் இலக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். தற்போது வரை 1.71 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 2030 ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள்,கனவரால் கைவிடப்பட்டோர், முதியோர் உதவித் தொகைக்காக ரூ.5,463 கோடி ஒதுக்கீடு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 5,40,511 மாணவர்கள் ரூ.1000 பெறுகிறார்கள் புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளது.

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

1. பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 01.01.2020 முதல் 31.12.2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்கப்பட்டது.

2. அதே போன்று ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

3. அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும், அவர்கள் குடும்பத்தினர் பெறும் வகையில் வங்கிகள் மூலம் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

4. பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ஐந்து முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. உயர்கல்வி உதவியாக பத்து இலட்சம் ரூபாயும், 5. அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பயில முன்பணம் ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்வி பயில முன்பணம் ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

6. அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண முன்பணம் ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

7. அரசுப் பணியாளர்களுக்கான பண்டிகை முன்பணத்தை இருபதாயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை முன்பணத்தை ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

8. ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

9. பெண் அரசு அலுவலர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

10. இவை அனைத்திற்கும் மகுடமாய் அமையும் வகையில், அரசுப் பணியாளர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை’ இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள்.

11. அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன.

12. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 ஒதுக்கீடு! மாணவர்களுக்கு ஜாக்பாட்..மற்றும் பல முக்கிய திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

சர்வதேச தரத்தில் மெரினா கடற்கரை…

மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட ‘ப்ளூ பிளாக்’ (Blue Flag) திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பிப்.22-ம் தேதி இத்திட்டம் திறக்கப்பட உள்ளது. பிப்.17-ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில சிறிய பணிகள் நிலுவையில் உள்ளதால் திறப்பு விழா சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.”குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி அமைக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. ஆரம்பத்தில் 2 விளையாட்டுப் பகுதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், தற்போது அது 4 விளையாட்டுப் பகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே உள்ள கடற்கரைப் பகுதியில், சர்வதேச ‘ப்ளூ பிளாக்’ தரநிலைகளை எட்டும் நோக்கில், சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்த 2-ம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டம்-1ஐ விட, இந்த பகுதியில் மணற்பரப்பு அகலமாகத் தக்கவைக்கப்பட்டு, கடற்கரை காட்சியை ரசிக்கும் வகையிலும், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ள வசதிகளானவை; 60 மூங்கில் இருக்கைகள் மற்றும் 30 மூங்கில் குடைகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 4 குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள், 2 படிப்பகங்கள் (Study zones) மற்றும் 2 செல்பி புள்ளிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக மூங்கில் குப்பைக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான, உள்ளடக்கிய கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிலை அமைப்பதற்கான அடித்தளப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.5,000 …

ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுவதாகவும், அடுத்த 3 மாத உரிமைத் தொகையாக மூவாயிரம் ரூபாயும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு திமுக கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர். இந்நிலையில் ரூ.5,000 முன்பே வரவு வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. அதன்படி மே மாதம் வரை மட்டுமே இந்த ஆட்சிக்கான அதிகாரம் என்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருவதால் முன்கூட்டியே வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த திடீர் நடவடிக்கை துணை முதலமைச்சர் உதயநிதி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேரை தவிர்த்து மற்ற யாரும் அறிந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் உள்பட இரண்டாம் கட்ட அமைச்சர்கள், அரசின் முக்கியத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அறிந்திருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
வங்கிகளின் அலுவல் நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே மகளிரின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், அதற்காக 8 தேசிய வங்கிகளுக்கு முதல் நாளே அலர்ட் கொடுக்கப்பட்டு 750 பேட்ஜ்களாக பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. காலை 6 மணி முதல் 11 மணிக்குள் மகளிரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என மற்றொரு இன்ப அதிர்ச்சியை மகளிருக்கு வாக்குறுதியாக அளித்தார்.
முதலமைச்சரின் அந்த வீடியோவும் யாரும் அறிந்திராத வண்ணம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. பிகாரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொழில்முனைவோருக்கான திட்டங்களை அறிவித்து, மகளிரின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஆனால், மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரத்து 500 ரூபாயை முன்கூட்டியே வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது.வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நிலையில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவும் அதற்கு முதல் நாளான இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதையும் கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பே பணத்தை வரவு வைத்து தனது அரசியல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், நண்பகல் 12 மணியளவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதில் சேர்க்க வேண்டிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதித்து, அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என தெரிகிறது
அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், புதிய திட்டங்கள், மக்கள் நல அறிவிப்புகள் மற்றும் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்பதால் அமைச்சரவைக் கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

அமெரிக்க டாலருக்குச் சவால் விடும் சீனா..

சீனாவின் நாணயமான யுவான் உலகளாவிய கையிருப்பு நாணயமாக மாற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய அமைப்பில் சீனா மேலும் முக்கிய பங்கு வகிக்க விரும்பும் நிலையில், தனது நாணயம் குறித்த இலக்குகளை அவர் இதுவரை இல்லாத அளவில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சீனா ஒரு வலிமையான நாணயத்தை உருவாக்க வேண்டும் என்றும், அது சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் வெளிநாட்டு நாணய சந்தைகளில் பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் கையிருப்பு நாணய அந்தஸ்தை அடைய வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜி ஜின்பிங்கின் கருத்துகள் வெளியான இந்த நேரம், உலக நிதி சந்தைகளில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் காலம் என்று கூறப்படுகிறது. உலக ஒழுங்குகளில் ஏற்படும் மாற்றத்தை சீனா முன்பை விட இப்போது மிகத் தெளிவாக உணர்கிறது என்று Pantheon Macroeconomics நிறுவனத்தின் மூத்த சீனா பொருளாதார நிபுணர் கெல்வின் லாம் தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் யுவானுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உலக ஒழுங்கில் சமீப காலங்களில் ஏற்பட்ட பிளவுகளை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, சீனாவின் மத்திய வங்கியின் ஆளுநர் பான் கோங்ஷெங், ஒரு புதிய உலக நாணய ஒழுங்கு உருவாகும் என தெரிவித்தார். ஷாங்காயில் முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், பல மையங்களைக் கொண்ட சர்வதேச நாணய அமைப்பில் யுவான் மற்ற நாணயங்களுடன் போட்டியிடும் என கூறினார்.

“யுவான் ஒரு உண்மையான உலகளாவிய நாணயமாக மாற வேண்டும் என்பதே பெய்ஜிங்கின் நோக்கம். அது ஒரே இரவில் டாலரை மாற்ற வேண்டிய அவசியமில்லை; ஆனால் பிளவுபட்டுவரும் உலக நிதி ஒழுங்கில், அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மூலோபாயமாக செயல்பட வேண்டும்,” என்று The Asia Group நிறுவனத்தின் சீனா நாட்டுத் தலைவர் ஹான் ஷென் லின் தெரிவித்துள்ளார்.

2022 -ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, யுவான் உலகில் வர்த்தக நிதியளிப்பு நாணயங்களில் இரண்டாவது பெரிய நாணயமாக மாறியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ கையிருப்பு நாணயங்களில் அதன் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது.

IMF தரவுகளின்படி, 2025 -ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, உலக கையிருப்புகளில் அமெரிக்க டாலர் சுமார் 57 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இது 2000 -ஆம் ஆண்டில் 71 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், யூரோ சுமார் 20 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. யுவான் ஆறாவது இடத்தில், வெறும் 1.93 சதவிகித பங்குடன் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் பொருளாதாரத்தில் உள்ள சமநிலையற்ற நிலைகளை சரி செய்ய வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

2016 – 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர்களாக தனுஷ், கார்த்தி, ஆர்யா தேர்வு!

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் திரைப்பட விருதுகள், 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 32 பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2016 – மாநகரம், 2017 – அறம், 2018 – பரியேறும் பெருமாள், 2019 – அசுரன், 2020 – கூழாங்கல், 2021 – ஜெய்பீம், 2022 – கார்கி ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான முதலிடத்தைப் பிடித்துள்ளன.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

அதனடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.இராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசும் வழங்கப்படுகின்றன.

சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மத்திய கைலாஷ் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: பிப்ரவரி முதல் வாரத்தில் புதிய மேம்பாலம் திறப்பு!

சென்னை மாநகரின் மிக முக்கியமான சந்திப்புகளில் ஒன்றான அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அங்கு கட்டப்பட்டு வரும் புதிய ‘L’ வடிவ மேம்பாலம் பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டம், பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
சர்தார் படேல் சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை (OMR) ஆகியவற்றை இணைக்கும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணியில், மத்திய கிர்டர் (Central Girder) அமைப்பதிலும், அணுகுசாலை அமைப்பதிலும் நீடித்த சிக்கல்கள் இருந்தன. இதன் காரணமாக பல மாதங்களாக பணிகள் தாமதமடைந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை தற்போது அந்தத் தடைகளை வெற்றிகரமாகச் சரிசெய்துள்ளது. தற்போது பாலத்தின் தளத்தில் தார் பூசுவதற்கு முந்தைய பணிகளான ‘வெட்-மிக்ஸ்’ (Wet-mix) அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது காய்ந்தவுடன், வலுவான சாலைக்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிக்கப்படும்.

மத்திய கைலாஷ் சந்திப்பானது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11,000 வாகனங்கள் கடந்து செல்லும் மிகப்பரபரப்பான இடமாகும். இதில் குறிப்பாக கிண்டியிலிருந்து ஓ.எம்.ஆர் நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், அவற்றின் பயண நேரத்தைக் குறைக்கும் விதமாகவே இந்த ‘L’ வடிவ பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மின் விளக்குகள் பொருத்துதல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து ஓரளவிற்குச் சீராகும் என்றாலும், கஸ்தூரிபா நகர் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாய் பாலத்தின் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்தார் படேல் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பும் வாகனங்கள், கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்களுடன் இணைந்து சிக்னலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மாற்றுப் பாதை வழங்கப்பட்டால், கிண்டி நோக்கிச் செல்பவர்கள் எவ்விதத் தடையுமின்றி பயணிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தப் பாலம் திறக்கப்படும் பட்சத்தில், அடையாறு, கிண்டி மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகளில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு இது மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது” – பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி …

என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சென்னை அடுத்த மதுராந்தகத்தில் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தற்போது பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது. தமிழ்நாட்டை பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுகவின் முடிவுக்காலத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.
திமுகவுக்கு இரண்டு முறை மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டனர். அவர்கள் இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. ஊழல், குண்டாஸ், குற்றம் ஆகியவற்றின் அரசு இங்கு இருக்கிறது. அதனை வேரடி மண்ணோடு கிள்ளி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் பாஜக, என்.டி.ஏ.வின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் ஜனநாயகம், நம்பகத்தன்மை உள்ளிட்டவை இல்லாத அரசுதான் இருக்கிறது. அரசு இங்கு ஒரே குடும்பத்திற்காக இயங்கிவருகிறது.
வம்சாவழி, ஊழல், பெண்களை வசைபாடுவது, கலாச்சாரத்தை வசைபாடுவது உள்ளிட்ட நான்கு வழிகள்தான் திமுகவில் இருப்பவர்கள் வளர்ச்சி பெற இருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் சுமக்க வேண்டியதாக இருக்கிறது.
நாட்டின் பண்பாட்டை வளம் நிறைத்ததாக மாற்றியது தமிழ்நாடு. வளர்ச்சி அடைந்த பாரதம் என நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு வளரும் வேகத்தில் பாரதம் வளரும்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாடு வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை செய்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக திமுக – காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாடுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப்பகிர்வு வாரியாக மட்டும் 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாடுக்கு வழங்கியிருக்கிறது.
திமுக – காங்கிரஸ் அரசு இரயில்வே பட்ஜெட்டில் அளித்த தொகையைவிட என்.டி.ஏ. அரசு 7 மடங்கு அதிக நிதியை வழங்கிவருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் போன்ற ரயில்களை என்.டி.ஏ. அரசுதான் செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இருந்து வருகிறது.
தமிழ், கலாச்சாரம், வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை எல்லாம் எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு உலக தலைவர்களுக்கு திருக்குறள் நூலை பரிசாக வழங்கியிருக்கிறேன். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். காசியிலே பல பிள்ளைகள் தமிழில் பேசுவது மகிழ்ச்சியை தருகிறது.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதியோடு பணியாற்றிவருகிறோம். சில நாட்களுக்கு முன்பு நமது முருகருக்கு விளக்கு போடுவதில் விவாதம் ஏற்படும்போது, நமது தலைவர்கள் எல்லாம், பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு பாராட்டு. திமுக – காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது. உங்களை அவமானப்படுத்தினர். என்.டி.ஏ. அரசு ஜல்லிக்கட்டுக்கு சட்ட ரீதியாக ஆய்வு செய்து அங்கீகாரம் கொடுத்தது. தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அரசு இருக்க வேண்டும். அந்த அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் அரசாக இருக்க வேண்டும்” என பேசினார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக பேரவையில் இன்று தீர்மானம்…

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கையை 99 சதவீதம் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிவித்தார். போராடும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோமே தவிர, அதிமுகவைப் போன்று எஸ்மா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்றும் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவைப் போல பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களை தாங்கள் ஏமாற்றவில்லை என்றார். இதில் பதில் அளித்த முதலமைச்சர், அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், திமுகவுக்கு ஆதரவான சங்கங்கள்தான் இனிப்பு ஊட்டியதாக ஈபிஎஸ் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும், மிகுந்த அக்கறையோடு கவனிப்பதாகவும் கூறிய முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் முதல்வராக இருந்தபோது, அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து கொச்சைப்படுத்தி பேசியதை நாடு மறந்துவிடவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சத்துணவு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார். முன்னதாக, நேரமில்லா நேரத்தில், கறிக்கோழி விவசாயிகளின் பிரச்னை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி விவாதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தினார். அதற்கு, அதிமுகவின் தீர்மானத்திற்கு பதில் தயாரித்து விட்டு ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், இதனை ஏற்காத அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக பேரவையில், 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 100 நாட்கள் பணிக்காலம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்த திமுக, தற்போதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறிய ஈபிஎஸ், மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளதை தாங்கள் வரவேற்றதாகவும், ஆனால் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தேர்தல் NDA பிரச்சாரம்-மோடி தமிழகம் வருகை…

தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஈபிஎஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
பிரதமரின் வருகையை ஒட்டி செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்து ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஆட்சியர் சினேகா அறிவுறுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இன்று மோடி தலைமையில் பா.ஜ.க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதில் மோடியுடன் எந்தெந்த கட்சிகள் மேடையை பகிர்ந்து கொள்ள உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் கட்சியான தி.மு.க முதல் தற்போது தொடங்கப்பட்டுள்ள த.வெ.க வரை தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இன்று பிரச்சாரம் செய்கிறார். முதலில் திருவனந்தபுரத்திற்கு செல்லும் மோடி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூன்று புதிய ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
தொடர்ந்து, அங்கு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் சென்னை செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான அ.தி.மு.க உட்பட ஆறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்த அணியான டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தலைமையில் டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பியூஷ் கோயல் மற்ற கூட்டணி கட்சிகளான 4 கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.

அதன்படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜகன் மூர்த்தி மற்றும் வாசன் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு ஆலோசனை வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ். குருமூர்த்தியையும், பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசையும் கோயல் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் வாசன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த அவர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது, “இரட்டை இயந்திர வளர்ச்சி” என்ற பா.ஜ.க-வின் பரந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பா.ம.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More