Tamilnadu

அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க…’ பிரதமர் மோடி 

ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க…’ பிரதமர் மோடி அறிவுறுத்தல்.. ஈரான் மீது கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.மேற்கு ஆசியாவில் நிலவி வரும் இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பை உயர்த்த மக்கள் உதவ வேண்டும் என்றும், அந்த வகையில் அடுத்த ஓர் ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிக பணம் செலவிடுவதாக கூறிய பிரதமர் மோடி, மக்கள் அதன் பயன்பாட்டை குறைப்பது நாட்டுக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்றார்.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

இபிஎஸ்ஸுக்கு 13… சி.வி.சண்முகத்துக்கு 37… அதிமுகவில் நடப்பது என்ன? – இரண்டாகப் பிரிகிறதா? 

இபிஎஸ்ஸுக்கு 13… சி.வி.சண்முகத்துக்கு 37… அதிமுகவில் நடப்பது என்ன? – இரண்டாகப் பிரிகிறதா?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகி, அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்து, 47 இடங்களை மட்டுமே வென்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்த நிலையில், இந்த தோல்வி அதிமுகவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டது, சி.வி.சண்முகம் தனியாக ஆலோசனை நடத்தியது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது.எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம் இடையே அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இபிஎஸ் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும், கூட்டணி முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிலும் தனியாக மற்றொரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 37 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.இந்த பரபரப்பு 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, சி.வி.சண்முகம் தலைமையிலான குழுவில் எஸ்.பி.வேலுமணி, நன்னிலம் காமராஜ், ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஜோலார்பேட்டை கே.சி.வீரமணி, பாலக்கோடு கே.பி.அன்பழகன், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், லீமா ரோஸ் மார்ட்டின், அமமுக எம்.எல்.ஏ. மன்னார்குடி காமராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.இது தவிர ஒரு சிலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விட்டும் சி.வி. சண்முகம் அலுவலகத்திற்கு சென்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆர்.பி.உதயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வேளச்சேரி அசோக், கே.பி.கந்தன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட 16 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இ.பி.எஸ். தலைமையிலான கூட்டத்தில், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், கே.சி.கருப்பண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 13 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் தெரிகிறது.இபிஎஸ் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றதாகத் கூறப்படுகிறது. அதிமுகவில் மொத்தம் 82 மாவட்ட செயலாளர்களும், 47 எம்.எல்.ஏக்களும் உள்ள நிலையில், இப்போது யார் யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்துள்ளார்.

Read More
TVKஅரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அரங்கம் அதிர… விசில் பறக்க… விஜய் பதவியேற்பு விழா …

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

திரைகளில் ஒளிபரப்பு

ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்டரல் ரயில் நிலையம் உள்ளிட்ட 23 இடங்களில் அகன்ற எல்இடி டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்பப்பட்டன.

தொண்டர்களுக்கு சல்யூட்!

ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டு அரங்கை சுற்றியுள்ள வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலை உள்ளிட்ட பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள், பொதுமக்கள் `சி.எம். சார்’ என கோஷமிட்டு, விசில் அடிக்க, அவர்களுக்கு சல்யூட் அளித்தவாறு ஜோசப் விஜய் சென்றார்.பதவிப்பிரமாண நிகழ்வின் போது, `சி. ஜோசப் விஜய் எனும் நான்’ எனத் தொடங்கி பொறுப்பேற்றார். அப்போது பதவிப்பிரமாண உறுதிமொழி வாசகங்களை அவர் ஆக்ரோஷமாக வாசித்ததைக் கண்டு, ஆளுநர் அர்லேகர் குறுக்கிட்டு ஆசுவாசப்படுத்தினார்.உறுதிமொழி வாசிப்பின்போது, ஆதவ் அர்ஜுனா தவிர மற்ற அனைவரும் `ஆண்டவன் மீது ஆணையிட்டு’ எனக்கூறியும், ஆதவ் அர்ஜுனா `உளமார’ என்று கூறியும் பதவியேற்றுக் கொண்டனர். ராஜ்மோகன் அமைச்சராக பதவியேற்கும் போது, ஜோசப் விஜய் நோக்கி கையை நீட்டி, `ஆண்டவன் மீது ஆணையிட்டு’ எனக்கூறி பதவியேற்றுக் கொண்டார்.

உறுதிமொழி வாசகங்களை வாசித்தபின், ஆதவ் அர்ஜுனா, கீர்த்தனா ஆகியோர் `தமிழ் வாழ்க’ எனக்கூறினார். உறுதிமொழி வாசிப்பு முடிந்ததும் ஆனந்த், ஆவணத்தில் கையெழுத்திடும்போது, முதல்வரைப் பார்த்து, கையெழுத்திடட்டுமா எனக் கேட்க, முதல்வர் தலையசைப்புடன் கூடிய புன்னகையால் ஒப்புதல் அளித்த பிறகு கையெழுத்திட்டார்.முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் மேடை ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுனா கவனித்து வந்தார். ஜோசப் விஜய்யுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் என்.ஆனந்த், பதவியேற்பு விழா அரங்குக்கு வந்தவுடன், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா தம்பதியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.முதல்வர், அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு முடிந்ததும், ஆளுநருடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது. அப்போது முதல்வர், ஆளுநர் முன்பிருந்த டீப்பாய்களை அகற்ற வேண்டியிருந்தது.

இதற்காக அலுவலர்கள் வந்த நிலையில், முதல்வராகிவிட்டோம் என்றும் பாராமல், அலுவலர்களுடன் முதல்வர் ஜோசப் விஜய்யும் சேர்ந்து தூக்கிச்சென்றார். இதைப் பார்த்த கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

அதன்பின், ஆளுநர் அர்லேகருடன், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்தனர். இதில், முதல்வர் அருகில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் இருந்தார். நிகழ்ச்சி முடிவில் மேடையில் இருந்தவர்கள், அரங்கில் இருந்தவர்கள் என அனைவருடனும் முதல்வர் செல்ஃபி வீடியோ எடுத்தார்.செங்கோட்டையன் பதவியேற்கும்போது, முதல்வர் ஜோசப் விஜய், ராகுல்காந்தி உள்ளிட்ட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் `டிவிகே’ என கோஷம் எழுப்பியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். பதவியேற்ற பின் செங்கோட்டையன், விஜய்யை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார்.பதவியேற்பு விழாவுக்கு வந்த நடிகை த்ரிஷா, முதலில் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்ததுடன், அரங்கத்தினுள் சுற்றிலும் காலரியில் அமர்ந்திருந்த தவெக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது விசில் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது.பதவியேற்ற பின் முதல்வர் விஜய் ஆற்றிய முதல் உரை: மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக் கூட தொடமாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தவறு செய்ய மாட்டான், தவறு செய்ய விடவும் மாட்டான். எனது ஆட்சியில் தவறு செய்யும் எண்ணம் இருந்தால் இப்போதே அழித்துவிடுங்கள் என்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜோசப் விஜய் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் பேசியதாவது: சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்று இருந்த ஒரு சாதாரண உதவி இயக்குநருக்குப் பிள்ளையாகப் பிறந்தவன் நான். எனவே, வறுமை, பசி என்றால் என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.

உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே உங்கள் முன்பு நிற்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கொரு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்தீர்கள். பின்னர், அதையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்தேன்.

இப்போதும் ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று சொல்லி அன்பாக, உறவாக ஏற்றுக் கொண்டீர்கள். இந்த பயணத்தில் நான் சந்தித்த கஷ்டங்கள், அவமானங்களை எனக்காக நீங்களும் அனுபவித்தீர்கள். அவற்றைப் பொருட்படுத்தாமல், என் வலிகளை உங்கள் வலியாகக் கருதி என்னுடன் நின்றீர்கள்.உங்கள் ஆதரவுதான் இன்று.. ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்…’ என்று கூறி முதல்வராகப் பதவியேற்கும் நிலையை நிஜமாக்கியுள்ளது. என் உறவுகளே, நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. உங்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன்தான். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன்.

எது சாத்தியமோ, அதை மட்டுமே சொல்வேன். அப்படியானால் சாத்தியம் இல்லாததை செய்யமாட்டாரா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது, எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது. முக்கியமாக, தமிழக அரசின் தற்போதைய கடன் சுமையைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்துவிட்டு, கஜானாவை சுத்தமாக துடைத்துக் காலி செய்துவிட்டு, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு போயிருக்கின்றனர். அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் இந்த பொறுப்பை நாம் கையில் எடுத்திருக்கிறோம்.

நான் ஏதோ பொடிவைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அப்படி எதுவும் கிடையாது. உள்ளே சென்று பார்த்தால்தான், அரசு இயந்திரத்தின் உண்மை நிலை நமக்கு முழுமையாகத் தெரியும்.

அதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட விரும்புகிறேன். ஒரு வெளிப்படையான அரசாக, அதாவது தமிழக அரசின் தற்போதைய நிலையை வெளிப்படையாக உங்களிடம் விளக்கிவிட்டு, அங்கிருந்து நமது பயணத்தை தொடங்கவே விரும்புகிறேன்
யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால், முகத்தை மறைத்துக்கொண்டோ, உங்களுக்கு தெரியாமல் ரகசியமாகவோ நான் செய்ய மாட்டேன். எனது செயல்பாடுகள் அனைத்தும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே இருக்கும். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கும் நீங்கள், எனக்கு கொஞ்சம் அவகாசமும் கொடுக்க வேண்டும்.

நான் அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால், எனக்கு உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்கும். இது உங்களுடைய ஆட்சி.

இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிக கடுமையாகப் பின்பற்றப்படும். போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இன்றே தொடங்குவேன்.

நம் பிள்ளைகளை அதில் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது அரசின் பொறுப்பு. அதேபோல, சட்டம் – ஒழுங்கு, எல்லோருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்கள், கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களும் என் மக்கள்தானே. நண்பர்கள், எதிரிகள் என்ற பாகுபாடின்றி எட்டு கோடி தமிழ் மக்களையும் என் சொந்தங்களாகவே கருதுகிறேன்.

கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை சீரமைப்பதில்தான் எனது முதன்மையான கவனம் இருக்கும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக்கூட தொடமாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தவறு செய்ய மாட்டான், தவறு செய்ய விடவும் மாட்டான்.

அது யாராக இருந்தாலும் சரி. என்னுடைய அரசில் என் கூடவே இருப்பவர்களாக இருந்தாலும் சரி, யாரையும் விடமாட்டேன். ஒருவேளை, யாருக்காவது அப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்தால், இப்போதே, இந்த நிமிடமே அந்த எண்ணத்தை அழித்துவிடுங்கள். இங்கு ஒரே ஒரு அதிகார மையம்தான். அதுவும் என் தலைமையில் உண்டான அதிகார மையம் மட்டும்தான்.பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கின்ற மக்கள், மீனவர்கள் எல்லோருமே தவெக ஆட்சியில் நன்றாக இருப்போம். சிறுபான்மையினருக்கு தவெக அரசு கூடவே நிற்கும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான முகம்தான் இந்த விஜய்யின் முகம்.

இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்த ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விஜய் மாமாவுடைய குட்டி நண்பா, நண்பீஸ்.. அவர்களால்தான் இது நடந்திருக்கிறது. உங்களுக்காக உங்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டு, அனைத்து நல்ல விஷயங்களையும் இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான்.

நம்பிக்கையோடு இருங்கள். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புத்தம் புதிய நிர்வாக முறையை அமைப்போம். இது ஒரு புதிய தொடக்கம். உண்மையான மதச்சார்பற்ற, சமூக நீதிக்கான ஒரு புதிய சகாப்தம் இப்போது பிறக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நாளை பதவியேற்கும் விஜய்? – அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி… 

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று சந்திக்க நேரம் கேட்டு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 11 இடங்கள் தேவைப்படும் நிலையில் அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று சந்திக்க நேரம் கேட்டு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் ஆட்சி அமைக்க அழைத்தால் அடுத்த 2 வாரங்களில் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதை தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்க்கு விசில் அடித்து, கை தட்டியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்ற விஜய், கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏறத்தாழ 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்க ஆதரவு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்தவும், விஜயுடன் சேர்த்து 21 அமைச்சர்களும் பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் தேர்வு தொடர்பாக பட்டினப்பாக்கம் இல்லத்திலும் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.அதன்படி, தவெக உத்தேச அமைச்சர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியான நிலையில், என்.ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், தமிழன் பார்த்திபன், சரவணன், முகமது பர்வேஸ், விஜய் சரவணன் ஆகியோரும் கல்லாணை, விஜயலட்சுமி, டி.கே. பிரபு, பாலாஜி, சத்யபாமா, ராஜ்மோகன், ஜே.சி.டி.பிரபாகர், வி.எஸ்.பாபு, சம்பத்குமார், மரிய வில்சன், சபரிநாதன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் அமைச்சராவார்கள் எனக் கூறப்படுகிறது.

Read More
Election 2026அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

2026 தேர்தலில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவு நடந்துள்ளது…

வரலாற்றில் முதல்முறை.. தமிழ்நாடு, மேற்குவங்கம் வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் இந்த மாதம் திட்டமிடப்பட்டு, நான்கு மாநிலங்களில் முழுமையாக தேர்தல் முடிவுபெற்றுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று நடந்த ஒரே கட்ட வாக்குப் பதிவில் இதுவரை 85.03 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் 92.25 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருக்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா சுதந்திரம் பெற்று இதுவரை தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல்களில், 2026 தேர்தலில்தான் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கிறது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் முழுமையான வாக்கு சதவிகிதம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை இல்லாத வகையில் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட். சுதந்திரத்திற்குப் பின் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Read More
Election 2026தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பூத் ஸ்லிப் எப்படி டவுன்லோட் செய்வது…..

மிக எளிதாக இணையவழியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் பதிவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்-வாக்குப்பதிவு (ஏப்ரல் 23ம் தேதி) நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு 23ம் தேதி காலை 7 மணிமுதல், மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் எவ்விதக் குழப்பமுமின்றி வாக்களிக்க உதவும் வாக்காளர் தகவல் சீட்டு-ன் (VIS) முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பெறும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது.வாக்காளர் தகவல் சீட்டு என்றால் என்ன? தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டு ஆகும். வாக்குச்சாவடியில் நமது விவரங்களை எளிதாகக் கண்டறிய இது உதவுகிறது.இதில் வாக்காளரின் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC Number) போன்ற தனிப்பட்ட விவரங்களுடன், நாம் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியின் பெயர், எண், முகவரி மற்றும் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ள வரிசை எண் (Serial Number) ஆகிய முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.இதிலுள்ள வரிசை எண்ணை வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் காண்பிப்பதன் மூலம், நமது விவரங்களை அவர்கள் நொடிப்பொழுதில் சரிபார்த்து, வாக்குப்பதிவு அறைக்குள் அனுமதிக்க ஏதுவாக இருக்கும். உதாரணமாக, வாக்குச்சாவடி மையத்தில் பல அறைகள் இருந்தால், நாம் எந்த அறைக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது.வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) என்பது அடையாளச் சான்று அல்ல. எனவே, வாக்களிக்கச் செல்லும்போது இதனுடன் சேர்த்து வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள அரசியல் கட்சி முகவர்களிடம் கேட்டு பெறலாம். மிக எளிதாக இணையவழியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘Search in Electoral Roll’ என்பதைத் தேர்வு செய்யவும். உங்கள் EPIC எண்ணைப் பயன்படுத்தித் தேடினால், உங்கள் விவரங்கள் தோன்றும். அதன் இறுதியில் உள்ள ‘Print Voter Information’ என்பதை அழுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொபைல் செயலி மூலமாகவும் உங்கள் டிஜிட்டல் பூத் ஸ்லிப்பைத் தரவிறக்கம் செய்து, வாக்குச்சாவடியில் அதிகாரிகளிடம் காண்பிக்கலாம்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி 

பெண்களின் சிறகுகளை பறித்த எதிர்க் கட்சிகள்’: மசோதாவை வீழ்த்தியது பெண் சிசுக்கொலைக்கு சமம்: மோடி ஆவேசம்
மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மசோதா தோல்வியடைந்த பிறகு எதிர்க்கட்சிகள் கொண்டாடியது மிகுந்த வேதனை அளித்தது என்று மோடி குறிப்பிட்டார்.
131-வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு லோக்சபாவில் 3-ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காததால் அது தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 எம்பிக்களும், எதிராக 230 எம்பிக்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற பெரும்பான்மைக்கு 352 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், போதிய ஆதரவு இல்லாததால் இது தோல்வியைத் தழுவியது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவும் மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது. மொத்தம் 489 பேர் வாக்களித்த நிலையில், ஆதரவாக 278 வாக்குகளும் எதிராக 211 வாக்குகளும் கிடைத்தன. எனினும், இது அரசியல் அமைப்பு திருத்த மசோதா என்பதால் நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதாவும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.
நாட்டின் பெண்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மோடி, எங்களால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை; அதற்காக நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மகளிர் மசோதா தோல்வியடைந்தபோது காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் மேசைகளைத் தட்டி மகிழ்ச்சியுடன் கைதட்டிக் கொண்டாடினர். இது நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பிற்குப் பின்னால் உள்ள அரசியலை விளக்கிய அவர், பெண்கள் வலிமை பெற்றால், அது வாரிசு அரசியல் நடத்தும் குடும்பக் கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால்தான் பெண்களின் அதிகாரத்தைத் தடுக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உண்மையான முகம் இப்போது தேசத்தின் முன்னால் வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் எப்போதுமே மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்தான் என்றார்.

இந்தியாவின் பின்தங்கிய நிலைக்குக் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டினார். இந்தியா அடைய வேண்டிய வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பை எட்ட முடியாமல் போனதற்குப் பின்னால் இருப்பது காங்கிரஸ் கட்சிதான். நம்முடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள், இன்று நம்மை விட வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டன. எல்லைப் பிரச்னைகள், ராணுவத்தினருக்கான OROP திட்டம் மற்றும் ஓ.பி.சி விவகாரங்கள் என அனைத்தையும் தீர்க்காமல் பல ஆண்டுகளாகத் தொங்கவிட்டதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்றார்.

தொகுதி மறுவரையறை குறித்து காங்கிரஸ் மற்றும் அதன் நண்பர்கள் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறார்கள். ஆங்கிலேயர்களிடம் இருந்து ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் விகிதாச்சார அடிப்படையில் அதிகரிக்கும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இந்த மசோதா நிறைவேறியிருந்தால் அனைத்து மாநிலங்களும் பயனடைந்திருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த மக்களுக்கே துரோகம் இழைத்துவிட்டனர். காங்கிரஸ் ஒரு சீர்திருத்தங்களுக்கு எதிரான கட்சி (Anti-reform party). நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் அனைத்து நல்முயற்சிகளையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். பிராந்தியக் கட்சிகள் வளர்வதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்புவதில்லை. காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், பெண்களுக்குமே எதிரானவர்கள் தான் என்றார்.

21-ம் நூற்றாண்டின் பெண்களுக்குச் சிறகுகளை வழங்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இது எதையும் பறிப்பதற்காக அல்ல, அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதற்காகவே. பெண் சக்தியை எதிர்க்கட்சிகள் மிகச் சாதாரணமாக எடைபோட்டுவிட்டனர். மகளிர் மசோதாவைத் தோற்கடித்ததற்காக மக்கள் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவார்கள் என்று பிரதமர் மோடி எச்சரித்தார். எதிர்க்கட்சிகள் தங்க தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் அவர்கள் ஏமாற்றிவிட்டனர் என்று பிரதமர் தனது உரையில் வேதனையுடன் குறிப்பிட்டார்.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

MR X விமர்சனம்.. ஆர்யா & கெளதம் கார்த்திக் நடிப்பில்…

ஆர்யா நடிப்பில் மனு ஆனந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் மிஸ்டர் எக்ஸ். இதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக உடல்ரீதியாக கடுமையான உழைப்பை கொடுத்திருந்தார் ஆர்யா. இன்று இப்படமானது தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.

ஆங்கில திரைப்படத்திற்கு இணையான முயற்சி hatsoff..

மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் ஓரளவுக்கு ஹைப்பை கூட்டியது. அதுமட்டுமின்றி தண்ணீருக்குள் இருந்தபடி ஆர்யா செய்த சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி ஆச்சரியத்தை உண்டு பண்ணியது .
மஞ்சு வாரியருக்கு இது பெஸ்ட். ஆக்ஷன் சீன்கள் எல்லாம் சூப்பர். சரத்குமார் படத்தில் முக்கியமான கேரக்டர். சிறப்பாக அதனை டெலிவர் செய்திருக்கிறார். அனகா, ரைசா வில்சன், அதுல்யா ஆகியோரும் தங்கள் ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். திபு படத்தை எலிவேட் செய்கிறார். குறிப்பாக அந்த 40 நிமிடங்கள். இயக்குநர் மனு ஆனந்த் ட்விஸ்ட் ஸ்க்ரீன்ப்ளேவில் சர்ப்ரைஸ் செய்கிறார். இது பெரிய வெற்றி”
கெளதம் கார்த்திக்கிற்கு நல்ல வில்லத்தனமான ஆக்க்ஷன் ஹீரோ ஆக நன்றாக பண்ணியுள்ளார்.
சண்டை காட்சிகள், எடிட்டிங், வேகமான திரைக்கதை, எல்லா கேரக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், திப்புவின் இசை இவை எல்லாம் படத்தின் கூடுதல் சிறப்பு அம்சங்கள்
கோடை விடுமுறைக்கு ஜாலியாக குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் – kk

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம்.
தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. இது ஏன் எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எனும் ஆர்வத்தை தூண்டுகிறது டிரெய்லர். நம் மண்ணின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் இந்தக் கதை, ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பன்முக திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் திரைக்க்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி
தயாரிப்பு – T.G.தியாகராஜன்
இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
எழுத்து இயக்கம் – D.D.பாலச்சந்திரன்
ஒளிப்பதிவு – A. M எட்வின் சகாய்
எடிட்டிங்க் – நாகூரான் இராமச்சந்திரன்
ஸ்டண்ட் – தளபதி தினேஷ்
கலை இயக்கம் – அதூரி ஜெய்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு…

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக உள்ளது.

மத்திய கிழக்கு போரால் விநியோகம் பாதிப்பு. விலை உயர்வால் அதிர்ச்சி.

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும்.மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாதத்தின் முதல்நாளான இன்று வணிக சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.இன்று (ஏப்ரல் 1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Read More