Tamilnadu

ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

திருப்போரூர் கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான இடங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென, அறநிலை​யத்​துறை மற்​றும் வரு​வாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூரில் உள்ள கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்​புள்ள 2 ஆயிரம் ஏக்​கர் சொத்​துக்​களில், 550 ஏக்​கருக்​கும் மேற்​பட்ட சொத்​துக்​களை தனி நபர்​கள் ஆக்​கிரமித்​துள்​ளனர்.
எனவே, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை வரு​வாய்​துறை அதி​காரி​கள் மூல​மாக அளவீடு செய்​து, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற அறநிலை​யத் துறை மற்​றும் தமிழக அரசின் வரு​வாய்த் துறை செயலருக்கு உத்​தர​விட வேண்​டும்’ என, கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​க​னவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், 2022 மே மாதத்​துக்​குள் ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென உத்​தர​விட்​டிருந்​தது. ஆனால், உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில், ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற​வில்லை எனக் கூறி, வழக்​கறிஞர் ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.
இந்த வழக்​கு, தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், இ்ந்த அவம​திப்பு வழக்கு கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக நிலு​வை​யில் இருந்து வரு​கிறது. இன்​னும் அறிக்கை தாக்​கல் செய்​யாமல் இருப்​பது ஏன் என கேள்வி எழுப்​பினர்.

நீதிபதிகள் அதிருப்தி: அதற்​கு, அறநிலை​யத் துறை தரப்​பி்ல் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​. அருண் நடராஜன், கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான 125 ஏக்​கர் நிலத்தை 233 பேர் ஆக்​கிரமித்து இருப்​பது ஆய்​வில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவர்​களை அந்த நிலத்​தில் இருந்து சட்ட ரீதி​யாக அப்​புறப்​படுத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.
சிலர் வாடகை செலுத்த முன் வந்​துள்​ளனர். எனவே, ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய 3 வாரம் அவகாசம் வழங்க வேண்​டும் என, கோரி​னார்.

இதையடுத்து நீதிப​தி​கள், அவம​திப்பு வழக்கு நிலு​வை​யில் இருக்​கும் போது, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை அபகரித்து ஆண்​டுக்​கணக்​கில் அனுப​வித்து வரும் ஆக்​கிரமிப்​பாளர்​களை எப்​படி வரன்​முறைப்​படுத்த முடி​யும் என அதிருப்தி தெரி​வித்​தனர்.

பின்​னர், இந்த வழக்​கில் ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறநிலை​யத் துறைக்​கும், வரு​வாய் துறை​யினருக்​கும் கெடு வி​தித்​து வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​தனர்​.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஜன.23 மோடி தமிழகம் வருகை

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையை ஒதுக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், மோடி சாலை பயணத்தை தவிர்த்து முற்றிலும் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே பயணிக்க உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 1:15 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்படும் மோடி மதியம் 2:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பழைய முனையத்தை வந்தடைவார்.
பின்னர் மதியம் 2.25 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டரில் ஏறி பிற்பகல் 3 மணிக்கு நேரடியாக மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார். இந்த பொதுக் கூட்டம் மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டு உரையற்றுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி மாலை 4:30 மணிக்கு மதுராந்தகத்தில் இருந்து அதே ஹலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் திரும்புவார். அங்கிருந்து மாலை 5:05 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்வார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (SPG) குழு ஒன்று சென்னை வந்தது. நேற்று (ஜன.20) காலை, பழைய சென்னை விமான நிலைய முனையத்தில் சிறப்பு குழு பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை நடத்தியது.
பிரதமரின் சிறப்பு விமானங்களுக்கான பார்க்கிங் பகுதி, நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் மண்டலம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான பணியமர்த்தல் திட்டம் ஆகியவற்றை சிறப்பு பாதுகாப்பு குழு விரிவாக ஆய்வு செய்தது. 20-ஆம் தேதி முதல் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் வருகை வரை நான்கு நாட்களுக்கு பழைய சென்னை விமான நிலையத்தை விரிவான பாதுகாப்பின் கீழ் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஆய்வைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் விமான நிலையம் தரையிறங்கும் பகுதியை பாதுகாப்பு குழு ஆய்வு செய்வதற்காக மதுராந்தகத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை – ஆளுனர் உரையுடன் இன்று தொடக்கம்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், வழக்கம்போல் ஆளுநரின் உரையுடன் ஆரம்பமாகிறது.
மரபுப்படி, ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, அதன் தமிழ உரையை சபாநாயகர் வாசிப்பார். இந்தத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆலோசனைக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த வகையில், தற்போது ராஜ்பவன் (லோக் பவன்) மற்றும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், இந்த ஆண்டு ஆளுநரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமான சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கே.பொன்னுசாமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரு நாள் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தொடர் சில முக்கிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறுவதால் மிகுந்த கவனம் பெறுகிறது:

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் 4-வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் கடந்த 16-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நமது மண்ணின் சிந்தனைகளும், எழுத்துகளும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இலக்கியத்துக்கு எல்லைகள் கிடையாது. திருவள்ளுவரின் அறமும், இளங்கோ அடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும், பாரதிதாசனின் கருத்துகளும் உலகமெல்லாம் ஒலிக்க வேண்டும்.
அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு மிகச் சிறந்த மாநிலம் தமிழகம். கீழடி முதல்பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகள் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது புரியும். உலக நாடுகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வாருங்கள்.மனிதநேயம், சமூகநீதி பேசும் திராவிடக் கருத்தியல் இலக்கியங்களை உங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய கலாச்சாரத் துறையின் தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. கலை இலக்கிய விருதுகளில்கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்று பல்வேறு எழுத்தாளர்கள், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இது காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.
அதன்படி, குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசா, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கப்படும். விருதுடன், தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

படைப்புகளின் இலக்கியத் தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், சென்னை மேயர் பிரியா,தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி, கவிஞர்கள் வைரமுத்து, மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் இமயம், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி, எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் மொழிபெயர்ப்பு மானியம் மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 44 நூல்கள், பொது நூலகத் துறையின் 40 நூல்கள் என மொத்தம் 84 நூல்களை புத்தகத் திருவிழாவில் முதல்வர் ஸ்டாலின்வெளியிட்டார். உலகத்தரம் வாய்ந்த படைப்புகள் எளியதமிழில் கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என தமிழ்நாடு மொழிபெயர்ப்பு முகமை மூலம் பல கோடி ரூபாயை ஒதுக்கி, கடந்த 3 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” – சர்ச்சைகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முற்றுப்புள்ளி!

வந்தே மாதரம் மற்றும் மா துஜே சலாம் பாடலை பாட மறுத்ததாக எழுந்த சர்ச்சைக்கு தனது பாணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது விளக்கத்தைத் தந்துள்ளார்.
தனது சமீபத்திய பேட்டியில் இதுபற்றி பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை எப்போதும் ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், கௌரவிப்பதற்கான வழியாகத்தான் இருந்துள்ளதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்
பிரதமரின் முன்னிலையில் வேவ் உச்சி மாநாட்டில் பங்கேற்றது முதல், இளம் நாகா இசைக்கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் குழுவை உருவாக்கியது வரை பன்முகத்தன்மையுடன் பணியாற்றியதை எடுத்துக்கூறியுள்ளார். படைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்விளையாட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்…

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை முதல் நாளான நேற்று (ஜன.15), அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் பாலமேடு ஜல்லிக்கட்டு ஆரம்பமானது. போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை தொடர்ந்து முதல் சுற்று தொடங்கியது. முதல் சுற்றில் 100 காளைகளும், 50 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்களின் விவரத்தை அறிய களத்தில் டிஜிட்டல் பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சுற்றுகளாக பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வெவ்வேறு வண்ணத்திலான சீருடை (ஜெர்சி) அணிந்து பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே போட்டியில் பங்கேற்க காளைகளும், வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் விதிமுறைகளை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் பலர் பாலமேட்டில் முகாமிட்டுள்ளனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. களத்தில் காயமடையும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார்.. என்.டி.ஏ. கூட்டணியில் புதிய கட்சிகள்!”

மதுரையில், என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சார மாநாடு நடக்க இருப்பதாகவும், அதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுவார் என்றும் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம. ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சார மாநாடுக்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து ராம. ஸ்ரீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராம. ஸ்ரீநிவாசன் பிரதமர் மதுரை வருவதை உறுதி செய்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “மதுரையில் என்.டி.ஏ. கூட்டணியின் பரப்புரை தொடங்க இருக்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால், பொதுவாக பரப்புரைக் கூட்டங்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், மதுரையும், தமிழ்நாடும் அவர்கள் இருவருக்கும் தனித்துவமான இடம் என்பதால் இருவரும் ஒன்றாக வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பரப்புரையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும், அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. இதுபோக, புதிதாக என்.டி.ஏ. கூட்டணியில் இணைவோரும் பங்கேற்பார்கள்.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி புறப்பட்ட விஜய்-கரூர் சம்பவம் 

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக த.வெ.க தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை சுமார் 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இவருடன் த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் செல்வதாக கூறப்படுகிறது.

விஜய் டெல்லி வருவதையொட்டி அவருடைய ரசிகர்களும், த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டனர். இதனால் சிபிஐ அலுவலகம் முன் மற்றும் விஜய் வரு பாதையில் பெரும் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லி போலீசாரால் செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களிடம் டெல்லியில் சி.பி.ஐ. 3 நாள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோல விஜய்யிடமும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மக்களின் எதிர்கால கனவுகள், தேவைகளை அறிய ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் நலத் திட்​டங்​கள் குறித்த மக்​களின் கருத்​துகள், அவர்​களது எதிர்​கால கனவு​கள், தேவை​கள் குறித்து அறிந்​து​ கொள்​ளும் ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

தமிழக அரசால் கடந்த 5 ஆண்​டு​களில் அமல்​படுத்​தப்​பட்ட பல்​வேறு நலத் திட்​டங்​களில் பயனடைந்​தவர்​களின் தரவு​கள் மற்​றும் விவரங்​களை உறு​திப்​படுத்​த​வும், அந்த திட்​டங்​களின் தற்​போதைய செயல்​பாட்டு நிலை குறித்து மக்​களின் கருத்தை அறிய​வும், மக்​களின் எதிர்​கால கனவு​கள், தேவை​களைக் கண்​டறிய​வும் அவர்​களது வசிப்​பிடங்களுக்கே சென்று அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்​லுங்க’ என்ற புதிய திட்​டத்​துக்கு முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது.
ஏற்​கெனவே அறி​வித்​த​படி, திரு​வள்​ளூர் மாவட்​டம் செங்​குன்​றம் அடுத்த பாடியநல்​லூரில் நேற்று காலை நடை​பெற்ற விழா​வில், ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் உள்​ளிட்ட மாவட்​டங்​களை சேர்ந்த பெண்​கள் சிலர் நேரிலும், காணொலி வாயி​லாக​வும் பங்​கேற்​று, தங்​களுக்கு பலனளித்த அரசுத் திட்​டங்​கள் குறித்து பேசி னர். அப்போது, வீட்​டுமனை பட்டா, மினி பேருந்து வசதி, உயர்மட்ட பாலம் அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். பட்டியலின, பழங்குடி​யின மக்​களைப் போல, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட, பிற்​படுத்​தப்​பட்ட மக்​களுக்​கும் மானி​யத்​துடன் வங்​கிக் கடன் வழங்க வேண்​டும் என்​றும் கோரினர்.

இந்த கனவு​கள் நிறைவேற நடவடிக்கை எடுப்​ப​தாக முதல்​வர் உறு​தி​யளித்​தார். தொடர்ந்​து, அ​வர் பேசி​ய​தாவது: 2021 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு முன்​பு, திருச்​சி​யில் நடந்த திமுக மாநாட்​டில், வளரும் வாய்ப்பு​கள் – வளமான தமிழகம் என்​பது உள்​ளிட்ட 7 வாக்​குறு​தி​களை அளித்​தேன். அதையெல்​லாம், தற்​போது நிறைவேற்றி வருகிறோம். பொருளா​தா​ரத்தை உயர்த்​து​வ​தாக கூறினேன். இன்று தமிழகம் 11.19 சதவீத வளர்ச்​சி​யுடன் நாட்​டிலேயே சிறந்த மாநில​மாக உள்​ளது.

பட்​டியலினத்​தவர், பிற்​படுத்​தப்​பட்​டோர், சிறு​பான்​மை​யினர் என அனை​வருக்​கும் பார்த்​துப் பார்த்து பல திட்​டங்​களை திமுக​வின் இந்த சமூகநீதி அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

தமிழகத்​துக்கு எதி​ராக மட்​டுமே செயல்​படும் பாஜக தொடர்ந்து மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்து வரு​கிறது. தமிழகத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் பால​மாக இருக்க வேண்​டிய ஆளுநர், சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றும் சட்​டங்​களுக்கு முட்​டுக்​கட்டை போடு​வதையே முதல் வேலை​யாக வைத்​துள்​ளார்.

இதையெல்​லாம் மீறி, மக்​கள் எங்​களு​டன் இருப்​ப​தால், 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் அளித்த 505 வாக்​குறு​தி​களில் 404 வாக்​குறு​தி​களை நிறைவேற்றி உள்​ளோம்.

மக்​களின் தேவையை உணர்ந்து திட்​டங்​களை செயல்​படுத்தி வரும் அரசிடம் மக்​கள் தங்​களது கனவு​கள், தேவை​களை சொல்ல வேண்​டும் என்​ப​தற்​காக உரு​வாக்​கப்​பட்டது தான், ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டம். இன்று முதல் 30 நாட்​களுக்​குள் தமிழகத்​தில் உள்ள அனைத்து குடும்​பங்​களை​யும் அரசின் சார்​பில் தன்​னார்​வலர்​கள் சந்​திப்​பார்​கள். அவர்​களிடம் உங்​களின் கனவு​களை சொல்​லுங்​கள். அதை அவர்​கள் டிஜிட்​டல் முறை​யில் பதிவு செய்​து​கொள்​வார்​கள். அதை ஆய்வு செய்​து, தமிழகத்​துக்​கான ஒரு மாபெரும் கனவுத் திட்​டத்தை அறிவிக்​கப் போகிறேன். 2030-ம் ஆண்​டுக்​கான தொலைநோக்​குப் பார்வை கொண்​ட​தாக அந்த திட்​டம் இருக்​கும்.

இந்த கனவு​களை எல்​லாம் நான் நிறைவேற்​றிக் காட்​டும்​போது, கிராமப்​புற, நகர்ப்​புற உள்​ கட்​டமைப்​பு​கள், மொழி, பண்​பாட்டு வெற்​றிகள், கல்​வி, திறன் மேம்​பாடு, சமூக வளர்ச்​சி, விவசா​யம், மீன்​பிடித் தொழில், வேலை​வாய்ப்​பு, தொழிற்​சாலைகள் ஆகிய 7 துறை​களில் தன்​னிறைவு பெற்ற மாநில​மாக தமிழகம் வளர்ந்​திருக்​கும்.

‘‘மக்​களிடம் செல். அவர்​களோடு வாழ். அவர்​களை நேசி. அவர்​களிடம் இருந்து கற்​றுக்​கொள். அவர்​களுக்​குத் தெரிந்​த​தில் இருந்து தொடங்​கு. அவர்​களிடம் இருப்​ப​தில் இருந்து கட்​டு​மானம் செய். பணி முடிந்த பிறகு அவர்​களுக்கு திருப்​தியை ஏற்​படுத்​தி​விட்​டுத் திரும்பி வா’’ என்றார் முன்​னாள் முதல்​வர் அண்​ணா. அவர் சொன்​னதை எல்​லாம், என் இதயத்​தில் வைத்து செயல்​படக் கூடிய​வன் நான்.

அதனால்​தான், தமிழகத்​தில் ஒரு கட்​சி​யின் ஆட்​சி​யாக இல்​லாமல், ஒரு இனத்​தின் ஆட்​சி​யாக, திரா​விட மாடல் ஆட்​சியை நடத்​திக் கொண்​டிருக்​கிறோம்.

ஆட்சி என்​பது முதல்​வ​ரான எனது கனவு​களை மட்​டுமல்ல, மக்​கள் எல்​லோருடைய கனவு​களை​யும் நிறைவேற்​று​வதற்​கான கரு​வி. மக்​களின் கனவு​கள் நிறைவேறி​னால், தமிழகம் முன்​னேறும். வளர்ச்சி அடை​யும்.

‘சுயமரி​யாதை, சமத்​து​வம், பகுத்​தறிவு மிக்​க​தாக தமிழ்ச் சமூகம் தலைநிமிர வேண்​டும். சமூகநீதி நிலைபெற வேண்​டும். ஒடுக்​கப்​பட்​டோரின் குரல்​கள் கேட்​கப்பட வேண்​டும். எல்​லோருக்​கு​மான ஆட்சி அமைய வேண்டும்’ என்று தந்தை பெரி​யார், முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி ஆகியோர் கனவு கண்டனர். அதனால்​தான் இன்று தமிழகம் எந்த ஆதிக்​கத்​துக்​கும் தலைகுனி​யாமல், வெல்​வோம் ஒன்​றாக என்​று, மண், மொழி, மானம் காக்க நிமிர்ந்து நிற்​கிறது.

இப்​போது நாம் அடுத்​தகட்ட கனவை காண வேண்​டிய நேரம். மக்​களின் கனவு​களை, கோரிக்​கைகளை திட்​டங்​களாக உரு​வாக்​கி, மக்​கள் எண்​ணங்​களுக்கு உரு​வம் கொடுப்​பேன். தமிழகத்தை தலைசிறந்த மாநில​மாக உயர்த்​து​வேன். இது​தான் முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தரக்​கூடிய வாக்​குறு​தி. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இந்த நிகழ்​வில், அமைச்​சர் நாசர், எம்​.பி.க்​கள், மாதவரம் எஸ்​.சுதர்​சனம் உள்ளிட்ட எம்​எல்​ஏக்​கள்​, தலை​மைச்​ செயலர்​ முரு​கானந்​தம்​, வரு​வாய்த்​ துறை செயலர்​ அமு​தா, திரு​வள்​ளூர்​ மாவட்​ட ஆட்​சி​யர்​ பிர​தாப்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

மக்களின் எதிர்கால கனவுகள், தேவைகளை அறிய ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்த கனவு​கள் நிறைவேற நடவடிக்கை எடுப்​ப​தாக முதல்​வர் உறு​தி​யளித்​தார். தொடர்ந்​து, அ​வர் பேசி​ய​தாவது: 2021 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு முன்​பு, திருச்​சி​யில் நடந்த திமுக மாநாட்​டில், வளரும் வாய்ப்பு​கள் – வளமான தமிழகம் என்​பது உள்​ளிட்ட 7 வாக்​குறு​தி​களை அளித்​தேன். அதையெல்​லாம், தற்​போது நிறைவேற்றி வருகிறோம். பொருளா​தா​ரத்தை உயர்த்​து​வ​தாக கூறினேன். இன்று தமிழகம் 11.19 சதவீத வளர்ச்​சி​யுடன் நாட்​டிலேயே சிறந்த மாநில​மாக உள்​ளது.

பட்​டியலினத்​தவர், பிற்​படுத்​தப்​பட்​டோர், சிறு​பான்​மை​யினர் என அனை​வருக்​கும் பார்த்​துப் பார்த்து பல திட்​டங்​களை திமுக​வின் இந்த சமூகநீதி அரசு செயல்​படுத்தி வரு​கிறது.
தமிழகத்​துக்கு எதி​ராக மட்​டுமே செயல்​படும் பாஜக தொடர்ந்து மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்து வரு​கிறது. தமிழகத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் பால​மாக இருக்க வேண்​டிய ஆளுநர், சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றும் சட்​டங்​களுக்கு முட்​டுக்​கட்டை போடு​வதையே முதல் வேலை​யாக வைத்​துள்​ளார்.

இதையெல்​லாம் மீறி, மக்​கள் எங்​களு​டன் இருப்​ப​தால், 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் அளித்த 505 வாக்​குறு​தி​களில் 404 வாக்​குறு​தி​களை நிறைவேற்றி உள்​ளோம்.
மக்​களின் தேவையை உணர்ந்து திட்​டங்​களை செயல்​படுத்தி வரும் அரசிடம் மக்​கள் தங்​களது கனவு​கள், தேவை​களை சொல்ல வேண்​டும் என்​ப​தற்​காக உரு​வாக்​கப்​பட்டது தான், ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டம். இன்று முதல் 30 நாட்​களுக்​குள் தமிழகத்​தில் உள்ள அனைத்து குடும்​பங்​களை​யும் அரசின் சார்​பில் தன்​னார்​வலர்​கள் சந்​திப்​பார்​கள். அவர்​களிடம் உங்​களின் கனவு​களை சொல்​லுங்​கள். அதை அவர்​கள் டிஜிட்​டல் முறை​யில் பதிவு செய்​து​கொள்​வார்​கள். அதை ஆய்வு செய்​து, தமிழகத்​துக்​கான ஒரு மாபெரும் கனவுத் திட்​டத்தை அறிவிக்​கப் போகிறேன். 2030-ம் ஆண்​டுக்​கான தொலைநோக்​குப் பார்வை கொண்​ட​தாக அந்த திட்​டம் இருக்​கும்.

இந்த கனவு​களை எல்​லாம் நான் நிறைவேற்​றிக் காட்​டும்​போது, கிராமப்​புற, நகர்ப்​புற உள்​ கட்​டமைப்​பு​கள், மொழி, பண்​பாட்டு வெற்​றிகள், கல்​வி, திறன் மேம்​பாடு, சமூக வளர்ச்​சி, விவசா​யம், மீன்​பிடித் தொழில், வேலை​வாய்ப்​பு, தொழிற்​சாலைகள் ஆகிய 7 துறை​களில் தன்​னிறைவு பெற்ற மாநில​மாக தமிழகம் வளர்ந்​திருக்​கும்.
‘‘மக்​களிடம் செல். அவர்​களோடு வாழ். அவர்​களை நேசி. அவர்​களிடம் இருந்து கற்​றுக்​கொள். அவர்​களுக்​குத் தெரிந்​த​தில் இருந்து தொடங்​கு. அவர்​களிடம் இருப்​ப​தில் இருந்து கட்​டு​மானம் செய். பணி முடிந்த பிறகு அவர்​களுக்கு திருப்​தியை ஏற்​படுத்​தி​விட்​டுத் திரும்பி வா’’ என்றார் முன்​னாள் முதல்​வர் அண்​ணா. அவர் சொன்​னதை எல்​லாம், என் இதயத்​தில் வைத்து செயல்​படக் கூடிய​வன் நான்.

அதனால்​தான், தமிழகத்​தில் ஒரு கட்​சி​யின் ஆட்​சி​யாக இல்​லாமல், ஒரு இனத்​தின் ஆட்​சி​யாக, திரா​விட மாடல் ஆட்​சியை நடத்​திக் கொண்​டிருக்​கிறோம்.

ஆட்சி என்​பது முதல்​வ​ரான எனது கனவு​களை மட்​டுமல்ல, மக்​கள் எல்​லோருடைய கனவு​களை​யும் நிறைவேற்​று​வதற்​கான கரு​வி. மக்​களின் கனவு​கள் நிறைவேறி​னால், தமிழகம் முன்​னேறும். வளர்ச்சி அடை​யும்.

‘சுயமரி​யாதை, சமத்​து​வம், பகுத்​தறிவு மிக்​க​தாக தமிழ்ச் சமூகம் தலைநிமிர வேண்​டும். சமூகநீதி நிலைபெற வேண்​டும். ஒடுக்​கப்​பட்​டோரின் குரல்​கள் கேட்​கப்பட வேண்​டும். எல்​லோருக்​கு​மான ஆட்சி அமைய வேண்டும்’ என்று தந்தை பெரி​யார், முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி ஆகியோர் கனவு கண்டனர். அதனால்​தான் இன்று தமிழகம் எந்த ஆதிக்​கத்​துக்​கும் தலைகுனி​யாமல், வெல்​வோம் ஒன்​றாக என்​று, மண், மொழி, மானம் காக்க நிமிர்ந்து நிற்​கிறது.

இப்​போது நாம் அடுத்​தகட்ட கனவை காண வேண்​டிய நேரம். மக்​களின் கனவு​களை, கோரிக்​கைகளை திட்​டங்​களாக உரு​வாக்​கி, மக்​கள் எண்​ணங்​களுக்கு உரு​வம் கொடுப்​பேன். தமிழகத்தை தலைசிறந்த மாநில​மாக உயர்த்​து​வேன். இது​தான் முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தரக்​கூடிய வாக்​குறு​தி. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இந்த நிகழ்​வில், அமைச்​சர் நாசர், எம்​.பி.க்​கள், மாதவரம் எஸ்​.சுதர்​சனம் உள்ளிட்ட எம்​எல்​ஏக்​கள்​, தலை​மைச்​ செயலர்​ முரு​கானந்​தம்​, வரு​வாய்த்​ துறை செயலர்​ அமு​தா, திரு​வள்​ளூர்​ மாவட்​ட ஆட்​சி​யர்​ பிர​தாப்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணிலும் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு …

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்தது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் கோயில் செயல் அலுவலர், மதுரை ஆட்சியர், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றும் வசதியுடன் கூடிய கல் தூண், தமிழில் ‘தீபத்தூண்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த தூண் அமைந்துள்ள இடம், உரிமையியல் நீதிமன்றத்தால் கோயிலின் சொத்து என அறிவிக்கப்பட்ட மலையின் ஒரு பகுதியில் உள்ளது. தற்போது வரை அந்த இடத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோரவில்லை.
இந்த வழக்கு விசாரணையின் போதுதான் முதல்முறையாக வக்பு வாரியம் சார்பில், விளக்குத் தூண் தர்காவுக்குச் சொந்தமானது என்று தீய உள்நோக்கத்துடன் கூடிய வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டு ரிட் மனுவில் நீதிமன்றம் தர்கா சொத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவுக்கு அப்பால் என்ற கட்டுப்பாடுடன், கோயிலுக்குச் சொந்தமான மலையில் வேறு எந்தப் பகுதியிலும் தீபம் ஏற்றுவதற்கான இடத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியது. அந்த வழிகாட்டுதலின் நோக்கம், பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். தீபம் ஏற்றுவதற்கான மாற்று அல்லது கூடுதல் இடத்தை தேர்வு செய்யும் போது, தர்கா சொத்தின் பாதுகாப்பு மட்டுமே கட்டாய நிபந்தனையாகும்.

உகந்த இடம்: இங்கு ‘தீபத்தூண்’ என்று அழைக்கப்படும் கல் தூண், தர்கா அமைந்துள்ள உச்சியை விடத் தாழ்வான ஒரு பாறை உச்சியில் இருப்பதால், அது தீபம் ஏற்றுவதற்கு உகந்த இடமாகும். கார்த்திகை தீபம் மற்றும் பிறபண்டிகைகளின் போது உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். மலை அடிவாரத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் அதைப் பார்த்து வழிபடுவர். ஒளி என்பது சிவபெருமானின் உருவகம் என திருமூலர் கூறியுள்ளார். உயரமான இடத்தில் விளக்கேற்றும் வழக்கம் இருக்கும் போது, கோயில் சொத்தின் எல்லைக்குள் ஒரு இடம் கிடைக்கும் போது, அது ஒழுக்கம் மற்றும் பொதுக் கொள்கைக்கு விரோதமாக இல்லாத போது, பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோயில் நிர்வாகம் மறுக்க எந்தக் காரணமும் இல்லை.
விளக்கேற்றுவதற்காக கோயிலைச் சேர்ந்த சிலரை மட்டும் தூண் பகுதிக்கு அனுமதித்து, பக்தர்களை மலையடிவாரத்தில் நின்று வழிபட செய்வது ஒன்றும் சமாளிக்க முடியாத செயல் அல்ல. இந்தக் கூட்டத்தால் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும், கூட்ட நெரிசல் ஏற்படும், சமூகங்களிடையே நல்லிணக்கமின்மை ஏற்படும் என்பது போல சித்தரிப்பது, சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதா கவோ அல்லது சமூகங் களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள தயக்கத்தையோ காட்டுகிறது.

2 சமூகங்கள்: இதை 2 சமூகங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் களைவதற்கு, மாநில அரசு வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அமைதியான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் இரு சமூகங்கள் இடையிலான இடைவெளியைக் குறைத்திருக்க முடியும். துரதிருஷ்டவசமாக இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளன. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை, அந்தந்த சமூகங்களின் விழாக்களின் போது தேவைக்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி, செயல்படுத்துவதன் மூலம் மோதல் இல்லாமல் அமைதி மட்டுமே நிலவும் என நம்புகிறோம். எனவே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். மலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க பொருத்தமான, அவசியமான நிபந்தனைகளை மத்திய தொல்லியல் துறை வகுக்க வேண்டும்.
தமிழ் மாதமான கார்த்திகையில், வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றச் செல்லும் கோயில் தரப்பு குழுவுடன் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தீபம் ஏற்றும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அமைதி கெடும் என்பது அபத்தமானது: நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது நடைமுறையில் இல்லாத வழக்கம் என்று அரசும், கோயில் நிர்வாகமும் கூறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் விளக்கேற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அரசு அச்சப்படுவது அபத்தமானது. அரசு தூண்டிவிட்டால் மட்டுமே குழப்பம் நிகழக் கூடும். எந்த அரசும், தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவுக்கு தரம் தாழக் கூடாது.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றினால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக் கூடும் என்று மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்திய அச்சம், அவர்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனையே தவிர வேறில்லை. ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்துக்கு எதிராக சந்தேகம் கொள்ள வைக்கவே இது செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Read More