Author: Namadhu Arasu

சினிமாதமிழ்நாடு

முத்துவேல் பாண்டியன் வேட்டை ஆரம்பம்.. மரண மாஸ் போஸ்டருடன் வெளியான ‘ஜெயிலர் 2’ அப்டேட்!

ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ஷுட்டிங் துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது ‘ஜெயிலர்’. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து சமீபத்தில் மிரட்டலான அறிமுக வீடியோ வெளியாகி வேறலெவல் வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ குறித்தான வேறலெவல் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ வெளியாகி வேறலெவல் வரவேற்பினை பெற்றது. ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் என பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் மற்றும் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர்.
ரஜினியின் மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான ‘ஜெயிலர்’ உலக அளவில் பெரும் வரவேற்பினை பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகம் குறித்து கடந்த பொங்கல் தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நெல்சன் திலீப்குமாரின் வித்தியாசமான மேக்கிங்கில், ரஜினியின் மாஸ் சீன்களுடன் மிரட்டலான ‘ஜெயிலர் 2’ ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘முத்துவேல் பாண்டியன் வேட்டை ஆரம்பம் என குறிப்பிட்டு, படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ரஜினி தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் ‘கூலி’ மீது உச்சக்கட்ட்ட்ட எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டை சீண்டும் மத்திய அரசு – சூடான முதல்வர் ஸ்டாலின்: நிதியை கொடுக்க முடியுமா, முடியாதா?

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்று கையெழுத்திடாததால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுத்து வருகிறது. இதை கண்டித்து திமுக எம்பிக்கள் இன்று மக்களவையில் பேசிய போது கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக எம்பிக்களை தரக்குறைவாக விமர்சித்தார்.

அதுமட்டுமல்லாமல் பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் சூப்பர் முதல்வர் ஒருவரது பேச்சைக் கேட்டு கடைசி நேரத்தில் யூ டர்ன் அடித்ததாக கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதிய இரு பக்க கடிதத்தையும் முதல்வர் தற்போது பகிர்ந்துள்ளார்.
மக்களவையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் எனப் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தான் பேசியதை திரும்பப் பெற்றார்.

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டு கல்விக்காக வழங்க 2152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறித்தி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிக காட்டமாக பேசினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்வந்ததாகவும் கடைசி நேரத்தில் சூப்பர் முதல்வர் ஒருவரின் பேச்சைக் கேட்டு யூ டர்ன் அடித்து விட்டதாகவும் கூறினார். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை கனிமொழி விளக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பிக்களை ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என்றும், நாகரீகமற்றவர்கள் என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார். இதனால் கோபமடைந்த திமுக எம்பிக்கள் மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து கூச்சல் இட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடிய போது பேசிய திமுக எம்.பி கனிமொழி, “தமிழர்கள் அநாகரீகமானவர்கள் என்ற கல்வி அமைச்சரின் பேச்சு வேதனை அளிக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை விடுவிப்பது தொடர்பாக தான் கல்வி அமைச்சரை தமிழக எம்பிக்கள் உடன் சந்தித்தேன். மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. தமிழ்நாடு நிச்சயம் அதை ஏற்காது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் அதை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம்.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று பிரதமர், கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார். மத்திய அரசு தர வேண்டிய நிதியை தர வேண்டும் என்று முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். எஸ்எஸ்ஏ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Read More
இந்தியாஉலகம்சினிமாதமிழ்நாடு

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை…

சென்னை: இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார்.

இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், ஆங்​கிலம் உட்பட பல்​வேறு மொழிகளில் 1,000-க்​கும் மேற்​பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்​ளார். சிம்​பொனி இசை அமைக்க வேண்​டும் என்பது அவரது நீண்​ட​கால கனவாக இருந்​தது. ஒரே நேரத்​தில் பல்​வேறு இசைக்​கருவி​களை ஒன்​றிணைத்து உணர்ச்சி ததும்ப தரும் இசை​தான் சிம்​பொனி. அதன் தொடக்​க​மாக கடந்த 1986-ல் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை ஆல்​பத்தை அவர் உரு​வாக்​கி​னார்.
இந்நிலையில், ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறி​வித்​தார். லண்டனில் மார்ச் 8-ம் தேதி அரங்​கேற்​றம் செய்ய உள்​ள​தாக சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி லண்​டன் சென்ற இளை​ய​ராஜா, இந்​திய நேரப்படி நேற்று அதி​காலை 12.30 மணிக்கு அங்​குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் சிம்​பொனி இசையை அரங்​கேற்​றம் செய்​தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் இதை அரங்​கேற்​றி​னார்.

அவரது இசைக் குறிப்​பு​களை நூற்​றுக்​கணக்​கான கலைஞர்​கள் பல்​வேறு இசைக் கருவி​களில்ஒரே நேரத்​தில் இசைத்​தது பார்​வை​யாளர்​களை பரவசத்​தில் ஆழ்த்​தி​யது. இதன்​மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழுதி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்​பாளர் எனும் சாதனையை இளை​ய​ராஜா படைத்​துள்​ளார். இசை ஜாம்​ப​வான்​கள் மொஸார்ட், பீத்​தோவன், சாய்​கோவ்​ஸ்கி ஆகிய சிம்​பொனி இசைக் கலைஞர்​கள் வரிசை​யில் இளை​ய​ராஜா​வும் இணைந்​துள்​ளார்.

இந்த நிகழ்ச்​சி​யில் கார்த்​திக் ராஜா, யுவன் சங்​கர் ராஜா, இயக்​குநர் பால்கி உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர். இன்று சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு சிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Read More
IPL - 2020இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

CRICKET – இந்திய அணி 3-வது முறையாக பட்டம் வென்று அசத்தியது ….

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.

துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் காயம் அடைந்த மேட் ஹென்றிக்கு பதிலாக நேதன் ஸ்மித் களமிறங்கினார். பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறந்த தொடக்கம் கொடுத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 4-வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டன. தொடர்ந்து முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரிகள் அடிக்க 11 ரன்கள் சேர்க்கப்பட்டன.

இதனால் நியூஸிலாந்து அணி 7 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி வில் யங்கை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். வில் யங் 23 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 10 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 69 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை வீசிய குல்தீப் யாதவ், ரச்சின் ரவீந்திராவை போல்டாக்கினார். 29 பந்துகளை எதிர்கொண்ட ரவீந்திரா ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து குல்தீப் யாதவ் தனது அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சனை வெளியேற்றினார். 14 பந்துகளில், 11 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன், குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து நடையை கட்டினார். இதன் பின்னர் களமிறங்கிய டாம் லேதம் 30 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். 108 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல்லுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்.

5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி பிரித்தார். கிளென் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய பிரேஸ்வெல் சீராக ரன்கள் சேர்த்தார். நிலைத்து நின்று விளையாடிய டேரில் மிட்செல் 91 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் அரை சதம் கடந்தார். டேரில் மிட்செல் 101 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் மைக்கேல் பிரேஸ்வெல் மட்டையை சுழற்றினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாச 50 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

252 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். கைல் ஜேமிசன் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரோஹித் சர்மா, வில்லியம் ரூர்க் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டினார். தொடர்ந்து நேதன் ஸ்மித் வீசிய 6-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி அசத்தினார் ரோஹித் சர்மா. பின்னர் நேதன் ஸ்மித் வீசிய 8-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளையும் விரட்ட இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 58-வது அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் 50 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் விளாசிய போது கிளென் பிலிப்ஸின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், ரோஹித் சர்மா ஜோடி 18.4 ஓவர்களில் 105 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

சிறப்பாக பேட் செய்து வந்த ரோஹித் சர்மா 83 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து விளாச முயன்ற போது ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஐசிசி தொடர்களில் (50 ஓவர்) இது அவரது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. 122 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயருடன், அக்சர் படேல் இணைந்தார்.

மைக்கேல் பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோரது பந்தில் சிக்ஸர் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து வந்தார். சீராக ரன்கள் சேர்த்த அவர், 48 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 48ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தில், ஷாட் ஃபைன் லெக் திசையில் ரச்சின் ரவீந்திராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 38.4 ஓவர்களில் 183 ஆக இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்த போது அணியின் வெற்றிக்கு 68 பந்துகளில் 69 ரன்கள் தேவையாக இருந்தன.

இதையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் விரைவாக ரன்கள் சேர்க்க முயன்றார். பிரேஸ்வெல் வீசிய 41.4-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அக்ஸர் படேல் 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் பிரேஸ்வெல் பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்த போது வில் ரூர்க்கிடம் கேட்ச் ஆனது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 49 ரன்கள் தேவையாக இருந்தது.

இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடினார். ரவீந்திரா வீசிய 46-வது ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தன. வில் ரூர்க் வீசிய 47-வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. 18 பந்துகளில் 12 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கைல் ஜேமிசன் வீசிய 48-வது ஓவரின் 3-வது பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஹர்திக் பாண்டியா வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஜடேஜா களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்தன. வில் ரூர்க் வீசிய 49-வது ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விளாச முடிவில் இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா 9 ரன்களும், கே.எல்.ராகுல் 33 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பட்டம் வென்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2002-ம் ஆண்டு தொடரில் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. 2013-ம் ஆண்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது. தற்போது 3-வது முறையாக வாகை சூடியுள்ளது. ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வானார்கள்.

பதிலடி கொடுத்த இந்தியா: 2000-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை வென்றிருந்தது. இந்த தோல்விக்கு 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது பதிலடி கொடுத்துள்ளது இந்திய அணி.

ரூ.19.50 கோடி பரிசு: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெற்றது.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

லண்டனில் அதிர்ந்த அப்பல்லோ அரங்கம் – சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜா

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார்.

லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில், சரியாக லண்டன் நேரப்படி 7 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இளையராஜாவின் சிம்பொனி இசை தொடங்கியது. இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

குறைந்தபட்சமாக 9 ஆயிரம் முதல் 31 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. நிகழ்ச்சிக்கு தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே அங்கு ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜாவும் சிம்பொனி இசை கலைஞர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார்.
சிம்பொனி இசையை உருவாக்கிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கும் இசைஞானி இளையராஜாஇந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிம்பொனி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் நான்கு கவிஞர்கள் நான்கு வித்தியாசமான கவிதைகளைச் சொன்னால் நம்மால் அதை ரசிக்க முடியுமா? முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகள் இணைந்து தரும் இசையை நம்மால் கொண்டாட முடியும்.

சிம்பொனி என்றால் என்ன கேள்விக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த எளிய விளக்கம் இது. சிம்பொனி என்பது WESTERN CLASSIC இசை மரபில் பல்வேறு இசைக்கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு. இது பல பகுதிகளைக் கொண்டது. அவை MOVEMENTS என்றழைக்கப்படுகின்றன.
பெரும்பாலும் ஒரு சிம்பொனி தொகுப்பு 4 MOVEMENT-களைக் கொண்டிருக்கும். அதில் ஒன்று SONATA என்ற வடிவத்தில் இருக்கும். சிம்பொனி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.

30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் நிகழ்வாக சிம்பொனி இருக்கும். அதில் VIOLIN, CELLO போன்ற தந்திக் கருவிகளும் CLARINET, TRUMPET, SAXOPHONE, புல்லாங்குழல் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகளும் தாள இசைக்கருவிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஐரோப்பிய இசை வரலாற்றில் WESTERN CLASSIC இசையின் காலகட்டமாக கருதப்படும் 1740 முதல் 1820-ஆம் ஆண்டு வரை சிம்பொனிகள் உருவாகத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. JOSEPH HAYDN, MOZART, BEETHOVEN ஆகியோர் சிறந்த சிம்பொனி இசைத் தொகுப்புகளை உருவாக்கியவர்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை சிம்பொனியை உருவாக்கியிருக்கும் முதல் நபர் இளையராஜாதான். 34 நாட்களில் தாம் உருவாக்கிய சிம்பொனிக்கு VALIANT என்று பெயர் வைத்தார் இசைஞானி. தமது முதல் சிம்பொனி தொகுப்பை லண்டனின் ROYAL PHILHARMONIC ORCHESTRA-வை வைத்து பதிவு செய்துள்ளார். சிம்பொனியை இசைக்க WESTERN MUSIC-ஐ ஒத்திசைந்து வாசிக்கக்கூடிய கலைஞர்கள் தேவை என்பதால் லண்டன் குழுவை நாடினார் இளையராஜா. மேலும் சிம்பொனியை இசைக்க அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கம் வேண்டும்.

இதற்கு முன்பும் மேற்கத்திய இசையில் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் இளையராஜா. 1986-ஆம் ஆண்டு 10 TRACK-களைக் கொண்ட ‘HOW TO NAME IT?’ என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இளையராஜாவின் முதல் FUSION ALBUM-ஆக அது அமைந்தது.
1988-ஆம் ஆண்டு ‘NOTHING BUT WIND’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. WESTERN CLASSIC இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றை இணைத்து அதை உருவாக்கியிருந்தார். 2005-ஆம் ஆண்டு மேற்கத்திய இசையுடன் திருவாசகத்தை வெளியிட்டார் இசைஞானி.

‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, ‘மூடுபனி’-யில் வரும் “என் இனிய பொன் நிலாவே”, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமல் பாடிய “நினைவோ ஒரு பறவை” ஆகிய பாடல்களில் சிம்பொனி இசையின் வடிவத்தை பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மாபெரும் சாதனைகளை படைத்த பிறகும் தமது தேடலால் புதுப்புது உயரங்களைத் தொட்டு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகிறார் இசைஞானி.

Read More