rajini

இந்தியாசினிமாதமிழ்நாடு

ரஜினியின் கூலி-இது எப்படி இருக்கு ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் வெளியான நிலையில், பலதரப்பட்ட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், காலை 9 மணி காட்சி
கூலி கதை: சைமன் (நாகார்ஜுனா) ஹாரிபரில் தயாள் (செளபின் சாஹிர்) தலைமையில் விலையுயர்ந்த வாட்ச்களை விற்பனை செய்வது போல இன்னொரு மிகவும் மோசமான பிசினஸை செய்து வருகிறார். அவர் கொன்று குவிக்கும் ஆட்களை அப்புறப்படுத்தும் பணி ராஜசேகருக்கு (சத்யராஜ்) வழங்கப்பட தனது 3 மகள்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த மோசமான வேலையை செய்கிறார். மேலும், அங்கே நடக்கும் விஷயங்களை அம்பலப்படுத்த நினைக்கும் அவரை கொன்று விடுகின்றனர். தனது நண்பனை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க களமிறங்கும் தேவா தனது நண்பனின் 3 மகள்களையும் காப்பாற்ற போராட கடைசியில் என்ன ஆனது என்பது தான் கூலி படத்தின் கதை.
ரஜினிகாந்தை செம மாஸாக காட்ட வேண்டும் என்கிற செக் பாக்ஸை பக்காவாக டிக் செய்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பான் இந்தியா படமாக கூலி…..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம்.

சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்).

தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை.
வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’
அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.
முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு.
மைனஸ்: படத்தின் முதல் பாதி கூட நன்றாகவே சென்றது. ஆனால், படத்தின் 2வது பாதியில் கதை இழுத்துக் கொண்டே சென்றது தான் படத்திற்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது. அதிலும், அமீர்கான் வரும் கிளைமேக்ஸ் கேமியோ எல்லாம் கூலி படத்துக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அந்த இடத்தில் லோகேஷ் கனகராஜ் ஏதோ ஃபில்லர்ஸ் போட்டது போலத்தான் உள்ளது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக வந்து மிரட்டுவது போல அமீர்கானின் தாஹா கேரக்டரை வைத்து கூலி 2வுக்கு லீடு கொடுத்து முடித்திருந்தால் கூட தரமாக இருந்திருக்கும். அதே போல இந்த படத்தில் ரெட்ரோ பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. வித வித விதமாய், வித்யாசமாய் கொல்வது தான் படம் முழுக்க வருகிறது. ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸிக்கு எல்லாம் எந்தவொரு வேலையும் இல்லை. ஒரு சில ட்விஸ்ட்டுகள் வொர்க்கவுட் ஆனாலும், ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வையே அவை கொடுக்கின்றன. கிளைமேக்ஸை இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருந்தால், இந்த கூலி ஹைப்புக்கு ஏற்ற வொர்த்தாக இருந்திருக்கும். ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பு, ஆக்‌ஷன், ஸ்டைல் மற்றும் உழைப்பு கடைசி வரை ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது. தாராளமாக தியேட்டரில் படத்தை பார்க்கலாம். ஓவர் எதிர்பார்ப்பு வேண்டாம்!
ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஆடியோ லாஞ்ச்ல பாத்துக்கிறேன்-ரஜினி,மாட்டிக் கொண்ட லோகேஷ்

தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் கூலி திரைப்படமும் ஒன்று. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்து உள்ளார். இப்படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி பட கதையை சொல்லும் முன் ரஜினியிடம் தான் ஒரு கமல் ரசிகன் என்று சொன்னாராம். அதற்கு ரஜினி ரிப்ளை கொடுத்திருக்கிறார்.உன்ன ஆடியோ லாஞ்ச்ல பாத்துக்கிறேன்… வாய்விட்டு மாட்டிக் கொண்ட லோகேஷ்; வச்சு செய்ய காத்திருக்கும் ரஜினி

Read More
சினிமாதமிழ்நாடு

முத்துவேல் பாண்டியன் வேட்டை ஆரம்பம்.. மரண மாஸ் போஸ்டருடன் வெளியான ‘ஜெயிலர் 2’ அப்டேட்!

ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ஷுட்டிங் துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது ‘ஜெயிலர்’. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து சமீபத்தில் மிரட்டலான அறிமுக வீடியோ வெளியாகி வேறலெவல் வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ குறித்தான வேறலெவல் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ வெளியாகி வேறலெவல் வரவேற்பினை பெற்றது. ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் என பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் மற்றும் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர்.
ரஜினியின் மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான ‘ஜெயிலர்’ உலக அளவில் பெரும் வரவேற்பினை பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகம் குறித்து கடந்த பொங்கல் தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நெல்சன் திலீப்குமாரின் வித்தியாசமான மேக்கிங்கில், ரஜினியின் மாஸ் சீன்களுடன் மிரட்டலான ‘ஜெயிலர் 2’ ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘முத்துவேல் பாண்டியன் வேட்டை ஆரம்பம் என குறிப்பிட்டு, படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ரஜினி தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் ‘கூலி’ மீது உச்சக்கட்ட்ட்ட எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More
சினிமாதமிழ்நாடு

பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றார். இந்த சமயத்தில் ஏர்போட்டிற்கு வந்த ரஜினியுடன் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்ததை பற்றி கருத்து கேட்டுள்ளனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்
மறுபக்கம் அஜித் தன் இரு பட வேலைகளையும் முடித்துவிட்டு கார் ரேஸில் கலந்துகொண்டு வருகின்றார். துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் செம பிசியாக இருக்கின்றார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.
என்னதான் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என புத்தாண்டை முன்னிட்டு தகவல் வந்தாலும் இந்தாண்டு அஜித்தின் ஆண்டாகவே இருக்கும் என தெரிகின்றது. கார் பந்தயத்தில் வெற்றி, பத்மபூஷன் விருது, இரண்டு படங்கள் ரிலீஸ் என அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஒரு கொண்டாட்டமான வருடமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை பலரும் வாழ்த்திய நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கூலி படப்பிடிப்பில் ககலந்துகொள்ளவோ அல்லது படப்பிடிப்பை முடித்துக்கொண்டோ ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளார் ரஜினி. அவரிடம் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளதை பற்றி கேட்கின்றனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு சென்றார்.இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது

Read More
சினிமாதமிழ்நாடு

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ரிலீஸ் தேதி …

ரஜினிகாந்த் நடித்த வரும் கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் திரைப்படம் கூலி. அந்தப் படத்தில் அவருடன் அமீர்கான், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

படத்திற்கான 70% வேலைகள் முடிவடைந்த நிலையில், மீதமிருக்கும் 30 சதவீத படப்பிடிப்பை விரைவில் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Read More