தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் – கரும்பு டன்னுக்கு ரூ.3500 வழங்கப்படும்-live
தமிழ்நாடு அரசு வேளான் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை, நல்லூர் வரகு மற்றும் ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
4 ஆண்டுகளில் 35 வேளான் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளன என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு.
மேலும் மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.8.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.60 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்திற்கான கீழ் 3000 ஏக்கரில் மல்லி பயிர் செய்ய ஊக்குவிக்கப்படும் எனவும், ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.1.65 கோடி ஒதுக்கீடு
பனைமரங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க, பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு.
தென்காசி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அவகாடீ சாகுபடியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டமாக ரூ.102 கோடி ஒதுக்கீடு.
புதிய ரக பலாப்பழங்கள் சாகுபடியை பரவலாக்கம் செய்யத்திட்டம். மேலும் பாரம்பரிய காய்கறி ரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ள ரூ.2.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முந்திரி உற்பத்தியை அதிகரிக்கவும் முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும் முந்திரி வாரியம் அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய பலா ரகங்களை பரவலாக்கவும், பலாவில் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி வழங்கவும் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.3500 வழங்கப்படும் என அறிவிப்பு.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.10.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் துவரம் பருப்பு சாகுபடிக்கு ரூ. 80 லட்சம் ஏக்கரில் துவரை பயிரிட ஊக்குவிக்கப்படும்.
உயர் விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் முதல் பரிசாக வழங்கப்படும்.
மேலும் 100 விவசாயிகளை நெல் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள நாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவிப்பு. இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பிற்கு பயிர் காப்பிட்டு திட்டத்திற்கு ரூ.841 கோடி ஒதுக்கீடு.
எண்ணெய் வித்து உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.22 கோடி மதிப்பில் மழைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்
நெல் சாகுபடிப் பரப்பை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்காக ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க, ‘மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.40.27 கோடி ஒதுக்கீடு,
மேலும் ரூ.22 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், மழைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
கோடை உழவை 3 லட்சம் ஏக்கராக அதிகரிக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நெல் விவசாயிகளுக்கு 4 ஆண்டுகளில் ரூ.1452 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 46 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
எஸ்.சி., எஸ்.டி விவசாயிகளுக்கான 60 – 70% மானியம் வழங்கும் திட்டத்தில் 15,800 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 95 லட்சத்து 68,000 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெற்றுள்ளது என அமைச்சர் அறிவிப்பு.
2023 – 24இல் ரூ.3.58 லட்சம் கோடி கடன்
இதுவரை 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 5,242 கோடி பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் மூலம் 2023 – 24இல் ரூ.3.58 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புக்காக ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அறிவிப்பு.
Read More