trumph

இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்!

தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளால் முற்றிலும் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிர்மப், சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வரி விதிப்புகளை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் அதில் 6 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராகவும், 3 நீதிபதிகள் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.இறுதியில் 6-க்கு 3 என்ற வாக்குகளின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாடாளுமன்றத்தை மீறி தனிச்சையாக வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரமில்லை எனவும், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை டிரம்ப் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் அந்நாட்டு பங்குச் சந்தைகள் மீண்டும் எழுச்சியடையத் தொடங்கின. எஃகு, அலுமினியம், தினசரி நுகர்வு உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

சீனா மீதான வரி 10% குறைப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பிறகு சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பை மேற்கொண்டார். இது உலக நாடுகளின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்தது.
இந்த நிலையில், தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
வரி விதிப்பு, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் இருநாடுகள் இடையே நிலவிய வர்த்தகப் போரின் பதற்றத்தைத் தணிக்க இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இது உடனே நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார். இதற்கு முன்பாக, சீனப் பொருட்களுக்கு 57 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 10 சதவிகிதம் குறைக்கப்பட்டு 47 சதவிகிதமாக உள்ளது.

Read More
அரசியல்இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி ரத்து? – பொருளாதார ஆலோசகர்…

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி அடுத்த மாதம் ரத்து செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இறக்குமதி வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பொருட்கள் மீது 25 விழுக்காடு வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் 25 சதவிகித வரியை அபராதமாக விதித்துள்ளது. இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை, டெல்லியில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி பிரெண்ட் லின்ச் தலைமையிலான குழுவினர், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய பொருட்கள் மீதான 25 சதவிகித அபராத வரி நவம்பர் இறுதிக்குள் நீக்கப்படும் என நம்பிக்கை.

இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என பொருளாதார ஆலோசகர் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வரி பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை.
கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 விழுக்காடு அபராத வரி, நவம்பர் மாத இறுதிக்குள் நீக்கப்படும் என்று கூறினார். மேலும், இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்றும் ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க வரி தொடர்பான பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும் என்று கூறிய ஆனந்த நாகேஸ்வரன், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தனது உள்ளுணர்வின் வெளிப்பாடு இது என்றும் ஆனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடியை அடிக்கடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி பேசிவந்தார். இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல்.. அமெரிக்காவின் அறிவிப்பால் அடுத்து என்ன…

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல்.. அமெரிக்காவின் அறிவிப்பால் அடுத்து என்ன…

நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், இந்த வரி விதிப்புக்கான கெடுவை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் பால் பொருட்கள் துறையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், புதிய வரிவிதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பணமற்ற வர்த்தகத் தடைகளை இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கி வருவதாகவும், உக்ரைனில் போரை நிறுத்த முயலும் உலக அணுகுமுறைக்கு எதிராக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயையும் இந்தியா பெறுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக ஆகஸ்ட் ஒன்று முதல் இந்திய பொருட்களுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளர்
இந்நிலையில், டெல்லியில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் கவனத்துடன் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் பலன் தரும் வகையில் சமநிலையிலான ஒப்பந்தம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாக இருந்ததாகவும் விவசாயிகள், தொழில்முனைவோர்,சிறுகுறு தொழில்களின் நலனை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் செல்போன்கள், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, மருந்துப் பொருட்கள், வைரம் உள்ளிட்டவைகளின் விலை உயர உள்ளது. அதேநேரம், தோல், கிரானைட் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்தார். இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்பது குறித்து இந்த வார இறுதிக்குள் தெரியவரும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

Read More
இந்தியாஉலகம்வணிகம்

இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்: சீனாவுக்கு சூசகமாக தெரிவித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் “மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்” ஒன்று குறித்து மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஜூலை 9 ஆம் தேதி அமெரிக்காவின் வர்த்தக வரி நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னதாக, வாஷிங்டனும் புதுடெல்லியும் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஏப்ரல் 2 ஆம் தேதி, இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்கா அறிவித்தது. பின்னர் 90 நாள் இடைக்கால சலுகை அளிக்கப்பட்டது, அது ஜூலை 9 அன்று முடிவடைகிறது.

“நாங்கள் எந்தவொரு நாட்டோடும் சும்மா ஒப்பந்தங்கள் செய்வதில்லை. அனைவரும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள், அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பத்திரிகைகள், ‘உங்களுக்கு உண்மையில் ஆர்வம் உள்ள யாரும் இல்லையா?’ என்று கேட்டன.

சரி, நாங்கள் நேற்றுதான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். எங்களிடம் சில சிறந்த ஒப்பந்தங்கள் உள்ளன. இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் வரலாம். இந்தியா தெரிவிக்கும். சீன ஒப்பந்தத்தில், நாங்கள் சீனாவைத் தெரிவிக்க வைக்கத் தொடங்கினோம்,” என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
வியாழக்கிழமை உள்ளூர் நேரம் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு “பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் பேசிய டிரம்ப், சீனாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்தோ, அல்லது இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு குறித்தோ விரிவாகப் பேசவில்லை.

“நாங்கள் அனைவருடனும் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை. சிலருக்கு நாங்கள் ஒரு கடிதம் அனுப்பி, மிக்க நன்றி என்று கூறிவிடுவோம். நீங்கள் 25, 35, 45 சதவீதம் செலுத்தப் போகிறீர்கள். இதுதான் எளிதான வழி, என் மக்கள் அதை அப்படி செய்ய விரும்பவில்லை. அவர்கள் அதில் சிலவற்றைச் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் நான் செய்வதை விட அதிகமான ஒப்பந்தங்களைச் செய்ய விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இந்தியா வந்திருந்தனர். பரஸ்பர வரிகளுக்கான ஜூலை 8 காலக்கெடு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தங்கள் சிறந்த சலுகைகளை அளிக்குமாறு அமெரிக்கா நாடுகளைக் கேட்டுக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

“கடிதத்தின் தகுதிகள் மற்றும் உள்ளடக்கத்தை நான் உறுதிப்படுத்த முடியும். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) இந்த கடிதத்தை எங்கள் வர்த்தகப் பங்காளிகள் அனைவருக்கும் அனுப்பினார், காலக்கெடு நெருங்குகிறது என்பதை அவர்களுக்கு ஒரு நட்புரீதியான நினைவூட்டலாக,” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியிருந்தார்.

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் கூறுகையில், அமெரிக்கா மேம்பட்ட உற்பத்தியை மீண்டும் கொண்டு வரவும், இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்யவும் நோக்கம் கொண்டுள்ளது. இரு தரப்பினரும் “உண்மையில் செயல்படும் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தனர்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், எண்ணெய் மற்றும் பாதுகாப்பு கொள்முதலை பல்வகைப்படுத்துவது நாட்டின் மூலோபாய நலன் சார்ந்தது என்றும், அமெரிக்காவில் இருந்து அதிகமாக வாங்குவது சரக்கு வர்த்தக இடைவெளியை கணிசமாக குறைக்க உதவும் என்றும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 2025 இல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்ந்து 90 சதவீதமாக உயர்ந்ததுடன், இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனும் அதிகரித்து வருகிறது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

போப் ஆண்டவர் இறுதிச்சடங்கில் டொனால்டு டிரம்ப்.. முதல் பெண்மணி மெலனியாவும் பங்கேற்கிறார்!

போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் நேற்று காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலக நாடுகள் மற்றும் உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போப் ஆண்டவர் இறுதிச் சடங்கிர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்ரூத் சமூக வலைதள பதிவில் “மெலனியாவும் நானும் ரோமில் உள்ள போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல உள்ளோம்.. அங்கு இருப்பதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
மறைந்த போப் ஆண்டவர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிபராக பதவியேற்ற டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கே கடத்தினார். கை, கால்களில் விலங்கிட்டு சட்ட விரோத குடியேறியகளை அந்நாட்டின் ராணுவம் மூலம் வெளியேற்றினார்.
டிரம்பின் நடவடிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் போப் ஆண்டவர் டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்திருந்ததார். இந்நிலையில் போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார். அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்ததோடு, தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிட்டுள்ளார். போப் ஆண்டவரின் மறைவை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

போப் மறைவால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். வாட்டிகன் நகரத்தின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமானோர் இரவு பகலாக கண்ணீருடன் திரண்டுள்ளனர். உலகம் முழுவதும் போப் ஆண்டவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

Read More
அரசியல்இந்தியாஉலகம்

டிரம்ப்பின் பரஸ்பர வதிவிதிப்பால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும், விலைவாசி உயரும் என்றும் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்த பரஸ்பர இறக்குமதி வரிகள் பெடரல் ரிசர்வ் எதிர்பார்த்ததை விட அதிகமுள்ளது. மேலும் கட்டண விகிதங்கள் அதன் மதிப்பீடுகளை விட அதிகமாக உள்ளன என்று தலைவர் பவல் பிபிசியிடம் தெரிவித்தார்.
வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் காரணமாக உலக நிதிச் சந்தைகளில் தாக்கங்களுக்கு மத்தியில் பவலின் கருத்துகள் வந்துள்ளன.

வீடுகள் மற்றும் வணிகங்களின் கணக்கெடுப்புகள், முக்கியமாக கட்டணங்கள் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்தின் நிதி ஆரோக்யம் குறித்த அவர்களின் உணர்வில் சரிவு ஏற்பட்டதாக தெரிவித்தன என்று பவல் மேலும் கூறினார். இவை மிக அடிப்படையான கொள்கை மாற்றங்கள். இதைப் பற்றி எவ்வாறு சிந்திப்பது என்பதற்கான நவீன அனுபவம் இல்லை” என்று பவல் சிகாகோவின் பொருளாதார கிளப் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கூறினார், சி.என்.என் தெரிவித்துள்ளது.
“இதுவரை அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகளின் அளவு எதிர்பார்த்ததை விட கணிசமாக அதிகமாக உள்ளது. அதிக பணவீக்கம் மற்றும் மெதுவான வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார விளைவுகளுக்கும் பொருந்தும்” என்று பவல் பிபிசியிடம் தெரிவித்தார்.

பரஸ்பர கட்டணங்கள் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வேலைகளை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். பங்குச் சந்தை இப்போது வரை மாற்றங்களைக் கண்டுள்ளது. டிரில்லியன் கணக்கான டாலர் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் குடியேற்றம், நிதிக்கொள்கை மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான ஒழுங்குமுறை ஆகியவற்றில் கொள்கை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைகளைப் பற்றி பவல் பேசியபோது, டவ் 700 புள்ளிகள் அல்லது 1.7% சரிந்தன, S&P 500 2.5% சரிந்தது, நாஸ்டாக் கம்போசிட் 3.5% சரிந்தது.
டிரம்ப்பின் பரஸ்பர வதிவிதிப்பால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும், விலைவாசி உயரும் என்றும் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்துள்ளார்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுவணிகம்

டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?

பல நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை 90 நாட்கள் இடைநிறுத்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், தைவான், ஜப்பான், தென் கொரியா உள்பட ஆசிய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை முதல் ஏற்றம் கண்டு வருகின்றன.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை பரஸ்பர வரியை இடைநிறுத்தம் செய்ய டிரம்ப் முடிவு செய்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்போது இதை வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. இருப்பினும் இந்தச் செய்தியால் குறுகிய காலத்துக்குப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

வெள்ளை மாளிகை மறுத்த 90 நாட்கள் பரஸ்பர வரி இடைநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
பல நாட்களாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழுவும் பல்வேறு நாடுகள் மீது “பரஸ்பர” வர்த்தக வரிகளை விதிக்கும் தங்கள் முடிவில் முழு உறுதியுடன் இருப்பதாக வலியுறுத்தி வந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) அன்று அதிபர் டிரம்ப் இந்த வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரிசீலிப்பதாக ஒரு செய்தி வெளிவந்தது. இந்தச் செய்தி பங்குச் சந்தையில் ஒரு சிறிய ஏற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தச் செய்தியை அமெரிக்க அதிகாரிகள் கேலி செய்தனர்.

ஆனால், இப்போது சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன், அந்த வரி விதிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நிஜமாகிவிட்டது. இதன் காரணமாக, உலகளாவிய பொருளாதார ஒழுங்கை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க உற்பத்தித் துறையில் பொற்காலத்தைக் கொண்டு வரப் போவதாக டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேறுவது சற்றுத் தாமதமாகும்.

அமெரிக்க அரசு முதலில் அதிக இறக்குமதி வரிகளை விதித்து, பிறகு அதைத் தற்காலிகமாக நிறுத்தி, ஒவ்வொரு நாட்டுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடக்கத்தில் இருந்தே திட்டமிடப்பட்ட ஒரு செயல்தான் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

“இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, 75க்கும் மேற்பட்ட நாடுகள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று நான் நினைக்கிறேன்”, என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலகளாவிய வர்த்தகப் போரின் உச்ச கட்டத்தில் இருந்து டிரம்ப் பின்வாங்கியது ஏன்? பட மூலாதாரம்,EPA
வெள்ளை மாளிகையின் இத்தகைய நடவடிக்கை ஆச்சரியம் தரக்கூடியது அல்ல. மேலும் அந்த அறிவிப்புக்கு முன்பு, முதலீட்டாளர்கள் பயத்தில் தங்கள் முதலீடுகளை விற்றனர், பத்திரங்களின் மதிப்பு குறைந்து சந்தை வீழ்ச்சியடைந்தது மற்றும் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைந்தனர். இந்த காரணிகளை அரசாங்கத்தால் புறக்கணிக்க முடியாது.

அப்படியென்றால், டிரம்பின் இந்த முடிவானது எதிர்பாராமல் நடந்த சிக்கலின் காரணமாக ஏற்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட பின்வாங்கலா? அல்லது அவர் வழக்கமாகப் பயன்படுத்தக் கூடிய பேரம் பேசும் உத்தியைப் பயன்படுத்தினாரா?

தான் எடுத்த முடிவுகளில் இருந்து டிரம்ப் ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்று கூறிய அவருடைய ஆதரவாளர்கள், தற்போது இந்த இடை நிறுத்தத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, டிரம்பின் வரி விதிப்பு நிலைமை “எதிர்பார்த்தபடியே சரியாக நடந்தது” என்று கூறினார்.

“அதிபர் டிரம்பின் செயல்பாடுகளை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவரது நடவடிக்கைகள் மூலமாக ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை அமெரிக்கா ஈர்க்கிறது” என்று செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் சில இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) இந்த வரி விலக்கு பொருந்துமா என்பதும், மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகள், ஏற்கெனவே அடிப்படை 10% அடிப்படை வரிகளுக்கு உட்படுத்தப்படாத நிலையில், இந்த வரி விலக்கு அவர்களின் நிலையை மாற்றுமா என்பதும், குறிப்பிட்ட துறைகளை இலக்காகக் கொண்ட வரிகளுக்கு இந்த வரி விலக்கு பொருந்துமா என்பதும் தெளிவில்லை.

இறுதியில், வெள்ளை மாளிகை இந்தக் கேள்விகளுக்கு சில தெளிவை வழங்கியது. ஆனால் பல மணிநேரம் அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகள் டிரம்பின் இந்த சமூக ஊடக பதிவைக் கூர்ந்து கவனித்தன. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களையும் வைத்து விவரங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதன்கிழமை மதியம், டிரம்ப் பங்குச் சந்தை மோசமாக இருந்ததையும், முதலீட்டாளர்கள் கவலை அடைந்ததையும் ஒப்புக்கொண்டார். அவர் இதற்கு முன்பு பங்குச் சந்தை குறித்துப் பெருமையாகப் பேசியதற்கு இது எதிராக இருந்தது. மேலும் வரி விதிப்பு குறித்த மாற்றத்திற்கான காரணத்தையும் இது வெளிப்படுத்தியது.

புதன்கிழமை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் மக்களை “அமைதியாக இருங்கள்” என அறிவுறுத்தியதோடு, “எல்லாமே சரியாக முடியும்” என்றும் உறுதியளித்தார்.

திங்கட்கிழமை, அவர் “பயந்தவர்கள்” என்று அழைத்த ஒரு குழுவைக் கடுமையாக விமர்சித்தார். தனது முயற்சிகளுக்குப் பொறுமையாக இருக்க முடியாத பலவீனமான மற்றும் முட்டாள்தனமான மக்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

ஆனால், இப்போது டிரம்பே தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இருப்பினும், இந்த வரி அறிவிப்பு தவிர்க்க முடியாத ஒன்று என்றும், எந்தவொரு பொருளாதார சீர்குலைவுகளும் அமெரிக்க பொருளாதாரத்தில் பரவ அனுமதிக்கப்பட்ட ஒரு நோயைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் ஜனநாயகக் கட்சியினர் டிரம்பின் நிலைமையை அவ்வளவு நம்பிக்கையானதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டனர். மேலும், “டிரம்ப் குழப்பத்தில் ஆட்சி செய்வதாகவும்” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறுபான்மையினருக்கான தலைவர் சக் ஷுமர் விமர்சித்தார்.

“அவர் தளர்ந்திருக்கிறார், பின்னடைவைச் சந்திக்கிறார், அது நல்ல விஷயம்,” என்றும் அவர் கூறினார்.
இறுதியில், டிரம்பின் முடிவுக்குப் பின்னால் உள்ள சிந்தனை உண்மையில் முக்கியமற்றதாக இருக்கலாம்.

உண்மையில், இந்த வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நல்லுறவைப் பேண அமெரிக்கா முயன்று வருகிறது. தற்போதும், 10% வரியை டிரம்ப் தொடர்கிறார். இது சில வாரங்களுக்கு முன் நடந்திருந்தால், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்.

இது பின்னடைவை ஏற்படுத்திய போதிலும், பங்குச் சந்தைகள் மீண்டு வருகின்றன. மேலும், சீனாவுடன் வர்த்தகப் போரில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அவர் சீன இறக்குமதிகளுக்கு 125% வரி விதித்துள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கை, உலகப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், இது ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கை உள்பட அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றதாக இருக்கிறது. ஏனெனில் இதன் மூலம் சீனாவின் லட்சியங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயல்கிறது.

இருப்பினும் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள், அமெரிக்காவின் கூட்டாளிகளை நெருக்கடியில் தள்ளியது. இது உலக ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இப்படியான ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுப்பதை இது மேலும் கடினமாக்கியுள்ளது.

மேலும் 90 நாட்களில், டிரம்பின் இடைக்கால வரி விதிப்பு முடிவுக்கு வரும்போது, தற்போது உள்ளதைப் போன்ற பொருளாதாரச் சூழல் மற்றும் நிச்சயமற்ற தன்மை மீண்டும் தொடங்கலாம்.
பரஸ்பர வர்த்தக வரிகள் மீதான அதிபர் டிரம்பின் வியக்கத்தக்க மாற்றத்திற்குப் பிறகு, ஆசிய-பசிபிக் பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளன.

அதிபர் டிரம்பின் இந்தத் தற்காலிகியமாக வரி விதிப்பை நிறுத்துவதற்கான நடவடிக்கை, ஆசிய பங்குச் சந்தைக்கான ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது. அவை “நெருக்கடியில் இருந்து நெகிழ்ச்சியான சூழலுக்கு மாறியுள்ளன” என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகின் பெரும்பாலான நாடுகள் மீது டிரம்ப் அதிக வரிகள் விதிப்பதை நிறுத்தி, சீனா மீதான வரிகளை உயர்த்தியதை அடுத்து, புதன்கிழமை (ஏப்ரல் 9) வால் ஸ்ட்ரீட்டில் பங்குகள் மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டன.

இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் “மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்” என்று எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீபன் இன்னஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சீனா மீது 125 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தாலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டு நிலைமை மாறினால் அதுவும் சமாளிக்கக்கூடியதாக மாற வாய்ப்புள்ளது” என்றார்.

Read More
உலகம்

“போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயார்; புதினும் சம்மதிப்பார்” – ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆலோசனை மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உக்ரைன் அரசு 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகக் கூறியது. இதனைத் தொடர்ந்தே ட்ரம்ப்பின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறும்போது, “ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் போரின் காரணமாக இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு தற்காலிக போர் நிறுத்தம் மிகவும் அவசியம்.
இந்த போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. ரஷ்யாவும் ஒப்புக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். இந்த போர் நிறுத்த அவசியத்தை உணர்ந்து ரஷ்யா அதனை ஏற்கும்படி நம்மால் செய்ய முடிந்தால் அது மிகப்பெரிய விஷயம். ஒருவேளை அப்படிச் செய்ய முடியாமல் போனால், இன்னும் நிறைய மக்கள் கொல்லப்படுவார்கள்” கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறும்போது, “இன்று நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உடனடி அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்படி உக்ரைனை சம்மதிக்க வைத்துள்ளோம்” என்று ஊடகங்களிடன் கூறினார்.

மேலும் எக்ஸ் பக்கத்தில் இது பற்றி குறிப்பிடும்போது, “உக்ரைனின் இந்த தயார் நிலை, போர் நிறுத்தத்துக்கான விருப்பம் நீடித்த அமைதிக்கு அருகில் எடுத்துவைக்கப்பட்டுள்ள அடியாகும். அமெரிக்க அதிபரின் தலைமையில், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் உதவியாலும் உக்ரைன் அமைதியை மீட்டெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இப்போது எல்லாம் ரஷ்யாவின் கைகளில்தான் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாது போர் நிறுத்தத்துக்கு தயார் என்று கூறியுள்ளதால் உக்ரைனுக்கு நிறுத்திவைத்திருந்த உளவுத் தகவல் பகிர்தல் சேவை, பாதுகாப்பு சேவை ஆகியனவற்றை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.A

Read More