kumbakonam

ஆன்மீகம்தமிழ்நாடு

மாசிமகம் கோலாகலம்… கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி!

கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணத்தில் 12 சைவத் திருக்கோயில்கள், 5 வைணவக் கோயில்கள் இணைந்து, 10 நாட்களுக்கு மாசி மகப்பெருவிழா கொண்டாடப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வான மாசிமகத்தை ஒட்டி, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் 12 சிவாலயங்களில் இருந்து உற்சவர்கள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, கடலூர் வெள்ளி கடற்கரையில், மாசி மகத்தை ஒட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட தீர்த்த படித்துறையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

Read More