tamilcinema

இந்தியாசினிமாதமிழ்நாடு

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” – சர்ச்சைகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முற்றுப்புள்ளி!

வந்தே மாதரம் மற்றும் மா துஜே சலாம் பாடலை பாட மறுத்ததாக எழுந்த சர்ச்சைக்கு தனது பாணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது விளக்கத்தைத் தந்துள்ளார்.
தனது சமீபத்திய பேட்டியில் இதுபற்றி பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை எப்போதும் ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், கௌரவிப்பதற்கான வழியாகத்தான் இருந்துள்ளதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்
பிரதமரின் முன்னிலையில் வேவ் உச்சி மாநாட்டில் பங்கேற்றது முதல், இளம் நாகா இசைக்கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் குழுவை உருவாக்கியது வரை பன்முகத்தன்மையுடன் பணியாற்றியதை எடுத்துக்கூறியுள்ளார். படைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஜனநாயகன் vs பராசக்தி… திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போகும் பொங்கல்!

பொங்கல் பண்டிகைக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி நேரடியாக மோதுகிறது. ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், பொங்கலுக்கு களம் காண்கிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி இருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கல் விடுமுறையை குறிவைத்தது. 1950-60 காலகட்டத்திற்கான கதை களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா, இதில் மொழி பிரச்சனையை பேசியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இதனை தயாரித்திருக்க, படம் பொங்கலன்று ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
பராசக்திக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், படம் குறித்தான கண்காட்சி அமைக்கப்பட, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், ஏற்கெனவே திரையுலகில் பரவி வந்த தகவலின்படி, பராசக்தியின் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ஜனவரி 14க்கு பதில், 4 நாட்களுக்கு முன்னதாக, அதாவது 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் ரிலீஸாகும் நிலையில், அதற்கு அடுத்த நாளே திரைக்கு வர இருக்கிறது பராசக்தி. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்திருப்பதாக பராசக்தி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு மார்க்கெட் இருக்கும் சூழலில், இருவரின் படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாவதால், இரு படங்களுக்கும் சரியான அளவு திரைகள் ஒதுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் வசூல் தாறுமாறாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தியும் சேர்ந்தே வருவதால், ஜனநாயகன் வசூலில் தாக்கம் இருக்கவே செய்யும் என திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது… எப்படியோ… இந்த பொங்கல்… சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையப் போகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

‘பேட் கேர்ள்’ விமர்சனம் -திரை விமர்சனம்

தமிழில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு பெண்ணின் பார்வையில் ஒரு பெண் இயக்குநரின் வாயிலாக சொன்ன படங்கள் எதுவென்று யோசித்து பார்த்தால் அப்படி இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான எந்தப் படமும் இல்லை என்பதே பதிலாகும். ‘ஆட்டோகிராஃப்’, ‘அட்டகத்தி’ போன்ற படங்கள் ஆண்களின் வாழ்க்கையை ஆணின் பார்வையில் பேசின. ஆனால், ஒரு பெண்ணின் காதல்களையும், தன்னுடைய ஒவ்வொரு பருவத்திலும் அவள் எதிர்கொள்ளும் விஷயங்களையும் ஒரு பெண்ணே பேசும் படைப்பாக வந்துள்ளதுதான் இந்த ‘பேட் கேர்ள்’ படம்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள்தான் ஒன்லைன் என்றாலும் கூட முன்பு குறிப்பிட்ட ‘ஆட்டோகிராஃப்’ ‘அட்டகத்தி’, ‘பிரேமம்’ பாணியிலான திரைக்கதை உத்தியை பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய கோணத்தில் அணுகியிருப்பது சிறப்பு. நாயகியின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சில கேள்விகளை அப்படியே ஆடியன்ஸின் பார்வையில் விட்டிருப்பதும் கூட நல்ல உத்தி.

படத்தின் முதல் காட்சியிலிருந்தே நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை படத்தின் பலம். நாயகியின் மன ஓட்டங்களும், அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பார்வையாளர்களுக்கும் அதே உணர்வை கடத்துகின்றன. பதின் பருவத்தை கடந்து வருபவர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை படம் வெளிப்படையாக பேசுகிறது. படத்தில் பேசப்படும் விஷயங்களை நிச்சயமாக ஆண்களும் தங்களோடு தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்.
கதை நாயகியான ரம்யா (அஞ்சலி சிவராமன்) என்ற பெண்ணின் வாழ்க்கையின் மூன்று பருவங்களை, அதில் அவர் சந்திக்கும் ஆண்கள், அவருடைய காதல்கள், பதின்பருவ ஏக்கங்கள் ஆகியவற்றை பேசுகிறது படம்.
குறிப்பிட்ட சமூக உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பதின்பருவ பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி எனவும் இப்படத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றம் வரை சென்று சென்சாரில் பல ‘கட்’களை பெற்று ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘பேட் கேர்ள்’.
படத்தின் குறிப்பிட்டு பாராட்டப்படவேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர்களான ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோர். நாயகியின் ஒவ்வொரு பருவத்திலும் ஒளிப்பதிவில் வெரைட்டி காட்டி அதற்கான மனநிலையை பார்வையாளர்களுக்கு ‘செட்’ செய்வதில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு அசர வைக்கிறது. அமித் திரிவேதியின் பின்னணி இசை படத்துக்கு தேவையான இடங்களில் ஒலித்து கதையின் போக்குக்கு உதவியிருக்கிறது.

படத்தின் குறையென்று பார்த்தால் ஒட்டுமொத்த படத்தையும் ஒருவித சீரியஸ் தன்மையிலேயே சொல்ல முயன்றிருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை வெவ்வேறு கட்டங்களாக சொல்லும்போது சில கலகலப்பான தருணங்களே இல்லையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

இதைத் தாண்டி குடும்ப அமைப்புகளில் பெண்களால் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்கள், ஒருபக்கம் தன் மகளிடம் கடுமை காட்டி ஒடுக்க முயலும் ஒரு பெண், இன்னொரு பக்கம் சமூகம் என்னும் கட்டமைப்பில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் முரண் போன்ற பல்வேறு நுணுக்கமான விஷயங்களை காட்டியதிலும், இதுவரை தமிழ் சினிமாவில் பெண்கள் குறித்த உருவாக்கப்பட்டிருந்த கற்பிதங்களை உடைத்த விதத்திலும் இயக்குநர் வர்ஷா பரத் ஜெயித்திருக்கிறார்.
ஆண்களைப் பற்றி ஆண்களே சொல்லும், பெண்களின் கதையையும் ஆண்களே சொல்லும் ஒரு திரைச்சூழலில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையையும், சமூகம் மற்றும் குடும்பத்தால் அவள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளையும் ஒரு பெண்ணே பேசும் இந்த ‘புரட்சிகர’ முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதே!

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்

தனுஷின் ‘அம்பிகாபதி’ ரீ-ரிலீஸ் சர்ச்சை!‘ஏஐ’ க்ளைமாக்ஸ் 

தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘ராஞ்சனா’. இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது.
படம் இருமொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பார்வையாளர்களை திரையரங்குக்கு வர வைக்கும் வகையில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட்டது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது படத்தின் க்ளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால் ஏஐ துணையுடன் அவர் மீண்டும் உயிர்பெற்று வருவது போல க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கண்டனம் தெரிவித்தார். படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், படத்தின் ஆன்மாவை சிதைக்கும் செயல் என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தார். இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள Eros Media World குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “‘அம்பிகாபதி’ (Raanjhanaa) திரைப்படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. அதனால், நாங்கள் சட்டப்பூர்வமாக இதைப் புதுப்பித்து வெளியிட அதிகாரம் பெற்றுள்ளோம்.
முன்னோடியான தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்து, புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில், ஒரே நேரத்தில் அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது ‘புதிய பதிப்பாக’ தனியாகவும், தெளிவாகவும் குறியிடப்பட்டுள்ளது – இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, ஒட்டுமொத்தத்தை மாற்றுவதுமல்ல. இது ஒரு கலையின் புதிய வடிவம்.
இது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், புதிய தொழில்நுட்பங்களைக் கலையுடன் இணைக்கும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

நான் ஒரு மிடில் கிளாஸ் தான்; பத்ம பூஷன் விருது பெற்ற அஜித், ரசிகர்களுக்கு நன்றி!

பத்ம பூஷன் விருது வென்ற நடிகரும் கார்பந்தய வீரருமான அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்த அஜித், விரைவில் நேரில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்மபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நடன கலைஞரும் நடிகையுமான, ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

கலைத்துறையில் குருவாயூர் துரை, சமையல் கலைஞர். செப் தாமோதரன், பத்திரிக்கையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்பா சம்பந்தம், கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடிகர் அஜித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள், அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

 நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு இன்று பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது..!

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

இந்த ஆண்டில் இதுவரை வெளியான 45 தமிழ் படங்களில் 4 படங்கள் மட்டும் தான் ஹிட்.. என்ன படங்கள்?

2025-ம் ஆண்டு தொடங்கி 3-வது மாதத்தில் இருக்கிறோம். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவின. சில படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை 45 படங்கள் தமிழில் வெளியானதாகவும், அதில் 4 படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றியடைந்துள்ளதாகவும், தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். அது என்ன படங்கள் என்பது குறித்து பார்ப்போம்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘மதகஜராஜா’. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. நக்கலைட்ஸ் யூடியூப் குழுவினரின் வெள்ளித்திரை முயற்சியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜுன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், திரையரங்குகள், டிஜிட்டல் ரைட்ஸ் உள்ளிட்டவற்றில் வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ரூ.36 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.50 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.

Read More
சினிமா

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்
சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அரண்மனை 4’ வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை இயக்கிய சுந்தர்.சி நாயகனாகவும் நடித்துள்ளார்.
மேலும் படத்தை அவரே தயாரித்துள்ளார். இதில் சிங்காரம் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விநியோகஸ்தர்கள் இதன் தமிழக உரிமையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Read More
சினிமாதமிழ்நாடு

‘Bad Girl’ படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு மனு: படத்தை தொடரும் சர்ச்சைகள்..!

‘Bad Girl’ படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு மனு: படத்தை தொடரும் சர்ச்சைகள்..!
Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பாரத் இயக்கியுள்ள திரைப்படம் ‘Bad Girl’. இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளனர். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டின்ஏஜ் பெண் ஒருவரின் மன ஓட்டங்களையும், காதலையும், உணர்வுகளையும் வெளிபடுத்தும் விதமாக இருந்த டீசரில், பாலியல் உணர்வுகள் சார்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பின. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது 2025-க்கான மிக உயரிய விருதாக கருதப்படும் NETPAC விருதினை வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘Bad Girl’ திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்துக்கு சென்சார் சான்று வழங்க கூடாது என ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் அவமதிக்கும் விதத்தில் bad girl திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More
சினிமா

விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதையில் ஷாம்.. ‘அஸ்திரம்’

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் களத்தில் உருவாகியுள்ள காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் நடித்துள்ள படம் ‘அஸ்திரம்’. நடிகர் ஷாம் உடன் நிரஞ்சனி, நிழல்கள் ரவி, அருள் டி ஷங்கர், ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘பொம்மை நாயகி’ படத்துக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தன ஷண்முகமணி இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More