Kerala

Election 2026அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு: வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது.

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் – திமுக கூட்​டணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 4 பிராந்​தி​யங்​களி​லும் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களுக்கு நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,099 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​தல் பணி​யில் 5,000 அதி​காரி​கள், பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

காலை முதலே மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்​குப்பதிவு நடந்​துள்ளது‌. தொடர்ந்து பெறப்​படும் தபால் வாக்​கு​கள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்​தல் அதி​காரி ஜவஹர் கூறி​யுள்​ளார். புதுச்​சேரி​யில் இதுவரை நடந்த தேர்​தல்​களில் இதுவே அதி​கபட்ச வாக்​குப்​ப​திவு ஆகும்.

கேரளா​வின் மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கும் ஒரே கட்​ட​மாக நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது. 883 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.69 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 30,471 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. 76,203 போலீ​ஸார், மத்​திய படைகளை சேர்ந்த 140 அணி​கள் மற்​றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணி​களை சேர்ந்த வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 1.46 லட்​சம் அரசு ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.கண்​ணூர் மாவட்​டம் பின​ராயி நகரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் வாக்​களித்​தார். கேரளாவில் ஒட்​டுமொத்​த​மாக 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

அசாமின் 126 தொகு​தி​களுக்​கும் நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆளும் பாஜக தலை​மையி​லான வடக்​கு-கிழக்கு ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 722 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.50 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 31,486 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டிருந்​தன. மாநில போலீஸார், மத்​திய பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்கும் மேற்பட்ட வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். 2 லட்​சம் ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

முதல்​வரும், பாஜக மூத்த தலைவரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்​டி​யின் அசா​ரா​வில் குடும்​பத்​துடன் வாக்​களித்​தார். திப்​ரு​கார் பகு​தி​யில் பாஜக – அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்​டர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலில் பலர் காயமடைந்​தனர். பெரும்​பாலான பகு​தி​யில் வாக்​குப்​ப​திவு அமை​தி​யாக நடை​பெற்​றது. 85.38 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தொகுதி மறுவரையறை விவகாரம்.. கர்நாடகா, ஆந்திராவுக்கு சென்ற தமிழக அரசின் குழுக்கள்!

தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்கும்படி கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் கடந்த 5ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, தென் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள கட்சிகளின் தலைவர்களை திமுக பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெங்களூரு சென்ற அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி அப்துல்லா அடங்கிய குழு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து, தென் மாநிலக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
அப்போது, கர்நாடக முதலமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 22ஆம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும், கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்க கர்நாடக அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு மட்டுமின்றி, தென்மாநில மக்களின் நலனைப் பாதிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் சித்தராமையா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, ஆந்திர மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா ஸ்ரீநிவாச ராவை சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அழைப்பு விடுத்தனர்.
இதன் பின்னர், ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தார். இதேபோல, டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., டெரிக் ஓ பிரையனை சந்தித்த திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர், சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

Read More
Covid19இந்தியாதமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கும் கொரோனா,பட்டியலில் முதலிடம் தமிழகம், வரிசையில் தொடர்கிறது கேரளா….

தமிழகத்தில் மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ,அதன் காரணமாக கொரோணா பாதிப்பில் முதலிடம் தமிழ்நாடு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

Read More
Covid19இந்தியா

கேரளாவில் இன்று ஒரேநாளில் 41 ஆயிரத்து 953 பேருக்கு புதிதாக தொற்று உறுதி

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று

Read More
அரசியல்

ஐந்து மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு – விறுவிறுப்பான தேர்தல் களம்!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில்

Read More
அரசியல்இந்தியா

தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்தார். கேரளா மாநிலத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து

Read More