CRICKET

IPL - 2020இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி; 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கவில்லை. ஆசியக் கோப்பையிலும் இந்திய – பாகிஸ்தான் கேப்டன்கள் கைகுலுக்கவில்லை. இது டி20 உலகக்கோப்பையில் தொடர்கிறது.

டி20 உலகக் கோப்பையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி கொழும்பு பிரேமதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தை பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். 9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. 11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

19-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இவர் 29 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் தாரீக் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்கருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது ஷிவம் துபே ரன்அவுட் ஆனார். கடைசி பந்தை அக்சர் படேல் சந்தித்தார். அதில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சகிப்சதா ஃபர்ஹான், சயீம் ஆயுப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஃபர்ஹான் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து சல்மான் ஆகா களம் இறங்கினார். 2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்.பி.பி.டபிள்யூ ஆனார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். அதன்பின் பாகிஸ்தான விக்கெட்டுகள மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களில் ஆல்அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. தொடக்கம் முதலே துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பால் இந்தியா இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது.61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
டி20 உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் இறுதிவரை ஆதிக்கம் செலுத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள், பாகிஸ்தான் அணியை 114 ரன்களுக்குச் சுருட்டினர்.

Read More
இந்தியாஉலகம்விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா…

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் அந்த இரு அணிகள் மோதிய இறுதிப்போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
8 அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சகிப்சதா பர்கான் – பகர் ஜமான் இணை முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. பர்கான் 57 ரன்னிலும், பகர் ஜமான் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சைம் அயுப் 14 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க அதிர்ச்சியாக அமைந்தது. அபிஷேக் சர்மா 5 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து தடுமாறியது. அடுத்து இணைந்த சஞ்சு சாம்சன் – திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சாம்சன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த திலக் வர்மா – சிவம் துபே இணை 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பொறுப்புடன் விளையாடிய சிவம் துபே 22 பந்துகளில் தலா 2 சிக்சர் பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது திலக் வர்மாவும், ரின்கு சிங்கும் களத்தில் இருந்தனர். இந்த ஓவரை ஹாரிஸ் ரவுப் வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட, அடுத்த பந்தை திலக் வர்மா சிக்சருக்கு அனுப்பினார்.
3 ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட, 4 ஆவது பந்தை ரின்கு சிங் பவுண்டரிக்கு விரட்டியபோது இந்திய அணி 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா 53 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலற விட்ட ஆகாஷ் தீப்!49 ஆண்டு கால சாதனையை தகர்த்தது !

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் 49 ஆண்டு கால சாதனையை தகர்த்துள்ளார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 427/6 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
ஆட்டநாயகன் கேப்டன் சுப்மன் கில்
இதனால் 608 என்ற இமாலய இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 68 ஓவரில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மேலும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதன் முறையாக வெற்றியை ருசித்துள்ளது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (269 ரன்கள்), 2வது இன்னிங்சில் சதம் (161 ரன்) விளாசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
ஆகாஷ் தீப் 10 விக்கெட்
இந்திய அணி பாஸ்ட் பவுலர் ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2 இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் தீப் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளும் வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். மற்றொரு பவுலர் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 1 விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

ஆகாஷ் தீப் பெரும் சாதனை

இங்கிலாந்து மண்ணில் களம் கண்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். குறிப்பாக அவர் 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேரை (பென் டக்கெட், ஜோ ரூட், ஆலி போப் மற்றும் ஹாரி புரூக்) ஆகியோரை ஒரே இன்னிங்ஸில் அவுட்டாக்கிய‌ முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் தீப் பெற்றுள்ளார்.
சிறந்த இந்திய பவுலர்
மைக்கேல் ஹோல்டிங் 1976ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முதல் 4 பேட்ஸ்மேன்களை அவுட்டாகியிருந்த நிலையில், ஆகாஷ் தீப் அவரது சாதனையை முறியடித்துள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்து வீசிய முதல் இந்திய பந்துவீச்சாளர் (187/10) என்ற பெருமையை ஆகாஷ் தீப் பெற்றார்.

முன்னாள் வீரர் சேத்தன் சர்மாவின் 10/188 சிறந்த பவுலிங்கை ஆகாஷ் தீப் முறியடித்துள்ளார். முகமது ஷமி போன்று பந்துவீசுவதால் ‘குட்டி’ ஷமி என அழைக்கப்படும் ஆகாஷ் தீப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Read More
IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது RCB அணி-IPL 2025

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் அதிரடியாக விளையாடி 1 சிக்சர், 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். மயங்க் அகர்வால் 24 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 26 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர்.
லிவிங்ஸ்டோன் 25 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 43 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் கொடுத்தார். ஜித்தேஷ் சர்மா 10 பந்துகளில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்துள்ள ஆர்சிபி அணி 190ரன்கள் எடுத்தது. இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது.
பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களும், ஜாஷ் இங்லீஷ் 39 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மேட்ச்சில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மிகவும் தடுமாறிய நேஹல் வதேரா 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சஷாங்க் சிங் அணிக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.
கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டபோது ஸ்கோர் 162/7 என இருந்தது. கடைசி ஓவர் ஹேசல்வுட் வீசினார். இந்த ஒவரில் 0, 0, 6,4,6,6 என அமைந்து 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 30 பந்துகளை எதிர்கொண்ட சஷாங்க் சிங் 6 சிக்சர் 3 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

விராட்கோலி ஓய்வு – டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பது…

123 டெஸ்ட் போட்டிகள், 210 இன்னிங்ஸ்கள், 9230 ரன்கள், 30 சதங்கள்… இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய காலகட்டத்தில், இந்தியாவின் பேட்டிங் வரிசையின் ஆன்மாவாகவும், முதுகெலும்பாகவும் அவர் திகழ்ந்தார். அணியை நிலைநிறுத்துவதிலும், எதிரணியை நொறுக்குவதிலும் அவரது பங்கு அளப்பரியது. அவரது ஆட்டம் பலரது வாழ்க்கையில் அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. டெண்டுல்கரைப் போலவே, கோலியும் ஒரு விளையாட்டு வீரரைத் தாண்டி, ஒரு தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, உணர்வுப்பூர்வமான பிணைப்பாக இருந்தார். அவரது பேட்டிங் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் ரசிகர்களை பிரமிக்க வைத்தாலும், மறுபுறம் அணி தோல்வியடையும்போது அதே ரசிகர்களின் விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மரபு மிகவும் தெளிவானது. அவர் இந்திய மண்ணில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு சரிவு அவரது புள்ளிவிவரங்களை சற்று குறைத்திருக்கலாம். ஒரு காலத்தில் அனைத்து பேட்டிங் சாதனைகளையும் முறியடித்து, யாரும் நெருங்க முடியாத உச்சத்தை எட்டுவார் என்று கணிக்கப்பட்ட விராட்கோலி, விதிவசத்தால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனாலும், இன்று அதிக ரன் குவித்த இந்தியாவின் நான்காவது வீரராக விடைபெறுகிறார்.
123 டெஸ்ட் போட்டிகள், 210 இன்னிங்ஸ்கள், 9230 ரன்கள், 30 சதங்கள்… இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய காலகட்டத்தில், இந்தியாவின் பேட்டிங் வரிசையின் ஆன்மாவாகவும், முதுகெலும்பாகவும் அவர் திகழ்ந்தார். அணியை நிலைநிறுத்துவதிலும், எதிரணியை நொறுக்குவதிலும் அவரது பங்கு அளப்பரியது. அவரது ஆட்டம் பலரது வாழ்க்கையில் அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. டெண்டுல்கரைப் போலவே, கோலியும் ஒரு விளையாட்டு வீரரைத் தாண்டி, ஒரு தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, உணர்வுப்பூர்வமான பிணைப்பாக இருந்தார். அவரது பேட்டிங் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் ரசிகர்களை பிரமிக்க வைத்தாலும், மறுபுறம் அணி தோல்வியடையும்போது அதே ரசிகர்களின் விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மரபு மிகவும் தெளிவானது. அவர் இந்திய மண்ணில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு சரிவு அவரது புள்ளிவிவரங்களை சற்று குறைத்திருக்கலாம். ஒரு காலத்தில் அனைத்து பேட்டிங் சாதனைகளையும் முறியடித்து, யாரும் நெருங்க முடியாத உச்சத்தை எட்டுவார் என்று கணிக்கப்பட்ட விராட்கோலி, விதிவசத்தால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனாலும், இன்று அதிக ரன் குவித்த இந்தியாவின் நான்காவது வீரராக விடைபெறுகிறார்.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

சென்னை அணிக்கு 6 ஆவது தோல்வி..16 ஓவருக்குள் ஆட்டத்தை முடித்தது மும்பை இந்தியன்ஸ்

சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையிலான போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.
ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் அஸ்வினி குமார் வேதத்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஷேக் ரசீத் 19 ரன்களில் வெளியேற, அடுத்து இணைந்த ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
துபே 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன் களமிறங்கினர்.

தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 19 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து இணைந்த சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா இணை சென்னை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ஒவ்வொரு ஓவரிலும் இருவரும் சிக்சர், பவுண்டர்களை விளாசினர்.இதனால் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. இருவரும் கொடுத்த சில கேட்ச் வாய்ப்புகளை சென்னை அணி வீரர்கள் தவறவிட்டனர். ரோகித் சர்மா 45 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 76 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 30 பந்துகளில் 68 ரன்களும் குவித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 15.4 ஓவர்களில் மும்பை அணி 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

Read More
IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

4 ஆவது முறையாக சி.எஸ்.கே. தோல்வி.. 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது சென்னை அணி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான 4ஆவது தோல்வியாகும்.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துள்ள பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 103 ரன்கள் எடுத்தார்.

சஷாங்க் சிங் 52 ரன்களும், மார்க்கோ யான்சன் 34 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்து பிரமிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டெவோன் கான்வே, ரச்சின் ரவிந்திரா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு சென்னை அணி 61 ரன்கள் சேர்த்தது.

ரச்சின் 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் இணைந்த ஷிவம் துபே டெவோன் கான்வே இணை அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. துபே 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தோனி களமிறங்கியபோது 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த டெவோன் கான்வே ரிட்டையர்ட் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.
பெர்கூசன் வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 19 ஆவது ஓவரில் தோனி 1 சிக்சரும் பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில், யஷ் தாகூர் வீசிய முதல் பந்திலேயே தோனி ஃபைன் லெக் திரையில் இருந்த யுஸ்வேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார்.
பெர்கூசன் வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 19 ஆவது ஓவரில் தோனி 1 சிக்சரும் பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில், யஷ் தாகூர் வீசிய முதல் பந்திலேயே தோனி ஃபைன் லெக் திரையில் இருந்த யுஸ்வேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார்.

Read More
IPL - 2020இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

CRICKET – இந்திய அணி 3-வது முறையாக பட்டம் வென்று அசத்தியது ….

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.

துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் காயம் அடைந்த மேட் ஹென்றிக்கு பதிலாக நேதன் ஸ்மித் களமிறங்கினார். பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறந்த தொடக்கம் கொடுத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 4-வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டன. தொடர்ந்து முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரிகள் அடிக்க 11 ரன்கள் சேர்க்கப்பட்டன.

இதனால் நியூஸிலாந்து அணி 7 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி வில் யங்கை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். வில் யங் 23 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 10 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 69 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை வீசிய குல்தீப் யாதவ், ரச்சின் ரவீந்திராவை போல்டாக்கினார். 29 பந்துகளை எதிர்கொண்ட ரவீந்திரா ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து குல்தீப் யாதவ் தனது அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சனை வெளியேற்றினார். 14 பந்துகளில், 11 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன், குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து நடையை கட்டினார். இதன் பின்னர் களமிறங்கிய டாம் லேதம் 30 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். 108 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல்லுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்.

5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி பிரித்தார். கிளென் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய பிரேஸ்வெல் சீராக ரன்கள் சேர்த்தார். நிலைத்து நின்று விளையாடிய டேரில் மிட்செல் 91 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் அரை சதம் கடந்தார். டேரில் மிட்செல் 101 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் மைக்கேல் பிரேஸ்வெல் மட்டையை சுழற்றினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாச 50 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

252 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். கைல் ஜேமிசன் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரோஹித் சர்மா, வில்லியம் ரூர்க் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டினார். தொடர்ந்து நேதன் ஸ்மித் வீசிய 6-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி அசத்தினார் ரோஹித் சர்மா. பின்னர் நேதன் ஸ்மித் வீசிய 8-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளையும் விரட்ட இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 58-வது அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் 50 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் விளாசிய போது கிளென் பிலிப்ஸின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், ரோஹித் சர்மா ஜோடி 18.4 ஓவர்களில் 105 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

சிறப்பாக பேட் செய்து வந்த ரோஹித் சர்மா 83 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து விளாச முயன்ற போது ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஐசிசி தொடர்களில் (50 ஓவர்) இது அவரது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. 122 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயருடன், அக்சர் படேல் இணைந்தார்.

மைக்கேல் பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோரது பந்தில் சிக்ஸர் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து வந்தார். சீராக ரன்கள் சேர்த்த அவர், 48 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 48ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தில், ஷாட் ஃபைன் லெக் திசையில் ரச்சின் ரவீந்திராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 38.4 ஓவர்களில் 183 ஆக இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்த போது அணியின் வெற்றிக்கு 68 பந்துகளில் 69 ரன்கள் தேவையாக இருந்தன.

இதையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் விரைவாக ரன்கள் சேர்க்க முயன்றார். பிரேஸ்வெல் வீசிய 41.4-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அக்ஸர் படேல் 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் பிரேஸ்வெல் பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்த போது வில் ரூர்க்கிடம் கேட்ச் ஆனது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 49 ரன்கள் தேவையாக இருந்தது.

இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடினார். ரவீந்திரா வீசிய 46-வது ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தன. வில் ரூர்க் வீசிய 47-வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. 18 பந்துகளில் 12 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கைல் ஜேமிசன் வீசிய 48-வது ஓவரின் 3-வது பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஹர்திக் பாண்டியா வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஜடேஜா களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்தன. வில் ரூர்க் வீசிய 49-வது ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விளாச முடிவில் இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா 9 ரன்களும், கே.எல்.ராகுல் 33 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பட்டம் வென்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2002-ம் ஆண்டு தொடரில் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. 2013-ம் ஆண்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது. தற்போது 3-வது முறையாக வாகை சூடியுள்ளது. ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வானார்கள்.

பதிலடி கொடுத்த இந்தியா: 2000-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை வென்றிருந்தது. இந்த தோல்விக்கு 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது பதிலடி கொடுத்துள்ளது இந்திய அணி.

ரூ.19.50 கோடி பரிசு: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெற்றது.

Read More
இந்தியாவிளையாட்டு

ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி..

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். லபுஷேன் 29 ரன்களும், ஜோஷ் இங்லீஸ் 11 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
96 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயரால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வருண் சக்ரவர்த்தி, ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் கில் 8 ரன்னிலும், ரோஹித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அடுத்து இணைந்த கோலி – ஷ்ரேயாஸ் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 45 ரன்னில் வெளியேற, சிறப்பாக விளையாடிய கோலி அரை சதம் கடந்தார்.

அக்சர் படேல் 27 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
48.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. கே.எல்.ராகுல் 42 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Read More
இந்தியாவிளையாட்டு

‘இந்திய அணியில் புறக்கணிப்பு’.. சிஎஸ்கே கேப்டன் பதவியும் பறிக்கப்படும்? ருதுராஜுக்கு இக்கட்டான நிலை!

இந்திய அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎலில் தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தி வருகிறார்.

கடந்த ஐபிஎல் 17ஆவது சீசனில் கூட, விராட் கோலிக்கு அடுத்து, அதிக ரன்களை குவித்த வீரராக திகழந்தார். இப்படி சிறப்பாக செயல்பட்டும், இந்திய அணியில் இவருக்கு எப்போதாவது ஒருமுறைதான் வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த ஒரு வருடத்தில், அந்த வாய்ப்புகள் கூட கிடைப்பதில்லை.
சமீபத்தில், விஜய் ஹசாரே டிராபி தொடரில், சர்விஸ் அணிக்கு எதிராக 148 ரன்களை குவித்து அசத்தினார். இருப்பினும், அதன்பிறகு நடைபெற்ற காலியிறுதி ஆட்டத்தில், பஞ்சாப் அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் 5 (5) ரன்களைதான் சேர்த்தார். மேலும், சர்விஸ் அணிக்கு எதிராக 148 ரன்களை அடித்ததையும் சேர்த்து, இத்தொடரில் 1,8, 12, 13, 5 என 8 போட்டிகளில் வெறும் 187 ரன்களைதான் சேர்த்திருக்கிறார்.
சையம் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் இதே நிலைமைதான். அப்போதும், சர்வீஸ் அணிக்கு எதிராக 97 ரன்களை விளாசிவிட்டு, மற்ற போட்டிகளில் படுமோசமாக சொதப்பினார். இத்தொடரில், 5 போட்டிகளில் களமிறங்கிய அவர், வெறும் 123 ரன்களைதான் எடுத்தார். இதன்மூலம், ருதுராஜ் கெய்க்வாட் பார்ம் அவுட்டில் இருப்பது தெரிய வருகிறது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ‘‘உள்ளூர் தொடர்களில் ருதுராஜ் கெய்க்வாட்டின் பார்ம் சிறப்பாக இல்லை. சமீப காலமாக அவர் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். இதன் காரணமாகத்தான், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை சேர்க்க முடியவில்லை’’ எனக் கூறினார்.

Read More