ajith

இந்தியாசினிமாதமிழ்நாடு

நான் ஒரு மிடில் கிளாஸ் தான்; பத்ம பூஷன் விருது பெற்ற அஜித், ரசிகர்களுக்கு நன்றி!

பத்ம பூஷன் விருது வென்ற நடிகரும் கார்பந்தய வீரருமான அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்த அஜித், விரைவில் நேரில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்மபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நடன கலைஞரும் நடிகையுமான, ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

கலைத்துறையில் குருவாயூர் துரை, சமையல் கலைஞர். செப் தாமோதரன், பத்திரிக்கையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்பா சம்பந்தம், கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடிகர் அஜித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள், அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

 நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு இன்று பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது..!

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

குட் பேட் அக்லி ட்ரைலர் ரிலீஸ் பற்றி அப்டேட்..!

அஜித் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஆதிக் ரவிச்சந்திரனுடன் முதல் முறையாக அஜித் இப்படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார். மார்க் ஆண்டனி என்ற படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றார். அவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு குட் பேட் அக்லி படத்தின் மூலம் கிடைத்துள்ளது.
இந்த மிகப்பெரிய வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு ஆதிக் உருவாக்கியிருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இதையெல்லாம் தாண்டி ஆதிக் தீவிரமான அஜித் ரசிகர். எனவே இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அஜித்தை பார்த்து பார்த்து செத்துக்கியிருப்பார் என்பது இப்படத்தின் டீசரை பார்க்கும்போதே தெரிகின்றது.
சில தினங்களுக்கு முன்பு வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. டீசரில் அஜித் மாஸாகவும் அதே சமயம் பல கெட்டப்களிலும் தோன்றினார். குறிப்பாக அவரின் பல கெட்டப்கள் டீசரில் ஹைலைட்டான விஷயமாக இருந்தது.
இதன் மூலமே இப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

அஜித்தின் ‘விடாமுயற்சி’ … விமர்சனம் 

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பார்த்த பின், பலரும் தங்கள் கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று ‘விடாமுயற்சி’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அஜித்குமாரின் இன்ட்ரோ சிறப்பாக இருப்பதாகவும், அனிருத் இசை ஓகே என்றும், படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
’விடாமுயற்சி’ நல்ல முயற்சி என நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
படம் எங்கேஜிங்காகவும், த்ரில்லிங்காகவும் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Read More
சினிமாதமிழ்நாடு

இந்த சூப்பர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு… செம்ம வைப்

‘குட் பேட் அக்லி’ படத்தில் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த புகழ்பெற்ற பாடல் ஒன்றை படக்குழு ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

Read More
சினிமாதமிழ்நாடு

பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றார். இந்த சமயத்தில் ஏர்போட்டிற்கு வந்த ரஜினியுடன் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்ததை பற்றி கருத்து கேட்டுள்ளனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்
மறுபக்கம் அஜித் தன் இரு பட வேலைகளையும் முடித்துவிட்டு கார் ரேஸில் கலந்துகொண்டு வருகின்றார். துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் செம பிசியாக இருக்கின்றார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.
என்னதான் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என புத்தாண்டை முன்னிட்டு தகவல் வந்தாலும் இந்தாண்டு அஜித்தின் ஆண்டாகவே இருக்கும் என தெரிகின்றது. கார் பந்தயத்தில் வெற்றி, பத்மபூஷன் விருது, இரண்டு படங்கள் ரிலீஸ் என அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஒரு கொண்டாட்டமான வருடமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை பலரும் வாழ்த்திய நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கூலி படப்பிடிப்பில் ககலந்துகொள்ளவோ அல்லது படப்பிடிப்பை முடித்துக்கொண்டோ ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளார் ரஜினி. அவரிடம் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளதை பற்றி கேட்கின்றனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு சென்றார்.இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது

Read More
சினிமாதமிழ்நாடு

தள்ளிப்போகிறதா அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி?

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் டிரைலர்… ரிலீஸ் தேதி குறித்து வெளியான அப்டேட்!

Read More
சினிமாதமிழ்நாடு

கடவுளே அஜித் என அழைக்காதீர்கள், கவலை அளிக்கிறது – முற்றுப்புள்ளி வைத்த அஜித்

பொது இடங்களில் அஜித் ரசிகர்கள் கடவுளே அஜித் என்று சொல்லி அண்மை காலமாக டிரெண்ட் செய்து வந்த நிலையில் இதுப்போன்ற கோஷங்கள் எனக்கு கவலை அளிப்பதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சூட்டிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் விரும்பும் கார் ரேஸிங்கிலும் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கார் ரேஸிற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக மிகவும் டிரெண்டாகி வரும் வீடியோ என்றால் அது கடவுளே அஜித் என்பதாக தான் இருக்க முடியும். தியேட்டர், பொது இடங்கள் என ஆரம்பித்த இந்த கோஷம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி வரை ஒலித்தது. இன்ஸ்டாவிலும் இந்த வீடியோவை வைத்து பல ரீல்ஸ்களுக்கு லைக் குவிந்து வருகிறது.

தல என்று ரசிகர்கள் அழைப்பதையே ஏற்காத அஜித், கடவுளே என்று அழைப்பதை எப்படி அவர் ஏற்பார். வாழு, வாழ விடு என்று எப்போது தனக்கென பாதையில் நடந்து வரும் தற்போது கடவுளே என்று ரசிகர்கள் அழைப்பதை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள கடிதத்தில், சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க….அஜித்தே “என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

Read More
சினிமாதமிழ்நாடுவிளையாட்டு

15 ஆண்டுகளுக்கு பின் ரேஸிங் களத்தில் அஜித்… போர்ஷே காரில் கெத்தாக வந்த டீம்!

கார் பந்தயங்களில் அதீத ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித் குமார் அடுத்தாண்டு மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குகிறார். அஜித் குமார் ரேசிங் என்ற அணியின் உரிமையாளராகவும் அவரே திகழ்கிறார். தனது அணியின் பந்தய வீரர்கள் யார் என்று அண்மையில் அஜித் குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது நிறுவனத்தின் காரிலும் அஜித் பயன்படுத்தியுள்ளார்.
15 ஆண்டுகளுக்குப் பின் ரேஸிங் களத்தில் இறங்கியுள்ள அஜித், பந்தயத்தில் பயன்படுத்தப்படும் உடைகள், கார்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த அஜித் குமார், தனது நிறுவன லோகோ பதித்த காரை ஆவலுடன் பார்த்தார். மேலும், தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய லோகோவையும் அஜித் சுட்டிக்காண்பித்து ரசித்தார். அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.
ஐரோப்பிய ஜிடி 4 கார் பந்தயத்துக்கு தயாராகும் தனது நிறுவன ஸ்போர்ட்ஸ் காரை அஜித் ரசித்துப் பார்த்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More