Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்… புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
2021 செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் – 2021’ என்ற மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து, 2022 பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் இந்த மசோதா ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டதாக, கடந்த 4ஆம் தேதி பேரவையில் முதலமைச்சவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், இதில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 92. காங்கிரஸின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த குமரி அனந்தன் குறித்து விரிவாக பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். இவரது இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ் மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.

இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன் 4 மகள்கள். அவர்களில் ஒருவர்தான் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் குமரி அனந்தன்.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 92. காங்கிரஸின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த குமரி அனந்தன் குறித்து விரிவாக பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். இவரது இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ் மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.

இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன் 4 மகள்கள். அவர்களில் ஒருவர்தான் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் குமரி அனந்தன்.
தொடர்ந்து 1984ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆனார்.
தொடர்ந்து 1984ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆனார்.
‘இலக்கியச் செல்வர்’ என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 29 நூல்களை எழுதி உள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

பா.ஜ.க மாநில தலைவர் பதவி? நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முடித்துக் கொண்டு வெளியேறியது. அப்போது கூட்டணி முறிவுக்கு காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அப்போதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் விரிசல் ஏற்பட்டது. அதையடுத்து பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் 2026 தேர்தலை குறிவைத்து அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கி இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்தனர். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பில் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை எம்எல்ஏ நாகேந்திரன் டெல்லி தலைமை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்ந்தெடுத்தால் எல்லாம் சுலபமாக முடியும் என பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் நயினார் நாகேந்திரன் சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர் காத்திருக்கும் அறையில் இரண்டு மணி நேரம் காத்திருந்த நயினார் நாகேந்திரன் விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். பாஜகவின் மாநில தலைவர் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழக பாஜக மாநில தலைவர் யார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

கருப்புச்சட்டை அணிந்து வந்து அ.தி.மு.க-பேரவையில் பேச அனுமதி

கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் வருகை தந்தனர். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்துள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் உயர்வு; சென்னை பிரஸ் கிளப்புக்கு ரூ.2.5 கோடி நிதி – உதயநிதி அறிவிப்பு

சென்னை பத்திரிக்கையாளர் மன்ற வளாகத்தில் கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு அளிக்கும் விழாவின்போது உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பரிசளிப்பு விழா சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வென்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார்.
பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய அரசு அமைந்த பிறகு 10,000 ரூபாயாக இருந்த பத்திரிகையாளர் ஓய்வூதிய தொகையை நமது முதல்வர் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினார்.

பத்திரிகையாளர்கள் குடும்ப ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி 3 லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டது. பத்திரிகையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நம்முடைய முதல்வர் கடந்த ஆண்டு மீண்டும் அந்த நிதியை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வைக்கப்பட்ட கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துகின்ற வகையில் நம்முடைய அரசு சார்பாக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். உங்களுடைய மற்ற கோரிக்கைகளும் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பி., தயாநிதி மாறன், விஜய் வசந்த், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகம், பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடு

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈ.டி ரெய்டு; அமைச்சர் நேருவின் மகன், சகோதரர் இடங்களில் சோதனை

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈ.டி ரெய்டு; அமைச்சர் நேருவின் மகன், சகோதரர் இடங்களில் சோதனை
கே.என்.நேருவின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை
ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

இந்தியன் 3..கமல் – ஷங்கர்- பிரமாண்டம்

2017 ஆம் ஆண்டு ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கிய நிலையில் பல தடங்கல்கள், பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகளால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் ஒரு சில வருடங்களுக்கு பிறகு விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலின் முயற்சியால் மீண்டும் இந்தியன் 2 தூசிதட்டப்பட்டு கடந்தாண்டு வெளியிடப்பட்டது. ஆறு வருடங்கள் கழித்து இப்படம் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் படம் வெளியான பிறகு நேர்மறையான விமர்சனங்களே வந்தது. கடுமையாக இந்தியன் 2 விமர்சிக்கப்பட்டது. இதுவரை தோல்வியே கண்டிராத ஷங்கர் இந்தியன் 2 மூலம் முதன் முதலில் சறுக்கினார். மிகப்பெரிய தோல்வியையும் விமர்சனத்தையும் இப்படம் சந்தித்தது.தொடர்ந்து வெளியாவதாக இருந்த இந்தியன் 3 சொன்னபடி ரிலீஸாகுமா ? என்ற சந்தேகமும் உண்டானது. ஒரு தோல்வி படத்தின் அடுத்த பாகத்தை யாரும் உருவாக்கமாட்டார்கள். எனவே இந்தியன் 3 கண்டிப்பாக வெளியாகாது என்றே பெரும்பாலானோர் கூறினார்கள். ஆனால் ஷங்கர் கண்டிப்பாக இந்தியன் 3 ரிலீசாகும், அதுவும் திரையில் தான் ரிலீசாகும் என்றார்.
இப்படத்தின் வேலைகள் விரைவில் துவங்கவுள்ளதாம். இந்தியன் 2 படத்தின் விழாவில் கமல், இந்தியன் 3 மீது தான் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது என்றார். அந்த நம்பிக்கை சங்கருக்கும் இருக்கின்றதாம். கண்டிப்பாக இந்தியன் 3 ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்ற மாபெரும் நம்பிக்கை ஷங்கர் மற்றும் கமலுக்கு உள்ளதாம். எனவே அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப இந்தியன் 3 வெற்றிபெறும் பட்சத்தில் இப்படம் சரித்திரத்தில் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எந்த ஒரு தோல்வி படத்தின் அடுத்த பாகமும் இதுவரை வெளியானது இல்லை. அப்படியே வெளியானாலும் அது வெற்றிபெற்றதில்லை. அப்படி இந்தியன் 3 ரிலீசாகி வெற்றிபெற்றால் கண்டிப்பாக இப்படம் புதியதொரு சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

புதிய பாம்பன் ரயில் பாலம் இன்று திறப்பு..! பிரதமர் மோடியின் பயணத்திட்டம்

535 கோடி ரூபாய் மதிப்பில் நவீன தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலம் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.
தனுஷ்கோடி நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டு கடந்த, 1914-ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை நடைபெற்று வந்த பாம்பன் பாலத்தில் 2022-க்கு பிறகு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது நவீன தொழில்நுட்பங்களோடு கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அனுராதபுரம் விமான தளத்தில் இருந்து காலை 10.40 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 11.45 மணியளவில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறையின் ஹெலிபேட் தளத்திற்கு வந்து இறங்குகிறார்.
தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய, புதிய பாம்பன் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான முதல் ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் இன்று ராமநவமி என்பதால், பகல் 12.40 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு 1.30 மணிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு சாலை மார்க்கமாக மீண்டும் மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் 3.00 மணிக்கு மதுரை புறப்படுகிறார். பின்னர், 03.50 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி, ராமேஸ்வரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனிடையே, பிரதமர் சாமி தரிசனம் செய்யவுள்ள ராமநாதசுவாமி கோயிலில், காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்யவும், கடலில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து நாளை வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க படகுகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள்- டிரம்பின் பரஸ்பர வரி

இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 26 சதவீதமாக உயர்த்தி பதிலுக்கு பதில் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பால் இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வர்த்தக வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் வரி உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் என நீண்டு கொண்டே போகிறது அமெரிக்காவின் வரி உயர்வு படலம். அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய தொழில்துறை கடும் பின்னடைவை எதிர்கொள்ளும் அபாயம் நிலவுவதாக கருதப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக நிபுணர்களின் கருத்துகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் குறைவான பாதிப்புகளே இருக்கும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், சீனா, ஜப்பான், வியட்நாம், இலங்கை போன்று ஏற்றுமதியை சார்ந்து இந்தியா இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாக திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பின்னலாடைத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் வரி உயர்வு உதவியாக இருக்கும் என இந்திய ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறுகிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் உருவாகும் பணவீக்கத்தால் அந்நாட்டு மக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளதாக தணிக்கையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கருத்துகள், இந்திய தொழில்துறைக்கு ஆதரவாக உள்ள நிலையில், வரி உயர்வு குறித்து அமெரிக்காவுடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் என்பதால் விரைவில் பெரிய அளவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்ஃபு சட்டத்திருத்த மசோதா… 128 ஆதரவு, 95 எதிர்ப்பு

மாநிலங்களவையில் வக்ஃபு மசோதாவுக்கு ஆதரவாக 128 பேரும், எதிராக 95 பேரும் வாக்களித்தனர்.
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா காரசார விவாதத்திற்குப் பிறகு நிறைவேறியது. வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக சாடினார். தொடர்ந்து பேசிய திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மசோதாவை கடுமையாக எதிர்த்தன.
வக்ஃபு வாரிய மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, வக்ஃபு வாரிய மசோதாவை வைத்து இஸ்லாமியர்களை அடக்குவதன் மூலம் மத்திய அரசு மோதலுக்கு வழிவகுப்பதாக குற்றஞ்சாட்டினார். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும் மல்லிகார்ஜூன கேட்டுக் கொண்டார்.

திமுக எம்.பி திருச்சி சிவா பேசும்போது, “வக்ஃபு நிர்வாகத்தை கைப்பற்றுவதற்குதான் வக்ஃபு வாரிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக” குற்றஞ்சாட்டினார். இந்த மசோதாவில் குறைபாடுகள் உள்ளதாகவும், இதனை முற்றிலும் நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, “இஸ்லாமியர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசும்போது, இந்தோனேஷியா, சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் வக்ஃபு வாரிய சட்டத்தை சீரமைத்த நிலையில், இந்தியா அதனை சீரமைக்கக் கூடாதா என்று கேள்வியெழுப்பினார். தற்போதைய வக்ஃபு சட்டத்தை தவறாக பயன்படுத்தி, 5 ஆயிரத்து 970 அரசு சொத்துகள், வக்ஃபு சொத்துகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழ்நாட்டின் திருச்செந்துறை கிராமத்தில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டி பேசினார்.

ஏழை இஸ்லாமியர்களை இந்த மசோதா பாதுகாக்கும் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான தேவ கவுடா தெரிவித்தார்.

128 ஆதரவு ; 95 எதிர்ப்பு

தொடர்ந்து 12 மணி நேர காரசார விவாதத்திற்குப் பிறகு நள்ளிரவு 2 மணியளவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நள்ளிரவு 2.45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக 95 பேர் வாக்களித்தனர்.

Read More