TNassembly

அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நாளை பதவியேற்கும் விஜய்? – அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி… 

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று சந்திக்க நேரம் கேட்டு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 11 இடங்கள் தேவைப்படும் நிலையில் அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று சந்திக்க நேரம் கேட்டு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் ஆட்சி அமைக்க அழைத்தால் அடுத்த 2 வாரங்களில் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதை தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்க்கு விசில் அடித்து, கை தட்டியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்ற விஜய், கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏறத்தாழ 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்க ஆதரவு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்தவும், விஜயுடன் சேர்த்து 21 அமைச்சர்களும் பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் தேர்வு தொடர்பாக பட்டினப்பாக்கம் இல்லத்திலும் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.அதன்படி, தவெக உத்தேச அமைச்சர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியான நிலையில், என்.ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், தமிழன் பார்த்திபன், சரவணன், முகமது பர்வேஸ், விஜய் சரவணன் ஆகியோரும் கல்லாணை, விஜயலட்சுமி, டி.கே. பிரபு, பாலாஜி, சத்யபாமா, ராஜ்மோகன், ஜே.சி.டி.பிரபாகர், வி.எஸ்.பாபு, சம்பத்குமார், மரிய வில்சன், சபரிநாதன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் அமைச்சராவார்கள் எனக் கூறப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், நண்பகல் 12 மணியளவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதில் சேர்க்க வேண்டிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதித்து, அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என தெரிகிறது
அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், புதிய திட்டங்கள், மக்கள் நல அறிவிப்புகள் மற்றும் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்பதால் அமைச்சரவைக் கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை – ஆளுனர் உரையுடன் இன்று தொடக்கம்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், வழக்கம்போல் ஆளுநரின் உரையுடன் ஆரம்பமாகிறது.
மரபுப்படி, ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, அதன் தமிழ உரையை சபாநாயகர் வாசிப்பார். இந்தத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆலோசனைக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த வகையில், தற்போது ராஜ்பவன் (லோக் பவன்) மற்றும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், இந்த ஆண்டு ஆளுநரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமான சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கே.பொன்னுசாமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரு நாள் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தொடர் சில முக்கிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறுவதால் மிகுந்த கவனம் பெறுகிறது:

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைஇன்று கூடுகிறது-மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வருகிறார் முதல்வர்

5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டுக்கான நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த 25-ஆம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மாநிலத்துக்கு அதிகஅதிகாரம் வழங்கும் வகையிலான இந்த தீர்மானத்தை, உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதிமுக-பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைந்துள்ள நிலையிலும், தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வுசெய்யப்பட்ட நிலையிலும் இன்றைய கூட்டம் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

கருப்புச்சட்டை அணிந்து வந்து அ.தி.மு.க-பேரவையில் பேச அனுமதி

கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் வருகை தந்தனர். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்துள்ளனர்.

Read More