pmmodi

அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது” – பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி …

என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சென்னை அடுத்த மதுராந்தகத்தில் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தற்போது பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது. தமிழ்நாட்டை பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுகவின் முடிவுக்காலத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.
திமுகவுக்கு இரண்டு முறை மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டனர். அவர்கள் இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. ஊழல், குண்டாஸ், குற்றம் ஆகியவற்றின் அரசு இங்கு இருக்கிறது. அதனை வேரடி மண்ணோடு கிள்ளி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் பாஜக, என்.டி.ஏ.வின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் ஜனநாயகம், நம்பகத்தன்மை உள்ளிட்டவை இல்லாத அரசுதான் இருக்கிறது. அரசு இங்கு ஒரே குடும்பத்திற்காக இயங்கிவருகிறது.
வம்சாவழி, ஊழல், பெண்களை வசைபாடுவது, கலாச்சாரத்தை வசைபாடுவது உள்ளிட்ட நான்கு வழிகள்தான் திமுகவில் இருப்பவர்கள் வளர்ச்சி பெற இருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் சுமக்க வேண்டியதாக இருக்கிறது.
நாட்டின் பண்பாட்டை வளம் நிறைத்ததாக மாற்றியது தமிழ்நாடு. வளர்ச்சி அடைந்த பாரதம் என நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு வளரும் வேகத்தில் பாரதம் வளரும்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாடு வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை செய்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக திமுக – காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாடுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப்பகிர்வு வாரியாக மட்டும் 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாடுக்கு வழங்கியிருக்கிறது.
திமுக – காங்கிரஸ் அரசு இரயில்வே பட்ஜெட்டில் அளித்த தொகையைவிட என்.டி.ஏ. அரசு 7 மடங்கு அதிக நிதியை வழங்கிவருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் போன்ற ரயில்களை என்.டி.ஏ. அரசுதான் செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இருந்து வருகிறது.
தமிழ், கலாச்சாரம், வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை எல்லாம் எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு உலக தலைவர்களுக்கு திருக்குறள் நூலை பரிசாக வழங்கியிருக்கிறேன். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். காசியிலே பல பிள்ளைகள் தமிழில் பேசுவது மகிழ்ச்சியை தருகிறது.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதியோடு பணியாற்றிவருகிறோம். சில நாட்களுக்கு முன்பு நமது முருகருக்கு விளக்கு போடுவதில் விவாதம் ஏற்படும்போது, நமது தலைவர்கள் எல்லாம், பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு பாராட்டு. திமுக – காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது. உங்களை அவமானப்படுத்தினர். என்.டி.ஏ. அரசு ஜல்லிக்கட்டுக்கு சட்ட ரீதியாக ஆய்வு செய்து அங்கீகாரம் கொடுத்தது. தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அரசு இருக்க வேண்டும். அந்த அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் அரசாக இருக்க வேண்டும்” என பேசினார்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஜன.23 மோடி தமிழகம் வருகை

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையை ஒதுக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், மோடி சாலை பயணத்தை தவிர்த்து முற்றிலும் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே பயணிக்க உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 1:15 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்படும் மோடி மதியம் 2:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பழைய முனையத்தை வந்தடைவார்.
பின்னர் மதியம் 2.25 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டரில் ஏறி பிற்பகல் 3 மணிக்கு நேரடியாக மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார். இந்த பொதுக் கூட்டம் மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டு உரையற்றுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி மாலை 4:30 மணிக்கு மதுராந்தகத்தில் இருந்து அதே ஹலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் திரும்புவார். அங்கிருந்து மாலை 5:05 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்வார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (SPG) குழு ஒன்று சென்னை வந்தது. நேற்று (ஜன.20) காலை, பழைய சென்னை விமான நிலைய முனையத்தில் சிறப்பு குழு பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை நடத்தியது.
பிரதமரின் சிறப்பு விமானங்களுக்கான பார்க்கிங் பகுதி, நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் மண்டலம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான பணியமர்த்தல் திட்டம் ஆகியவற்றை சிறப்பு பாதுகாப்பு குழு விரிவாக ஆய்வு செய்தது. 20-ஆம் தேதி முதல் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் வருகை வரை நான்கு நாட்களுக்கு பழைய சென்னை விமான நிலையத்தை விரிவான பாதுகாப்பின் கீழ் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஆய்வைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் விமான நிலையம் தரையிறங்கும் பகுதியை பாதுகாப்பு குழு ஆய்வு செய்வதற்காக மதுராந்தகத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“தமிழ்நாட்டிற்கு ரூ. 3 லட்சம் கோடி.. காங்கிரஸைவிட 3 மடங்கு அதிக நிதி கொடுத்திருக்கிறோம்” – பிரதமர் 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்” என பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் பேசினார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் நினைவுப் பரிசை வழங்கினார்.
தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத் திறப்பு விழாவிற்கு வெள்ளை வேட்டி, சட்டை அணிந்துவந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத்தைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, “நான்கு நாள் அயல்நாட்டுப் பயணத்திற்குப் பிறகு நேரடியாக பகவான் ராமேஸ்வரனின் மண்ணில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. பகவான் ராமேஸ்வரன், திருச்செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு தூத்துக்குடி வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.
உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி இவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு போன்றவை. இந்த 11 ஆண்டுகளில் இந்தத் துறைகளின் மீது செலுத்தப்பட்ட கவனம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நமக்கு முதன்மையானது என்பதை காட்டுகிறது.
இதே மண்ணில் தான் வா.உ.சி. போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டு இருந்த காலத்திலேயே கடல் வழி வாணிபத்தின் சக்தியை புரிந்துகொண்டவர் அவர். காசி தமிழ் சங்கம் போன்ற ஏற்பாடுகள் மூலம் நம் கலாச்சார மரபுகளை வளர்த்துவருகிறோம். தூத்துக்குடியின் முத்துகளை பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிய நாட்டு முத்துக்கள் உலகம் முழுக்க பாரதத்தின் பொருளாதார வல்லமையின் அடையாளமாக இருந்துவந்தது.
இன்று பாரதத்தின் வளர்ச்சியில் உலகம் தனது வளர்ச்சியை காண்கிறது. உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் நமது வேகம் இன்னும் வேகமளிக்கப்போகிறது. இங்கிலாந்து ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்கப்படும் 99% பாரதத்தின் பொருட்கள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது. விலை மலிவாகவும், தேவை அதிகமாகவும் அங்கு இருக்கும். இங்கு அந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் நமது இளைஞர்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.
மேக் இன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம். இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்கும் அரசு வலு சேர்க்கிறது. ஆபரேஷன் சிந்துரின்போது, மேக் இன் இந்தியாவின் வலுவை பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை அழித்ததில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதத்தின் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை தூங்கவிடாமல் செய்கிறது.
தூத்துக்குடி புது முனைய திறப்புக்கு பிறகு தமிழ்நாட்டின் பெரும் நிறுவனங்கள், உடல்நல கட்டமைப்புகள், கல்வி ஆகியவற்றுக்கு வலு கிடைக்கும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சாலை ஆகியவற்றையும் சிறப்படைய செய்யும். அதுமட்டுமின்றி, வர்த்தகம் வேலை வாய்ப்பு ஆகியவையும் அதிகரிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்.
இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்றுவருகிறது. தற்சார்பு இந்தியாவின் உயிர் நாடியாக இந்திய ரயில்வே உள்ளது. 11 ஆண்டுகளில் ரயில்வே நவீனமயமாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளோம். வந்தே பாரத் ரயில்கள் வரிசையில் தமிழ்நாடு மக்களுக்கு புது அனுபவம் கிடைத்துவருகிறது. தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம்; பாம்பன் பாலம் கூட தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை போட்டிநாயக்கநல்லூர் மின்சார ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதன் மூலம், வந்தே பாரத் ரயில் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு வளர்ச்சி, மேம்படுத்த தமிழ்நாடு ஆகியவையே நமது முக்கிய உறுதிப்பாடு. நாங்கள் தமிழ்நாடு வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என பேசினார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

புதிய பாம்பன் ரயில் பாலம் இன்று திறப்பு..! பிரதமர் மோடியின் பயணத்திட்டம்

535 கோடி ரூபாய் மதிப்பில் நவீன தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலம் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.
தனுஷ்கோடி நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டு கடந்த, 1914-ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை நடைபெற்று வந்த பாம்பன் பாலத்தில் 2022-க்கு பிறகு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது நவீன தொழில்நுட்பங்களோடு கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அனுராதபுரம் விமான தளத்தில் இருந்து காலை 10.40 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 11.45 மணியளவில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறையின் ஹெலிபேட் தளத்திற்கு வந்து இறங்குகிறார்.
தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய, புதிய பாம்பன் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான முதல் ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் இன்று ராமநவமி என்பதால், பகல் 12.40 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு 1.30 மணிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு சாலை மார்க்கமாக மீண்டும் மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் 3.00 மணிக்கு மதுரை புறப்படுகிறார். பின்னர், 03.50 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி, ராமேஸ்வரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனிடையே, பிரதமர் சாமி தரிசனம் செய்யவுள்ள ராமநாதசுவாமி கோயிலில், காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்யவும், கடலில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து நாளை வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க படகுகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? – முதல்வர் ஸ்டாலின் விளாசல்

பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read More
அரசியல்இந்தியா

டெல்லியில் பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு..!!

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது கேலோ

Read More
தமிழ்நாடு

தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் மோடி அரசு உறுதுணையாக உள்ளது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் பாரத பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

Read More
இந்தியா

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கிழக்கு-மத்திய வங்கக்

Read More
அரசியல்இந்தியா

மேற்கு வங்காள முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்பு – பிரதமர் மோடி வாழ்த்து

மேற்கு வங்காள முதல்வராக 3 வது முறையாக பதவியேற்றுக்கொண்ட மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்

Read More