BJP

அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார்.. என்.டி.ஏ. கூட்டணியில் புதிய கட்சிகள்!”

மதுரையில், என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சார மாநாடு நடக்க இருப்பதாகவும், அதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுவார் என்றும் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம. ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சார மாநாடுக்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து ராம. ஸ்ரீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராம. ஸ்ரீநிவாசன் பிரதமர் மதுரை வருவதை உறுதி செய்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “மதுரையில் என்.டி.ஏ. கூட்டணியின் பரப்புரை தொடங்க இருக்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால், பொதுவாக பரப்புரைக் கூட்டங்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், மதுரையும், தமிழ்நாடும் அவர்கள் இருவருக்கும் தனித்துவமான இடம் என்பதால் இருவரும் ஒன்றாக வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பரப்புரையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும், அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. இதுபோக, புதிதாக என்.டி.ஏ. கூட்டணியில் இணைவோரும் பங்கேற்பார்கள்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பீகார் அமைச்சரவை ஃபார்முலா: பாஜக – ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு சம பங்கு;

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகித்த பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) ஆகிய 2 பெரிய கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கூட்டணியில் ஆரம்ப முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின்படி, 2 பெரிய கட்சிகளுக்கும் சம எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகளை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் சம எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகள். சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM) மற்றும் ஜிதன் ராம்மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலா 1 துறை வழங்கப்படலாம். இதுவே தற்போது விவாதத்தில் உள்ள ஃபார்முலா ஆகும். ஆலோசனைகள் நடந்து வருகின்றன. துறைகள் ஒதுக்கீட்டில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம், அது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் இன்று (திங்கட்கிழமை) பாட்னாவில் சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்து, புதிய அரசாங்கம் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க சட்டமன்றக் கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 17-வது பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவ.22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறலாம் என்று தகவல் தெரிவிக்கிறது. பாஜக- 89, ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) – 85, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – LJP(RV) – 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) – HAM(S) – 5, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM – )4.

2020 தேர்தலில் பா.ஜ.க 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. அப்போது அமைந்த அரசில், பா.ஜ.கவுக்கு 22 அமைச்சர்களும், நிதீஷ் குமார் கட்சிக்கு 12 அமைச்சர்களும் மட்டுமே இருந்தனர். கூட்டணி வெள்ளிக்கிழமை வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அரசு அமைப்பது குறித்து சந்தித்தனர்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” – மதுரையில் அமித்ஷா

தமிழ்நாடு பாஜகவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். நேற்று மதுரை வந்த அமித்ஷா, இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பாஜக உயர்மட்ட மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை மதுரை, ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அங்கு பேசிய அவர், “மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” எனத் தெரிவித்தார். அவர் பேசியதாவது: “மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி உரையைத் தொடங்குகிறேன். 3 ஆயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்டது தமிழ். ஆனால், தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது.
இந்தக் கூட்டம் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் கூட்டம். பாஜக – அதிமுக கூட்டணி 2026ல் ஆட்சி அமைக்கும். திமுகவை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என ஸ்டாலின் சொன்னது சரிதான். என் நீண்ட அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். திமுகவை அமித்ஷாவுக்குப் பதில் மக்கள் தோற்கடிப்பார்கள். வரும் தேர்தலில் திமுகவை மக்கள் தூக்கி எறியக் காத்திருக்கிறார்கள். எங்கிருந்தாலும் எனது சிந்தனை தமிழ்நாட்டைப் பற்றியே இருக்கும்.
ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய ஆதரவுக் குரல் ஒலித்தது. இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை ஒடுக்க முந்தைய அரசுகள் முயலவில்லை. ஆனால் மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகளைத் துல்லியமாக அழித்துள்ளோம். மோடி ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவான நிலையை அடைந்துள்ளோம். ஆபரேஷன் சித்தூர் இன்னும் முடியவில்லை. மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் வீடு புகுந்து அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியில் இந்தியா 4.19 ட்ரில்லியன் வளர்ச்சிக் கண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி தமிழகத்திற்கு 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி கொடுத்தது. மோடி அரசு 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதனை அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

கூட்டணி அரசு  என்று அமித் ஷா சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி

மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி அரசு என்று கூறவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திமுக கூட்டணியை வீழ்த்தும் நோக்கில், அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஏப்.10-ம் தேதி சென்னை வந்த அமித்ஷா, 11-ம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்புக்குப்பின், மாலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை’’ என்றார்.
அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை’’ என்றார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அதிமுக – பாஜக கூட்டணி-தமிழகத்தில் 4ஆவது முறையாக அமைந்தது

அதிமுக – பாஜக கூட்டணி, கண்டிப்பாக மீண்டும் அமையும் என அரசியல் நோக்கர்கள் பலரும் கணித்தது போல, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடந்தது நடந்துவிட்டது. இனி பாஜக – அதிமுக கட்சிகள் மனக்கசப்பை மறந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது போல, கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிமுக – பாஜக கூட்டணி, உறவு முறிந்து மீண்டும் இணைவது இது முதல் முறையல்ல.
1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் முதல் முறையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அதிமுக 23, பாஜக, பாமக மற்றும் மதிமுக தலா 5 இடங்கள் மற்றும் ஜனதா கட்சி 1 இடத்தில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அதிமுக 18 இடங்களிலும் பாஜக 3, பாமக 4 இடங்களிலும் வென்றன. ஆனால், அடுத்த ஓராண்டிலேயே அதாவது 1999ல் வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றதால் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தது அதிமுக. அந்தத் தேர்தலில் அதிமுக 33 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால், ஒட்டுமொத்தமாக 39 இடங்களையும் வாரிச் சுருட்டியது திமுக கூட்டணி.
இதனை அடுத்து, தமிழ்நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றது, ஜெயேந்திரர் கைது என பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறியது. அதிமுக – பாஜக கூட்டணி முறிய ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இது ஜெயலலிதாவின் மறைவு வரை நீடித்தது. தெரிந்தோ தெரியாமலோ பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டதாகக் கூறிய ஜெயலலிதா, இனி அப்படியொரு தவறைச் செய்ய மாட்டேன் என்றார்.
இதன் தொடர்ச்சியாக, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, அப்போதைய பிரதமர் வேட்பாளரான மோடியை கடுமையாக எதிர்த்து, “மோடியா? லேடியா?” எனும் முழக்கத்தையும் முன்வைத்தார் ஜெயலலிதா.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2019 தேர்தலில் அதிமுக – பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது. பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது பாஜக. 2001 தேர்தலில் 4 இடங்களில் வென்ற பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2021ல் 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றது.
இதையடுத்து, அதிமுகவின் கொள்கைத் தலைவரான அண்ணா, மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தெல்லாம் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி முறிந்தது.

இதனை அடுத்து வந்த 2024 மக்களவைத் தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஒரு தொகுதியையும் கைப்பற்ற முடியவில்லை. கூட்டணி முறிவால் வாக்கு சதவீதம் பிரிந்ததே காரணம் எனப் பேசப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே, மீண்டும் பாஜகவுடன் கைகுலுக்கி அதன் தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவுக்கு விருந்து வைத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை புதிய தலைமையுடன் பாஜக எதிர்நோக்கும் நிலையில் அமித் ஷாவின் தேர்தல் கணக்கு என்னவாக இருக்கும்?.
அடுத்த ஓராண்டில் தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி தேர்தல் வியூகம் வகுக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரவு தனியார் விடுதியில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்.
இந்தப் பயணத்தின் இடையே துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா சுமார் ஒரு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மனு அளித்ததாகக் கூறினார். அதேநேரம் ஒரு ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அமித் ஷா அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
சென்னை வரும் அமித்ஷாவை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சென்று சந்திக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

பா.ஜ.க மாநில தலைவர் பதவி? நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முடித்துக் கொண்டு வெளியேறியது. அப்போது கூட்டணி முறிவுக்கு காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அப்போதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் விரிசல் ஏற்பட்டது. அதையடுத்து பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் 2026 தேர்தலை குறிவைத்து அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கி இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்தனர். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பில் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை எம்எல்ஏ நாகேந்திரன் டெல்லி தலைமை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்ந்தெடுத்தால் எல்லாம் சுலபமாக முடியும் என பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் நயினார் நாகேந்திரன் சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர் காத்திருக்கும் அறையில் இரண்டு மணி நேரம் காத்திருந்த நயினார் நாகேந்திரன் விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். பாஜகவின் மாநில தலைவர் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழக பாஜக மாநில தலைவர் யார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் பேச்சு குறித்து அண்ணாமலை-”யாருக்கு யார் எதிரி …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. தேர்தலில் முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்து என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின் பேசிய தவெக தலைவர் விஜய், “மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பா சொன்னா பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே.

அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையே தான்” எனத் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் மூன்று முறை வெளியே வருவது ஒருவித அரசியல். இந்த அரசியலை மக்கள் பார்ப்பார்கள்.

விஜய் உட்பட யாராக இருந்தாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், களத்தில் யாருக்கு யார் எதிரி என வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். திமுக தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், மக்கள் மன்றத்தில் சொல்வதிலும், திருத்துவதிலும், போராடுவதிலும், தீர்வு வழங்குவதிலும் பாஜக தான் முதன்மையான கட்சி.இன்று அரசியலில் இன்று சக்திவாய்ந்தவராக இருப்பவரை பற்றி பேசினால் மைலேஜ் கிடைக்கும் அதனால் பிரதமரை விமர்சித்து பேசுகிறார்” எனத் தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

“இனி தேதியை தெரிவிக்காமல் பாஜக போராட்டம் நடத்தும்” – அண்ணாமலை பேட்டி!

சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில், மாலை 6 மணியை தாண்டியும் தங்களை விடுவிக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்காக புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மாலை 6 மணியாகியும் தங்களை ஏன் விடுவிக்கவில்லை எனக் கூறி அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட தமிழிசையும் தன்னை விடுவிக்காததை கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழிசையுடன் இருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அனைவரும் பதட்டமடைந்தனர். கட்சியின் மூத்தத் தலைவர் தனக்கே இந்த நிலையா என்றும் தமிழிசை ஆதங்கப்பட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட பாஜகவினர் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, இனி தேதியை தெரிவிக்காமல் தான் பாஜக போராட்டம் நடத்தும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக தனது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக கூறினார். டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊழல் நடந்திருக்கலாம் எனக் கூறும் அமலாக்கத்துறை ஆதாரத்தை வெளியிட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை கூறினாலும், இந்த ஆட்சி தொடங்கியது முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடத்திருப்பதாக தனக்கு தகவல் வந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

Read More