கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது..
கருப்பு தின பேரணியில் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்கள் செல்ல அனுமதி மறுத்துத் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். சிறிதுநேரத்தில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கைதாகினர்.
அதன்பின் சில மணிநேரங்களில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அண்ணாமலை உள்ளிட்டோர் கைதால், கோவையில் பரபரப்பு காணப்பட்டது.
