rameswaram

இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

புதிய பாம்பன் ரயில் பாலம் இன்று திறப்பு..! பிரதமர் மோடியின் பயணத்திட்டம்

535 கோடி ரூபாய் மதிப்பில் நவீன தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலம் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.
தனுஷ்கோடி நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டு கடந்த, 1914-ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை நடைபெற்று வந்த பாம்பன் பாலத்தில் 2022-க்கு பிறகு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது நவீன தொழில்நுட்பங்களோடு கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அனுராதபுரம் விமான தளத்தில் இருந்து காலை 10.40 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 11.45 மணியளவில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறையின் ஹெலிபேட் தளத்திற்கு வந்து இறங்குகிறார்.
தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய, புதிய பாம்பன் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான முதல் ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் இன்று ராமநவமி என்பதால், பகல் 12.40 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு 1.30 மணிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு சாலை மார்க்கமாக மீண்டும் மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் 3.00 மணிக்கு மதுரை புறப்படுகிறார். பின்னர், 03.50 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி, ராமேஸ்வரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனிடையே, பிரதமர் சாமி தரிசனம் செய்யவுள்ள ராமநாதசுவாமி கோயிலில், காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்யவும், கடலில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து நாளை வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க படகுகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More