குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 92. காங்கிரஸின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த குமரி அனந்தன் குறித்து விரிவாக பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். இவரது இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ் மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.
இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன் 4 மகள்கள். அவர்களில் ஒருவர்தான் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் குமரி அனந்தன்.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 92. காங்கிரஸின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த குமரி அனந்தன் குறித்து விரிவாக பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். இவரது இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ் மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.
இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன் 4 மகள்கள். அவர்களில் ஒருவர்தான் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் குமரி அனந்தன்.
தொடர்ந்து 1984ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆனார்.
தொடர்ந்து 1984ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆனார்.
‘இலக்கியச் செல்வர்’ என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 29 நூல்களை எழுதி உள்ளார்.
