Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு – ஸ்டாலின்

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு – ஸ்டாலின்
கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தத் தீர்வாக அமையும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

எம்புரான் படத்திற்கு எதிர்ப்பு…வருத்தம் தெரிவித்த மேகான்லால்..சில காட்சிகள் நீக்கம்

நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியான நிலையில் அப்படத்தில் குஜராத் கலவரம் குறித்து காட்சிகள் இடம்பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் மோகன்லால் அறிவித்தார். இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.எஸ்., பாஜக, உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் எதிர்க்க என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் மோகன்லால், ப்ரித்திவி ராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான், கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் 2002 குஜராத் கலவரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்சிபடுத்தப்பட்டது விவாதப் பொருளானது. குறிப்பாக, குஜராத் கலவரத்தின் மூளையாக செயல்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பாபு பஜ்ரங்கியின் பெயர், படத்தின் வில்லன் பெயருக்கு பொருந்தி போனது.
நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியான நிலையில் அப்படத்தில் குஜராத் கலவரம் குறித்து காட்சிகள் இடம்பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் மோகன்லால் அறிவித்தார். இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.எஸ்., பாஜக, உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் எதிர்க்க என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் மோகன்லால், ப்ரித்திவி ராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான், கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் 2002 குஜராத் கலவரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்சிபடுத்தப்பட்டது விவாதப் பொருளானது. குறிப்பாக, குஜராத் கலவரத்தின் மூளையாக செயல்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பாபு பஜ்ரங்கியின் பெயர், படத்தின் வில்லன் பெயருக்கு பொருந்தி போனது.
இதனிடையே, இப்படத்தை தனது குடும்பத்தினருடன் பார்த்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எம்புரான் திரைப்படம் மலையாள சினிமாவின் மைல்கல் என்று பாராட்டினார். அரசியல் மோதலாக எம்புரான் படம் மாறியதை அடுத்து, அதில் இருந்த 17 காட்சிகளை நீக்க மத்திய திரைப்பட தணிக்கை குழு படக்குழுவினருக்கு உத்தரவிட்டது. குறிப்பாக, குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளை நீக்க மத்திய திரைப்பட தணிக்கை ஆணையிட்டது. இதனை ஏற்றுக் கொண்ட படத்தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன், 17 காட்சிகளை நீக்குவதாக அறிவித்தார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வங்கிகளுக்கு இன்று விடுமுறை இல்லை… வழக்கம் போல் செயல்படும் – ஆர்பிஐ அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு அரசு விடுமுறை என ரிசர்வ வங்கியின் வருடாந்திர காலண்டரில் அறிவித்திருந்த நிலையில், இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றுடன் 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வரவுள்ளதால் கணக்குகளை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் இறுதி நாளான இன்று வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையிலும் சுமுகமான நிதி பரிவர்த்தனையை உறுதி செய்யும் விதமாகவும் வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, குறிப்பாக அரசு ரசீதுகள் மற்றும் நிதிகளை கையாளும் வங்கிகள், வழக்கமாக செயல்படும் நேரத்தில் கட்டாயம் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.இதேபோல் வருமானவரித்துறை தொடர்பான பணிகள் இடையூறின்றி செயல்படவும் நாடு முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

ராஜஸ்தானிடம் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ராஜஸ்தான் அணி ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களும், சஞ்சு சாம்சன் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்து இணைந்த கேப்டன் ரியான் பராக் – நிதிஷ் ரானா இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல்லின் 11 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தானை முதலில் பேட்டிங் ஆட அழைத்தது.
அதன்படி களம் இறங்கிய ராஜஸ்தான் வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தானில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா, 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ரன்களை குவித்து அசத்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்து தடுமாறியது.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலகல கொண்டாட்டம்

புனித ரமலானை நாடு முழுவதும் இஸ்லாமியர் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு இஸ்லாமியர்கள் திரண்டனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களில் ஒரு சாரார் ரமலான் பண்டிகையை கொண்டாடினர். கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தெரிந்ததாக அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிறை தெரிந்ததால், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

யூடியூப் சேனல் தொடங்குவது குறித்து பயிற்சி அளிக்கும் தமிழக அரசு; 

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் யூடியூப் சேனல் உருவாக்குதல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது தொடர்பாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

“சென்னையில் சொந்தமாக யூடியூப் (YouTube) சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது 22.04.2025 முதல் 24.04.2025 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – டொமைன் பெயர் & ஹோஸ்டிங் – இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. தொலைபேசி எண்: 9360221280 / 9543773337. முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாநிகழ்ச்சிகள்

மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு 704ஆக உயர்வு

மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு 704ஆக உயர்வு
மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உருக்குலைந்த கட்டிடங்கள்; ஆயிரக்கணக்கானோர் பலி?
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடான மியான்மரை வெள்ளிக்கிழமை பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கின.
மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடான மியான்மரை வெள்ளிக்கிழமை பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கின. 7.7 மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மியான்மரின் 2-வது பெரிய நகரமான மண்டலேயில் இருந்து 17.2 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்தது.
மியான்மரில் 144 பேர் உயிரைப் பறித்த நிலநடுக்கம்; 732 பேர் படுகாயங்களுடன் மீட்பு
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
மியான்மர் நிலநடுக்கம்: மத்திய மியான்மரில் இன்று (மார்ச் 28) 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் பாங்காக் நகர வீதிகளில் உயிர் பயத்தில் ஓடியதாக கண்காணிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதன் கூற்றுப்படி, 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் மாண்டலே நகரத்திலிருந்து 17.2 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இதன் காரணமாக பதற்றமடைந்த மக்கள் பாங்காக் வீதிகளில் ஓடிய காட்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது. மேலும், நீச்சல் குளங்களில் இருந்து தண்ணீரும் வெளியேறியது.

நிலநடுக்கம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து மியான்மர் தீயணைப்பு சேவைகள் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். “விபத்து நடந்த உடன் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை தொடங்கி விட்டோம். யாங்கூன் முழுவதும் சென்று உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்றும், சேதங்கள் குறித்தும் பார்வையிட்டோம். தற்போது, இது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

மியான்மரின் பண்டைய அரச தலைநகரான மாண்டலேயில் இருந்து வந்த சமூக ஊடகப் பதிவுகள் மூலமாக நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. அதன் பௌத்த மையப்பகுதியின் கட்டடங்கள் இடிந்து விழுந்து கிடப்பதை போன்ற வீடியோக்கள் ஏராளமாக பதிவிடப்பட்டுள்ளன. எனினும், இதன் உண்மைத் தன்மை குறித்து ராய்ட்டர்ஸ் உடனடியாக சரிபார்க்க முடியவில்லை.

“வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அசைந்து விழத் தொடங்கிய உடன், நாங்கள் வெளியே ஓடி வந்து விட்டோம். 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததை நான் பார்த்தேன். மீண்டும் கட்டடங்களுக்குள் செல்ல மக்கள் தயாராக இல்லை” என அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

பெரும்பாலும் நட்சத்திர விடுதிகளில் இருந்து வெளியேறிய மக்களின் காட்சிகள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர்கள் நீச்சல் உடையில் பதற்றமாக காட்சியளித்தனர்.

பாங்காக் நகரத்தில் உள்ள உயரமான அலுவலகக் கட்டடம் ஒன்று, குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு அங்கும் இங்குமாக அசைந்தது என்றும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மிகுந்த சத்தம் எழுப்பின என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அவசர கால படிக்கட்டுகள் வழியாக வெளியேறினர். பல தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். கட்டடம் அசையும் போது பலத்த அலறல் சத்தம் கேட்டது.

இந்த சூழலில் மியான்மரில் மட்டும் 144 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சுமார் 730-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். பாதிப்பு ஏற்பட்ட பல்வேறு பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் பேச்சு குறித்து அண்ணாமலை-”யாருக்கு யார் எதிரி …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. தேர்தலில் முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்து என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின் பேசிய தவெக தலைவர் விஜய், “மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பா சொன்னா பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே.

அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையே தான்” எனத் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் மூன்று முறை வெளியே வருவது ஒருவித அரசியல். இந்த அரசியலை மக்கள் பார்ப்பார்கள்.

விஜய் உட்பட யாராக இருந்தாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், களத்தில் யாருக்கு யார் எதிரி என வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். திமுக தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், மக்கள் மன்றத்தில் சொல்வதிலும், திருத்துவதிலும், போராடுவதிலும், தீர்வு வழங்குவதிலும் பாஜக தான் முதன்மையான கட்சி.இன்று அரசியலில் இன்று சக்திவாய்ந்தவராக இருப்பவரை பற்றி பேசினால் மைலேஜ் கிடைக்கும் அதனால் பிரதமரை விமர்சித்து பேசுகிறார்” எனத் தெரிவித்தார்.

Read More
IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

17 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி..! சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்

கஜினி முகமது போல 17 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி..! சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னை சேப்பாக்கத்தில் தோனியையும் கோலியையும் ஒரே போட்டியில் பார்ப்பதற்காகவே பல ஆயிரம் பேர் ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக்கொண்டு மைதானத்தை நோக்கி நேற்று மாலை படையெடுத்தனர்.

நம் ஆசை நாயகர்களை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் பல ஆயிரங்களை செலவு செய்து ரசிகர்கள் சென்ற நிலையில் சென்னை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் சுமாராக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், ஒரு கட்டத்தில் RCB கேப்டன் ரஜத் படிதாரின் 3 கேட்ச்களை கோட்டை விட்டதால் பெரிய விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது. பந்துவீச்சு ஓரளவு சுமாராக இருந்த போதிலும் வழக்கம் போல 43 வயது இளம் வீரர் தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார்.
19 ஆவது ஓவரில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காத குட்டி மலிங்கா பதிரானா, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபிக்கு அதிர்ச்சி அளித்தார். அதேபோல் கடைசி ஓவரை சுட்டிக்குழந்தை சாம் கரன் வீசியபோது, இறக்கமே இல்லாமல் ஹாட்ரிக் சிக்சர் விளாசி அணியின் ஸ்கோரை 196-ல் கொண்டு சென்று விட்டார், டிம் டேவிட்.

197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடிக்க முயன்ற சிஎஸ்கே வீரர்களுக்கு தொடக்கத்திலேயே காத்திருந்தது அதிர்ச்சி, 10 ரன்களுக்கு உள்ளாகவே கேப்டன் கெயிக்வாட், ராகுல் திரிபாதி ஆகியோர் நடையை கட்ட, சென்னை அணியின் ஆரம்பமே ஆட்டம் கண்டது.
ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் போக்கை ஷிவம் துபே மாற்றியதும் சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறக்க, அவரும் பாதியில் கிளம்பிவிட்டார். வழக்கம்போல கடைசி பிரம்மாஸ்திரமாக களமிறங்கிய தோனி, அணியை மீட்க போராடியதுடன், வந்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்த 2 சிக்சர்களை பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 146 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
ஆர்சிபி 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தி வரலாறு படைத்ததால் அதன் ரசிகர்கள் குஷியடைந்தனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜயின் பொதுக்குழு பேச்சு..! அரசியல் தலைவர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்த விஜய், அடுத்த தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், திமுகவுக்கு போட்டியும் இல்லை, முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக களத்தில் எந்த தலைவரும் இல்லை என்றும் திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக, திமுக கட்சித் தலைவர்களை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்ததும், அதற்கு அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது.
அரசியலில் யார் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி பேசினால் தான் மைலேஜ் கிடைக்கும் என்றும், அதனால் தான் பிரதமர் மோடியின் பெயரை விஜய் உச்சரித்து இருப்பதாகவும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.
திமுகவுக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் திருப்ப முயற்சிக்கும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், அதிமுக – தவெக இணைய வேண்டும் என்பது மக்களிடம் பேசுபொருளாக இருப்பதாகவும் கூறினார். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வாக்குகளை சிதறடிக்க பாஜக-வுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறாரோ என அச்சம் நிலவுவதாக விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கருத்து கூறினார்.
பாஜக, திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக, அக்கட்சி தலைவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைக்க விஜய் தொடங்கிவிட்டதாக தெரிகிறது

Read More