Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடு

விஜயின் பொதுக்குழு பேச்சு..! அரசியல் தலைவர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்த விஜய், அடுத்த தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், திமுகவுக்கு போட்டியும் இல்லை, முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக களத்தில் எந்த தலைவரும் இல்லை என்றும் திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக, திமுக கட்சித் தலைவர்களை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்ததும், அதற்கு அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது.
அரசியலில் யார் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி பேசினால் தான் மைலேஜ் கிடைக்கும் என்றும், அதனால் தான் பிரதமர் மோடியின் பெயரை விஜய் உச்சரித்து இருப்பதாகவும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.
திமுகவுக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் திருப்ப முயற்சிக்கும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், அதிமுக – தவெக இணைய வேண்டும் என்பது மக்களிடம் பேசுபொருளாக இருப்பதாகவும் கூறினார். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வாக்குகளை சிதறடிக்க பாஜக-வுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறாரோ என அச்சம் நிலவுவதாக விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கருத்து கூறினார்.
பாஜக, திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக, அக்கட்சி தலைவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைக்க விஜய் தொடங்கிவிட்டதாக தெரிகிறது

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: அமைச்சர் அஸ்வினி விளக்கம்

புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதிக்கும் தார்மீக கடமையிலிருந்து மத்திய அரசு விலகி செல்கிறதா? அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்? ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழகம் தடைவிதித்துள்ளது’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘ மத்திய அரசின் தார்மீக உரிமை குறித்து கேள்வி எழுப்ப தயாநிதி மாறனுக்கு உரிமை இல்லை. அரசியல்சாசனத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவத்தின்படி நாடு செயல்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் போன்றவற்றுக்கு தடை விதிப்பது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களின் கீழ் வருகிறது. இவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்டம் இயற்றலாம். புகார்கள் அடிப்படையில் 1,410 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது பாரதிய நியாய் சன்கிதா சட்டத்தின் 112-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Read More
சினிமாதமிழ்நாடு

‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து இணையத்தில் பரவும் வதந்தி: குஷ்பு விளக்கம்

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கஸண்ட்ரா, மீனா உட்பட பலர் நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் இயக்குநர் சுந்தர்.சி-க்கும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சினை ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதை மறுத்து நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் இணையத்தில் உலவி வருகின்றன. அது உண்மையில்லை. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
சுந்தர். சி எப்படிப்பட்ட இயக்குநர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல, நயன்தாரா, திறமையான நடிகை என்பதை நிரூபித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் நடித்த ஒரு கதாபாத்திரத்தில், மீண்டும் நடித்து வருகிறார். இணையத்தில் பரவும் இந்த வதந்திகள் ‘திருஷ்டி எடுத்த மாதிரி’. நடப்பதெல்லாம் நன்மைக்கே. உங்களின் ஆசீர்வாதம் மற்றும் அன்பை மட்டுமே நாங்கள் நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

TASMAC | அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு : நீதிபதிகள் விலகல்

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காரணங்கள் எதையும் குறிப்பிடாத நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து இருவரும் விலகுவதாக அறிவித்தனர். மேலும், இந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதிக்கும் பரிந்துரைத்தனர்.

Read More
சமையல் சமையல்நிகழ்ச்சிகள்

சென்னையில் ஒரு புதிய Veg.Restaurant திறப்பு விழா,@Shenoynagar

சென்னையில் ஒரு புதிய Restaurant திறப்பு விழா, ஷெனாய்நகர் வெஸ்ட் பார்க் ரோட்டில் “Hotel Apoorva” என்ற புதிய restaurant நேற்று திறக்கப்பட்டுள்ளது , நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அண்ணாநகர் தொகுதி MLA திரு மோகன் அவர்கள் restaurant திறந்து வைத்து பேசினார்,கூட ஹோட்டல் நிர்வாகத்தினரும் இருந்தனர்

Read More
தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு…ஏப்ரல் 1 முதல் அமல்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்களுக்கான புதிய கொள்கையை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்றும், இந்த கொள்கை நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்கும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மார்ச் 19 தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் திறக்கப்பட்ட 12 கட்டண சுங்கச்சாவடிகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. 78 டோல்களில் 40 டோல்கேட்டுகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி பயனர் கட்டணம் திருத்தப்படும், மீதமுள்ளவற்றிற்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி திருத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்களை தீர்மானித்தல் மற்றும் வசூலித்தல் ) விதிகள், 2008 இன் விதிகளின் கீழ் மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் திருத்தப்படுகிறது.

சென்னை புறவழிச்சாலையில் வானகரம் மற்றும் சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள், சென்னை -கொல்கத்தா நெடுஞ்சாலையில் நல்லூர், தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு கட்டண திருத்தம் செய்யப்படும்.
கோயம்பேடு காய்கறி சந்தையின் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். இதையொட்டி பொருட்களின் விலை உயர்வை பாதிக்கும். டீசலுக்கு அடுத்தபடியாக லாரி உரிமையாளர்கள் அதிக செலவு செய்வது சுங்கச்சாவடி கட்டணம்தான். மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு லாரியை இயக்கினால், சுங்கச்சாவடி கட்டணமாக மட்டும் ரூ.1,000 அல்லது அதற்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும்.

சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கட்கரி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண பிளாசாக்களில் பயனர் கட்டணம் நிரந்தரமாக வசூலிக்கப்படுகிறது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

பொது நிதியுதவி திட்டங்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை, பாலம், சுரங்கப்பாதை அல்லது புறவழிச்சாலையின் அத்தகைய பிரிவுகளுக்கு விதிக்கப்பட வேண்டிய கட்டணம் இந்த விதிகளால் ஆண்டுதோறும் திருத்தப்பட வேண்டும்.

Read More
IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

தோனி… ஃபினிஷ் செய்த ரச்சின்… மும்பையை வீழ்த்தி சி.எஸ்.கே வெற்றி!

இந்த ஐ.பி.எல் தொடரில் இன்று (23.03.2025) 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இன்று (23.03.2025) இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரிக்கில்டன் களமிறங்கினர். ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். சி.எஸ்.கே-வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாத மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்தது.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே அணியில், ரச்சி ரவீந்திரா மற்றும் ராகுல் திரிபாதி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 2வது ஓவரிலேயே ராகுல் திரிபாதி அவுட் ஆனதால், அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த பேட்டர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காமல் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். கடைசியில் 7வது விக்கெட்டுக்கு தோனி களமிறங்கினார். 2 பந்துகளை மட்டும் சந்தித்து ரன் எதுவும் எடுக்கவில்லை. ரச்சின் ரவீந்திரா சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்தார். சி.எஸ்.கே அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சி.எஸ்.கே இந்த தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:

ருதுராஜ் கெய்க்வாட், ஆண்ட்ரே சித்தார்த், டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், எம்.எஸ் தோனி, ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கர்ரன், சிவம் துபே, ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:

ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்.எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.
கடைசியாக வந்த தோனி… சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்த ரச்சின்… மும்பையை வீழ்த்தி சி.எஸ்.கே வெற்றி!
19வது ஓவரில் 4வது பந்தில் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் ஆனார். அவருக்கு அடுத்து, தோனி களமிறங்கினார். 2 பந்துகளை மட்டுமே தோனி சந்தித்தார். மறுமுனையில் இருந்த ரச்சின் ரவீந்திரா ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம், சி.எஸ்.கே அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக வந்த தோனி 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எதுவும் எடுக்கவில்லை.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்ணா நீங்கள்? ரூ. 1.25 லட்சம் வரை கடன்; இந்த திட்டம் உங்களுக்கானது

சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு கடன் உதவி திட்டம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதை விட, சுய தொழில் தொடங்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். இதற்காக பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பிரத்தியேகமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பில் எளிமையான ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, புதிய குழுக்கடன் வழங்குவதற்கான திட்டத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேபாட்டுக் கழகம் செயல்படுத்தியுள்ளது. இந்தக் குழுக்கடன்கள், சுய உதவிக் குழு சார்பாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒரு நபருக்கு தலா, ரூ. 1.25 லட்சம் கடனாக வழங்கப்படும். இந்த கடனுக்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தக் கடன் தொகை இரண்டரை ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பெறுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக இந்தக் கடன் வழங்கப்படும். அதிலும், சம்பந்தப்பட்ட சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்களை கட்டாயமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்தக் குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.

கடன் பெற விரும்பும் நபரின் வயது 18 முதல் 60 வரை இருத்தல் அவசியம், மேலும், அவர்களது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. இந்த திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டுமே கடன் பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tabcedco.tn.gov.in இணையதளத்தில் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிறப்பிடச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Read More
தமிழ்நாடுவணிகம்வணிகம்

எஃப்.டி-யை விட நல்ல ரிட்டர்ன்; ரிஸ்க் இல்லாத முதலீடு… இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் செக் பண்ணுங்க!
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக திட்டங்களை வழங்குகிறது. அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி விகிதம் மட்டுமில்லாமல், வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

அந்த வகையில், அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் ஆகும். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் ரிஸ்க் குறைவான முதலீட்டு திட்டம். மியூச்சுவல் பண்ட் திட்டங்களைப் போல அல்லாமல் இந்த திட்டம் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு 5 வருட டெபாசிட் முதலீட்டிற்கு மட்டும் பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்த பட்சம் 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை. நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். அனைத்து அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் (ஆக்சிஸ், ஐசிஐசிஐ, ஹெச்.டி.எஃப்.சி) வங்கிகளிலும் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

இந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதன் பின் 100-இன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கான உச்சவரம்பு என்று எதுவும் இல்லை.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், முதலீட்டாளர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். பிக்சட் டெபாசிட்களைப் போலவே ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருட முதிர்வுக் காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், 4 வகைகள் உள்ளன.

அதாவது, 1 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 6.9 % வட்டி வழங்கப்படுகிறது. 2 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.0 % வட்டி வழங்கப்படுகிறது.3 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.1 % வட்டி வழங்கப்படுகிறது. 5 வருட டைம் டெபாசிட் முதலீட்டில் அதிகபட்சமாக 7.5 % வட்டி வழங்கப்படுகிறது.

7.50 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மொத்த முதலீட்டு காலத்திற்கும் வட்டி வருமானமாக 44,995 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.

இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கணக்கைத் தொடக்கலாம். இளம் முதலீட்டாளர்களுக்கு TD (டி.டி) சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சார்பாக தங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளைத் தொடங்கலாம்.

நீங்கள் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் விண்ணப்பிக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து ஆதார் மற்றும் பான் கார்டு ஆவணங்களை இணைத்து, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையையும் சேர்த்து கொடுங்கள், உங்கள் கணக்கு தொடங்கப்பட்டுவிடும் அவ்வளவுதான்.

Read More
அரசியல்ஆன்மீகம்தமிழ்நாடு

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: சந்திரபாபு நாயுடு பேச்சு

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: சந்திரபாபு நாயுடு பேச்சு
திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், பிற மத ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றார். அங்கு நடந்த தரிசனத்துக்குப் பிறகு தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தற்போது பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பல பக்தர்கள் விரும்புகிறார்கள்.
ஏழு மலை பகுதிக்கு அருகில் வணிகமயமாக்கல் கூடாது. இந்தப் பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது. ஆனால், நான் வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது” என்று அவர் கூறினார்.

Read More