Author: Namadhu Arasu

அரசியல்ஆன்மீகம்தமிழ்நாடு

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: சந்திரபாபு நாயுடு பேச்சு

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: சந்திரபாபு நாயுடு பேச்சு
திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், பிற மத ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றார். அங்கு நடந்த தரிசனத்துக்குப் பிறகு தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தற்போது பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பல பக்தர்கள் விரும்புகிறார்கள்.
ஏழு மலை பகுதிக்கு அருகில் வணிகமயமாக்கல் கூடாது. இந்தப் பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது. ஆனால், நான் வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது” என்று அவர் கூறினார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

தீர்மானத்தை மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்: கனிமொழி பேச்சு

தீர்மானத்தை மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்: கனிமொழி பேச்சு
“இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவோம். தொகுதி மறுசீரமைப்பை வெளிப்படை தன்மையுடன் மத்திய அரசு, 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” என்று கனிமொழி எம்.பி கூறினார்.
இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.பி கனிமொழி, “இந்திய அரசியல் வரலாற்றில் இந்த கூட்டம் ஒரு மைல்கல். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒத்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தி ஓரணியில் அனைவரும் திரண்டுள்ளனர்.

தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறைகளை செய்து தென் மாநிலங்களின் எம்.பி தொகுதிகளைக் குறைக்க வேண்டாம் என்றே வலியுறுத்துகிறோம். அது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்திற்கு ஆபத்தானது. அதற்காகத்தான் அனைவரும் ஒன்று திரண்டு நிற்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் தெளிவுபடுத்த வேண்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு.

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்.

Read More
IPL - 2020IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ..! இன்று மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் 

ஐபிஎல் தொடரில் எல்-கிளாசிகோ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சர்வதேச அளவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி போல, ஐபிஎல்-இல் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
43 வயதான தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதுடைய வீரராக களமிறங்குகிறார். “தல” தோனி அணியில் இருக்கிறார் என்பதையே சிஎஸ்கேவும், சிஎஸ்கே ரசிகர்களும் பலமாக பார்க்கின்றனர்.
கேப்டன் ருதுராஜ், கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே என்ற வலுவான பேட்டிங் வரிசையுடனும், ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, சாம் கரன், வேகத்திற்கு பதிரனா, கலீல் அகமது என சிஎஸ்கே அணி மிகவும் பலமாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவுக்கு திரும்பியிருப்பது ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இதே போல, ரோகித் சர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிக்கல்டன், திலக் வர்மா என மும்பையின் பேட்டிங் படையும் வலுவாகவே உள்ளது. ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு சற்று பலவீனமே என்றாலும், சாண்ட்னர், பவுல்ட், தீபக் சஹார் என மும்பையின் வேக கூட்டணி மிரட்டும் வகையில் உள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு மேலும் கொண்டாட்டத்தை சேர்த்துள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

விக்ரமின் மாஸ் ஆக்‌ஷன் அவதாரம் – ‘வீர தீர சூரன் – பார்ட்…

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – விக்ரமை கொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தேடிக் கொண்டிருப்பதுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ஒரே இரவில் நடக்கும் கதை என்பதை ட்ரெய்லரில் வரும் வசனங்கள், காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், ஜி.வி.பிரகாஷின் வெறியூட்டும் பின்னணி இசை எதிர்பார்ப்பை தூண்டுகின்றன. முழு மாஸ் ஆக்‌ஷன் அவதாரம் விக்ரமுக்கு சிறந்த கம்பேக் ஆக இருக்கும் என்று நம்பலாம். ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ ட்ரெய்லர் வீடியோ:
விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘வீர தீர சூரன்-பார்ட் 2’. அருண்குமார் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் படமாகத் தயாராகியுள்ள இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படம் வரும் வரும் மார்ச் 27 வெளியாகிறது.
https://youtu.be/vHPae4sZbu8?si=mFYNz20dfrk0kHem

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ள
இதையொட்டி, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்கி உள்ளது. இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில், அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவிற்கு தனித்தனியாக கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டத்தை துவங்கி உள்ளது. டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 3 கி.மீ., தூரம் 25 கி.மீ., வேகத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடந்துள்ளது. இது தொடர்பாக வீடியோவை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Read More
குற்றம்தமிழ்நாடு

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் தீவிர வலைவீசி தேடி வந்தனர். இவர் மதுரை எஸ். எஸ்., காலனியில் ரூ.10 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் தொடர்புடையவர். கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று ரவுடியை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர். அப்போது போலீசார் மீது ரவுடி மகாராஜா தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயத்துக்கு சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மகாராஜா என்ற பிரபல ரவுடியை கிண்டி அருகே துப்பாக்கியால் காலில் சுட்டு போலீசார் பிடித்தனர்.

வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார். போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் ரவுடியை காலில் சுட்டதாக காவல்துறை தகவல். ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்க நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (இபிஐசி) ஆதாரை இணைப்பது தொடர்பாக யுஐடிஏஐ-யின் சிஇஓ, உள்துறை செயலர், சட்ட செயலர், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், இபிஐசி-ஐ ஆதாருடன் இணைப்பதற்கான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 326 மற்றும் இது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையின் கீழ் இந்த நடவடிக்கையை எடுப்பதென முடிவு செய்யப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு என்பது தன்னார்வ நடவடிக்கையாகவே இருக்கும். ஏற்கெனவே, இதனை 65 கோடி பேர் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கருத்து: மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பட்டியலில் இருந்த வாக்களார் எண்ணிக்கை ஒத்துப்போகவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தொடர்ச்சியான புகாரால்தான் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனாலும், தகுதியான ஒரு இந்திய குடிமகன்கூட வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்திட வேண்டும். அதேநேரம், எந்தவொரு குடிமகனின் தனியுரிமையும் மீறப்படக்கூடாது என தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.

எல்லை மாவட்டங்களில் உள்ள மக்களின் அடையாளங்களை கண்டறிவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணவும், உண்மையான வாக்காளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

யுஐடிஏஐ மற்றும் தேர்தல் ஆணையத்தின் நிபுணர்களிடையே இபிஐசி-ஆதார் இணைப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஓடிடி ரிலீஸ் …

தனுஷ் இயக்கத்தில் உருவான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ராயன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2கே கிட்ஸ்களின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றது.
பாடல்கள் ஹிட்டான நிலையில், பாக்ஸ் ஆஃபீஸில் படம் பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.10 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் வரும் மார்ச் 21-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்னை மக்களே.. புது மாதாந்திர பாஸ் அறிமுகம்.. பேருந்து பயணிகளுக்காக புதிய திட்டம் தொடக்கம்!

சென்னையில் பேருந்து பயணிகளுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் குளிர்சாதனப் பேருந்துகள் உட்பட அனைத்து வகையான பேருந்துகளிலும் மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாயில், பயணம் செய்யும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

சென்னையில் ஏற்கெனவே, மாநகர பேருந்துகளில் பயணிக்க, ஆயிரம் ரூபாயில் மாதாந்திர பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக, ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில், இரண்டாயிரம் ரூபாய் மாதாந்திர பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சென்னை மந்தைவெளியில் தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இரண்டாயிரம் ரூபாய் பாஸ் மூலம், மாதம் முழுவதும் இரவு நேரம் உட்பட அனைத்து நேரங்களிலும் கட்டணம் செலுத்தாமல் ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கலாம் என்று கூறினார்.

Read More