METRO

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஒரு மாதத்தில் வரும் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை..

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், வாகன நெரிசலைத் தவிர்க்கும் விதமாகவும், பயணங்களை எளிதாக்கும் விதமாகவும் போக்குவரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் செயல்பாட்டுக்கு வந்தது மெட்ரோ ரயில் திட்டம். சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இதில், முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான 9 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்த வழித்தடத்துக்கான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள போரூர், ஐயப்பன்தாங்கல், குமணன்சாவடி, கரையான்சாவடி உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வருவதால் தங்கள் பயணம் இனி எளிமையாகும் என தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவையில் 13 ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் சேவையும் இதில் கொண்டுவரப்படவுள்ளது. எனினும் முதல் 6 மாதங்கள் லோகோ பைலட் ரயில் பெட்டியில் இருந்து கண்காணிக்க உள்ளனர். அதேபோல இந்த வழித்தட நிலையங்களில் அரை உயர மேடை திரை கதவுகள் (Half-height Platform Screen Doors) அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், உயர்த்தப்பட்ட (Elevated) வழித்தடங்களில் இத்தகைய பாதுகாப்பு தடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், உயர்த்தப்பட்ட (Elevated) வழித்தடங்களில் இத்தகைய பாதுகாப்பு தடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

மெட்ரோ, பஸ், மின்சார ரயிலில் பயணம்: சென்னை ஒன் செயலியில் ரூ.1க்கு டிக்கெட் – புதிய அறிவிப்பு

‘சென்னை ஒன்’ செயலியில், தலா 1 ரூபாய் கட்டணம் செலுத்தி மெட்ரோ, மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஒரு முறை சலுகை பயணம் செய்யும் புதிய சலுகை, நாளை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை புறநகரில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலியை, கடந்த செப்., 22ம் தேதி, தமிழக அரசு துவக்கியது.
இந்த செயலியில், அனைத்து பொது போக்குவரத்துக்கும் டிக்கெட் பெறும் வசதி இருப்பதால், பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10ம் தேதி மட்டும் அதிகபட்சமாக, 29,704 டிக்கெட்டுகள் விற்று சாதனை புரிந்துள்ளது.

இந்த செயலியை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய சலுகை, நாளை முதல் அறிமுகமாக உள்ளது. அதன்படி, பி.எச்.ஐ.எம்., எனப்படும், ‘பீம், நேவி’ செயலிகளை பயன்படுத்தி, யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்துவோர், மெட்ரோ ரயில், எம்.டி.சி., பேருந்துகளின் டிக்கெட்டை, 1 ரூபாய் செலுத்தி, முதல் முறை மட்டும் பயணம் செய்யலாம்.

விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயிலில் செல்ல, 40 ரூபாய் கட்டணம். சென்னை ஒன் செயலியை பயன்படுத்தி, பீம் மற்றும் நேவி செயலிகள் வாயிலாக டிக்கெட் எடுத்தால், ஒரு ரூபாய் கட்டணம்தான். பஸ், மின்சார ரயிலிலும் பயணிப்போரும் இந்த சலுகையை பெறலாம். இந்த சலுகையை, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை மட்டும்தான் கிடைக்கும். இந்த நடைமுறை நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சென்னை ஒன்’ செயலியில், பயணியரை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை நாளைமுதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்-ரயில் நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் பணிகள் தீவிரம்!

சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது திறக்கப்பட்டு ஒரு ஆண்டையும் தாண்டி உள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து மக்கள் தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறி வந்தனர். அடிப்படை வசதிகள் மற்றும் இணைப்பு வசதிகள் இல்லாதது பெரும் குறையாக இருந்தது.
கிளாம்பாக்கம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஸ்கைவாக் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பனிகள் நடைபெறும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாம்பரம் பகுதிக்கு செல்ல பேருந்து வசதி மற்றும் தனியார் வாகனங்கள் வசதி மட்டுமே இருந்து வந்தது. இதன் காரணமாக பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்து வந்தனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதேபோல் மெட்ரோ ரயிலும் வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்ட நாட்களாக மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கும் நிலையில் விரைவில் அதற்கான பணிகளும் தொடங்க உள்ளது.
இதேபோல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஸ்கைவாக் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏனெனில் மக்கள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்தை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மக்கள் ஆபத்தான சாலையை கடக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனை தவிர்க்க மாநகராட்சி சார்பில் ஸ்கைவாக் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு எளிதில் செல்லலாம். இந்த ஆகாய நடைமேடையானது சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு எளிதில் செல்லலாம். இந்த பணிகள் நடைபெறும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதேபோல் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ளன. விரைவில் இந்த ரயில் நிலையம் திறக்கப்படும். இது திறக்கப்பட்டால் தாம்பரத்தில் இருந்து வரும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் இருபுறமும் ஏறி, இறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைமேடையும் திறக்கப்பட்டால் மேலும் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் பேருந்து நிலையத்தில் இறங்கி ரயில் நிலையத்தை பயன்படுத்தி தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More