csk

இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

சென்னை அணிக்கு 6 ஆவது தோல்வி..16 ஓவருக்குள் ஆட்டத்தை முடித்தது மும்பை இந்தியன்ஸ்

சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையிலான போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.
ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் அஸ்வினி குமார் வேதத்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஷேக் ரசீத் 19 ரன்களில் வெளியேற, அடுத்து இணைந்த ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
துபே 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன் களமிறங்கினர்.

தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 19 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து இணைந்த சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா இணை சென்னை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ஒவ்வொரு ஓவரிலும் இருவரும் சிக்சர், பவுண்டர்களை விளாசினர்.இதனால் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. இருவரும் கொடுத்த சில கேட்ச் வாய்ப்புகளை சென்னை அணி வீரர்கள் தவறவிட்டனர். ரோகித் சர்மா 45 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 76 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 30 பந்துகளில் 68 ரன்களும் குவித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 15.4 ஓவர்களில் மும்பை அணி 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

Read More
IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய சென்னை; கொல்கத்தா அபார வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 25-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தாவின் அசத்தல் பந்துவீச்சால் 103 ரன்களில் சுருண்ட சென்னை; நரைன் அதிரடியில் 10.1 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா
காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலகியிருக்கும் நிலையில், அனைவரது கவனமும் புதிய கேப்டன் தோனி மீது இருக்கும். 4 தொடர் தோல்விகளைச் சந்தித்து துவண்டுள்ள சென்னை அணிக்கு அவர் திருப்பு முனையை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கொல்கத்தா அபார வெற்றி
சென்னை சார்பில் 11வது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்து நோபாலாகி 2 ரன்கள் கிடைத்தது. ப்ரீஹிட்டில் ரிங்கு சிங் சிக்ஸ் அடிக்க கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து, சென்னையை வீழ்த்தியது.
எம்.எஸ். தோனி: நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம். சில சமயங்களில் நாங்கள் சேசிங் செய்ய முயற்சித்தோம், மைதானம் கொஞ்சம் மெதுவாகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம், எனவே நீங்கள் நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை என்றால், மிடில் ஆர்டர் அழுத்தத்தில் உள்ளது. ருதுராஜ் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, எனவே அவர் போட்டியிலிருந்து வெளியேறுகிறார். அவர் மிகவும் சிறப்பான பேட்டர், பந்தை சரியாக டைமிங்கில் அடிக்க முயற்சிப்பவர். ஆமாம், அவர் இல்லாதது பெரிய விஷயம் தான். இப்போது அது முக்கியம், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். நாங்கள் நிறைய போட்டிகளில் தோற்றுள்ளோம், இப்போது அடிப்படைகளை சரியாகச் செய்வது முக்கியம் – டாட் பால்களை வைத்திருப்பது, கேட்சுகளை எடுப்பது. இரண்டு ஆட்டங்களில் நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோற்றோம், ஆனால் இல்லையெனில் அது சிறிய விஷயங்களைப் பற்றியது – ஒரு ஓவர் 20 ரன்களுக்குச் செல்வது பற்றியது. எங்கள் பேட்டர்கள் பேட்டர்களாக மிகவும் உண்மையானவர்கள், அவர்கள் எல்லாவற்றையும் சளைக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வை ஆதரிக்க வேண்டும். நன்றாகத் தொடங்குவது, ஆரம்பத்தில் பவுண்டரிகளைப் பெறுவது மற்றும் இரண்டு ஆரம்ப விக்கெட்டுகளையும் எடுக்க முயற்சிப்பது முக்கியம். எங்களுக்கு இரண்டு மாற்றங்கள் – ருதுராஜுக்குப் பதிலாக திரிபாதியும், முகேஷுக்குப் பதிலாக அன்ஷுல் காம்போஜும் வருகிறார்கள்.

Read More
IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

4 ஆவது முறையாக சி.எஸ்.கே. தோல்வி.. 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது சென்னை அணி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான 4ஆவது தோல்வியாகும்.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துள்ள பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 103 ரன்கள் எடுத்தார்.

சஷாங்க் சிங் 52 ரன்களும், மார்க்கோ யான்சன் 34 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்து பிரமிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டெவோன் கான்வே, ரச்சின் ரவிந்திரா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு சென்னை அணி 61 ரன்கள் சேர்த்தது.

ரச்சின் 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் இணைந்த ஷிவம் துபே டெவோன் கான்வே இணை அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. துபே 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தோனி களமிறங்கியபோது 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த டெவோன் கான்வே ரிட்டையர்ட் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.
பெர்கூசன் வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 19 ஆவது ஓவரில் தோனி 1 சிக்சரும் பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில், யஷ் தாகூர் வீசிய முதல் பந்திலேயே தோனி ஃபைன் லெக் திரையில் இருந்த யுஸ்வேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார்.
பெர்கூசன் வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 19 ஆவது ஓவரில் தோனி 1 சிக்சரும் பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில், யஷ் தாகூர் வீசிய முதல் பந்திலேயே தோனி ஃபைன் லெக் திரையில் இருந்த யுஸ்வேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார்.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

ராஜஸ்தானிடம் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ராஜஸ்தான் அணி ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களும், சஞ்சு சாம்சன் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்து இணைந்த கேப்டன் ரியான் பராக் – நிதிஷ் ரானா இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல்லின் 11 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தானை முதலில் பேட்டிங் ஆட அழைத்தது.
அதன்படி களம் இறங்கிய ராஜஸ்தான் வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தானில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா, 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ரன்களை குவித்து அசத்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்து தடுமாறியது.

Read More
IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

17 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி..! சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்

கஜினி முகமது போல 17 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி..! சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னை சேப்பாக்கத்தில் தோனியையும் கோலியையும் ஒரே போட்டியில் பார்ப்பதற்காகவே பல ஆயிரம் பேர் ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக்கொண்டு மைதானத்தை நோக்கி நேற்று மாலை படையெடுத்தனர்.

நம் ஆசை நாயகர்களை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் பல ஆயிரங்களை செலவு செய்து ரசிகர்கள் சென்ற நிலையில் சென்னை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் சுமாராக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், ஒரு கட்டத்தில் RCB கேப்டன் ரஜத் படிதாரின் 3 கேட்ச்களை கோட்டை விட்டதால் பெரிய விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது. பந்துவீச்சு ஓரளவு சுமாராக இருந்த போதிலும் வழக்கம் போல 43 வயது இளம் வீரர் தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார்.
19 ஆவது ஓவரில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காத குட்டி மலிங்கா பதிரானா, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபிக்கு அதிர்ச்சி அளித்தார். அதேபோல் கடைசி ஓவரை சுட்டிக்குழந்தை சாம் கரன் வீசியபோது, இறக்கமே இல்லாமல் ஹாட்ரிக் சிக்சர் விளாசி அணியின் ஸ்கோரை 196-ல் கொண்டு சென்று விட்டார், டிம் டேவிட்.

197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடிக்க முயன்ற சிஎஸ்கே வீரர்களுக்கு தொடக்கத்திலேயே காத்திருந்தது அதிர்ச்சி, 10 ரன்களுக்கு உள்ளாகவே கேப்டன் கெயிக்வாட், ராகுல் திரிபாதி ஆகியோர் நடையை கட்ட, சென்னை அணியின் ஆரம்பமே ஆட்டம் கண்டது.
ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் போக்கை ஷிவம் துபே மாற்றியதும் சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறக்க, அவரும் பாதியில் கிளம்பிவிட்டார். வழக்கம்போல கடைசி பிரம்மாஸ்திரமாக களமிறங்கிய தோனி, அணியை மீட்க போராடியதுடன், வந்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்த 2 சிக்சர்களை பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 146 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
ஆர்சிபி 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தி வரலாறு படைத்ததால் அதன் ரசிகர்கள் குஷியடைந்தனர்.

Read More
IPL - 2020IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ..! இன்று மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் 

ஐபிஎல் தொடரில் எல்-கிளாசிகோ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சர்வதேச அளவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி போல, ஐபிஎல்-இல் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
43 வயதான தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதுடைய வீரராக களமிறங்குகிறார். “தல” தோனி அணியில் இருக்கிறார் என்பதையே சிஎஸ்கேவும், சிஎஸ்கே ரசிகர்களும் பலமாக பார்க்கின்றனர்.
கேப்டன் ருதுராஜ், கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே என்ற வலுவான பேட்டிங் வரிசையுடனும், ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, சாம் கரன், வேகத்திற்கு பதிரனா, கலீல் அகமது என சிஎஸ்கே அணி மிகவும் பலமாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவுக்கு திரும்பியிருப்பது ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இதே போல, ரோகித் சர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிக்கல்டன், திலக் வர்மா என மும்பையின் பேட்டிங் படையும் வலுவாகவே உள்ளது. ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு சற்று பலவீனமே என்றாலும், சாண்ட்னர், பவுல்ட், தீபக் சஹார் என மும்பையின் வேக கூட்டணி மிரட்டும் வகையில் உள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு மேலும் கொண்டாட்டத்தை சேர்த்துள்ளது.

Read More
Covid19விளையாட்டு

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின்

Read More