nilavukkuyenmelennadikobam

சினிமாதமிழ்நாடு

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஓடிடி ரிலீஸ் …

தனுஷ் இயக்கத்தில் உருவான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ராயன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2கே கிட்ஸ்களின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றது.
பாடல்கள் ஹிட்டான நிலையில், பாக்ஸ் ஆஃபீஸில் படம் பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.10 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் வரும் மார்ச் 21-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More