எம்புரான் படத்திற்கு எதிர்ப்பு…வருத்தம் தெரிவித்த மேகான்லால்..சில காட்சிகள் நீக்கம்
நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியான நிலையில் அப்படத்தில் குஜராத் கலவரம் குறித்து காட்சிகள் இடம்பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் மோகன்லால் அறிவித்தார். இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.எஸ்., பாஜக, உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் எதிர்க்க என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் மோகன்லால், ப்ரித்திவி ராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான், கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் 2002 குஜராத் கலவரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்சிபடுத்தப்பட்டது விவாதப் பொருளானது. குறிப்பாக, குஜராத் கலவரத்தின் மூளையாக செயல்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பாபு பஜ்ரங்கியின் பெயர், படத்தின் வில்லன் பெயருக்கு பொருந்தி போனது.
நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியான நிலையில் அப்படத்தில் குஜராத் கலவரம் குறித்து காட்சிகள் இடம்பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் மோகன்லால் அறிவித்தார். இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.எஸ்., பாஜக, உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் எதிர்க்க என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் மோகன்லால், ப்ரித்திவி ராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான், கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் 2002 குஜராத் கலவரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்சிபடுத்தப்பட்டது விவாதப் பொருளானது. குறிப்பாக, குஜராத் கலவரத்தின் மூளையாக செயல்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பாபு பஜ்ரங்கியின் பெயர், படத்தின் வில்லன் பெயருக்கு பொருந்தி போனது.
இதனிடையே, இப்படத்தை தனது குடும்பத்தினருடன் பார்த்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எம்புரான் திரைப்படம் மலையாள சினிமாவின் மைல்கல் என்று பாராட்டினார். அரசியல் மோதலாக எம்புரான் படம் மாறியதை அடுத்து, அதில் இருந்த 17 காட்சிகளை நீக்க மத்திய திரைப்பட தணிக்கை குழு படக்குழுவினருக்கு உத்தரவிட்டது. குறிப்பாக, குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளை நீக்க மத்திய திரைப்பட தணிக்கை ஆணையிட்டது. இதனை ஏற்றுக் கொண்ட படத்தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன், 17 காட்சிகளை நீக்குவதாக அறிவித்தார்.
