நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலகல கொண்டாட்டம்
புனித ரமலானை நாடு முழுவதும் இஸ்லாமியர் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு இஸ்லாமியர்கள் திரண்டனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களில் ஒரு சாரார் ரமலான் பண்டிகையை கொண்டாடினர். கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தெரிந்ததாக அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிறை தெரிந்ததால், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
Read More