rcb

IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது RCB அணி-IPL 2025

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் அதிரடியாக விளையாடி 1 சிக்சர், 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். மயங்க் அகர்வால் 24 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 26 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர்.
லிவிங்ஸ்டோன் 25 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 43 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் கொடுத்தார். ஜித்தேஷ் சர்மா 10 பந்துகளில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்துள்ள ஆர்சிபி அணி 190ரன்கள் எடுத்தது. இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது.
பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களும், ஜாஷ் இங்லீஷ் 39 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மேட்ச்சில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மிகவும் தடுமாறிய நேஹல் வதேரா 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சஷாங்க் சிங் அணிக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.
கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டபோது ஸ்கோர் 162/7 என இருந்தது. கடைசி ஓவர் ஹேசல்வுட் வீசினார். இந்த ஒவரில் 0, 0, 6,4,6,6 என அமைந்து 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 30 பந்துகளை எதிர்கொண்ட சஷாங்க் சிங் 6 சிக்சர் 3 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

ராஜஸ்தானிடம் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ராஜஸ்தான் அணி ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களும், சஞ்சு சாம்சன் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்து இணைந்த கேப்டன் ரியான் பராக் – நிதிஷ் ரானா இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல்லின் 11 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தானை முதலில் பேட்டிங் ஆட அழைத்தது.
அதன்படி களம் இறங்கிய ராஜஸ்தான் வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தானில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா, 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ரன்களை குவித்து அசத்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்து தடுமாறியது.

Read More
IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

17 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி..! சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்

கஜினி முகமது போல 17 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி..! சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னை சேப்பாக்கத்தில் தோனியையும் கோலியையும் ஒரே போட்டியில் பார்ப்பதற்காகவே பல ஆயிரம் பேர் ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக்கொண்டு மைதானத்தை நோக்கி நேற்று மாலை படையெடுத்தனர்.

நம் ஆசை நாயகர்களை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் பல ஆயிரங்களை செலவு செய்து ரசிகர்கள் சென்ற நிலையில் சென்னை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் சுமாராக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், ஒரு கட்டத்தில் RCB கேப்டன் ரஜத் படிதாரின் 3 கேட்ச்களை கோட்டை விட்டதால் பெரிய விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது. பந்துவீச்சு ஓரளவு சுமாராக இருந்த போதிலும் வழக்கம் போல 43 வயது இளம் வீரர் தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார்.
19 ஆவது ஓவரில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காத குட்டி மலிங்கா பதிரானா, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபிக்கு அதிர்ச்சி அளித்தார். அதேபோல் கடைசி ஓவரை சுட்டிக்குழந்தை சாம் கரன் வீசியபோது, இறக்கமே இல்லாமல் ஹாட்ரிக் சிக்சர் விளாசி அணியின் ஸ்கோரை 196-ல் கொண்டு சென்று விட்டார், டிம் டேவிட்.

197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடிக்க முயன்ற சிஎஸ்கே வீரர்களுக்கு தொடக்கத்திலேயே காத்திருந்தது அதிர்ச்சி, 10 ரன்களுக்கு உள்ளாகவே கேப்டன் கெயிக்வாட், ராகுல் திரிபாதி ஆகியோர் நடையை கட்ட, சென்னை அணியின் ஆரம்பமே ஆட்டம் கண்டது.
ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் போக்கை ஷிவம் துபே மாற்றியதும் சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறக்க, அவரும் பாதியில் கிளம்பிவிட்டார். வழக்கம்போல கடைசி பிரம்மாஸ்திரமாக களமிறங்கிய தோனி, அணியை மீட்க போராடியதுடன், வந்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்த 2 சிக்சர்களை பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 146 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
ஆர்சிபி 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தி வரலாறு படைத்ததால் அதன் ரசிகர்கள் குஷியடைந்தனர்.

Read More