banking

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வங்கிகளுக்கு இன்று விடுமுறை இல்லை… வழக்கம் போல் செயல்படும் – ஆர்பிஐ அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு அரசு விடுமுறை என ரிசர்வ வங்கியின் வருடாந்திர காலண்டரில் அறிவித்திருந்த நிலையில், இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றுடன் 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வரவுள்ளதால் கணக்குகளை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் இறுதி நாளான இன்று வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையிலும் சுமுகமான நிதி பரிவர்த்தனையை உறுதி செய்யும் விதமாகவும் வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, குறிப்பாக அரசு ரசீதுகள் மற்றும் நிதிகளை கையாளும் வங்கிகள், வழக்கமாக செயல்படும் நேரத்தில் கட்டாயம் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.இதேபோல் வருமானவரித்துறை தொடர்பான பணிகள் இடையூறின்றி செயல்படவும் நாடு முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More