India

இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு…

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக உள்ளது.

மத்திய கிழக்கு போரால் விநியோகம் பாதிப்பு. விலை உயர்வால் அதிர்ச்சி.

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும்.மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாதத்தின் முதல்நாளான இன்று வணிக சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.இன்று (ஏப்ரல் 1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Read More
அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா – இஸ்ரேல் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து 

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்ட துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்புக்கும் இடையே விரைவில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இருநாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரவு விருந்து அளித்தும் உபசரித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று, ஜெருசலேமில் உள்ள யூதர்களின் யாத் வஷேம் நினைவிடத்திற்கு சென்றார். 2ஆம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அந்நாட்டு அதிபர் இசாக் ஹோர்சோக்கையும் சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரம், விண்வெளி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கடல்சார் பாரம்பரியம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் பேசிய நெதன்யாகு, இந்தியாவிற்கும் தனக்குமான பிணைப்பு குறித்து நினைவு கூர்ந்தார். இஸ்ரேலும், இந்தியாவும் புதுமைகளை நோக்கிய பயணத்தில் குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார். தனக்கு அளிக்கப்பட்ட இஸ்ரேலின் உயரிய விருதை இந்திய நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இஸ்ரேலில் யுபிஐ பயன்படுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு விரைவில் முழு வடிவம் கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதிகூறினார்.இதனைத் தொடர்ந்து, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, தனது மனைவியுடன் விமான நிலையத்துக்கே வந்து பெஞ்சமின் நெதன்யாகு வழியனுப்பிவைத்தார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் துரிதப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்-புஜ் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் அடுத்தக்கட்டமாக, டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 82 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் நாட்டின் முதல் மண்டல அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்தில் மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 55 நிமிடங்களில் சென்றடைலாம். அதாவது நமோ பாரத் விரைவு ரயிலால் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தற்போது, முதற்கட்டமாக நமோ பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது
3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.
இதன் மற்றொரு சிறப்பம்சம் மீரட் மெட்ரோ நிறுவனம், தனது தண்டவாளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை நமோ பாரத் ரயிலுடன் பகிர்ந்துக் கொள்கிறது. இதன் மூலம் மெட்ரோவில் பயணிப்பவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறாமல் அதே ரயில் நிலையத்தில் நமோ பாரத் ரயிலில் ஏற முடியும். இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 210 ரூபாய் வரை தூரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. மேலும், பெரும்பாலானோர் பணிக்கு செல்லக்கூடிய பீக் ஹவர்ஸில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளன.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட அதிவேக நமோ பாரத் ரயில் நாடு முழுவதும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான மீரட் மெட்ரோவையும் பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் தான் மெட்ரோ கட்டமைப்பில் அதிவேக கொண்ட ரயிலாகும்.
நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை…

இன்று பிப்ரவரி 2ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.800 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.6,400 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை..இந்த நிலையில் பட்ஜெட்டிற்கு பிறகும், பிப்ரவரி மாத தொடக்கத்திலும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More
அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

அமெரிக்க டாலருக்குச் சவால் விடும் சீனா..

சீனாவின் நாணயமான யுவான் உலகளாவிய கையிருப்பு நாணயமாக மாற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய அமைப்பில் சீனா மேலும் முக்கிய பங்கு வகிக்க விரும்பும் நிலையில், தனது நாணயம் குறித்த இலக்குகளை அவர் இதுவரை இல்லாத அளவில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சீனா ஒரு வலிமையான நாணயத்தை உருவாக்க வேண்டும் என்றும், அது சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் வெளிநாட்டு நாணய சந்தைகளில் பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் கையிருப்பு நாணய அந்தஸ்தை அடைய வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜி ஜின்பிங்கின் கருத்துகள் வெளியான இந்த நேரம், உலக நிதி சந்தைகளில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் காலம் என்று கூறப்படுகிறது. உலக ஒழுங்குகளில் ஏற்படும் மாற்றத்தை சீனா முன்பை விட இப்போது மிகத் தெளிவாக உணர்கிறது என்று Pantheon Macroeconomics நிறுவனத்தின் மூத்த சீனா பொருளாதார நிபுணர் கெல்வின் லாம் தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் யுவானுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உலக ஒழுங்கில் சமீப காலங்களில் ஏற்பட்ட பிளவுகளை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, சீனாவின் மத்திய வங்கியின் ஆளுநர் பான் கோங்ஷெங், ஒரு புதிய உலக நாணய ஒழுங்கு உருவாகும் என தெரிவித்தார். ஷாங்காயில் முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், பல மையங்களைக் கொண்ட சர்வதேச நாணய அமைப்பில் யுவான் மற்ற நாணயங்களுடன் போட்டியிடும் என கூறினார்.

“யுவான் ஒரு உண்மையான உலகளாவிய நாணயமாக மாற வேண்டும் என்பதே பெய்ஜிங்கின் நோக்கம். அது ஒரே இரவில் டாலரை மாற்ற வேண்டிய அவசியமில்லை; ஆனால் பிளவுபட்டுவரும் உலக நிதி ஒழுங்கில், அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மூலோபாயமாக செயல்பட வேண்டும்,” என்று The Asia Group நிறுவனத்தின் சீனா நாட்டுத் தலைவர் ஹான் ஷென் லின் தெரிவித்துள்ளார்.

2022 -ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, யுவான் உலகில் வர்த்தக நிதியளிப்பு நாணயங்களில் இரண்டாவது பெரிய நாணயமாக மாறியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ கையிருப்பு நாணயங்களில் அதன் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது.

IMF தரவுகளின்படி, 2025 -ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, உலக கையிருப்புகளில் அமெரிக்க டாலர் சுமார் 57 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இது 2000 -ஆம் ஆண்டில் 71 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், யூரோ சுமார் 20 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. யுவான் ஆறாவது இடத்தில், வெறும் 1.93 சதவிகித பங்குடன் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் பொருளாதாரத்தில் உள்ள சமநிலையற்ற நிலைகளை சரி செய்ய வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

“உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது”

2025-26-ல் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக, 2025-26 நிதி ஆண்டின் பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையை அவர் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை, வர்த்தகம் சார்ந்த இடர்பாடுகள் என அனைத்தையும் கடந்து உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
உள்நாட்டில் பொருள்கள், சேவையின் நுகர்வு, முதலீடு ஆகியவை சிறப்பாக உள்ளதாகவும், 2026-27 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய ரூபாயின் மதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ள போதிலும், இது நாட்டின் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தரவு மையங்கள் பெருகி வருவது மற்றும் மின்சார தேவை அதிகரிப்பு காரணமாக உலகம் முழுவதும் காப்பர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மத்திய பட்ஜெட் 2026: பிப்ரவரி 1-ல் தாக்கல்; நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ 3.0 அரசாங்கத்தின் 3-வது முழுமையான பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது, இது சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வாகும்.
ஜனவரி 28 முதல் ஏப்ரல் 2 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் 2026 பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கலின் மூலம், மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா மற்றும் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முன்னாள் நிதியமைச்சர்களை விட அதிக எண்ணிக்கையிலான மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் முறியடிப்பார். இந்த அறிவிப்புகள் வரும் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதாரப் பாதையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் உரை மத்திய பட்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (indiabudget.gov.in), சன்சாத் டிவி மற்றும் தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பல தேசிய செய்தி சேனல்களும் நேரலை ஒளிபரப்பை வழங்கும், அதே நேரத்தில் சன்சாத் டிவி, தூர்தர்ஷன் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஆகியவை தங்களது யூடியூப் தளங்களில் நேரலை செய்வதோடு சமூக வலைதளங்களிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்கும்.

இவை தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் (indianexpress.com) இணையதளத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் பகுப்பாய்வு குறித்த நேரடித் தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
புதிய வரி முறையின்கீழ் ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட 2025-26 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து, வரி செலுத்துவோரிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ஆண்டு, வரி செலுத்துவோர் மேலும் வருமான வரி சலுகைகள், எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான இலக்கு பலன்களை எதிர்பார்க்கின்றனர்.

பட்ஜெட்டிற்கு முன்னதாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2024-25-ல் இருந்த 6.5 சதவீதத்தை விட அதிகமாகும். இருப்பினும், பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றப்படாத பெயரளவு ஜி.டி.பி வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2026-27 பட்ஜெட்டில் வரி வருவாயை மதிப்பிடுவதற்கான முக்கிய காரணியாகும்.
கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) மூலம் பெறப்படும் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடன் வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துதல், பருத்தி உற்பத்தித்திறனுக்கான ஒரு மிஷன் மற்றும் அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய மிஷனை அமைத்தல் ஆகியவை அடங்கும். மேம்படுத்தப்பட்ட கே.சி.சி கடனை அறிவிக்கும் போது, இந்தத் திட்டம் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு குறுகிய காலக் கடன்களை எளிதாக்குகிறது என்றும், அதிக கடன் வரம்பு நிறுவனக் கடன்களைப் பெறுவதை மேம்படுத்தும் என்றும் சீதாராமன் கூறியிருந்தார்.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” – சர்ச்சைகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முற்றுப்புள்ளி!

வந்தே மாதரம் மற்றும் மா துஜே சலாம் பாடலை பாட மறுத்ததாக எழுந்த சர்ச்சைக்கு தனது பாணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது விளக்கத்தைத் தந்துள்ளார்.
தனது சமீபத்திய பேட்டியில் இதுபற்றி பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை எப்போதும் ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், கௌரவிப்பதற்கான வழியாகத்தான் இருந்துள்ளதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்
பிரதமரின் முன்னிலையில் வேவ் உச்சி மாநாட்டில் பங்கேற்றது முதல், இளம் நாகா இசைக்கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் குழுவை உருவாக்கியது வரை பன்முகத்தன்மையுடன் பணியாற்றியதை எடுத்துக்கூறியுள்ளார். படைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

Read More
இந்தியாஉலகம்குற்றம்நிகழ்ச்சிகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்.. பிரதமர் மோடி தலைமையில் நாளை பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பூடான் பயணத்தைத் தொடர்ந்து, நாளை பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அண்டை நாடான பூடானுக்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று செல்கிறார். இப்பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck), பிரதமர் ஷெரிங் தோபே ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும், தற்போதைய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான ஜிக்மே சிங்கியே வாங்குசுங்கின் 70ஆவது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார். அப்போது, இந்தியாவின் நிதியுதவியுடன் பூடானில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 20 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடியும், பூடான் மன்னரும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நாளை இந்தியா திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த கார் அரியானா பதிவெண் கொண்டது என்பதும், அதன் தற்போதைய உரிமையாளர் புல்வாமாவைச் சேர்ந்தவர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், ஹரியானாவில் 350 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன. காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹரான்பூரில் அடில் அகமது என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான லாக்கரில் இருந்து ஏ.கே 47 வகை துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
காஷ்மீர் டூ டெல்லி – வெடித்த காரின் அதிர்ச்சி பின்னணி!
டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த கார் அரியானா பதிவெண் கொண்டது, உரிமையாளர் புல்வாமாவைச் சேர்ந்தவர்.

கார் 2014 முதல் நான்கு முறை முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்த கருத்துக்கு இந்தியா பதிலடி

மோடி – டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்த கருத்துக்கு இந்தியா பதிலடி
ஒரு அறிக்கையில், நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் வழிநடத்தப்படுகின்றன என்று இந்தியா கூறியிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) எந்த உரையாடலும் நடக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
“எனக்குக் கிடைத்த தகவலின்படி, நேற்று (புதன்கிழமை) பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே எந்தவிதமான தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வியாழக்கிழமை அன்று தனது வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்தார்.

முன்னதாக, ஒரு அறிக்கையில், நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் வழிநடத்தப்படுகின்றன என்று இந்தியா கூறியிருந்தது.

“இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய இறக்குமதியாளர். நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் நிரந்தர முன்னுரிமையாக இருந்து வருகிறது. நம்முடைய இறக்குமதி கொள்கைகள் முழுவதுமாக இந்தக் குறிக்கோளையே வழிநடத்துகின்றன” என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
“நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விநியோகங்களை உறுதிசெய்வதே நம்முடைய எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இது, சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்ய, எங்கள் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது” என்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக நம்முடைய எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறியுள்ளது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது” என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இது ஒருபோதும் தொடங்கியிருக்கக் கூடாத போர், ஆனால், ரஷ்யா முதல் வாரத்திலேயே வெற்றி பெற்றிருக்க வேண்டும், இப்போது அவர்கள் நான்காவது ஆண்டிற்குள் செல்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

“எனவே, இந்தியா எண்ணெய் வாங்கிக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை, அவர்கள் [பிரதமர் மோடி] இன்று ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று எனக்கு உறுதியளித்துள்ளார். உடனடியாக இதைச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். இதற்குச் சற்று கால அவகாசம் தேவை, ஆனால், அந்தக் கால அவகாசம் விரைவில் முடிவடையும்” என்று அவர் கூறினார்.

“அது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம்” என்று கூறிய அவர், பெய்ஜிங்கிற்கு அழுத்தம் கொடுப்பது, “நாங்கள் கடந்த வாரம் மத்திய கிழக்கில் செய்ததை விட (போரை நிறுத்த) ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும்” என்றும் கூறினார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தையும், அவரால் ஏற்படுத்தப்பட்ட அமைதித் திட்டத்தின் கீழ் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதையும் அமெரிக்க அதிபர் இங்கே குறிப்பிட்டார்.

“இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால், அது [ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது] எளிதாகிறது. ஒரு குறுகிய காலத்திற்குள் அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று எனக்கு உறுதியளித்துள்ளனர், போர் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் ரஷ்யாவுக்குச் செல்வார்கள்” என்று டிரம்ப் கூறினார்.

ரஷ்ய எண்ணெயின் தொடர்ச்சியான இறக்குமதிகள் அதிபர் விளாடிமிர் புதினின் போருக்கு மறைமுகமாக நிதியளிக்கின்றன என்று அமெரிக்கா கருதுவதால், இது குறித்த கவலைகளை பிரதமர் மோடியிடம் எழுப்பியதாகவும் டிரம்ப் மேலும் கூறினார். “இந்தியா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” என்று அவர் கூறினார்.

மோடியுடனான உறவு குறித்து டிரம்ப்

பிரதமர் மோடியுடனான தனது உறவைப் பற்றி டிரம்ப் அன்புடன் பேசினார்.

“மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் டிரம்பை நேசிக்கிறார்” என்று அவர் தன்னைப் பற்றி மூன்றாம் நபரில் குறிப்பிட்டார். “நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். இது ஒரு நம்ப முடியாத நாடு, மேலும், ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் இருப்பார். எனது நண்பர் (மோடி) இப்போது நீண்ட காலமாக அங்கு இருக்கிறார்.”

டிரம்ப் இவ்வாறு கூறியது, இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வந்துள்ளது. மேலும், அந்த எண்ணெய் இறக்குமதிகள் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவிகித வரியை விதித்த கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது.

Read More