India

இந்தியாதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

இந்தியாவின் ஜிடிபி 6.6% ஆக உயரும்: கணிப்பை விட 0.2% – IMF

நடப்பு நிதி​யாண்​டில் இந்​திய பொருளா​தார வளர்ச்சி 6.6% ஆக உயரும் என ஐஎம்​எப் தனது கணிப்பை உயர்த்தி உள்ளது. சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்​எப்) உலக பொருளா​தார கண்​ணோட்ட அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) நடப்பு 2025-26 நிதி​யாண்​டில் 6.4% வளரும் என ஜூலை மாதம் வெளி​யிட்ட உலக பொருளா​தார கண்​ணோட்ட அறிக்​கை​யில் குறிப்​பிட்​டிருந்​தோம்.

ஆனால், முதல் காலாண்​டில் நிறு​வனங்​களின் லாபம் கணிச​மாக அதி​கரித்​திருந்​தது. 5 காலாண்​டு​களில் இல்​லாத வகை​யில், முதல் காலாண்டு ஜிடிபி 7.8% ஆக இருந்​தது. மேலும் உள்​நாட்டு தேவை அதி​கரிப்​பு, அரசின் செல​வினம் அதி​கரிப்பு உள்​ளிட்ட சில காரணங்​களால், இந்​தி​யா​வின் ஜிடிபி நடப்பு நிதி​யாண்​டில் 6.6% ஆக உயரும்.
இந்​திய பொருட்​களின் இறக்​கும​திக்கு அமெரிக்கா கூடு​தல் வரி விதித்​துள்​ளதால், 2026-27 நிதி​யாண்​டில் இந்​தி​யா​வின் ஜிடிபி 6.2% ஆக குறை​யும். முந்​தைய கணிப்​பில் 6.4% ஆக இருக்​கும் என கணித்​திருந்​தோம். 2025-26ல் உலக நாடு​களின் சராசரி ஜிடிபி 3.2% ஆக இருக்​கும். அடுத்த 2026-27 நிதி​யாண்​டில் இது 3.1% ஆக இருக்​கும். 2024-25-ல் இது 3.3% ஆக இருந்​தது. வளர்ந்த நாடு​களின் சராசரி ஜிடிபி 1.5%ஆக இருக்கும்.
அமெரிக்கா​வின் ஜிடிபி 2% வளரும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இது​போல, இந்​தி​யா​வின் ஜிடிபி 6.3% வளரும் என உலக வங்கி ஏற்​கெனவே கணித்​திருந்​தது. இந்​நிலை​யில், இந்த கணிப்பை 6.5% ஆக உலக வங்கி கடந்த மாதம் உயர்த்​தி​யது குறிப்​பிடத்​தக்​கது. ஐஎம்​எப் கணிப்​பின்​படி, உலகில் வேக​மாக வளரும் பொருளா​தாரமாக இந்​தியா உள்​ளது.விரை​வில் ஜப்​பானை பின்​னுக்​குத் தள்ளி 4-வது பெரிய பொருளா​தாரமாக இந்​தியா உரு​வெடுக்​கும். அதன் பிறகு, ஜெர்​மனியை பின்​னுக்​குத் தள்ளி 3-ம் இடத்​துக்கு முன்​னேறும் என்​றும் ஐஎம்எப் கணித்​துள்​ளது.
இந்தியாவின் ஜிடிபி 6.6% ஆக உயரும்: முந்தைய கணிப்பை விட 0.2% உயர்த்தியது ஐஎம்எப்

Read More
இந்தியாஉலகம்விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா…

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் அந்த இரு அணிகள் மோதிய இறுதிப்போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
8 அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சகிப்சதா பர்கான் – பகர் ஜமான் இணை முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. பர்கான் 57 ரன்னிலும், பகர் ஜமான் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சைம் அயுப் 14 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க அதிர்ச்சியாக அமைந்தது. அபிஷேக் சர்மா 5 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து தடுமாறியது. அடுத்து இணைந்த சஞ்சு சாம்சன் – திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சாம்சன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த திலக் வர்மா – சிவம் துபே இணை 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பொறுப்புடன் விளையாடிய சிவம் துபே 22 பந்துகளில் தலா 2 சிக்சர் பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது திலக் வர்மாவும், ரின்கு சிங்கும் களத்தில் இருந்தனர். இந்த ஓவரை ஹாரிஸ் ரவுப் வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட, அடுத்த பந்தை திலக் வர்மா சிக்சருக்கு அனுப்பினார்.
3 ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட, 4 ஆவது பந்தை ரின்கு சிங் பவுண்டரிக்கு விரட்டியபோது இந்திய அணி 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா 53 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

H1B visa பிரச்னை ஆபத்தில் ஐ.டி சட்டப்பூர்வ குடியேற்றத்தை பாதுகாக்க இந்தியா வலியுறுத்தல்..

அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கைக் காலத்தில், H-1B விசாக்களுக்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. திறமையான தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் பாதுகாக்கும் விதமாக, தெற்காசிய நாடான இந்தியா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் சாராத இந்தப் பணி விசா பிரிவை கடுமையாக மாற்றி அமைத்ததற்கும், கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்ததற்கும் எதிராக இந்தியா பேசியுள்ளது.
புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், H-1B விசாக்கள் மூலம் திறமையான பணியாளர்கள் வந்து செல்வதால், இந்திய மற்றும் அமெரிக்கப் பொருளாதாரம் நீண்ட காலமாகப் பலன் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “திறமையானவர்களின் நடமாட்டமும் பரிமாற்றங்களும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளன,” என்று குறிப்பிட்டார். டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய H-1B மாற்றங்கள் குறித்த கேள்விக்கு, “இது இன்னும் வளர்ந்து வரும் ஒரு சூழ்நிலை. நாங்கள் பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்று பதிலளித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே வாரத்தில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அமெரிக்காவில் “ஆக்கபூர்வமான சந்திப்புகள்” நடந்த சமயத்தில் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் புதிய H-1B விண்ணப்பங்களுக்கு 100,000 டாலர் கட்டணத்தை விதிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவால், கடந்த ஆண்டு H-1B விசா பெற்றவர்களில் 70%-க்கும் அதிகமானோர் இந்திய நாட்டவர்கள் என்பதால், வேறு எந்தக் குழுவையும் விட இந்தியர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு 280 டாலர் பில்லியன் ஆதரவு இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு அமெரிக்கப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதால், ஆயிரக்கணக்கான வேலைகள் இப்போது ஆபத்தான சூழலில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் நடந்து வரும் நிலையில், இந்த விசா மாற்றங்கள் மேலும் ஒரு பின்னடைவாக அமையுமோ என்று ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
பல அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் சமூக ஊடகங்களில் திறமையானவர்களுக்கான இந்த விசா வகையைப் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். சிலர் H-1B விசா துஷ்பிரயோகம் என்றும், சிலர் அமெரிக்க வல்லுநர்களுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும் மோசமான செயல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

குடியரசுக் கட்சியின் அமெரிக்க செனட்டர் எரிக் ஷிமிட் இந்த மாத தொடக்கத்தில், “அமெரிக்காவை ‘போட்டித்தன்மை’ மிக்கதாக வைத்திருக்க H-1B விசா விற்கப்பட்டது. அதற்குப் பதிலாக, அது அமெரிக்கத் தொழிலாளர்களை மாற்றுவதற்காக மில்லியன் கணக்கான வெளிநாட்டினரை இறக்குமதி செய்துள்ளது. மேலும், முழுத் தொழில்களையும் வெளிநாட்டு லாபியிஸ்ட்டுகளின் கைகளில் ஒப்படைத்துள்ளது,” என்று சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் குறை கூறினார்.

விசா மாற்றத்தின் அதிர்வலைகள் வேலைவாய்ப்புச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன. H-1B கட்டணம் அவற்றின் வருவாயைப் பாதித்துள்ளதால், இந்தியாவில் உள்ள மென்பொருள் ஏற்றுமதியாளர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மிக மோசமான வாரத்திற்குத் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட பல தகவல் தொழில்நுட்பப் பங்குகள் இந்த வாரம் வியாழக்கிழமை வரை 5.6% சரிந்து, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் மிக முக்கியமான வீழ்ச்சியைக் குறித்தது. ஒட்டுமொத்தமாக, நிஃப்டி ஐடி குறியீட்டில் உள்ள பத்து உறுப்பினர்களும் இந்த வாரம் மட்டும் 21 டாலர் மில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) மற்றும் இன்போசிஸ் லிமிடெட் ஆகியவை இந்தச் சரிவில் பெரும்பங்கு வகித்தன.

Read More
அரசியல்இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி ரத்து? – பொருளாதார ஆலோசகர்…

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி அடுத்த மாதம் ரத்து செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இறக்குமதி வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பொருட்கள் மீது 25 விழுக்காடு வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் 25 சதவிகித வரியை அபராதமாக விதித்துள்ளது. இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை, டெல்லியில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி பிரெண்ட் லின்ச் தலைமையிலான குழுவினர், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய பொருட்கள் மீதான 25 சதவிகித அபராத வரி நவம்பர் இறுதிக்குள் நீக்கப்படும் என நம்பிக்கை.

இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என பொருளாதார ஆலோசகர் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வரி பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை.
கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 விழுக்காடு அபராத வரி, நவம்பர் மாத இறுதிக்குள் நீக்கப்படும் என்று கூறினார். மேலும், இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்றும் ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க வரி தொடர்பான பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும் என்று கூறிய ஆனந்த நாகேஸ்வரன், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தனது உள்ளுணர்வின் வெளிப்பாடு இது என்றும் ஆனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடியை அடிக்கடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி பேசிவந்தார். இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுவணிகம்

அமெரிக்காவின் 50% சதவீத வரி விதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவில் பாதிக்கப்படும்….

இன்று முதல் இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதிப்பு அமலுக்கு வந்தது, இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கம்.
எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். மேலும் கடந்த 7 ஆம் தேதி முதல் இந்தியப் பொருள்கள் மீதான 25 சதவிகித வரி அமலுக்கு வந்தது. அது மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு அபராதமாக, கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புதின் உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா மீதான அபராத வரி நிறுத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரம்ப் அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணி முதல், இந்தியப் பொருள்கள் மீதான 50 சதவிகித இறக்குமதி வரி அமலுக்கு வந்தது.
இறக்குமதி வரி செலுத்தும் நிறுவனம், அதன் செலவை ஈடு செய்யும் வகையில், பொருள்களின் விலையை உயர்த்தி அதனை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும். இதனால், பொருள்களின் விலை அதிகரிக்கும்.
அதிக வரி விதிப்பதன் மூலம், தானாக பொருள்களின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் அந்தப் பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்ப்பார்கள். இதனால், உற்பத்தியாளர்கள் தங்கள் பொருள்களை வியாபாரம் செய்ய முடியாமல் நட்டத்தைச் சந்திப்பார்கள்.
நிறுவனம் நட்டத்தைச் சந்திக்கும் போது முதல் படியாக அதனைச் சமாளிக்க தனது ஊழியர்களின் அளவைக் குறைக்கும். அந்த வேலையை நம்பியிருந்த குடும்பத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும்.
ஒரு நாட்டின் மீது அதிக வரிவிதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களும் அதனை அதிக விலை கொடுத்து வாங்க முன்வராமல் போக, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதே பொருள்களை குறைந்த வரி கொண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும். இதன் மூலம், போட்டி நாடுகள் தங்கள் பொருள்களை அந்த நாட்டிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்து லாபம் அடையும்.
பொதுவாக ஒருநாட்டின் செல்வம் அதன் ஏற்றுமதியின் மூலம் அதிகரிக்கும். எந்த நாடு அதிக ஏற்றுமதி செய்கிறதோ அந்த நாட்டின் செல்வம் அதிகரிக்கும். அதே ஏற்றுமதி குறையும்போது, நாட்டின் வருமானமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா மீது வரி விதிப்பு ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க-ஜே.டி.வான்ஸ்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு முயற்சி என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுக்கவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது மறைமுக வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்திற்கு கடினமான சூழலை உருவாக்கவே, இந்த ‘பொருளாதார நெருக்கடி’ மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் என்.பி.சி. நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் உக்ரைன் போர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் ஜே.டி வான்ஸ் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வான்ஸ், “ரஷ்யாவை உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்தவைக்க, டிரம்ப் ‘ஆக்ரோஷமான பொருளாதார நெம்புகோல்’ (aggressive economic leverage) முறையைப் பயன்படுத்தியுள்ளார். இதில், இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட மறைமுக வரி விதிப்புகளும் அடங்கும்,” என்று கூறினார்.
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்ததால், அதன் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்த 3 நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளியாகி உள்ளது. இந்த வரி விதிப்புடன் சேர்த்து, இந்திய தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இது உலக அளவில் எந்தவொரு நாட்டிற்கும் விதிக்கப்பட்ட அதிகபட்ச வரியாகும்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கையை, ‘நியாயமற்றது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த வரிவிதிப்பு ஒரு தவறான கண்ணோட்டத்தில் எண்ணெய் விவகாரமாக சித்தரிக்கப்படுகிறது” என்றார்.
ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படாத நிலையில், இந்தியா மீது மட்டும் இந்த வரி விதிக்கப்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். “எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்குவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், அதை வாங்க வேண்டாம். யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஐரோப்பா அமெரிக்காவும் வாங்குகின்றன” என ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

இதனிடையே, ரஷ்ய அதிபர் புதின் உடன் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் போரை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான மத்தியஸ்தம் செய்ய முடியும் என அமெரிக்கா நம்புவதாக வான்ஸ் தெரிவித்தார். ரஷ்யா போரை நிறுத்தினால், மீண்டும் உலக பொருளாதாரத்தில் இணைக்கப்படும் என்ற செய்தியை டிரம்ப் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க வரி அழுத்தங்கள், இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டாண்மையை பாதிக்காது என்பதை இரு நாடுகளும் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில் உறுதி செய்தன. அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

தமிழக எம்.பி.க்களை அந்தரத்தில் அலறவிட்ட ஏர்இந்தியா-விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் 5 எம்.பி.கள் உள்பட 181 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் AI 2455, நானும், பல எம்.பி.க்களும், நூற்றுக்கணக்கான பயணிகளும் இன்று பயங்கரமான துயரத்தை எதிர்கொண்டோம்.
தாமதமாக புறப்பட்டதாகத் தொடங்கிய பயணம், ஒரு துயரமான பயணமாக மாறியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நாங்கள் முன்னெப்போதும் இல்லாத பதற்றத்தில் சிக்கினோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, கேப்டன் விமானத்தில் சிக்னல் கோளாறு இருப்பதாக அறிவித்து சென்னைக்குத் திருப்பி விடப்பட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், தரையிறங்க அனுமதிக்காக காத்திருந்தோம், விமானியின் முதல் முயற்சியின் போது எங்கள் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஓடுபாதையில் – மற்றொரு விமானம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நொடியில், கேப்டன் விரைவாக மேலே செல்ல முடிவு செய்ததால் விமானத்தில் இருந்த ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்பட்டது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
திறமை மற்றும் அதிர்ஷ்டத்தால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். பயணிகளின் பாதுகாப்பு அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க முடியாது. இந்த சம்பவத்தை அவசரமாக விசாரித்து, பொறுப்புணர்வை சரிசெய்யவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியோரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட இந்த ஏர்இந்தியா விமானத்தில் MPகளான கே.சி.வேணுகோபால், கொடிகுணில் சுரேஷ், அணில் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன், ராபர்ட் புரூஸ் என 5 எம்.பி.கள் உடன் 181 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் உடனடியாக சென்னையில் தரையிரக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரம் கழித்து மாற்று விமானத்தில் அனைவரும் டெல்லி புறப்பட்டனர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள விளக்கத்தில், “அன்புள்ள திரு. வேணுகோபால், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். சென்னை விமான நிலையத்தில் முதல் தரையிறங்கும் முயற்சியின் போது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததால் அல்ல, சென்னை விமான போக்குவரத்து ஆணையத்தால் ஒரு சுற்றுப்பாதை அமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள எங்கள் விமானிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள், மேலும் இந்த விஷயத்தில், அவர்கள் விமானம் முழுவதும் நிலையான நடைமுறைகளைப் பின்பற்றினர். இதுபோன்ற அனுபவம் தொந்தரவாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் திருப்பி விடப்பட்டதால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமை. உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
இந்தியாதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

சென்னை மெட்ரோ குறித்த கேள்விக்கு இணை அமைச்சர் பதில்-ரூ.3, 000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு…

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ 8,000 கோடிக்கும் அதிகமாக நிதியை விடுத்துள்ளதாகவும் 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தோகன் சாஹு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வெளியிடப்பட்ட நிதியைப் பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்திற்காக 2024-25 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ. 5,219.57 கோடியை விடுத்தது. இதன் நெட்வொர்க் நகரத்தின் முக்கிய பகுதிகளை அதன் மூன்று வழித்தடங்களுடன் இணைக்கும் – மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை. 2025-2026 ஆம் ஆண்டில், மத்திய ரூ. 8,445.8 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், ரூ. 3,000 கோடி இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல்.. அமெரிக்காவின் அறிவிப்பால் அடுத்து என்ன…

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல்.. அமெரிக்காவின் அறிவிப்பால் அடுத்து என்ன…

நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், இந்த வரி விதிப்புக்கான கெடுவை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் பால் பொருட்கள் துறையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், புதிய வரிவிதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பணமற்ற வர்த்தகத் தடைகளை இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கி வருவதாகவும், உக்ரைனில் போரை நிறுத்த முயலும் உலக அணுகுமுறைக்கு எதிராக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயையும் இந்தியா பெறுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக ஆகஸ்ட் ஒன்று முதல் இந்திய பொருட்களுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளர்
இந்நிலையில், டெல்லியில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் கவனத்துடன் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் பலன் தரும் வகையில் சமநிலையிலான ஒப்பந்தம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாக இருந்ததாகவும் விவசாயிகள், தொழில்முனைவோர்,சிறுகுறு தொழில்களின் நலனை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் செல்போன்கள், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, மருந்துப் பொருட்கள், வைரம் உள்ளிட்டவைகளின் விலை உயர உள்ளது. அதேநேரம், தோல், கிரானைட் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்தார். இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்பது குறித்து இந்த வார இறுதிக்குள் தெரியவரும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“தமிழ்நாட்டிற்கு ரூ. 3 லட்சம் கோடி.. காங்கிரஸைவிட 3 மடங்கு அதிக நிதி கொடுத்திருக்கிறோம்” – பிரதமர் 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்” என பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் பேசினார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் நினைவுப் பரிசை வழங்கினார்.
தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத் திறப்பு விழாவிற்கு வெள்ளை வேட்டி, சட்டை அணிந்துவந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத்தைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, “நான்கு நாள் அயல்நாட்டுப் பயணத்திற்குப் பிறகு நேரடியாக பகவான் ராமேஸ்வரனின் மண்ணில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. பகவான் ராமேஸ்வரன், திருச்செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு தூத்துக்குடி வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.
உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி இவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு போன்றவை. இந்த 11 ஆண்டுகளில் இந்தத் துறைகளின் மீது செலுத்தப்பட்ட கவனம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நமக்கு முதன்மையானது என்பதை காட்டுகிறது.
இதே மண்ணில் தான் வா.உ.சி. போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டு இருந்த காலத்திலேயே கடல் வழி வாணிபத்தின் சக்தியை புரிந்துகொண்டவர் அவர். காசி தமிழ் சங்கம் போன்ற ஏற்பாடுகள் மூலம் நம் கலாச்சார மரபுகளை வளர்த்துவருகிறோம். தூத்துக்குடியின் முத்துகளை பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிய நாட்டு முத்துக்கள் உலகம் முழுக்க பாரதத்தின் பொருளாதார வல்லமையின் அடையாளமாக இருந்துவந்தது.
இன்று பாரதத்தின் வளர்ச்சியில் உலகம் தனது வளர்ச்சியை காண்கிறது. உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் நமது வேகம் இன்னும் வேகமளிக்கப்போகிறது. இங்கிலாந்து ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்கப்படும் 99% பாரதத்தின் பொருட்கள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது. விலை மலிவாகவும், தேவை அதிகமாகவும் அங்கு இருக்கும். இங்கு அந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் நமது இளைஞர்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.
மேக் இன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம். இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்கும் அரசு வலு சேர்க்கிறது. ஆபரேஷன் சிந்துரின்போது, மேக் இன் இந்தியாவின் வலுவை பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை அழித்ததில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதத்தின் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை தூங்கவிடாமல் செய்கிறது.
தூத்துக்குடி புது முனைய திறப்புக்கு பிறகு தமிழ்நாட்டின் பெரும் நிறுவனங்கள், உடல்நல கட்டமைப்புகள், கல்வி ஆகியவற்றுக்கு வலு கிடைக்கும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சாலை ஆகியவற்றையும் சிறப்படைய செய்யும். அதுமட்டுமின்றி, வர்த்தகம் வேலை வாய்ப்பு ஆகியவையும் அதிகரிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்.
இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்றுவருகிறது. தற்சார்பு இந்தியாவின் உயிர் நாடியாக இந்திய ரயில்வே உள்ளது. 11 ஆண்டுகளில் ரயில்வே நவீனமயமாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளோம். வந்தே பாரத் ரயில்கள் வரிசையில் தமிழ்நாடு மக்களுக்கு புது அனுபவம் கிடைத்துவருகிறது. தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம்; பாம்பன் பாலம் கூட தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை போட்டிநாயக்கநல்லூர் மின்சார ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதன் மூலம், வந்தே பாரத் ரயில் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு வளர்ச்சி, மேம்படுத்த தமிழ்நாடு ஆகியவையே நமது முக்கிய உறுதிப்பாடு. நாங்கள் தமிழ்நாடு வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என பேசினார்.

Read More