India

இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: 8 மசோதாக்களை அறிமுகம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், 8 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்ட வருமான வரி மசோதா, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்யவும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பெஹல்காம் தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீடு, பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்,பாலு தெரிவித்துள்ளார். இதே போன்று, கீழடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார். இதுபோல பல பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலற விட்ட ஆகாஷ் தீப்!49 ஆண்டு கால சாதனையை தகர்த்தது !

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் 49 ஆண்டு கால சாதனையை தகர்த்துள்ளார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 427/6 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
ஆட்டநாயகன் கேப்டன் சுப்மன் கில்
இதனால் 608 என்ற இமாலய இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 68 ஓவரில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மேலும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதன் முறையாக வெற்றியை ருசித்துள்ளது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (269 ரன்கள்), 2வது இன்னிங்சில் சதம் (161 ரன்) விளாசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
ஆகாஷ் தீப் 10 விக்கெட்
இந்திய அணி பாஸ்ட் பவுலர் ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2 இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் தீப் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளும் வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். மற்றொரு பவுலர் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 1 விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

ஆகாஷ் தீப் பெரும் சாதனை

இங்கிலாந்து மண்ணில் களம் கண்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். குறிப்பாக அவர் 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேரை (பென் டக்கெட், ஜோ ரூட், ஆலி போப் மற்றும் ஹாரி புரூக்) ஆகியோரை ஒரே இன்னிங்ஸில் அவுட்டாக்கிய‌ முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் தீப் பெற்றுள்ளார்.
சிறந்த இந்திய பவுலர்
மைக்கேல் ஹோல்டிங் 1976ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முதல் 4 பேட்ஸ்மேன்களை அவுட்டாகியிருந்த நிலையில், ஆகாஷ் தீப் அவரது சாதனையை முறியடித்துள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்து வீசிய முதல் இந்திய பந்துவீச்சாளர் (187/10) என்ற பெருமையை ஆகாஷ் தீப் பெற்றார்.

முன்னாள் வீரர் சேத்தன் சர்மாவின் 10/188 சிறந்த பவுலிங்கை ஆகாஷ் தீப் முறியடித்துள்ளார். முகமது ஷமி போன்று பந்துவீசுவதால் ‘குட்டி’ ஷமி என அழைக்கப்படும் ஆகாஷ் தீப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Read More
இந்தியாஉலகம்வணிகம்

இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்: சீனாவுக்கு சூசகமாக தெரிவித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் “மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்” ஒன்று குறித்து மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஜூலை 9 ஆம் தேதி அமெரிக்காவின் வர்த்தக வரி நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னதாக, வாஷிங்டனும் புதுடெல்லியும் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஏப்ரல் 2 ஆம் தேதி, இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்கா அறிவித்தது. பின்னர் 90 நாள் இடைக்கால சலுகை அளிக்கப்பட்டது, அது ஜூலை 9 அன்று முடிவடைகிறது.

“நாங்கள் எந்தவொரு நாட்டோடும் சும்மா ஒப்பந்தங்கள் செய்வதில்லை. அனைவரும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள், அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பத்திரிகைகள், ‘உங்களுக்கு உண்மையில் ஆர்வம் உள்ள யாரும் இல்லையா?’ என்று கேட்டன.

சரி, நாங்கள் நேற்றுதான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். எங்களிடம் சில சிறந்த ஒப்பந்தங்கள் உள்ளன. இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் வரலாம். இந்தியா தெரிவிக்கும். சீன ஒப்பந்தத்தில், நாங்கள் சீனாவைத் தெரிவிக்க வைக்கத் தொடங்கினோம்,” என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
வியாழக்கிழமை உள்ளூர் நேரம் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு “பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் பேசிய டிரம்ப், சீனாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்தோ, அல்லது இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு குறித்தோ விரிவாகப் பேசவில்லை.

“நாங்கள் அனைவருடனும் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை. சிலருக்கு நாங்கள் ஒரு கடிதம் அனுப்பி, மிக்க நன்றி என்று கூறிவிடுவோம். நீங்கள் 25, 35, 45 சதவீதம் செலுத்தப் போகிறீர்கள். இதுதான் எளிதான வழி, என் மக்கள் அதை அப்படி செய்ய விரும்பவில்லை. அவர்கள் அதில் சிலவற்றைச் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் நான் செய்வதை விட அதிகமான ஒப்பந்தங்களைச் செய்ய விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இந்தியா வந்திருந்தனர். பரஸ்பர வரிகளுக்கான ஜூலை 8 காலக்கெடு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தங்கள் சிறந்த சலுகைகளை அளிக்குமாறு அமெரிக்கா நாடுகளைக் கேட்டுக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

“கடிதத்தின் தகுதிகள் மற்றும் உள்ளடக்கத்தை நான் உறுதிப்படுத்த முடியும். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) இந்த கடிதத்தை எங்கள் வர்த்தகப் பங்காளிகள் அனைவருக்கும் அனுப்பினார், காலக்கெடு நெருங்குகிறது என்பதை அவர்களுக்கு ஒரு நட்புரீதியான நினைவூட்டலாக,” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியிருந்தார்.

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் கூறுகையில், அமெரிக்கா மேம்பட்ட உற்பத்தியை மீண்டும் கொண்டு வரவும், இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்யவும் நோக்கம் கொண்டுள்ளது. இரு தரப்பினரும் “உண்மையில் செயல்படும் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தனர்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், எண்ணெய் மற்றும் பாதுகாப்பு கொள்முதலை பல்வகைப்படுத்துவது நாட்டின் மூலோபாய நலன் சார்ந்தது என்றும், அமெரிக்காவில் இருந்து அதிகமாக வாங்குவது சரக்கு வர்த்தக இடைவெளியை கணிசமாக குறைக்க உதவும் என்றும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 2025 இல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்ந்து 90 சதவீதமாக உயர்ந்ததுடன், இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனும் அதிகரித்து வருகிறது.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

இனி பிறப்பு சான்றிதழ் வழங்க புதிய நடைமுறை – மத்திய அரசு அதிரடி உத்தரவு

தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன்பாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து, குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களின் தாய்மார்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு முடிந்தவுடன், பிறப்பு சான்றிதழை பதிவாளர் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மின்னணு அல்லது பிற வடிவத்தில் பிறப்புச் சான்றிதழை ஏழு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் குழந்தை பிறப்பு பதிவு மையங்களாக செயல்படும் நிலையில், பிறப்பு சான்றிதழின் பயன்பாடு அண்மை காலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளதால், உடனடியாக பிறப்பு சான்றிதழை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்றும் இது குடிமக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தும் என்றும் இந்திய பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More
இந்தியாஉலகம்தொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று மாலை சென்றடைகிறார் சுபான்ஷூ சுக்லா

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு இந்தியா செயல்படுத்த உள்ளது. இதற்கு பல்வேறு வகையில் உதவ உள்ள பயணம் தான் ஆக்சியம் 4. நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல ஆயத்தமாகினர்.
பல்வேறு காரணங்களால், 6 முறை ஆக்சியம் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி பிற்பகல் 12.01 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினருடன் பால்கன் 9- ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமாக புவி சுற்று வட்டப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கும் திரும்பியது.
ராகேஷ் சர்மாவுக்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவண்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார். சர்வதேச விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், பயணத்தை தொடங்கும் முன்பு தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு மனதை இலகுவாக்கி கொண்டனர். இதில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஷாருக்கானின் ஸ்வதேஸ் பட பாடலை கேட்டு ரசித்தார்.

இந்நிலையில், சுபான்ஷூ சுக்லாவின் சர்வதேச விண்வெளி பயணத்தை, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அவரது குடும்பத்தினர் பெருமிதத்துடன் கண்டு களித்தனர். சுபான்ஷூ சுக்லாவின் தந்தை மற்றும் தாய் உணர்ச்சி வயப்பட்ட நிலையில், சுபான்ஷூவின் இரண்டு சகோதரிகளும் அவர்களை அரவணைத்து ஆனந்தக் கண்ணீரை துடைத்து விட்டனர். இதே போன்று டெல்லியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா தூதருடன் சர்வதேச விண்வெளி பயணத்தை காணொலி மூலம் கண்டு களித்தார்.
advertisement
ஃபால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம், ,இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர். இதில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா மட்டும் 7 ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்.
விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ராகேஷ் சர்மா ஆக்சியம் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், அதிக நேரம் ஜன்னல் வழியாக பாருங்கள் என அவர்களுக்குக் கூறியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று மாலை சென்றடைகிறார் சுபான்ஷூ சுக்லா

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சர்வதேச யோகா தினம் 2025-எந்த நேரத்தில் யோகா செய்வது நல்லது…

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதன் விளைவாக 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகா என்பது சுவாசக் கட்டுப்பாடு மற்றும் தியானம் உள்ளிட்ட பல நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு பழமையான அதே சமயம் பாரம்பரியமிக்க உடற்பயிற்சி ஆகும். வழக்கமான அடிப்படையில் தினசரி யோகா செய்வதால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
ஆனால் நீங்கள் யோகாவின் நன்மைகளை பெற இந்த பயிற்சியை காலை அல்லது மாலை எப்போது செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா? யோகாவை எப்போது செய்தால் என்ன பலன் ஒன்று தானே என்றும் சிலர் யோசிக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் யோகா பயிற்சியில் ஈடுபடுவது தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் எந்த நேரத்தில் யோகா செய்தால் சிறந்த நன்மைகள் கிடைக்கும் என்பது உங்கள் உடல் மற்றும் தினசரி அட்டவணையை பொறுத்தது.
யோகா குருவும் அக்ஷர் யோகா கேந்திராவின் நிறுவனருமான அக்ஷரின் கூற்றுப்படி, “ உங்கள் காலை நேரத்தை யோகாவுடன் தொடங்குவது உடலில் இருக்கும் தசை குழுக்களை (muscle groups) செயல்படுத்தவும், முழு உடலை உற்சாகப்படுத்த மற்றும் மனதை மகிழ்ச்சியாக வைக்க உதவும் ஒரு சிறந்த வழி. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் முழுமையான மற்றும் உற்சாகமூட்டும் பயிற்சியை வழங்கும் செயலாக கருதப்படுகிறது. இது நாள் முழுவதும் நீங்கள் விழிப்பு மற்றும் கவனத்துடன் இருப்பதை உறுதிசெய்கிறது. எனவே இதன் காரணமாக உங்கள் உற்பத்தித்திறனும் சிறப்பாக இருக்கும். ஆனால் இரவு நீண்ட நேரம் நீங்கள் அசையாமல் படுத்து தூங்கி எழுவதன் காரணமாக நல்ல வார்ம்-அப் மூலம் யோகா அல்லது சூரிய நமஸ்கரம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பொருள் முதலில் நீங்கள் ஸ்ட்ரெச் பயிற்சிகளில் கூடுதல் கவனமுடன் அதே சமயம் மென்மையாக ஈடுபட வேண்டும்.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன
யோகா செய்வதால் மனநலன்கள்

யோகா செய்வதால் உடல் நலன் தவிர மனநலன் சிறப்பாக நிர்வகிக்க முடியும். யோகா மன அழுத்தத்தைசமாளிக்க உதவுகிறது. மனச்சோர்வு உடல் மற்றும் மனதில் பேரழிவு விளைவுகளை உண்டு செய்கிறது. எந்த சிக்கலான சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை யோகா பயிற்சி அளிக்கிறது.

கவனத்தை ஒருங்கிணைக்கிறது

யோகா செய்வது கவனத்தை கூர்மைப்படுத்துகிறது. ஒருங்கிணைந்த கவனத்தை அளிக்கிறது. தியானம் செய்வது அலைபாயும் மனதை நேர்மறைக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் மேன்மையான செயல்பாடுகள் மூலம் வெற்றியை ருசிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் தோரணை பயிற்சிகள் மூலம் உட்கார்ந்த வாழ்க்கை முறை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. யோகாசனம் செய்வது உடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. விறைப்பை குறைக்கிறது. மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு வலிமையையும் நெகிழ்வ்த்தன்மையும் அளிக்கிறது.

ஒழுக்கம் மற்றும் நினைவாற்றல்

பதஞ்சலி யோக சூத்திரங்களில் எழுதப்பட்ட யம மற்றும் நியம செயல்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் நினைவாற்றலையும் அதிகம் பெற முடியும்.

Read More
IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது RCB அணி-IPL 2025

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் அதிரடியாக விளையாடி 1 சிக்சர், 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். மயங்க் அகர்வால் 24 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 26 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர்.
லிவிங்ஸ்டோன் 25 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 43 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் கொடுத்தார். ஜித்தேஷ் சர்மா 10 பந்துகளில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்துள்ள ஆர்சிபி அணி 190ரன்கள் எடுத்தது. இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது.
பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களும், ஜாஷ் இங்லீஷ் 39 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மேட்ச்சில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மிகவும் தடுமாறிய நேஹல் வதேரா 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சஷாங்க் சிங் அணிக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.
கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டபோது ஸ்கோர் 162/7 என இருந்தது. கடைசி ஓவர் ஹேசல்வுட் வீசினார். இந்த ஒவரில் 0, 0, 6,4,6,6 என அமைந்து 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 30 பந்துகளை எதிர்கொண்ட சஷாங்க் சிங் 6 சிக்சர் 3 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஷோபனா, நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண்: 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழிலதிபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன.

கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு, சுகா​தா​ரம், தொழில், வர்த்​தகம், பொறி​யியல், பொது விவ​காரங்​கள், குடிமைப் பணி மற்​றும் சமூக சேவை உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த ஆண்​டுக்​கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்​தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன.
முதல்​கட்​ட​மாக கடந்த ஏப்​ரல் 28-ம் தேதி 71 பேருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்​கி​னார். மீதம் உள்ள 68 பேருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நடை​பெற்ற விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கர், பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய அமைச்​சர்​கள் அமித்​ஷா, ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர், குமி​தினி லாகியா (மறைவு), சாரதா சின்ஹா (மறைவு) ஆகியோ​ருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார். மறைந்த பத்ம விபூஷண் விரு​தாளர்​கள் சார்​பில் குடும்​பத்​தினர் விருதுகளை பெற்​றுக் கொண்​டனர்​.

பத்ம பூஷண் விருதுதமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரசேகர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் பிபக் தேப்ராய், கைலாஷ் நாத் தீக்சித், ஜாலின் கோஸ்வாமி, மனோகர் ஜோஷி (மறைவு), ஆனந்த் நாக், சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

பத்மஸ்ரீ விருது: தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, எழுத்​தாளர் சீனி விஸ்​வ​நாதன், எம்​.டி. ஸ்ரீநி​வாஸ், தெருக்​கூத்து கலைஞர் புரிசை கண்​ணப்ப சம்​பந்​தன், புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்​சிணா​மூர்த்தி மற்​றும் நாராயணன் (மறைவு), சாஜன் பாஜங்​கா, நீரஜா பாலி​யா, அஜய், ஹர்​சந்​திரன் சிங், பீம் சிங், செலான் ஏக்​நாத், விலாஸ் கஜனன்​ராவ், மகாவீர் நாயக், சோனியா நில்​யானந்த், அசூல் ராமச்​சந்​திர பாலவ், வி.ஆர்​.பஞ்​ச​முகி, லாவ்​ஜி​பாய், சுவாமி பிர​திபிலானந்​தா, பிர​சாந்த் பிர​காஷ், நாகேந்​திர​நாத் ராய், அசோக் லஷ்மண் சரப், அரவிந்த் சர்​மா, அசுதோஷ் சர்​மா, சுபாஷ் கெலுலால் சர்​மா, ஹர்​விந்​தர் சிங், சந்​திர​காந்த் சோம்​பு​ரா, வெங்​கப்பா அம்​பாஜி சுகலேகர், கேரளாவை சேர்ந்த கால்​பந்து விளை​யாட்டு வீரரும் நடிகரு​மான விஜயன், ஆகியோ​ருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார்.

அமெரிக்கவாழ் தமிழர்: சென்னையை பூர்விகமாக கொண்ட சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் அறக்கட்டளை தலைவராக பணியாற்றி வருகிறார். குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதினை அவர் பெற்றுக் கொண்டார்.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

விராட்கோலி ஓய்வு – டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பது…

123 டெஸ்ட் போட்டிகள், 210 இன்னிங்ஸ்கள், 9230 ரன்கள், 30 சதங்கள்… இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய காலகட்டத்தில், இந்தியாவின் பேட்டிங் வரிசையின் ஆன்மாவாகவும், முதுகெலும்பாகவும் அவர் திகழ்ந்தார். அணியை நிலைநிறுத்துவதிலும், எதிரணியை நொறுக்குவதிலும் அவரது பங்கு அளப்பரியது. அவரது ஆட்டம் பலரது வாழ்க்கையில் அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. டெண்டுல்கரைப் போலவே, கோலியும் ஒரு விளையாட்டு வீரரைத் தாண்டி, ஒரு தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, உணர்வுப்பூர்வமான பிணைப்பாக இருந்தார். அவரது பேட்டிங் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் ரசிகர்களை பிரமிக்க வைத்தாலும், மறுபுறம் அணி தோல்வியடையும்போது அதே ரசிகர்களின் விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மரபு மிகவும் தெளிவானது. அவர் இந்திய மண்ணில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு சரிவு அவரது புள்ளிவிவரங்களை சற்று குறைத்திருக்கலாம். ஒரு காலத்தில் அனைத்து பேட்டிங் சாதனைகளையும் முறியடித்து, யாரும் நெருங்க முடியாத உச்சத்தை எட்டுவார் என்று கணிக்கப்பட்ட விராட்கோலி, விதிவசத்தால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனாலும், இன்று அதிக ரன் குவித்த இந்தியாவின் நான்காவது வீரராக விடைபெறுகிறார்.
123 டெஸ்ட் போட்டிகள், 210 இன்னிங்ஸ்கள், 9230 ரன்கள், 30 சதங்கள்… இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய காலகட்டத்தில், இந்தியாவின் பேட்டிங் வரிசையின் ஆன்மாவாகவும், முதுகெலும்பாகவும் அவர் திகழ்ந்தார். அணியை நிலைநிறுத்துவதிலும், எதிரணியை நொறுக்குவதிலும் அவரது பங்கு அளப்பரியது. அவரது ஆட்டம் பலரது வாழ்க்கையில் அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. டெண்டுல்கரைப் போலவே, கோலியும் ஒரு விளையாட்டு வீரரைத் தாண்டி, ஒரு தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, உணர்வுப்பூர்வமான பிணைப்பாக இருந்தார். அவரது பேட்டிங் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் ரசிகர்களை பிரமிக்க வைத்தாலும், மறுபுறம் அணி தோல்வியடையும்போது அதே ரசிகர்களின் விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மரபு மிகவும் தெளிவானது. அவர் இந்திய மண்ணில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு சரிவு அவரது புள்ளிவிவரங்களை சற்று குறைத்திருக்கலாம். ஒரு காலத்தில் அனைத்து பேட்டிங் சாதனைகளையும் முறியடித்து, யாரும் நெருங்க முடியாத உச்சத்தை எட்டுவார் என்று கணிக்கப்பட்ட விராட்கோலி, விதிவசத்தால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனாலும், இன்று அதிக ரன் குவித்த இந்தியாவின் நான்காவது வீரராக விடைபெறுகிறார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடு

பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை… காஷ்மீர் அலர்ட்- ஆபரேஷன் சிந்தூர் அதிரடி!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியை தொடங்கியுள்ள இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அதிரடி காட்டி வருகிறது. இந்நிலையில் எல்லையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவில் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி தாக்குதலை பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்றிருந்த நிலையில், அவர்களை திடீரென சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காஷ்மீரை சேர்ந்த குதிரை ஓட்டி மற்றும் சுற்றுலா பயணிகள் என மொத்தம் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் இந்தியர்களை பெரிதும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பாக கருதப்படும் ”தி ரெசிஸ்டண்ட் ஃப்ரன்ட்” அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து போதிய உதவிகள் செய்து வந்ததால் அந்நாட்டின் மீது கோபம் திரும்பியது.
பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி ரகசிய பிளானை இந்திய ராணுவம் தயாரித்து வந்தது. முன்னதாக ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இன்றைய தினம் நாடு முழுவதும் போர் ஒத்திகை நிகழ்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே போர் ஒத்திகை முடிந்த பின்னர் தான் பதிலடி தாக்குதல் தொடங்கும் என்று இந்திய மக்கள் நினைத்திருப்பர். பயங்கரவாதிகள் கூட அப்படித்தான் கருதியிருக்கக் கூடும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த பதிலடி திட்டத்திற்கு ”ஆபரேஷன் சிந்தூர்” என்று மத்திய அரசு பெயர் வைத்துள்ளது. இந்த சூழலில் இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, சம்பா, கத்வா, ரஜோரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Read More