India

இந்தியாஉலகம்தமிழ்நாடு

இன்றுடன் முடிவடைந்த காலக்கெடு… இந்தியாவை விட்டு வெளியேறிய 537 பாகிஸ்தானியர்கள்!

இன்றுடன் முடிவடைந்த காலக்கெடு… இந்தியாவை விட்டு வெளியேறிய 537 பாகிஸ்தானியர்கள்!
‘சார்க்’ விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், இதுவரை 537 பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதேபோன்று தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் வெளியேறவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நேற்றைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் 537 பாகிஸ்தானியர்கள் அட்டாரி – வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேபோன்று பாகிஸ்தானில் தங்கியிருந்த இந்தியர்கள் 850 பேர் கடந்த நான்கு நாட்களில் நாடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக வந்த பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதுச்சேரியில் விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானியர்களை வெளியேற்ற குடியேற்றத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள்- டிரம்பின் பரஸ்பர வரி

இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 26 சதவீதமாக உயர்த்தி பதிலுக்கு பதில் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பால் இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வர்த்தக வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் வரி உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் என நீண்டு கொண்டே போகிறது அமெரிக்காவின் வரி உயர்வு படலம். அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய தொழில்துறை கடும் பின்னடைவை எதிர்கொள்ளும் அபாயம் நிலவுவதாக கருதப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக நிபுணர்களின் கருத்துகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் குறைவான பாதிப்புகளே இருக்கும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், சீனா, ஜப்பான், வியட்நாம், இலங்கை போன்று ஏற்றுமதியை சார்ந்து இந்தியா இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாக திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பின்னலாடைத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் வரி உயர்வு உதவியாக இருக்கும் என இந்திய ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறுகிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் உருவாகும் பணவீக்கத்தால் அந்நாட்டு மக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளதாக தணிக்கையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கருத்துகள், இந்திய தொழில்துறைக்கு ஆதரவாக உள்ள நிலையில், வரி உயர்வு குறித்து அமெரிக்காவுடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் என்பதால் விரைவில் பெரிய அளவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
இந்தியா

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி..!!!

பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் 2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும்

Read More
அரசியல்இந்தியா

எல்லைகள் பாதுகாப்பாக இல்லையென்றால் நாடு வளர்ச்சியடைய முடியாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஹசாரிபாக்: எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) 59-வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்

Read More
இந்தியா

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கிழக்கு-மத்திய வங்கக்

Read More
இந்தியாவிளையாட்டு

ஆஸ்திரேலிய அணியால் முடியாததை இந்திய அணி சாதித்து விட்டது..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, பும்ரா என

Read More
இந்தியாஉலகம்

10000 கோடி முதலீடு…இந்திய – பிரிட்டன் வர்த்தகம்

இந்தியா-பிரிட்டன் இடையே, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டன்,

Read More
விளையாட்டு

கொரோனாவை சமாளிக்க நிதி உதவி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

கொரோனா வைரஸை சமாளிப்பதற்கு இந்தியாவுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூபாய் 7.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

Read More