Author: Namadhu Arasu

சினிமா

என் பெயர் அந்த லிஸ்ட்டில் இல்லாதது வேதனையளிக்கிறது” – இயக்குநர் சுந்தர் சி….

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் படங்களையும், தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களையும் கொடுத்து வரும் தன்னுடைய பெயர் நல்ல இயக்குனர் என்ற பட்டியலில் வராதது வருத்தம் என சுந்தர்.சி வேதனை தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இந்திய சினிமாவில் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி பிளாக் பஸ்டரான ஒரே திரைப்படம் மதகஜராஜா என விஷால் பெருமைப்பட பேசி உள்ளார். இது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
மதகஜராஜா திரைப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து இந்த பொங்கலுக்கு வெளியானது. ஆக்சன், காமெடி என பக்கா கமர்சியல் ஃபார்முலாவில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தற்போது வரை மட்டும் 20 கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், அஞ்சலி, விஜய் ஆண்டனி, சுந்தர்.சி உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அஞ்சலி, மதகஜராஜாவை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் எனக் கூறினார். சுந்தர்.சி எல்லா படங்களிலும் ஒரே பெயரை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வைக்கிறார். அடுத்த படத்தில் மாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். கலகலப்பு மதகஜராஜா படங்களில் நடித்த அஞ்சலி தன்னுடைய ராசியான நடிகை என்று சுந்தர்.சி பாராட்டினார். பின்னர் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில், விஷால் பாடிய ‘ஓ மை டியர் லவ்வர்’ பாடல் படத்திற்கான அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அந்தப் பாடலை தன்னுடைய கான்செட்டில் விஷால் பாட இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆளுநர் பிரச்னையை வரும் புதன்கிழமைக்குள் தீர்க்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஆளுநர் பிரச்னையை வரும் புதன்கிழமைக்குள் தீர்க்க முயற்சிக்காவிட்டால் தாங்களே தீர்க்க முயற்சிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

”கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக்கியவர் எம்.ஜி.ஆர்” – தவெக தலைவர் விஜய்

கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் மையம் ஆனவர் எம்ஜிஆர் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய்,

அளவற்ற வறுமையைத் தாண்டியவர் என்றும், அசைக்க முடியாத வெற்றியாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய் – காவல்துறையினர் அனுமதி….

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து வரும் நிலையில், போராட்டக்குழுவினரை சந்திக்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அண்மையில் அறிவித்தார். ஜனவரி 19 அல்லது 20இல் பரந்தூர் செல்ல அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை மறுநாள் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநர் குறுக்கீடுக்கு எதிராக தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேர்வு குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினார்.

ஆளுநரின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஆளுநர் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், துணை வேந்தர்களை நியமிக்கும் குழுவில் யு.ஜி.சி. தலைவரை சேர்க்க வேண்டும் என்ற சட்ட விதி இல்லாத நிலையில், ஆளுநர் தன்னிச்சையாக தேர்வு குழுவை அமைத்து அதனை அரசாணையாக வெளியிடக் கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாகுற்றம்

போலீஸ் கண் முன் மகளை சரமாரியாக சுட்டுக் கொன்ற தந்தை.. திடுக் சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தந்தை, போலீசார் முன்னிலையிலேயே தனது மகளை சரமாரியாக சுட்டுக் கொன்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி என்ன?
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் தானு குர்ஜார் என்ற 20 வயது இளம் பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அந்த இளைஞரை திருமணம் செய்யக் கூடாது என கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடு நிற்காமல் தானு குர்ஜாருக்கு உடனே வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 18-ம் தேதி திருமண தேதியை முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இதனால் மனம் உடைந்து போன தானுகுர்ஜார் தனது செல்போன் மூலம் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது காதலை ஏற்க மறுத்து குடும்பத்தினர் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், மீறினால் கொலை செய்யும் நிலைக்கு கூட சென்றுவிடுவார்கள் என்றும் பேசியிருந்தார்.

மேலும் தனக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு தன்னுடைய குடும்பம் தான் காரணம் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை போலீசார் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்தார் பார்த்து, தானு வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
போலீசார் வீடியோ குறித்து விசாரணை நடத்திய போது, பெற்றோருடன் வீட்டில் இருக்க தனக்கு பிடிக்கவில்லை என தானுகுர்ஜார் தெரிவித்துள்ளார். அப்போது போலீசாரிடம், “தனது மகளை சமாதானப்படுத்த சற்று நேரம் கொடுங்கள்” எனக் கூறி தானுவின் தந்தை மகேஷ் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

போலீசார் இருக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மகேஷ் அருகே அவரது உறவினர் ராகுல் என்பவரும் உடன் இருந்தார். சற்று நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் வெடிக்க, ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய தந்தை மகேஷ் இடுப்பில் சொருகி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மகள் என்றும் பாராமல் அவரது மார்பிலேயே சுட்டு விட்டார்.
அதே நேரம் உறவினர் ராகுலும், கைத்துப்பாக்கியால் தானுவின் உடலின் பல்வேறு இடங்களில் சுட்டுத் தள்ளியிருக்கிறார். இதில் தானு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். போலீசார் ஓடி வருவதற்குள் அங்கிருந்து ராகுல் தப்பியோடிவிட்டார். தந்தை மகேஷை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

தள்ளிப்போகிறதா அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி?

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் டிரைலர்… ரிலீஸ் தேதி குறித்து வெளியான அப்டேட்!

Read More
தமிழ்நாடுவிளையாட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மகன் இன்பநிதியும் பங்கேற்றார். முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கும் முன் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகள், 750 காளையர்கள் களம் காண உள்ளனர். களம் காணும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தை பெறும் காளைக்கு டிராக்டர் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Read More
தமிழ்நாடு

போக்குவரத்து மாற்றம் – சென்னையில் காணும் பொங்கல்…

காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், இதனையொட்டி சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்கள், கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வர்.

இதற்காக மக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
ஆன்மீகம்

2025 ஜனவரி மாதம் 13 முதல் 19 வரையிலான இந்த வார காலத்தில், மகர ராசிக்கு சூரிய பகவானின் பெயர்ச்சி, சூரியன் மற்றும் குரு பகவான் நவபஞ்சமா ஸ்தானத்தில் அமர்ந்து யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக குரு மற்றும் சூரிய பகவானின் சுப பார்வையானது மேஷம், ரிஷபம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு பெரிய அளவில் வெற்றி, நன்மைகள் தரக்கூடியதாக அமையும்.
மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு ஜனவரி மூன்றாம் வாரத்தில் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். நீண்ட காலமாக இருக்கக்கூடிய உங்கள் கவலைகள் அனைத்தும் தீரும். உங்கள் வீட்டின் நிலைமை மற்றும் பணி சூழல் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் பேச்சில் இனிமையைக் கடைப்பிடித்தல் உங்கள் மரியாதை அதிகரிக்கும். காதல் உறவு விஷயத்தில் இணக்கமான சூழல் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மூலம் பெரிய நன்மைகளை அடைவீர்கள்.
ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு ஜனவரி மூன்றாம் வாரத்தில் மிகவும் சுபமாகவும், அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலை, வியாபாரம் தொடர்பாக நல்ல பலன்கள் பெறுவீர்கள். உங்கள் வீட்டிலும், வெளியிடத்திலும் பிறரின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.
உங்களின் பயணங்கள் இனிமையானதாக இருக்கும். வாழ்க்கையில் பெரிய சாதனையை செய்ய வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மனைவியுடன் மகிழ்ச்சியான தருணங்கள் அனுபவிப்பீர்கள்.
சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இந்த வாரம் அமையும். சில காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். குறிப்பாக திருமணம் முயற்சியில் நல்ல தகவல் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வேலை செய்யும் பெண்களுக்கு சிறப்பான வெற்றியும், வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடல் நலம் மேம்படும்.
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரத்தில் சற்று பரபரப்பானதாக இருந்தாலும், அதன் மூலம் நன்மைகள் நடக்கும். உங்கள் வேலையில் மும்முரமாக இடம் பெறுவீர்கள். இந்த வாரத்தில் பணிச் சுமை அதிகமாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் சில முக்கியமான பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தால் எந்த ஒரு சவால்களையும் சமாளிக்க முடியும். குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு ஊக்கத்தைத் தரும். குடும்ப உறவுகள் இணக்கமானதாக இருக்கும்.
விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு சில நாட்களாக தடைப்பட்டு வந்த பணிகளை முடிக்க வாய்ப்பு உண்டு. உங்களின் வருமானம் அதிகரிக்கும். ஆன்மீக நடவடிக்கைகள் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் வேலையில் வெற்றி பெறவும். வேலை செய்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்களையும் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தொழில் தொடர்பாக புதிய முதலீடு செய்ய நினைப்பீர்கள். அதே போல லாபகரமான சூழலும் நிலவு. உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்காக முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

Read More