murder

குற்றம்தமிழ்நாடு

நெல்லை ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் நேற்று முன் தினம் காலையில் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வக்ஃபு நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல்கள் குறித்து காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்த போது, உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்தனர்.
நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் நேற்று முன் தினம் காலையில் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வக்ஃபு நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல்கள் குறித்து காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்த போது, உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்தனர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார். மேலும் நிலப்பிரச்னை தொடர்பான இந்த கொலை சம்பவத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதற்கிடையே ஜாகிர் உசேன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், கொலை மிரட்டல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நெல்லை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், தற்போது கோவை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக உள்ள செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் ஜாகிர் உசேனின் உடலை பெற்றுக்கொண்டனர். ஜாகிர் உசேன் உடலுக்கு அவரது குடும்பத்தினர் சிறப்புத் தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.

Read More
இந்தியாகுற்றம்

போலீஸ் கண் முன் மகளை சரமாரியாக சுட்டுக் கொன்ற தந்தை.. திடுக் சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தந்தை, போலீசார் முன்னிலையிலேயே தனது மகளை சரமாரியாக சுட்டுக் கொன்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி என்ன?
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் தானு குர்ஜார் என்ற 20 வயது இளம் பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அந்த இளைஞரை திருமணம் செய்யக் கூடாது என கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடு நிற்காமல் தானு குர்ஜாருக்கு உடனே வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 18-ம் தேதி திருமண தேதியை முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இதனால் மனம் உடைந்து போன தானுகுர்ஜார் தனது செல்போன் மூலம் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது காதலை ஏற்க மறுத்து குடும்பத்தினர் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், மீறினால் கொலை செய்யும் நிலைக்கு கூட சென்றுவிடுவார்கள் என்றும் பேசியிருந்தார்.

மேலும் தனக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு தன்னுடைய குடும்பம் தான் காரணம் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை போலீசார் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்தார் பார்த்து, தானு வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
போலீசார் வீடியோ குறித்து விசாரணை நடத்திய போது, பெற்றோருடன் வீட்டில் இருக்க தனக்கு பிடிக்கவில்லை என தானுகுர்ஜார் தெரிவித்துள்ளார். அப்போது போலீசாரிடம், “தனது மகளை சமாதானப்படுத்த சற்று நேரம் கொடுங்கள்” எனக் கூறி தானுவின் தந்தை மகேஷ் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

போலீசார் இருக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மகேஷ் அருகே அவரது உறவினர் ராகுல் என்பவரும் உடன் இருந்தார். சற்று நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் வெடிக்க, ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய தந்தை மகேஷ் இடுப்பில் சொருகி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மகள் என்றும் பாராமல் அவரது மார்பிலேயே சுட்டு விட்டார்.
அதே நேரம் உறவினர் ராகுலும், கைத்துப்பாக்கியால் தானுவின் உடலின் பல்வேறு இடங்களில் சுட்டுத் தள்ளியிருக்கிறார். இதில் தானு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். போலீசார் ஓடி வருவதற்குள் அங்கிருந்து ராகுல் தப்பியோடிவிட்டார். தந்தை மகேஷை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

Read More