Author: Namadhu Arasu

ஆன்மீகம்

2025 ஜனவரி மாதம் 13 முதல் 19 வரையிலான இந்த வார காலத்தில், மகர ராசிக்கு சூரிய பகவானின் பெயர்ச்சி, சூரியன் மற்றும் குரு பகவான் நவபஞ்சமா ஸ்தானத்தில் அமர்ந்து யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக குரு மற்றும் சூரிய பகவானின் சுப பார்வையானது மேஷம், ரிஷபம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு பெரிய அளவில் வெற்றி, நன்மைகள் தரக்கூடியதாக அமையும்.
மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு ஜனவரி மூன்றாம் வாரத்தில் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். நீண்ட காலமாக இருக்கக்கூடிய உங்கள் கவலைகள் அனைத்தும் தீரும். உங்கள் வீட்டின் நிலைமை மற்றும் பணி சூழல் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் பேச்சில் இனிமையைக் கடைப்பிடித்தல் உங்கள் மரியாதை அதிகரிக்கும். காதல் உறவு விஷயத்தில் இணக்கமான சூழல் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மூலம் பெரிய நன்மைகளை அடைவீர்கள்.
ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு ஜனவரி மூன்றாம் வாரத்தில் மிகவும் சுபமாகவும், அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலை, வியாபாரம் தொடர்பாக நல்ல பலன்கள் பெறுவீர்கள். உங்கள் வீட்டிலும், வெளியிடத்திலும் பிறரின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.
உங்களின் பயணங்கள் இனிமையானதாக இருக்கும். வாழ்க்கையில் பெரிய சாதனையை செய்ய வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மனைவியுடன் மகிழ்ச்சியான தருணங்கள் அனுபவிப்பீர்கள்.
சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இந்த வாரம் அமையும். சில காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். குறிப்பாக திருமணம் முயற்சியில் நல்ல தகவல் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வேலை செய்யும் பெண்களுக்கு சிறப்பான வெற்றியும், வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடல் நலம் மேம்படும்.
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரத்தில் சற்று பரபரப்பானதாக இருந்தாலும், அதன் மூலம் நன்மைகள் நடக்கும். உங்கள் வேலையில் மும்முரமாக இடம் பெறுவீர்கள். இந்த வாரத்தில் பணிச் சுமை அதிகமாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் சில முக்கியமான பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தால் எந்த ஒரு சவால்களையும் சமாளிக்க முடியும். குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு ஊக்கத்தைத் தரும். குடும்ப உறவுகள் இணக்கமானதாக இருக்கும்.
விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு சில நாட்களாக தடைப்பட்டு வந்த பணிகளை முடிக்க வாய்ப்பு உண்டு. உங்களின் வருமானம் அதிகரிக்கும். ஆன்மீக நடவடிக்கைகள் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் வேலையில் வெற்றி பெறவும். வேலை செய்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்களையும் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தொழில் தொடர்பாக புதிய முதலீடு செய்ய நினைப்பீர்கள். அதே போல லாபகரமான சூழலும் நிலவு. உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்காக முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

Read More
இந்தியாவிளையாட்டு

‘இந்திய அணியில் புறக்கணிப்பு’.. சிஎஸ்கே கேப்டன் பதவியும் பறிக்கப்படும்? ருதுராஜுக்கு இக்கட்டான நிலை!

இந்திய அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎலில் தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தி வருகிறார்.

கடந்த ஐபிஎல் 17ஆவது சீசனில் கூட, விராட் கோலிக்கு அடுத்து, அதிக ரன்களை குவித்த வீரராக திகழந்தார். இப்படி சிறப்பாக செயல்பட்டும், இந்திய அணியில் இவருக்கு எப்போதாவது ஒருமுறைதான் வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த ஒரு வருடத்தில், அந்த வாய்ப்புகள் கூட கிடைப்பதில்லை.
சமீபத்தில், விஜய் ஹசாரே டிராபி தொடரில், சர்விஸ் அணிக்கு எதிராக 148 ரன்களை குவித்து அசத்தினார். இருப்பினும், அதன்பிறகு நடைபெற்ற காலியிறுதி ஆட்டத்தில், பஞ்சாப் அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் 5 (5) ரன்களைதான் சேர்த்தார். மேலும், சர்விஸ் அணிக்கு எதிராக 148 ரன்களை அடித்ததையும் சேர்த்து, இத்தொடரில் 1,8, 12, 13, 5 என 8 போட்டிகளில் வெறும் 187 ரன்களைதான் சேர்த்திருக்கிறார்.
சையம் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் இதே நிலைமைதான். அப்போதும், சர்வீஸ் அணிக்கு எதிராக 97 ரன்களை விளாசிவிட்டு, மற்ற போட்டிகளில் படுமோசமாக சொதப்பினார். இத்தொடரில், 5 போட்டிகளில் களமிறங்கிய அவர், வெறும் 123 ரன்களைதான் எடுத்தார். இதன்மூலம், ருதுராஜ் கெய்க்வாட் பார்ம் அவுட்டில் இருப்பது தெரிய வருகிறது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ‘‘உள்ளூர் தொடர்களில் ருதுராஜ் கெய்க்வாட்டின் பார்ம் சிறப்பாக இல்லை. சமீப காலமாக அவர் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். இதன் காரணமாகத்தான், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை சேர்க்க முடியவில்லை’’ எனக் கூறினார்.

Read More
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை தொடக்கம்… உழவர் திருநாள் முதல் ஜல்லிக்கட்டு வரை- 4 நாட்கள் ஸ்பெஷல்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகியுள்ளனர். இன்று போகி பண்டிகையை ஒட்டி பழைய பொருட்களை எரித்து வருகின்றனர். இதையடுத்து தைப் பொங்கல் முதல் ஜல்லிக்கட்டு வரை கொண்டாடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இன்று தொடங்கியது
மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பான ஏற்பாடுகள்
தமிழக மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்
வேளாண் பெருங்குடி மக்களுக்கு நன்றி மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நிறைவு நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களைச் சந்தித்துத் தங்கள் அன்பையும், உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து மகிழ்வர்.
தமிழர்களின் பெருமித அடையாளமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் திகழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77,683 சதுர அடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்துடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.1.2024 அன்று திறந்து வைத்தார். இந்த அரங்கம் தமிழ்நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டுகளை பிரபலப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட நவீன அரங்காக அமைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து ஊர்களிலும் கிராமிய நடனம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், அச்சாங்கல், கோ – கோ விளையாட்டு, பம்பரம் விடுதல், கோலி விளையாட்டு போன்ற விளையாட்டுகளும், இசை நாற்காலிப் போட்டி, உறி அடித்தல் போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகள், வழுக்கு மரம் ஏறும் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சற்று முன் பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி மாதம் 5 ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டன. ஆனால் அதிமுக, தேமுதிக கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போவது இல்லை என்று கூறி இருந்தன.

இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக மற்றும் பாஜக, நா.த.க ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக கட்சியுடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடபோவது இல்லை அதிரடியாக அறிவித்து உள்ளது. பாஜகவின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனா்.
அண்மை காலத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலின்போது முறைகேடுகள் நடந்ததாகவும், திமுக மக்களை ஏமாற்றிய வருவதாகவும் கூறிய பாஜக, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போவது இல்லை என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. மேலும் பாஜகவின் தேசிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More
ஆன்மீகம்

2025-ல் இந்த 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம்..! உங்க ராசி ..?

2025ஆம் ஆண்டில் இந்த மூன்று ராசிக்காரர்கள் மீது திருஷ்டி மற்றும் பொறாமை உண்டாகலாம். அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் நடப்பது மற்றும் பேசுவது ஆகியவை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். இந்த ஆண்டு, அவர்களின் வெற்றி எப்போதும் இல்லாத அளவிற்கு உயரும். இதனால், அவர்கள் கண் திருஷ்டிக்கு ஆளாகலாம். இதில் இருந்து விடுபட, காலில் கருப்பு கயிறு கட்ட வேண்டும். இதன் மூலம் திருஷ்டியில் இருந்து விடுபடலாம். மேலும், உங்களின் ஒவ்வொரு வெற்றி குறித்தும் வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் இந்தாண்டு அனைத்தையும் ஈர்க்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இதனால், அவ்வப்போது அவர்கள் மீது உடன் இருப்பவர்களுக்கு பொறாமை ஏற்படலாம். ஆகையால், அவர்கள் கருப்பு அப்சிடியன் கல்லை அருகில் வைத்து உப்புநீரை சுத்தப்படுத்தும் சடங்குகளை மேற்கொள்வதன் மூலம் திருஷ்டி மற்றும் பொறாமையில் இருந்து விடுபடலாம் .
மீன ராசிக்காரர்களின் படைப்பாற்றல் மற்றும் கவர்ச்சி இந்த ஆண்டு அதிகரிக்கக்கூடும். அவர்களின் திறமைகள் மற்றும் கற்பனைகள் முக்கிய இடத்தைப் பெறுவதால், சிலருக்கு பொறாமை ஏற்படலாம். இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க, டர்க்கைஸ் நகைகளை அணியலாம். டர்க்கைஸ் நகை அணிவது, கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது. மேலும், மீன ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு ஒரு பிரகாசமான ஆண்டாக இருக்கலாம். விழிப்புடன் இருப்பது அவசியம்.

Read More
சினிமாதமிழ்நாடு

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ரிலீஸ் தேதி …

ரஜினிகாந்த் நடித்த வரும் கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் திரைப்படம் கூலி. அந்தப் படத்தில் அவருடன் அமீர்கான், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

படத்திற்கான 70% வேலைகள் முடிவடைந்த நிலையில், மீதமிருக்கும் 30 சதவீத படப்பிடிப்பை விரைவில் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Read More
அரசியல்தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நகர் சிறுமி விவகாரம் – சட்டப்பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், யார் அந்த ‘சார்’ என கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், அதற்கான ஆதாரம் இருந்தால், விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான, கவன ஈர்ப்பு தீர்மானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பதிலுரை அளித்தார்.
நடந்துவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொல்லி, அப்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை என தனது உரையை தொடங்கினார். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதலமைச்சர், இவ்விவகாரத்தில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ‘யார் அந்த சார்’ என கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் தங்களிடம் தகுந்த ஆதாரம் இருந்தால், விசாரணை குழுவிடம் ஒப்படைக்கவும் என வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில், சிபிஐ விசாரணையில் தான் பொள்ளாச்சி சம்பவம் அதிமுக பிரமுகர்களால் நடத்தப்பட்டது என்பது அம்பலமானதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
இதற்கு அதிமுகவினர் கடும் அமளி மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இது போன்ற 100 ‘சார்’ கேள்விகளை அதிமுகவைப் பார்த்து தன்னால் கேட்க முடியும் என்று கூறினார். மேலும், இது தொடர்பாக, பாஜகவினரின் கதைகளை எல்லாம் சொல்லி, அவையின் மாண்பைத் தான் குறைக்க விரும்பவில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார். அதே சமயம், பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் திமுக அனுதாபியே தவிர, திமுக உறுப்பினர் அல்ல என்றும் தெளிவுப்படுத்தினார். குற்றவாளி திமுககாரராகவே இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களின் கல்வியை கெடுத்து விடாதீர்கள் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.

Read More
அரசியல்இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல்; இன்று கூடுகிறது முதல் பார்லி கூட்டுக்குழு; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல்; இன்று கூடுகிறது முதல் பார்லி கூட்டுக்குழு; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா டிச.17ம் தேதி லோக்சபாவில் தாக்கலானது. யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவும் அன்றே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா பார்லி. கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
மொத்தம் 39 உறுப்பினர்கள் கொண்ட பார்லி. கூட்டுக்குழு இன்று (ஜன.,08) முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. கூட்டம் காலை 10.30 மணிக்கு கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்தும், அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்ககூடிய பலன்கள் குறித்தும் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்க உள்ளனர்.

பார்லி. கூட்டுக்குழுவில் 12 ராஜ்யசபா உறுப்பினர்கள், 27 லோக்சபா உறுப்பினர்கள் என மொத்தம் 39 பேர் உள்ளனர். காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா குழுவின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
அறிவியல்இந்தியா

இஸ்ரோ புதிய தலைவர் நியமனம்; குமரியைச் சேர்ந்த வி.நாராயணன் ஜன. 14 பதவியேற்பு

இஸ்ரோ புதிய தலைவர் நியமனம்; குமரியைச் சேர்ந்த வி.நாராயணன் ஜன. 14 பதவியேற்பு
இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Read More