erode byelection

அரசியல்தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சற்று முன் பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி மாதம் 5 ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டன. ஆனால் அதிமுக, தேமுதிக கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போவது இல்லை என்று கூறி இருந்தன.

இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக மற்றும் பாஜக, நா.த.க ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக கட்சியுடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடபோவது இல்லை அதிரடியாக அறிவித்து உள்ளது. பாஜகவின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனா்.
அண்மை காலத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலின்போது முறைகேடுகள் நடந்ததாகவும், திமுக மக்களை ஏமாற்றிய வருவதாகவும் கூறிய பாஜக, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போவது இல்லை என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. மேலும் பாஜகவின் தேசிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More