annauniversity

குற்றம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு.. இன்று தீர்ப்பு – ஞானசேகரனுக்கு என்ன தண்டனை..

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் புகழ்பெற்றது. இந்த கல்லூரிக்கு உள்மாநிலம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பேசி பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் மாணவனை மிரட்டி அனுப்பி உள்ளனர். பின்னர் மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அடையாற்றை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நிதிமன்ற உத்தரவின்படி, மூன்று பெண் ஐ.பி,எஸ் அதிகாரிகள் குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
மூன்று பெண் ஐ.பி,எஸ் அதிகாரிகள் குழு:
இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு ஆள்கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை தீவிரப்படுத்தினர். மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் சி.பி,ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியான அதிமுக வலியுறுத்தி வந்தது.

ஆனால் தமிழக அரசு சி.பி,ஐ விசாரணை தேவை இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.இதனையடுத்து மீண்டும் ஒரு பெண் அளித்த புகாரில் ஞாசேகரன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்ற காவலில் உள்ள ஞான சேகரனை சி.பி.ஐ அதிகாரிகள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இன்று தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம்
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்கியது.அப்போது தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் இல்லாதவை என்றும் ஞானசேகரன் தரப்பில் முறையிடப்பட்டு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த மனுவை மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து சென்னை அள்ளிகுளம் வளாகத்தில் உள்ளா உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது.இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உடனடியாக சாட்சி விசாரணை தொடங்கியது.

ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?
அரசு தரப்பில் 29 சாட்சியங்களும் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.அதில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றங்கள் அனைத்தும் நிருப்பிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஞானசேகரனுக்கு எதிரான அறிவியல் ரீதியிலான ஆதாரங்கள் உள்ளதாக கூறியதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ததை எடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில் மே 28 ஆம் தேதி வழங்கப்படும் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுத தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. அதே போல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது

Read More
அரசியல்தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நகர் சிறுமி விவகாரம் – சட்டப்பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், யார் அந்த ‘சார்’ என கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், அதற்கான ஆதாரம் இருந்தால், விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான, கவன ஈர்ப்பு தீர்மானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பதிலுரை அளித்தார்.
நடந்துவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொல்லி, அப்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை என தனது உரையை தொடங்கினார். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதலமைச்சர், இவ்விவகாரத்தில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ‘யார் அந்த சார்’ என கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் தங்களிடம் தகுந்த ஆதாரம் இருந்தால், விசாரணை குழுவிடம் ஒப்படைக்கவும் என வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில், சிபிஐ விசாரணையில் தான் பொள்ளாச்சி சம்பவம் அதிமுக பிரமுகர்களால் நடத்தப்பட்டது என்பது அம்பலமானதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
இதற்கு அதிமுகவினர் கடும் அமளி மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இது போன்ற 100 ‘சார்’ கேள்விகளை அதிமுகவைப் பார்த்து தன்னால் கேட்க முடியும் என்று கூறினார். மேலும், இது தொடர்பாக, பாஜகவினரின் கதைகளை எல்லாம் சொல்லி, அவையின் மாண்பைத் தான் குறைக்க விரும்பவில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார். அதே சமயம், பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் திமுக அனுதாபியே தவிர, திமுக உறுப்பினர் அல்ல என்றும் தெளிவுப்படுத்தினார். குற்றவாளி திமுககாரராகவே இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களின் கல்வியை கெடுத்து விடாதீர்கள் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.

Read More