Author: Namadhu Arasu

சினிமாதமிழ்நாடு

அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்த ‘புஷ்பா 2’  வசூல்

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. தெலுங்கில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆனால், இந்திய அளவில் முக்கியமான படத்தின் சாதனையை இன்னும் முறியடிக்கவில்லை என கூறப்படுகிறது.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்.

இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் படம் வசூல் குவித்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக இப்படத்தின் 2வது பாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டிலும் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள்; தடுக்கும் வழி என்ன? – மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழ்நாட்டிலும் நுழைந்த HMPV வைரஸின் அறிகுறிகள் என்ன?… இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சீனாவில் வேகமாக பரவி வரும் ‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ தற்போது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் எச்எம்பிவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த HMP வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், தொண்டை கரகரப்பு, காய்ச்சல், தோல் தடிமன் போன்ற அறிகுறிகள் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர் சுரேந்தர் கூறுகையில், “நார்மலாக காய்ச்சல், உடல்வலி, தொண்டையில் எரிச்சல் உணர்வு இருப்பது, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், HMPV வைரஸ் இருக்கிறதா என மருத்துவர்களிடம் சோதிப்பது நல்லது. எனினும், அனைவருக்கும் இந்த வைரஸ் சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

டெல்லி சென்றது ஏன்..? – விளக்கம் கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

“அமலாக்கத்துறை சோதனைக்கும், நான் டெல்லி சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” சோதனைகள் வழக்கமான ஒன்றுதான். புதிது அல்ல என டெல்லியில் இருந்து திரும்பிய அமைச்சர் துரைமுருகன், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

Read More
சினிமாதமிழ்நாடு

கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி வீடியோவால் ரசிகர்கள் கேள்வி

மதகஜராஜா’ ரிலீஸை முன்னிட்டு நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே வேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் ‘மதகஜராஜா’வை தயாரித்தது.

படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளனர். ‘மதகஜராஜா’வை சுருக்கமாக ‘எம்.ஜி.ஆர்’ என்று அழைத்து வந்தனர். இப்போது வரும், அப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன.

Read More
அரசியல்தமிழ்நாடு

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவை… ஆளுநர் உரை எப்படி இருக்கும்?

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கவிருப்பதால், எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். 2023-இல் ஆளுநர் உரைக்குப் பின்னர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறியது விவாதமான நிலையில், கடந்த ஆண்டு ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்காமல், 4 நிமிடங்களில் முடித்தார்.

இதனால், இன்றைய ஆளுநர் உரை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அவை நடவடிக்கைகள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
வணிகம்வணிகம்

பொருளாதார சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குவது சம்பந்தமாக அரசு பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்துள்ளது. அதேபோல் தனியார் மற்றும் அரசு வங்கிகள் பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு சில கடன்களை வழங்கி வருகின்றனர். பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பர்சனல் லோன்கள் குறைவான வட்டி விகிதத்தில் எளிமையான திருப்பி செலுத்தும் திட்டத்தோடு கொடுக்கப்படுகிறது. சிறிய தொழில் துவங்குவது முதல் வீட்டை புதுப்பிப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பெண்கள் இந்த கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வயது : இந்த கடனுக்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 21 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
வேலை : விண்ணப்பதாரர் மாத வருமானம் பெறுபவர் அல்லது சுய தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
பணி அனுபவம் : விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் மற்றும் தற்போதைய வேலையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் இருத்தல் அவசியம்.
கடன் பெறுபவர் : இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். வயது மற்றும் வேலை அனுபவமானது கடன் வழங்குனரின் பாலிசிகளை பொறுத்து மாறுபடலாம்.
Also Read: Tamil Nadu Gold Rate Jan 3: தொடர்ந்து உயரும் தங்கம் விலை… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்! – இன்றைய நிலவரம் என்ன?

பெண்களுக்கான பர்சனல் லோன்களுக்கு தேவைப்படும் டாக்குமென்ட்கள்:

சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
அடையாள சான்றிதழாக PAN கார்டு.
முகவரி சான்றிதழுக்கு ஆதார் அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம்.
வேலை அல்லது பிசினஸ் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சமீபத்திய பேங்க் ஸ்டேட்மென்ட் (வழக்கமாக கடந்த 6 முதல் 12 மாதங்களுக்குள்).
ஒருவேளை நீங்கள் ஆன்லைன் அல்லது டிஜிட்டல் லெண்டிங் பிளாட்பார்ம் மூலமாக கடன் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த ஒரு ஆவணத்தையும் நேரடியாக வழங்க தேவையில்லை. இதற்கான செயல்முறை 100% ஆன்லைனில் நிறைவு செய்து தரப்படும்.

பெண்களுக்கான பர்சனல் லோன் விண்ணப்ப செயல்முறை:
பல இன்ஸ்டன்ட் லோன் அப்ளிகேஷன்கள் விண்ணப்ப செயல்முறையை விரைவாகவும் எந்த ஒரு தொந்தரவு இல்லாமலும் பெண்களுக்கு செய்து கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில அடிப்படை ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து, பெண்கள் இந்த கடனை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்தவுடன் கடன் வழங்குனர் அதனை ஆய்வு செய்து, அப்ரூவலுக்காக அதனை ப்ராசஸ் செய்வார். பர்சனல் லோனுக்கான அங்கீகரிப்பு நேரம் என்பது ஒரு சில நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
பெண்களுக்கான பர்சனல் லோன்: வட்டி விகிதங்கள்:

பெண்களுக்கு பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைவான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. எனினும் வட்டி விகிதமானது கடன் பெறுநரின் கிரெடிட் ஸ்கோர், வேலை, வயது, லோன் தொகை மற்றும் லோன் கால அளவு போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம்.
பெண்களுக்கான பர்சனல் லோன்: கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு உங்களுக்கு எவ்வளவு கடன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவையான தொகையை முடிவு செய்த பிறகு உங்களுடைய சேமிப்பு மற்றும் செலவுகள் போக எவ்வளவு தொகையை EMI ஆக செலுத்த முடியும் என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு பல்வேறு கடன் வழங்குனர்கள் வழங்கும் கடன் ஆஃபர்களை ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கான ஒன்றை தேர்வு செய்வது அவசியம்.

Read More
இந்தியாதமிழ்நாடு

சீனாவில் பரவும் வைரஸால் இந்தியாவுக்கு ஆபத்தா..? மத்திய அரசு விளக்கம்.!

சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ், உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம், உலக மக்களிடையே சற்றே குறைந்திருந்தாலும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
இந்நிலையில், சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹியூமன் மெடப்னியுமோவைரஸ் (human metapneumovirus) என்று பெயரிடப்பட்டுள்ள அது, சுருக்கமாக ஹெச்.எம்.பி.வி என அழைக்கப்படுகிறது. சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு ஏராளமான மக்கள் மருத்துவமனைகளுக்குப் படையெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2020ல் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவியது. இந்த வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர். பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகை பெரிய அளவில் அச்சுறுத்தியது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கமும் வீரியமும் குறைந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
தற்போது மீண்டும் சீனாவில் HMPV புதுவகை வைரஸ் அதிகளவில் பரவிவருவதாக செய்திகள் வருகின்றன.

இந்த வைரஸ் என்ன, இது மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என டெல்லியில் மருத்துவர் சரத் ஜோஷி விளக்கியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, “HMPV புது வகை வைரஸ் கிடையாது. அதேசமயம், இதன் மாறுபாடு கொண்டது தற்போது சீனாவில் வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Read More
தமிழ்நாடு

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் 5 மணி நேரம் காத்திருந்து ED அதிகாரிகள் ரெய்டு

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவரது வீட்டில் சோதனை செய்த வருமானவரித் துறை அதிகாரிகள், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில். இன்று திடீரென கதிர் ஆனந்த் எம்பிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்த காலை 9 மணிக்கு அதிகாரிகள் சென்ற நிலையில், கதிர் ஆனந்த் வெளிநாடு சென்றிருப்பதால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டின் முன் காத்திருந்தனர். இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு அமலாக்கத்தூறை அதிகாரிகள் பேசியதை அடுத்து 5 மணி நேர காத்திருப்புக்கு பின் வீடு திறக்கப்பட்டு அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். தனது உறவினரை உடன் வைத்துக் கொண்டு சோதனை நடத்தும்படி கதிர் ஆனந்த் கேட்டுக் கொண்டதால், வேலூர் மாநகர துணை மேயர் சுனில் குமார் முன்னிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காட்பாடி அடுத்த சித்தூர் சாலையில் உள்ள கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. திமுக பிரமுகரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளருமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை நிறைவடைந்தது.

Read More
அரசியல்தமிழ்நாடு

ஓராண்டு நிறைவில் தவெக… முக்கிய அறிவிப்பை வெளியிட விஜய் திட்டம்

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கியப் முடிவுகளை எடுக்க அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்த நடிகர் விஜய், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒராண்டு நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சித் தொடங்கி ஓராண்டாகியும் இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. கட்சியின் நிறுவன நாளுக்கு முன்பாக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More