Author: Namadhu Arasu

தமிழ்நாடு

போலீஸ் அனுமதி மறுப்பு: சென்னையில் தடையை மீறி இன்று சவுமியா அன்புமணி போராட்டம்

போலீஸ் அனுமதி மறுப்பு: சென்னையில் தடையை மீறி இன்று சவுமியா அன்புமணி போராட்டம்
பா.ம.க போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என பாமக தகவல் கூறியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கில் மாணவி அளித்த புகாரின் எப்.ஐ.ஆர் வெளியானது, காவல்துறை, அமைச்சர் முரண்பட்ட கருத்து என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க அரசைக் கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் எதிர்க்கட்சிகள் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க என அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில், இன்று (ஜன.2) பா.ம.க போராட்டம் நடத்துவதாக அறிவித்தது.

பாமக மகளிரணி சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என பா.ம.க தலைமை தகவல் வெளியிட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

‘பிரிக்க நினைக்கும், வன்முறையை தூண்டும் வன்மம் பிடித்த ஸ்டாக்’: ஸ்டாலின் கடும் தாக்கு

‘பிரிக்க நினைக்கும், வன்முறையை தூண்டும் வன்மம் பிடித்த ஸ்டாக்’: ஸ்டாலின் கடும் தாக்கு

Read More
தமிழ்நாடு

‘யார் அந்த சார்’ பதாகை ஏந்தி எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்; அண்ணாமலை பாராட்டு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ‘யார் அந்த சார்’ என்ற பதாகை ஏந்தி, சென்னையில் பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ‘யார் அந்த சார்’ என்ற பதாகை ஏந்தி, சென்னையில் பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க-வின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்- சிறப்பு புலனாய்வு குழு

தமிழகத்தின் பிரபல கல்வி நிறுவனமாக திகழும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் இறங்கியுள்ளது.

Read More
அரசியல்இந்தியா

சமுதாயத்தில் பரவும் வன்முறை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்படும் இடையூறுகளை ஒவ்வொரு முறை காணும் போதும் மனம் வேதனை அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க பேராயர் பேரவை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றுவதாக தெரிவித்தார். சமுதாயத்தில் பரவும் வன்முறை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்படும் இடையூறுகளை ஒவ்வொரு முறை காணும் போதும் மனம் வேதனை அடைவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

21-ஆவது நூற்றாண்டில் மனிதாபிமான அடிப்படையிலான நல்லிணக்கத்தைப் போற்றுவதில் இந்தியா பெரும் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

Read More
இந்தியாசினிமா

 இந்தியா சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் சியாம் பெனகல் மறைவு – பிரபலங்கள் இரங்கல்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரும் எழுத்தாளருமான சியாம் பெனகல் மும்பையில் காலமானார்.
இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட சியாம் பெனகல், எ சைல்ட் ஆப் தி ஸ்ட்ரீட்ஸ், ஜவஹர்லால் நேரு, சத்யஜித் ரே உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார்.

வங்கதேசத்தின் முதல் அதிபர் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கையை Mujib The Making of a Nation என்ற பெயரில் கடந்த 2023-ஆம் ஆண்டு படமாக எடுத்தார். பெரிய அளவில் இந்தப் படம் பேசப்பட்டு கவனத்தை ஈர்த்தது.

Read More
அரசியல்தமிழ்நாடு

வாக்கு அரசியலுக்காக அதிமுக நடிக்கிறது” – கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, வாக்கு அரசியலுக்காக அதிமுக நடிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக சார்பில் சென்னை கொளத்தூர் டான் பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்த மேடையில் கிறிஸ்துமஸ் தின விழாவில் பேராயர் உடன் பேரூர் ஆதினமும் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவை நடத்துபவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. இதுதான் சமத்துவ விழா. சமத்துவத்தை போற்றுவதும் பாதுகாப்பதும்தான் திராவிட மாடல்” என்று திராவிட மாடல் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.

Read More
தமிழ்நாடு

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்டங்களின் பிரபல உணவு வகைகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தார்.
இந்த உணவு திருவிழாவானது டிச.24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பார்வையாளர் கள் மதியம் 12.30 முதல் இரவு 8.30 வரை அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி இலவசம். உணவுத் திருவிழாவில் 65 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் மூலம் மொத்தம் 35 உணவு அரங்குகள், 7 தயார் நிலை உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு 100 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
உணவுப் பட்டியலை ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் ‘க்யூ-ஆர்’ கோடுகளை ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் பணம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கவுன்ட்டர்களில் ‘க்யூ-ஆர்’ கார்டுகளை ‘டாப்-அப்’ செய்து அரங்குகளில் இருக்கும் உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

வாகன நிறுத்தம் வசதி: இதுதவிர 3 அரங்குகளில் சுய உதவிக் குழுக்களின் 45 வகையான தயாரிப்பு பொருட்களும் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன.

இத்துடன் மக்களை கவர இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின் றன. மெரினா கடற்கரை அருகே உள்ள சென்னை பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகங்களில் வாகன நிறுத்தங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உணவுத் திருவிழா குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதல்முறையாக சென்னையில் உணவுத் திருவிழாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிரை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இது நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தி லும் அங்கு பிரபலமாகக் கருதப்படும் உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. குறைந்த விலையில், தரமாக உணவுகள் வழங்கப்படும். இந்த உணவுத் திருவிழா மூலம் தமிழக அரசுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மக்கள் உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு, உணவுகளை ருசிக்க வேண்டும். உணவுத் திருவிழாவுக்கு கிடைக்கும் ஆதர வின் அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்தப் படுவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More